ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிக்கலில் சக்சேனா.. தொடரும் வழக்குகள்?

Go down

சிக்கலில் சக்சேனா.. தொடரும் வழக்குகள்? Empty சிக்கலில் சக்சேனா.. தொடரும் வழக்குகள்?

Post by தாமு Thu Jul 07, 2011 3:39 pm

- கே.ராஜாதிருவேங்கடம், தி.கோபிவிஜய்

அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு அடுத்தடுத்து அதிரடிகள். லேட்டஸ்ட்... சன் பிக்சர்ஸ் தலைமை செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனாவைக் கைது செய்திருக்கிறது போலீஸ்!

கடந்த 3-ம் தேதி ஹைதராபாத்தில் நடந்த ஃபிலிம்ஃபேர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, விமானம் மூலம் சென்னைக்குத் திரும்பினார் சக்சேனா. விமானத்தில் இருந்து இறங்கியவரை, அசோக் நகர் உதவி கமிஷனர் குருசாமி தலைமையிலான போலீஸ் டீம் ஏர்போர்ட்டிலேயே கைது செய்தது.

'சக்சேனா மீது புகார் கொடுத்தது யார்... என்ன வழக்கு?’ என்ற எந்த விவரத்தையும் உடனடியாக மீடியாவுக்குத் தெரிவிக்கவில்லை. அவர் எங்கே வைக்கப்பட்டு இருக்கிறார் என்பதில்கூட போலீஸார் ரகசியம் காத்தனர். அதன் பிறகு, இரவு 9 மணிக்கு சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் வீட்டில் சக்சேனாவை ஆஜர்படுத்தி ரிமாண்ட் செய்தது போலீஸ்.

சக்சேனா மீது புகார் கொடுத்தவர், சேலம் மாவட்டத் திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்தின் பொருளாளரும், கந்தன் ஃபிலிம்ஸ் உரிமையாளருமான செல்வராஜ். என்ன நடந்தது?

செல்வராஜ் தரப்பில் பேசினோம். ''விஷால் நடித்த 'தீராத விளையாட்டுப் பிள்ளை’ படத் தயாரிப்புக்காக அதன் தயாரிப்பாளர் விக்ரம் கிருஷ்ணாவுக்கு ஃபைனான்ஸ் செஞ்சோம். அவங்க அந்தப் படத்தை மொத்தமாக சன் பிக்சர்ஸுக்கு வித்துட்டாங்க. படத்தின் சேலம் மாவட்ட உரிமத்தை இனியவேல் குரூப்புக்கு 1.25 கோடிக்குக் கொடுத்தாங்க. ஆனா, அவங்களால் சொன்ன நேரத்துக்கு பணத்தை செட்டில் பண்ண முடியலை. பட ரிலீஸுக்கு முன்பு சேலம் வந்த சன் பிக்சர்ஸ் ஆட்கள் செல்வராஜை அழைத்துப் பேசி, 'உங்களுக்குத் தயாரிப்பாளர் தரப்பில் தர வேண்டிய 1.25 கோடிக்குப் பதிலாக, சேலம் மாவட்ட உரிமத்தை எடுத்துக்கோங்க. படத்தோட வசூலில் உங்களுக்குச் சேரவேண்டிய பணத்தை எடுத்துட்டு, மீதியை எங்களுக்குக் கொடுங்க’ன்னு சொன்னாங்க.

ஆனா, படம் எதிர்பார்த்த மாதிரி போகலை. மொத்த வசூலே 43 லட்ச ரூபாய்க்குள்தான். செல்வராஜுக்கு தர வேண்டிய மீதி 82 லட்சத்தைக் கேட்டு, பல தடவை அவர்களது அலுவலகத்துக்கு நடந்தார். ஆரம்பத்தில் அமைதியாப் பேசிட்டு இருந்த சக்சேனா ஒரு கட்டத்தில், 'பணம் எல்லாம் தர முடியாது. உன்னால் என்ன முடியுமோ, அதை நீ பார்த்துக்கோ’ன்னு பேச ஆரம்பிச்சிட்டார். நாங்களும் பல தரப்புகளில் இருந்து பேசிப் பார்த்தோம். பணத்தைத் திருப்பிக் கொடுக்குற மாதிரி தெரியலை. அதோட, எங்களுக்கும் மிரட்டல் விடுத்துட்டே இருந்தாரு. வேறு வழி தெரியாமத்தான் போலீஸ் கமிஷனரிடம் புகார் செஞ்சோம்...'' என்று சொன்னார்கள்.




ஏற்கெனவே இதே சக்சேனா மீது, செக்கர்ஸ் ஹோட்டலைத் தாக்கியதாக ஒரு புகார் உள்ளது. விஜய் நடித்த 'காவலன்’ பட விவகாரம் தொடர்பாகவும் சக்சேனா மீது மத்தியக் குற்றப் பிரிவு போலீஸாரிடம் ஒரு புகார் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் சக்சேனாவை கஸ்டடி எடுத்து விசாரிக்க, சைதாப்​பேட்டை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் 4-ம் தேதி மனுத் தாக்கல் செய்தது போலீஸ் தரப்பு. அதே தினத்தில், சக்சேனாவும் ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, '5-ம் தேதி சக்சேனாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.

போலீஸ் கஸ்டடி கிடைக்கும்பட்சத்தில், சக்சேனா மீது உள்ள வேறு சில வழக்குகள் தொடர்பாகவும் விசாரணை நடத்தத் திட்டமிட்டு இருக்கிறதாம் காவல் துறைத் தரப்பு.

சென்னை மாநகரக் காவல் துறை ஆணையர் திரிபாதியிடம் பேசினோம். ''சேலத்தை சேர்ந்த சினிமா விநியோகஸ்தர் செல்வராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் சன் பிக்சர்ஸின் தலைமை செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா மீது நம்பிக்கை மோசடி, வஞ்சித்து ஏமாற்றுதல், கொலை மிரட்டல் என மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்து இருக்கிறோம். விசாரணை நடைபெற்று வருகிறது. சட்டம் தன் கடமையைச் செய்யும்!'' என்று சொன்னார்.

சக்சேனா தரப்பில் சைதை நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் குமரேசனிடம் பேசினோம். ''இது ஒரு ஜோடிக்கப்பட்ட வழக்கு. இரண்டே பக்க காகிதத்தில் அவசர அவசரமாக இந்த வழக்கை தயாரித்து உள்ளது தமிழக போலீஸ். இதைச் சொல்லி நாங்கள் ஜாமீன் கேட்டோம். இந்த வழக்கை அடிப்படையாக வைத்து புதிய வழக்குகள் போட்டுவிடக்கூடாது என்றும் சொல்லி இருக்கிறோம். மற்றபடி இது ஜாமீன் தரக்கூடிய சாதாரண வழக்குதான். போலீஸ் கஸ்டடி எடுத்து விசாரிக்கும் அளவுக்கு பெரிய வழக்கு அல்ல. எங்கள் தரப்பு நியாயங்களை நீதிமன்றத்தில் சொல்வோம்!'' என்று கூறினார்.

சக்சேனா கைது செய்யப்பட்ட அதே தினத்தன்று, அரசு கேபிள் டி.வி. அமைப்புக்கான தலைமை அதிகாரிகளை நியமித்து அரசின் அறிவிப்பும் வெளியானது. ஒரு புறம் அரசு கேபிள் டி.வி-யை துவங்குவதற்கான அதிரடி வேலைகள் ஆரம்பமாகும் நேரத்தில், குறைந்தபட்சம் சில நாட்களாவது கேபிள் ஆபரேட்டர்களிடம் யாரும் பேசி மனதைக் கலைத்துவிடக் கூடாது என்பதற்காகவே சக்சேனாவை சிறையில் அடைத்தார்களோ என்ற கேள்வியும் தற்போது எழுகிறது.

- ஜூனியர் விகடன்



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum