Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதுச்சேரியில் பயங்கரம்: பார்சல் குண்டு அனுப்பி இளம் பெண் கொலை; காதல் தகராறில் தொழில் அதிபர் வெறிச்செயல்
5 posters
Page 1 of 1
புதுச்சேரியில் பயங்கரம்: பார்சல் குண்டு அனுப்பி இளம் பெண் கொலை; காதல் தகராறில் தொழில் அதிபர் வெறிச்செயல்
புதுச்சேரி, ஜூன்.29-
புதுவை அரியாங்குப்பம் சோலை கவுண்டர் வீதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மகள் ஜோதி (வயது 24) அந்த பகுதியில் உள்ள ஒரு மெழுகுவர்த்தி கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று மதியம் ஜோதி மெழுகுவர்த்தி கம்பெனிக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்தார்.
மாலை 3.30 மணி அளவில் ஜோதியின் செல்போனுக்கு ஒரு போன் வந்தது. போனில் பேசியவர் பன்னீர்செல்வம் பெயருக்கு கூரியர் பார்சல் வந்துள்ளது என்று கூறினார். இதையடுத்து ஜோதி வீட்டை விட்டு வெளியே வந்தார்.
அப்போது ஜோதியின் வீட்டருகே ஒரு ஆட்டோ வந்து நின்றது. ஆட்டோவில் வந்த வாலிபர் உங்களது அப்பா பெயருக்கு பார்சல் வந்துள்ளது என்று கூறி ஜோதியிடம் பார்சலை கொடுத்தார். அதனை வீட்டுக்குள் எடுத்து சென்றார். படுக்கை அறைக்குள் பார்சலை எடுத்து சென்ற ஜோதி அதனை பிரித்தார்.
அப்போது கூரியர் பார்சல் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் ஜோதியின் உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டது. முகம், கை, கால்கள் கருகி சிதைந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். வெடிகுண்டு பார்சல் வெடித்து சிதறியதில் ஜோதியின் வீட்டு கூரையும் பெயர்ந்து விழுந்தது.
வெடிச்சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அங்கு காணப்பட்ட கோரக்காட்சியை கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். உயிருக்கு போராடிய ஜோதியை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்¢கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.
இந்த சம்பவம் பற்றிய தகவல் அறிந்ததும் சட்டம்-ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு சந்திரன், போலீஸ் சூப்பிரண்டுகள் சிவதாசன், தெய்வசிகாமணி ஆகியோர் அங்கு விரைந்து சென்றனர். ஜோதியின் வீட்டை பார்வையிட்டனர். வெடிகுண்டு நிபுணர்கள் பார்சல் வெடிகுண்டு குறித்து ஆய்வு மேற்கொண்டனர். போலீஸ் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. ஜோதியின் தந்தை பன்னீர்செல்வம், தாயார் சரோஜா ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
போலீஸ் விசாரணையில் புதுவை வெங்கட்டா நகரில் உள்ள ஒரு கொரியர் நிறுவனத்தில் அன்பு, கடலூர் என்ற பெயரில் பன்னீர்செல்வத்துக்கு பார்சல் புக் செய்யப்பட்டதும் தெரிய வந்தது. வெடிகுண்டு பார்சலை அனுப்பிய அன்பு யார்? அவருக்கும் ஜோதி குடும்பத்துக்கும் என்ன தொடர்பு என்பது குறித்தும் வெடிகுண்டு பார்சல் அனுப்பியது ஏன் என்பது குறித்தும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.
அரியாங்குப்பம் எஸ்.டி.டி. பூத்தில் வேலை பார்த்த ஜோதி அந்த வேலையில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு நின்று கொண்டார். இதையடுத்து அதே பகுதியில் உள்ள ஒரு மெழுகுவர்த்தி கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். ஜோதிக்கும் மெழுகுவர்த்தி கம்பெனியின் உரிமையாளர் மனைவிக்கும் இடையே ஆழமான நட்பு ஏற்பட்டது. இருவரும் நெருங்கிய தோழிகளாயினர்.
இதனை தொடர்ந்து கம்பெனி உரிமையாளர் வீட்டுக்கு ஜோதி அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது ஜோதியின் அழகில் மெழுகுவர்த்தி கம்பெனி உரிமையாளர் மயங்கியதாக தெரிகிறது.
இதையடுத்து தனது ஆசைக்கு இணங்குமாறு ஜோதியை கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் ஜோதி இதற்கு சம்மதிக்கவில்லை. மேலும் இனிமேல் தொந்தரவு செய்தால் தோழியிடம் கூறி விடுவதாகவும் அவர் மிரட்டி உள்ளார். தனது மனைவிக்கு இந்த சம்பவம் தெரிந்தால் அவமானமாகி விடும் என்று கருதிய கம்பெனி உரிமையாளர் கூரியர் பார்சல் மூலம் வெடிகுண்டு அனுப்பி இருக்கலாம் என்று போலீசார் கருதகின்றனர். இதையடுத்து போலீசார் மெழுகுவர்த்தி கம்பெனி உரிமையாளரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே ஜோதியின் தந்தை பன்னீர்செல்வத்துக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு அரசியல்கட்சி பிரமுகருக்கும் இடையே நில தகராறு இருந்து வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. பன்னீர்செல்வத்துக்கு சொந்தமான நிலத்தை அந்த அரசியல் பிரமுகர் அபகரித்து வீடு கட்டி இருப்பதால் இரு தரப்புக்கும் நீண்டகாலமாக பகை இருந்து வருகிறது.
நிலத்தகராறில் பன்னீர்செல்வத்திடம் விரோதம் கொண்டுள்ள அரசியல் பிரமுகருக்கும் லெடிகுண்டு சம்பவத்துக்கும் தொடர்பு உள்ளதா? என்பதும் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுதொடர்பாக புதுவை ரூரல் போலீஸ் சூப்பிரண்டு தெய்வசிகாமணியிடம் கேட்ட போது இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம். காதல் பிரச்சினையில் வெடிகுண்டு பார்சல் அனுப்பப்பட்டதா? அல்லது நில தகராறு காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று கூறினார்.
ராமகிருஷ்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: புதுச்சேரியில் பயங்கரம்: பார்சல் குண்டு அனுப்பி இளம் பெண் கொலை; காதல் தகராறில் தொழில் அதிபர் வெறிச்செயல்
கொடூரமான செயல்... மனம் பதறுகிறது....
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
Re: புதுச்சேரியில் பயங்கரம்: பார்சல் குண்டு அனுப்பி இளம் பெண் கொலை; காதல் தகராறில் தொழில் அதிபர் வெறிச்செயல்
இவ்வளவு அழகான இந்த பெண்ணின் உடல் மருத்துவ மனையில்.....
பார்த்ததும் அழுகைதான் வருகிறது...
பாவி....
பார்த்ததும் அழுகைதான் வருகிறது...
பாவி....
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: புதுச்சேரியில் பயங்கரம்: பார்சல் குண்டு அனுப்பி இளம் பெண் கொலை; காதல் தகராறில் தொழில் அதிபர் வெறிச்செயல்
:அடபாவி: :அடபாவி: :அடபாவி: :அடபாவி: :அடபாவி:
positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
Similar topics
» குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை
» எண்ணூரில் பயங்கரம்: தொழில் அதிபர் வெட்டிக்கொலை; ரூ. 8 லட்சம் நகைகள் கொள்ளை
» சிவகங்கை: காதல் தகராறில் சகோதரர்கள் கொலை
» ஒன்றரை மாத குழந்தை கழுத்து நெரித்து கொலை பெண் கைது.கோழி தகராறில் படுபாதகம்.
» காதல் தகராறில் மின் கம்பத்தில் கட்டி வைத்து ஆட்டோ டிரைவர் கொலை
» எண்ணூரில் பயங்கரம்: தொழில் அதிபர் வெட்டிக்கொலை; ரூ. 8 லட்சம் நகைகள் கொள்ளை
» சிவகங்கை: காதல் தகராறில் சகோதரர்கள் கொலை
» ஒன்றரை மாத குழந்தை கழுத்து நெரித்து கொலை பெண் கைது.கோழி தகராறில் படுபாதகம்.
» காதல் தகராறில் மின் கம்பத்தில் கட்டி வைத்து ஆட்டோ டிரைவர் கொலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|