Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்by Anthony raj Today at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்க வீட்டுப் பெண்ணுக்கு குவா குவா இல்லையா?
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
உங்க வீட்டுப் பெண்ணுக்கு குவா குவா இல்லையா?
தாயின் வயிற்றில் இருக்கும்போதே கருக் குழந்தையின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டினால் குழந்தைப் பேறின்மை என்ற பேச்சுக்கே இடமில்லை என்கிறது சித்த மருத்துவம்.
நூற்றுக் கணக்கில் செலவழித்து டானிக், ஹெல்த் டிரிங்க்ஸ் எல்லாம் குடிக்கத் தேவையில்லை. நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பண்டங்களை (தானியங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள்) உரிய காலத்தில், உரிய வழி முறைகளில் சாப்பிட்டு வந்தால் மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்பே இல்லை. ஆனால் வாழ்க்கை முறை மாற்றத்தால் எல்லாம் தலைகீழ் ஆகிவிட்டதன் விளைவுதான், இன்று குழந்தைப் பேறின்மை அதிகரிக்கக் காரணம். இனி குழந்தைப் பேறின்மையை நீக்க சித்த மருத்துவம் உதவுவது எப்படி என்பது குறித்து விரிவான அலசல்:-
நூற்றுக் கணக்கில் செலவழித்து டானிக், ஹெல்த் டிரிங்க்ஸ் எல்லாம் குடிக்கத் தேவையில்லை. நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பண்டங்களை (தானியங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள்) உரிய காலத்தில், உரிய வழி முறைகளில் சாப்பிட்டு வந்தால் மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்பே இல்லை. ஆனால் வாழ்க்கை முறை மாற்றத்தால் எல்லாம் தலைகீழ் ஆகிவிட்டதன் விளைவுதான், இன்று குழந்தைப் பேறின்மை அதிகரிக்கக் காரணம். இனி குழந்தைப் பேறின்மையை நீக்க சித்த மருத்துவம் உதவுவது எப்படி என்பது குறித்து விரிவான அலசல்:-
Re: உங்க வீட்டுப் பெண்ணுக்கு குவா குவா இல்லையா?
குழந்தைப் பேறு ஏற்படாமைக்குக் காரணங்கள் என்ன?
"பாரப்பா பெண்மலடாங் கற்பக் கோளின்
பக்குவத்தைச் சொல்கிறேன் பக்குவமாய்க் கேளு
ஆரப்பா ஆண் மலடே யாகுல்லாமல்
அப்பனே பெண் மலடு யாருமில்லை'
----அகத்தியர் கர்ப்பக் கோள்
என்ற பாடலின்படி கருப்பை சினைப்பை, கருக்குழல், கருவாய் இருந்தால் பெண் மலடு என்ற பேச்சுக்கே சித்த மருத்துவத்தில் இடமில்லை. சித்த வைத்தியம் முடிந்த முடிவான மருந்து. சித்தர்கள் சொன்ன மூலப்பொருளைக் கொண்டு சொல்லிய முறையில் தயாரித்தால் நோய் நீக்குவது மட்டும் அன்றி நோய் வராமலும் தடுக்கலாம்.
பெண்ணை பூமாதேவி என்று அழைக்கிறார்கள். பூமியில் எந்த மண்ணிலும் விதை போட்டு தாவரங்களை வளர்க்கலாம். அதனால் பெண் மலடு என்ற பேச்சுக்கே இடமில்லை. ஏனென்றால் கடலும் கடல் சார்ந்த இடத்திலும் மலையும் மலைசார்ந்த இடத்திலும் வயலும் வயல் சார்ந்த இடத்திலும் காடும் காடு சார்ந்த இடத்திலும் பாலையும் பாலை சார்ந்த இடத்திலும் செடி, கொடிகளை வளர்க்கலாம். இந்த வகையில் பெண்களுக்கு மலடு என்ற சொல்லே இல்லை.
"இசைந்ததொரு பெண்மலடு எங்குமில்லை
எதனாலே மலடான சேதி கேளு
அசைந்திருக்கும் பேயாலும் பித்தத்தாலும்
அடிவயிறு நொந்துவரும் வாயுவாலும்
பிசைந்த கர்ப்பப் புழுவாலும் கிரகத்தாலும்
பிணியாலும் மேகி வைசூரியாலும்
துசங்கெட்ட கலவியினால்
துலங்காமல் பிள்ளையில்லை சொல்லிக்கேளே'
பேயாலும்- பேயாலும் என்பது மனநிலை குன்றிக் காணப்படுவதைக் குறிப்பிடுகின்றனர். சாதாரணமாக (Psychosomatic Disorder, Hysteria) மனநலம் பாதிக்கப்படுவதால் குழந்தை பேறடைய முடிவதில்லை.
Re: உங்க வீட்டுப் பெண்ணுக்கு குவா குவா இல்லையா?
பித்தத்தாலும்- பித்தத்தாலும் என்பது நம் உடலில் காணப்படும் நாளமில்லாச் சுரப்பிகளில் ஏற்படும் மாறுபாடுகளினால் தாய்மை அடைவது தடுக்கப்படுகிறது.
வாயுவாலும் அடிவயிறு நொந்து வரும் வாயுவாலும் என்பது மாதவிடாய், வயிற்று வலி, குதக வாயு, சூதகக்கட்டு மற்றும் அடிவயிற்றில் காணப்படும் உள்உறுப்புகளில் ஏற்படும் பாதிப்பையும் குறிப்பிடுவதாகும்.
கர்ப்பப் புழுவாலும்- கர்ப்பப் புழு என்பது கருப்பையில் காணப்படுகின்ற கர்ப்பப் புழுவைக் குறிக்கும். இவை கருப்பையை வந்தடையும் விந்துவை அழித்துவிடுவதால் கருத்தரிப்பதில்லை (Vaginal acidity).
கிரகத்தாலும் பிணியாலும் என்பது சிலருக்கு அடிவயிறு உறுப்புகளில் தொற்றுக் கிருமிகளால் (Infection) ஏற்பட்ட பாதிப்பைத் தொடர்ந்து ஏற்படும் விளைவைக் குறிக்கும். அதாவது (Peritonitis Salphingitis) போன்றவையும் ஒரு காரணமாகிறது. இதனால் கருப்பைக் குழாயில் அடைப்பு ஏற்படுகிறது. மேலும் கருப்பையில் காசநோய்க் கிருமிகள் (Tuberculosis) பாதித்தாலும், கருத்தரிப்பதில் பிரச்சினை ஏற்படுகிறது.
வாயுவாலும் அடிவயிறு நொந்து வரும் வாயுவாலும் என்பது மாதவிடாய், வயிற்று வலி, குதக வாயு, சூதகக்கட்டு மற்றும் அடிவயிற்றில் காணப்படும் உள்உறுப்புகளில் ஏற்படும் பாதிப்பையும் குறிப்பிடுவதாகும்.
கர்ப்பப் புழுவாலும்- கர்ப்பப் புழு என்பது கருப்பையில் காணப்படுகின்ற கர்ப்பப் புழுவைக் குறிக்கும். இவை கருப்பையை வந்தடையும் விந்துவை அழித்துவிடுவதால் கருத்தரிப்பதில்லை (Vaginal acidity).
கிரகத்தாலும் பிணியாலும் என்பது சிலருக்கு அடிவயிறு உறுப்புகளில் தொற்றுக் கிருமிகளால் (Infection) ஏற்பட்ட பாதிப்பைத் தொடர்ந்து ஏற்படும் விளைவைக் குறிக்கும். அதாவது (Peritonitis Salphingitis) போன்றவையும் ஒரு காரணமாகிறது. இதனால் கருப்பைக் குழாயில் அடைப்பு ஏற்படுகிறது. மேலும் கருப்பையில் காசநோய்க் கிருமிகள் (Tuberculosis) பாதித்தாலும், கருத்தரிப்பதில் பிரச்சினை ஏற்படுகிறது.
Re: உங்க வீட்டுப் பெண்ணுக்கு குவா குவா இல்லையா?
கருத்தரிப்பதற்குத் தடையாக இருக்கும் நோய்கள் எவை?
மேக நோய்: மேக நோயினைத் தொடர்ந்து (Venereal Disease) கிருமிகள் தாக்குதலுக்கு கர்ப்பப் பை ஆளாவதால் நாள்பட்ட நிலையில் (Chronic Pelvic Inflammatory Disease) இது சரியாகக் குணப்படுத்தப்படாமல் இருந்தாலும் குழந்தைப் பேறு பாக்கியம் அடைவதில் தடை ஏற்படுகிறது.
வைசூரி: அம்மை நோய்கள் போன்று வைரஸ் கிருமிகள் உடலில் ஏற்படுத்துகின்ற பாதிப்பு பெண்ணுக்கு குழந்தைப் பேறின்மையை உண்டாக்குகிறது.
அறியாத கலவியினால்...: இது மிக முக்கியமான கவனிக்கப்பட வேண்டியதாகும். சில தம்பதியர்க்கு தாம்பத்திய உறவு பற்றி தெளிவான அறிவு காணப்படுவதில்லை. தாம்பத்திய உறவைப் பற்றி போதிய அளவுகூடத் தெரியாமல் சிலர் இருக்கின்றனர். குறிப்பிட்ட நாள்கள் முக்கியமானது என்பதும் தெரிந்திருக்கவேண்டும். இதுவும் குழந்தைப் பேறின்மைக்கு ஒரு காரணமாகின்றது.
இவ்வகைக் காரணங்களால் ஏற்படக் கூடிய குழந்தைப் பேறின்மைக்குத் தனித்தனியாக சிகிச்சை முறைகளும் மருந்துகளும் தெளிவாகத் தொகுத்துக் கொடுத்துள்ளனர். இதனை நுட்பமாகப் புரிந்து கொண்டு சிகிச்சையளித்தால் பெண்களுக்கு ஏற்படக் கூடிய குழந்தைப் பேறின்மைத் தன்மையை முற்றிலும் குணப்படுத்த முடியும்.
மேலும் சித்த மருத்துவத்தில் கருக்குழாய் அடைப்பு, (Fallopian tube block), சினைப்பை கட்டிகள் (PCOS), கருப்பை சவ்வு அழற்சி (Endometriosis), ஒழுங்கற்ற மாத விலக்கு (Irregular Menstruation), கருப்பைக் கழலை (Fibroid Uterus), பெரும்பாடு (அதிகமாக கட்டி கட்டியான உதிரப்போக்கு), தைராய்டு சுரப்பி கோளாறு (Thyroid Dysfunction), சினை முட்டை சரிவர வளராமை போன்ற காரணங்களுக்குச் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Re: உங்க வீட்டுப் பெண்ணுக்கு குவா குவா இல்லையா?
கர்ப்பப் பை கோளாறுகளின் அறிகுறிகள் என்ன?
கருப்பை கோளாறுகள் பெண்கள் பூப்பு எய்திய நாள் முதல் தோன்ற ஆரம்பித்தாலும் பொதுவாக இந்நோய்கள் தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போது கணைச் சூடு என்ற விதமாய்த் தொடங்குகின்றன. பழங்கால பாட்டிகள் கணைச்சூட்டுக்கு கற்றாழைச் சாறு கலந்த எண்ணெய்யை வாரம் இருமுறை சாப்பிடக் கொடுப்பார்கள். இந்த முறையில் தற்போது சித்த மருத்துவத்தில் குமரி எண்ணெய் என்ற மருந்தை தயார் செய்து கொடுக்கப்படுகிறது.
இந்த கணைச் சூடு பூப்பு எய்திய காலத்தில் கர்ப்பச் சூடாக மாறும். இதனால் ரத்த சோகை ஏற்படும். இதன் காரணமாக மாதவிலக்கு மாறுபாடு ஏற்படும். இதனால் கருப்பை சூடு ஏற்பட்டு வெள்ளை ஏற்படுகிறது. நம் சமூகத்தில் இருந்த நல்ல பழக்கங்களை நாம் கடைப்பிடிக்க மறந்து ஒவ்வொரு மருத்துவமனையாக ஒவ்வொரு Website address ஆக தேடி அலைந்து கொண்டு இருக்கிறோம்.
Re: உங்க வீட்டுப் பெண்ணுக்கு குவா குவா இல்லையா?
கர்ப்பப் பை வளர்ச்சியில் எப்போது அக்கறை செலுத்த வேண்டும்?
நம் சமுதாயத்தில் பெண் பூப்பு எய்தவுடன் நாள்தோறும் ஒரு முட்டையை உடைத்து வாயில் ஊற்றி பின்னர் முட்டை ஓட்டில் உள்ள அளவுக்கு நல்லெண்ணெய் ஊற்றி குடிக்க வைப்பார்கள். இன்னும் சில பேர் உளுத்த மாவில் செய்த உணவுப் பண்டங்களை நாள்தோறும் சாப்பிடச் செய்வார்கள். உளுத்தம் கஞ்சி, புழுங்கல் அரிசி கஞ்சி, கேழ்வரகு அடை, முருங்கைக் கீரை பிசைந்த சாதம் போன்றவற்றைச் சாப்பிட்ட நமது முன்னோர்களின் பேரக் குழந்தைகள், இப்போதைய நாகரீக வாழ்க்கையில் "பாஸ்ட் புட்' கலாசார உணவுகளைச் சாப்பிட்டு உடலாகிய கோயிலை அழித்துக் கொண்டு வருகிறோம். நம் முன்னோர்கள் பயன்படுத்திய உணவுகள் கருப்பையைச் சுத்தமாகவும், இடுப்பு எலும்புகள் வலுப் பெறவும், சினை முட்டை உருவாகவும், சினைப்பை, கருப்பைக் கழலைகள் உண்டாகாமல் தடுக்கவும் செய்தன; இதுபோன்ற உணவு முறைகளை பூப்பெய்த காலத்தில் பயன்படுத்தி வந்தால் குழந்தை பேற்றை ஒரு இயல்பான காரியமாகச் செய்ய முடியும்.
முளை கட்டிய பயறு வகை, கொண்டைக் கடலை சாப்பிட்டு வந்தால் ஆண் பெண் மலட்டுத்தன்மை நீங்கும். கால் கிலோ உளுந்தை நெய்யில் வறுத்து மாவாக்கி பனங்கற்கண்டு, ஏலக்காய் நெய் சேர்த்து உருண்டை பிடித்து நாள்தோறும் ஒரு உருண்டை வீதம் மாதத்தில் 10 நாள் வீதம் சாப்பிட்டு வந்தால் கருப்பை பூரண வளர்ச்சி பெறும்.
தேனும் தினைமாவும் சேர்த்து உருண்டை செய்து சாப்பிட கருப்பை பலம் உண்டாகும்.
நாள்தோறும் ஒரு முட்டை சேர்த்துக் கொண்டால் இடுப்பு எலும்பு, சினைப்பைகள் வலுப்பெறும். நல்ல நாள், விருந்து விழாக்கள் போன்றவற்றுக்கு மாதவிடாயைத் தள்ளிப் போடுவதற்குச் சாப்பிடும் மருந்துகள் சினைப்பைக் கட்டி, கருப்பைக் கட்டி போன்றவைகள் உருவாகி மாதவிடாயின்போது அதிக ரத்தப் போக்கு ஏற்படும். இதனால் கரு உண்டாவதில் சிக்கல் ஏற்படுகிறது.
நம் சமுதாயத்தில் பெண் பூப்பு எய்தவுடன் நாள்தோறும் ஒரு முட்டையை உடைத்து வாயில் ஊற்றி பின்னர் முட்டை ஓட்டில் உள்ள அளவுக்கு நல்லெண்ணெய் ஊற்றி குடிக்க வைப்பார்கள். இன்னும் சில பேர் உளுத்த மாவில் செய்த உணவுப் பண்டங்களை நாள்தோறும் சாப்பிடச் செய்வார்கள். உளுத்தம் கஞ்சி, புழுங்கல் அரிசி கஞ்சி, கேழ்வரகு அடை, முருங்கைக் கீரை பிசைந்த சாதம் போன்றவற்றைச் சாப்பிட்ட நமது முன்னோர்களின் பேரக் குழந்தைகள், இப்போதைய நாகரீக வாழ்க்கையில் "பாஸ்ட் புட்' கலாசார உணவுகளைச் சாப்பிட்டு உடலாகிய கோயிலை அழித்துக் கொண்டு வருகிறோம். நம் முன்னோர்கள் பயன்படுத்திய உணவுகள் கருப்பையைச் சுத்தமாகவும், இடுப்பு எலும்புகள் வலுப் பெறவும், சினை முட்டை உருவாகவும், சினைப்பை, கருப்பைக் கழலைகள் உண்டாகாமல் தடுக்கவும் செய்தன; இதுபோன்ற உணவு முறைகளை பூப்பெய்த காலத்தில் பயன்படுத்தி வந்தால் குழந்தை பேற்றை ஒரு இயல்பான காரியமாகச் செய்ய முடியும்.
முளை கட்டிய பயறு வகை, கொண்டைக் கடலை சாப்பிட்டு வந்தால் ஆண் பெண் மலட்டுத்தன்மை நீங்கும். கால் கிலோ உளுந்தை நெய்யில் வறுத்து மாவாக்கி பனங்கற்கண்டு, ஏலக்காய் நெய் சேர்த்து உருண்டை பிடித்து நாள்தோறும் ஒரு உருண்டை வீதம் மாதத்தில் 10 நாள் வீதம் சாப்பிட்டு வந்தால் கருப்பை பூரண வளர்ச்சி பெறும்.
தேனும் தினைமாவும் சேர்த்து உருண்டை செய்து சாப்பிட கருப்பை பலம் உண்டாகும்.
நாள்தோறும் ஒரு முட்டை சேர்த்துக் கொண்டால் இடுப்பு எலும்பு, சினைப்பைகள் வலுப்பெறும். நல்ல நாள், விருந்து விழாக்கள் போன்றவற்றுக்கு மாதவிடாயைத் தள்ளிப் போடுவதற்குச் சாப்பிடும் மருந்துகள் சினைப்பைக் கட்டி, கருப்பைக் கட்டி போன்றவைகள் உருவாகி மாதவிடாயின்போது அதிக ரத்தப் போக்கு ஏற்படும். இதனால் கரு உண்டாவதில் சிக்கல் ஏற்படுகிறது.
Re: உங்க வீட்டுப் பெண்ணுக்கு குவா குவா இல்லையா?
சித்த மருத்துவத்தில் நோய் தீர்க்கும் வழிமுறையும் நோய் வராமல் தடுக்கும் முறையும்...:
சித்த மருத்துவமுறையில் தேரையர் சித்தர் அருளிய நோய் அணுகா விதிகளை பின்பற்றுவோம். முதலில் உடலைச் சுத்தம் செய்ய வேண்டும். வாரத்துக்கு இருமுறை (செவ்வாய்-வெள்ளி இரு தினங்கள் மருந்து சாப்பிடும் முன்பு) எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். இதனால் நம் உடல் சூடு, கண் எரிச்சல், உடலில் ஏற்படும் அசதி நீங்கி உற்சாகம் ஏற்படும்.
பிறகு ஆண்டுக்கு 2 முறை பேதி மருந்து எடுக்க வேண்டும்.
பருவ கால மாற்றத்தால் வரும் நோய்களை வராமல் தடுப்பதற்கு நாங்கள் 3 நாள் பேதி மருந்து கொடுக்கிறோம். நோய்க்குத் தக்கவாறு கலிங்காதி தைலம், மலை வேம்பாதி தைலம், லவணகுணாதி எண்ணெய், சித்தாதி எண்ணெய், அகத்தியர் குழம்பு போன்றவற்றை உடல் நிலைக்கு, நோய்களுக்கு, காலத்துக்குத் தக்கவாறு மருந்துகளை வழங்குகிறோம்.
45 நாள்களுக்கு ஒரு முறை நசியம் (மூக்கில் மருத்துவம் மேற்கொள்ளும் முறை) செய்கிறோம். மூக்கிற்கும், மூலாதாரத்திற்கும் தொடர்பு இருக்கிறது. அதனால் கருவாய், எருவாய், மலவாய் சம்பந்தமான தொந்தரவுகள் நீங்குகின்றன. கட்டி, கழலை ஹார்மோன் சுரப்பில் மாறுபாடு, செக்ஸ் உறவு பற்றிய போதிய விவரம் தெரியாமை போன்ற காரணங்களினால் அதிக உதிரப்போக்கு, 6 மாதத்துக்கு ஒரு முறை உதிரப்போக்கு,
ஒரு நாள் மட்டும் தீட்டு படுதல், சிறுநீர் கழிக்கும்போது தீட்டு படுதல் போன்ற காரணங்களுக்கு ரத்தப் பரிசோதனை மற்றும் ஸ்கேன் பரிசோதனை, ஹார்மோன் பரிசோதனை செய்து எல்லாம் இயல்பாக இருந்த பெண்களுக்கு நசியம் செய்து கொடுத்து மகப்பேறு அடைந்துள்ளனர்.
மாதவிலக்கு உண்டான 3 நாள்கள் மூலிகை கற்கங்களை காலையில் 6 மணிக்கு நீராகாரம் (அல்லது) மோரில் அரைத்துக் கொடுத்து அநேகம் பேர் மகப்பேறு அடைந்துள்ளனர். கலிக்கம் (கண்ணில் மருத்துவம்
மேற்கொள்ளும் முறை): ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று கலிக்கம் செய்கிறோம்.
உடலை நோய் வராமல் இருக்கச் செய்யும் மேற்கூறிய வழிமுறைகளை பின்பற்றி உடலே Ovulation-I உணரும் வகையில் செய்யலாம்.
சித்த மருத்துவமுறையில் தேரையர் சித்தர் அருளிய நோய் அணுகா விதிகளை பின்பற்றுவோம். முதலில் உடலைச் சுத்தம் செய்ய வேண்டும். வாரத்துக்கு இருமுறை (செவ்வாய்-வெள்ளி இரு தினங்கள் மருந்து சாப்பிடும் முன்பு) எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். இதனால் நம் உடல் சூடு, கண் எரிச்சல், உடலில் ஏற்படும் அசதி நீங்கி உற்சாகம் ஏற்படும்.
பிறகு ஆண்டுக்கு 2 முறை பேதி மருந்து எடுக்க வேண்டும்.
பருவ கால மாற்றத்தால் வரும் நோய்களை வராமல் தடுப்பதற்கு நாங்கள் 3 நாள் பேதி மருந்து கொடுக்கிறோம். நோய்க்குத் தக்கவாறு கலிங்காதி தைலம், மலை வேம்பாதி தைலம், லவணகுணாதி எண்ணெய், சித்தாதி எண்ணெய், அகத்தியர் குழம்பு போன்றவற்றை உடல் நிலைக்கு, நோய்களுக்கு, காலத்துக்குத் தக்கவாறு மருந்துகளை வழங்குகிறோம்.
45 நாள்களுக்கு ஒரு முறை நசியம் (மூக்கில் மருத்துவம் மேற்கொள்ளும் முறை) செய்கிறோம். மூக்கிற்கும், மூலாதாரத்திற்கும் தொடர்பு இருக்கிறது. அதனால் கருவாய், எருவாய், மலவாய் சம்பந்தமான தொந்தரவுகள் நீங்குகின்றன. கட்டி, கழலை ஹார்மோன் சுரப்பில் மாறுபாடு, செக்ஸ் உறவு பற்றிய போதிய விவரம் தெரியாமை போன்ற காரணங்களினால் அதிக உதிரப்போக்கு, 6 மாதத்துக்கு ஒரு முறை உதிரப்போக்கு,
ஒரு நாள் மட்டும் தீட்டு படுதல், சிறுநீர் கழிக்கும்போது தீட்டு படுதல் போன்ற காரணங்களுக்கு ரத்தப் பரிசோதனை மற்றும் ஸ்கேன் பரிசோதனை, ஹார்மோன் பரிசோதனை செய்து எல்லாம் இயல்பாக இருந்த பெண்களுக்கு நசியம் செய்து கொடுத்து மகப்பேறு அடைந்துள்ளனர்.
மாதவிலக்கு உண்டான 3 நாள்கள் மூலிகை கற்கங்களை காலையில் 6 மணிக்கு நீராகாரம் (அல்லது) மோரில் அரைத்துக் கொடுத்து அநேகம் பேர் மகப்பேறு அடைந்துள்ளனர். கலிக்கம் (கண்ணில் மருத்துவம்
மேற்கொள்ளும் முறை): ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று கலிக்கம் செய்கிறோம்.
உடலை நோய் வராமல் இருக்கச் செய்யும் மேற்கூறிய வழிமுறைகளை பின்பற்றி உடலே Ovulation-I உணரும் வகையில் செய்யலாம்.
Re: உங்க வீட்டுப் பெண்ணுக்கு குவா குவா இல்லையா?
இனப் பெருக்க உறுப்புகள் பலமடைய ஆசனங்கள் உதவுமா?
இதைப் பின்பற்றிப் பலருக்கு குழந்தைச் செல்வம் உண்டாக்கி இருக்கிறோம். காலையில் எழுந்தவுடன் வாசல் தெளித்தால் கிருமிகள் வீட்டில் வராமல் இருக்கும். அதே சமயம் நல்ல பிராண வாயுவை உள்வாங்கி ரத்த ஓட்டத்தைச் சீர் செய்து நோய் நிலையைக் குணப்படுத்திவிடும்.
காலையில் எழுந்து குளித்து கோலம் போட்டால் மூளைக்கு ரத்த ஓட்டம் நன்றாகச் செல்லும். அதனால் தலையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பி உள்பட அனைத்துச் சுரப்பிகளும் நன்றாகச் செயல்படும். மனதை ஒரு நிலைப்படுத்துவதற்காக இவை ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் இந்தியன் முறை கழிப்பறையில் மலம் கழிப்பது குக்குடாசனம் என்ற ஆசனம்; வீடு மொழுகுதல்கூட ஆசனம்; பிறந்தது முதல் வாழ்நாள் முழுவதும் நம்மை அறியாமல் நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் ஒரு ஆசனம். அது 80 லட்சத்து 20 ஆயிரம் ஆசனம்.
உடற்பயிற்சி இல்லாமலேயே உடல் பருமன் ஏற்படுகிறது. உடல் பருமன் உள்ள பெண்களுக்கு குழந்தைப் பேறின்மை ஏற்படுகிறது. இதற்குப் பல வைத்திய முறைகள் மேற்கொண்டு பணம் அதிகமாக செலவு செய்து மன உளைச்சல் ஏற்பட்டு வருந்துகிறார்கள்.
இதைப் பின்பற்றிப் பலருக்கு குழந்தைச் செல்வம் உண்டாக்கி இருக்கிறோம். காலையில் எழுந்தவுடன் வாசல் தெளித்தால் கிருமிகள் வீட்டில் வராமல் இருக்கும். அதே சமயம் நல்ல பிராண வாயுவை உள்வாங்கி ரத்த ஓட்டத்தைச் சீர் செய்து நோய் நிலையைக் குணப்படுத்திவிடும்.
காலையில் எழுந்து குளித்து கோலம் போட்டால் மூளைக்கு ரத்த ஓட்டம் நன்றாகச் செல்லும். அதனால் தலையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பி உள்பட அனைத்துச் சுரப்பிகளும் நன்றாகச் செயல்படும். மனதை ஒரு நிலைப்படுத்துவதற்காக இவை ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் இந்தியன் முறை கழிப்பறையில் மலம் கழிப்பது குக்குடாசனம் என்ற ஆசனம்; வீடு மொழுகுதல்கூட ஆசனம்; பிறந்தது முதல் வாழ்நாள் முழுவதும் நம்மை அறியாமல் நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் ஒரு ஆசனம். அது 80 லட்சத்து 20 ஆயிரம் ஆசனம்.
உடற்பயிற்சி இல்லாமலேயே உடல் பருமன் ஏற்படுகிறது. உடல் பருமன் உள்ள பெண்களுக்கு குழந்தைப் பேறின்மை ஏற்படுகிறது. இதற்குப் பல வைத்திய முறைகள் மேற்கொண்டு பணம் அதிகமாக செலவு செய்து மன உளைச்சல் ஏற்பட்டு வருந்துகிறார்கள்.
Re: உங்க வீட்டுப் பெண்ணுக்கு குவா குவா இல்லையா?
குழந்தைப் பேற்றுக்கு சித்த மருத்துவத்தில் உள்ள மருந்து என்னென்ன?
குழந்தைப் பேற்றுக்கு சித்த மருத்துவத்தில் ஏராளமான மருந்துகள் உள்ளன. என்ன காரணத்தில் மகப்பேறின்மை உள்ளது என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ப மருந்துகள் கொடுக்கப்படும். வெண் பூசணி லேகியம், கரிசாலைக் கற்ப மாத்திரை, வான்குமரி லேகியம், நரசிங்க லேகியம், குன்ம குடோரி மெழுகு, கர்ப்ப சஞ்சீவி எண்ணய், லவண குணாதி எண்ணெய், அஸ்வகந்தி லேகியம், நிலக்கடம்பு சூரணம், சதாவரி லேகியம், நந்தி மெழுகு, குன்ம உப்பு சூரணம், கர்ப்பப் பை சஞ்சீவி சூரணம், அகத்தியர் குழம்பு, அசோகப்பட்டை சூரணம், அமுக்கரா சூரணம், சித்தாதி எண்ணெய், கலிங்காதி தைலம், மேக ராஜ எண்ணெய், பஞ்ச மூலிகை சூரணம், குமரி எண்ணெய், அதிமதுர சூரணம், திரிபலாக்கற்ப சூரணம், கடுக்காய் சூரணம், மலைவேம்பாதி தைலம், சண்டமாருத செந்தூரம், புங்கம்பட்டை தைலம், திரிகடுகு ஆறுமுக செந்தூரம் ஆகிய மருந்துகள் உள்ளன.
குழந்தைப் பேற்றுக்கு சித்த மருத்துவத்தில் ஏராளமான மருந்துகள் உள்ளன. என்ன காரணத்தில் மகப்பேறின்மை உள்ளது என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ப மருந்துகள் கொடுக்கப்படும். வெண் பூசணி லேகியம், கரிசாலைக் கற்ப மாத்திரை, வான்குமரி லேகியம், நரசிங்க லேகியம், குன்ம குடோரி மெழுகு, கர்ப்ப சஞ்சீவி எண்ணய், லவண குணாதி எண்ணெய், அஸ்வகந்தி லேகியம், நிலக்கடம்பு சூரணம், சதாவரி லேகியம், நந்தி மெழுகு, குன்ம உப்பு சூரணம், கர்ப்பப் பை சஞ்சீவி சூரணம், அகத்தியர் குழம்பு, அசோகப்பட்டை சூரணம், அமுக்கரா சூரணம், சித்தாதி எண்ணெய், கலிங்காதி தைலம், மேக ராஜ எண்ணெய், பஞ்ச மூலிகை சூரணம், குமரி எண்ணெய், அதிமதுர சூரணம், திரிபலாக்கற்ப சூரணம், கடுக்காய் சூரணம், மலைவேம்பாதி தைலம், சண்டமாருத செந்தூரம், புங்கம்பட்டை தைலம், திரிகடுகு ஆறுமுக செந்தூரம் ஆகிய மருந்துகள் உள்ளன.
Re: உங்க வீட்டுப் பெண்ணுக்கு குவா குவா இல்லையா?
அன்புள்ள ஆசிரியர் அவர்களே,கருக்குழாய் அடைப்பு நீக்கும் மருந்து எதுவும் சித்த மருத்துவத்தில் உள்ளதா?
siddharth2010- புதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 14/02/2010
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» உங்க வீட்டுப் பிள்ளை... ராஜாத்தி அம்மாள் தொடங்கி வைத்தார்!
» உங்க கடைமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா...?
» 23 பேரை திருமணம் செய்த 108 வயது பாட்டிக்கு ‘குவா.. குவா’ ஆசை
» மீனா கர்ப்பம் : கோடம்பாக்கமும் குவா குவா காலமும்!
» வீட்டுப் பராமரிப்பு
» உங்க கடைமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா...?
» 23 பேரை திருமணம் செய்த 108 வயது பாட்டிக்கு ‘குவா.. குவா’ ஆசை
» மீனா கர்ப்பம் : கோடம்பாக்கமும் குவா குவா காலமும்!
» வீட்டுப் பராமரிப்பு
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|