Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஊழலுக்கு எதிரான போரை முன்பே துவக்கி விட்டேன்: மாணவிக்கு கலாம் பதில்
2 posters
Page 1 of 1
ஊழலுக்கு எதிரான போரை முன்பே துவக்கி விட்டேன்: மாணவிக்கு கலாம் பதில்
திண்டுக்கல்:""ஊழலுக்கு எதிரான போரை நான் முன்பே துவக்கி விட்டேன்,'' என மாணவியின் கேள்வி ஒன்றுக்கு அப்துல்கலாம் பதிலளித்தார்.
காந்திகிராமத்தில் நடந்த கருத்தரங்கில் பேசிய முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கூட்டத்தினரை பார்த்து 10 நிமிடம் கேள்வி கேளுங்கள் என்றார்.
ஒரு மாணவன் எழுந்து "அறிவு' என்றால் என்ன, என்றார்.
அதற்கு கலாம்," அறிவு என்பது வாழ்க்கையில் சிறப்பு. நல்ல எண்ணம் இருந்தால், நல்ல சிந்தனை உண்டாகும்,' என்றார்.
மாணவி: நான் கிராமத்தில் இருந்து படிக்க வந்துள்ளேன். நான் முன்னேற என்ன செய்ய வேண்டும்.
கலாம்: என்னவாக ஆசைப்படுகிறாய்.
மாணவி: "மெரைன் பயாலஜி' படிக்க ஆசைப்படுகிறேன்.
கலாம்: அதில் முயற்சி எடுத்து படித்து முன்னேறு.
மாணவர்: விவசாய நிலங்கள் பிளாட்டுகளாக மாற்றப்படுகின்றன.
கலாம்: இந்தியாவின் உணவு உற்பத்தி நவீன தொழில் நுட்பத்தில் அதிகரித்து வருகிறது. நாம் வாழ்க்கையில் ஐந்து மரங்களை வளர்க்க வேண்டும்.
மாணவி: இந்தியாவில் ஊழல் பிரச்னை குறித்து..
கலாம்:நான் இந்த போராட்டத்தை முன்பே துவக்கி விட்டேன். ஒவ்வொரு வீடும் சிறப்பாக இருந்தால், நாடும் சிறப்பாக இருக்கும், என்றார்.
கிராமங்கள் முன்னேறினால் தான் இந்தியா வல்லரசாகும்: கலாம்:திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில், காந்தி கிராம கிராமிய பல்கலையும், காரைக்குடி சுதேசி அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்திய தமிழக அறிவியல் பேரவையின் 11வது கருத்தரங்கு நடந்தது. பல்கலை துணைவேந்தர் சோம.ராமசாமி தலைமை வகித்தார். பதிவாளர் நாராயணசாமி வரவேற்றார். ஏவுகணை, " பிரமோஸ்' திட்ட இயக்குனர் சிவதாணுபிள்ளை, குன்றக்குடி பொன்னம்பல அடிகள், அமைப்பு செயலர் நாகராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.
கருத்தரங்கை துவக்கி வைத்து அப்துல் கலாம் பேசியதாவது: பாரதியார் 1910ல், பாஞ்சாலி சபதத்தில் "சரஸ்வதி வந்தனம்' என்ற பாடலில் அண்ட சராசரங்கள் சுழன்று கொண்டே இருக்கின்றன. அது போல நாமும், ஓயாது, துவளாது செய்தால், இறையருளால் நம் நாடு மிக விரைவில் வளர்ந்த நாடாக உயரும் என்று, ஒரு விஞ்ஞானி போல் பாடியுள்ளார்.
நாம் எந்த பணி செய்தாலும், அதில் ஒரு லட்சியம் வேண்டும். நமது பல்கலைகள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிலையங்கள் நமது நாட்டிற்கு தேவையான அறிவியல் ஆராய்ச்சி மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் தர வேண்டும்.
இந்தியாவில் 70 சதவீதம் பேர் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இதனால், கிராமப்புறங்களில் கல்வி, வேலைவாய்ப்புகளை உருவாக்கி, மேம்படுத்தினால் தான் 2020ல் இந்தியா வல்லரசாகும். நகரங்களுக்குள்ள வசதிகள் கிராமங்களுக்கு கிடைக்க, "புரா' என்ற திட்டத்தை துவக்கினேன். தமிழக அரசு இந்த திட்டத்தை மாநிலம் முழுமைக்கும் நிறைவேற்ற முடிவு செய்திருப்பது, இந்தியாவிற்கே ஒரு முன்னுதாரணமாக திகழும். மாநிலங்கள் வளர, மாவட்டங்கள் வளர வேண்டும். மாவட்டங்கள் வளர, கிராமங்கள் ஒவ்வொன்றாக வளர வேண்டும்.இவ்வாறு கலாம் பேசினார்.
ஆசிரியருக்கு மரியாதை : காந்தி கிராம பல்கலைக்கு வந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், தன் பேராசிரியர் சின்னத்துரையிடம் சென்று ஆசி பெற்றார்.அவருக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினார். அப்துல் கலாம் கூறுகையில், "நான் எப்போது திண்டுக்கல் வந்தாலும், அவர் இருப்பிடம் சென்று ஆசி பெறுவேன். தற்போது அவர் இந்த நிகழ்ச்சிக்கு வந்ததால், எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. பேராசிரியர் சின்னத்துரை எனக்கு நடத்திய, "அட்டாமிக்' பாடம் தான் நான் அணுசக்தி, அணுகுண்டு தயாரிக்க என்னை ஊக்கப்படுத்தியது. இதற்காக நான் பேராசிரியருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.
"என்னை வழி நடத்தியது திருக்குறள்' : "நண்பர்களே என் வாழ்க்கையின் பல்வேறு நிலைகளில் உறுதுணையாக இருந்து, உற்ற துணையாக இருந்து வாழ்க்கையின் வழிகாட்டியாக என்னை வழி நடத்தியது திருக்குறள் தான். எனக்கு பிடித்த ஒரு திருக்குறள் என் வாழ்விற்கு வளம் கொடுத்தது.
அது...
அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்
என்பதாகும். அறிவு அழிவு வராமல் காக்கும் கருவியாகும். பகைவராலும் அழிக்க முடியாத உள் அரணுமாகும்' என்றார்.
காந்திகிராமத்தில் நடந்த கருத்தரங்கில் பேசிய முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கூட்டத்தினரை பார்த்து 10 நிமிடம் கேள்வி கேளுங்கள் என்றார்.
ஒரு மாணவன் எழுந்து "அறிவு' என்றால் என்ன, என்றார்.
அதற்கு கலாம்," அறிவு என்பது வாழ்க்கையில் சிறப்பு. நல்ல எண்ணம் இருந்தால், நல்ல சிந்தனை உண்டாகும்,' என்றார்.
மாணவி: நான் கிராமத்தில் இருந்து படிக்க வந்துள்ளேன். நான் முன்னேற என்ன செய்ய வேண்டும்.
கலாம்: என்னவாக ஆசைப்படுகிறாய்.
மாணவி: "மெரைன் பயாலஜி' படிக்க ஆசைப்படுகிறேன்.
கலாம்: அதில் முயற்சி எடுத்து படித்து முன்னேறு.
மாணவர்: விவசாய நிலங்கள் பிளாட்டுகளாக மாற்றப்படுகின்றன.
கலாம்: இந்தியாவின் உணவு உற்பத்தி நவீன தொழில் நுட்பத்தில் அதிகரித்து வருகிறது. நாம் வாழ்க்கையில் ஐந்து மரங்களை வளர்க்க வேண்டும்.
மாணவி: இந்தியாவில் ஊழல் பிரச்னை குறித்து..
கலாம்:நான் இந்த போராட்டத்தை முன்பே துவக்கி விட்டேன். ஒவ்வொரு வீடும் சிறப்பாக இருந்தால், நாடும் சிறப்பாக இருக்கும், என்றார்.
கிராமங்கள் முன்னேறினால் தான் இந்தியா வல்லரசாகும்: கலாம்:திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில், காந்தி கிராம கிராமிய பல்கலையும், காரைக்குடி சுதேசி அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்திய தமிழக அறிவியல் பேரவையின் 11வது கருத்தரங்கு நடந்தது. பல்கலை துணைவேந்தர் சோம.ராமசாமி தலைமை வகித்தார். பதிவாளர் நாராயணசாமி வரவேற்றார். ஏவுகணை, " பிரமோஸ்' திட்ட இயக்குனர் சிவதாணுபிள்ளை, குன்றக்குடி பொன்னம்பல அடிகள், அமைப்பு செயலர் நாகராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.
கருத்தரங்கை துவக்கி வைத்து அப்துல் கலாம் பேசியதாவது: பாரதியார் 1910ல், பாஞ்சாலி சபதத்தில் "சரஸ்வதி வந்தனம்' என்ற பாடலில் அண்ட சராசரங்கள் சுழன்று கொண்டே இருக்கின்றன. அது போல நாமும், ஓயாது, துவளாது செய்தால், இறையருளால் நம் நாடு மிக விரைவில் வளர்ந்த நாடாக உயரும் என்று, ஒரு விஞ்ஞானி போல் பாடியுள்ளார்.
நாம் எந்த பணி செய்தாலும், அதில் ஒரு லட்சியம் வேண்டும். நமது பல்கலைகள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிலையங்கள் நமது நாட்டிற்கு தேவையான அறிவியல் ஆராய்ச்சி மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் தர வேண்டும்.
இந்தியாவில் 70 சதவீதம் பேர் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இதனால், கிராமப்புறங்களில் கல்வி, வேலைவாய்ப்புகளை உருவாக்கி, மேம்படுத்தினால் தான் 2020ல் இந்தியா வல்லரசாகும். நகரங்களுக்குள்ள வசதிகள் கிராமங்களுக்கு கிடைக்க, "புரா' என்ற திட்டத்தை துவக்கினேன். தமிழக அரசு இந்த திட்டத்தை மாநிலம் முழுமைக்கும் நிறைவேற்ற முடிவு செய்திருப்பது, இந்தியாவிற்கே ஒரு முன்னுதாரணமாக திகழும். மாநிலங்கள் வளர, மாவட்டங்கள் வளர வேண்டும். மாவட்டங்கள் வளர, கிராமங்கள் ஒவ்வொன்றாக வளர வேண்டும்.இவ்வாறு கலாம் பேசினார்.
ஆசிரியருக்கு மரியாதை : காந்தி கிராம பல்கலைக்கு வந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், தன் பேராசிரியர் சின்னத்துரையிடம் சென்று ஆசி பெற்றார்.அவருக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினார். அப்துல் கலாம் கூறுகையில், "நான் எப்போது திண்டுக்கல் வந்தாலும், அவர் இருப்பிடம் சென்று ஆசி பெறுவேன். தற்போது அவர் இந்த நிகழ்ச்சிக்கு வந்ததால், எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. பேராசிரியர் சின்னத்துரை எனக்கு நடத்திய, "அட்டாமிக்' பாடம் தான் நான் அணுசக்தி, அணுகுண்டு தயாரிக்க என்னை ஊக்கப்படுத்தியது. இதற்காக நான் பேராசிரியருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.
"என்னை வழி நடத்தியது திருக்குறள்' : "நண்பர்களே என் வாழ்க்கையின் பல்வேறு நிலைகளில் உறுதுணையாக இருந்து, உற்ற துணையாக இருந்து வாழ்க்கையின் வழிகாட்டியாக என்னை வழி நடத்தியது திருக்குறள் தான். எனக்கு பிடித்த ஒரு திருக்குறள் என் வாழ்விற்கு வளம் கொடுத்தது.
அது...
அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்
என்பதாகும். அறிவு அழிவு வராமல் காக்கும் கருவியாகும். பகைவராலும் அழிக்க முடியாத உள் அரணுமாகும்' என்றார்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஊழலுக்கு எதிரான போரை முன்பே துவக்கி விட்டேன்: மாணவிக்கு கலாம் பதில்
இவர் வாழும் காலத்தில் நாமும் இருக்கிறோம் என பெருமையாக இருக்கு ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஊழலுக்கு எதிரான போரை முன்பே துவக்கி விட்டேன்: மாணவிக்கு கலாம் பதில்
அப்துல் கலாம் சார் நீங்க மட்டும் நல்லவரா இருந்தா போதாது.எனக்கு தெரிஞ்சு நீங்க குடியரசு தலைவரா இருந்தப்பவும் சரி இப்பவும் சரி
எல்லாருக்கும் அறிவுரை தான் சொல்லிட்டு இருக்கீங்களே தவிர ஊழலுக்கு எதிரா எதுவும் செய்தா மாதிரி தெரியலை.
எல்லாருக்கும் அறிவுரை தான் சொல்லிட்டு இருக்கீங்களே தவிர ஊழலுக்கு எதிரா எதுவும் செய்தா மாதிரி தெரியலை.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு ரஜினிகாந்த் ஆதரவு
» ஊழலுக்கு எதிரான ஐ.நா. உடன்படிக்கைக்கு இந்தியா ஒப்புதல்
» ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தர தந்தி அனுப்புங்கள்
» ஊழலுக்கு எதிரான பிரசாரம் : சோனியாவால் பிரச்சினை ; அன்னா ஹசாரே கடும் தாக்கு.
» 'மதுக்கடையை மூடுவோம்னு சொல்லவே இல்லையே..': மாணவிக்கு கனிமொழி பதில்
» ஊழலுக்கு எதிரான ஐ.நா. உடன்படிக்கைக்கு இந்தியா ஒப்புதல்
» ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தர தந்தி அனுப்புங்கள்
» ஊழலுக்கு எதிரான பிரசாரம் : சோனியாவால் பிரச்சினை ; அன்னா ஹசாரே கடும் தாக்கு.
» 'மதுக்கடையை மூடுவோம்னு சொல்லவே இல்லையே..': மாணவிக்கு கனிமொழி பதில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|