Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருணாநிதியின் குடும்பத்தின் மீது கார் அட்டாக்...
3 posters
Page 1 of 1
கருணாநிதியின் குடும்பத்தின் மீது கார் அட்டாக்...
இன்று இல்லாவிட்டால், நாளை நல்ல காலம் வரும். நாளை இல்லாவிட்டால், அதற்கு மறுநாள் நல்லதாக விடியும்!’ என நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் தி.மு.க. உடன்பிறப்புகள். ஆனால், அந்தக் கட்சியின் குடும்பப் புள்ளிகளை மையம்கொண்டு அடுத்தடுத்து சுழல்கிறதே சர்ச்சை றாவளிகள்.
2ஜி அலைக்கற்றையில் ஆரம்பித்த அதகளம், இப்போது ஓர் அயல்நாட்டு காரில் வந்து நிற்கிறது. மும்பையில் உள்ள நவசேவா துறைமுகத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, 'மஸராட்டி’ என்ற சொகுசு கார் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. அந்த காரை வாங்கிய அகமதாபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர், சென்னையில் ஒருவருக்கு அதை விற்பனை செய்தார். 2 கோடி மதிப்பு உடைய காரை மிக மிகக் குறைந்த மதிப்பாகக் காட்டி, வரி ஏய்ப்பு செய்ததாக புகார் கிளம்பியது. அதனால், அகமதாபாத் வருவாய் புலனாய்வுத் துறையினர், சென்னை வருவாய் புலனாய்வுத் துறையின் உதவியுடன் மஸராட்டி காரைத் தேடி வந்தனர். கடந்த 21-ம் தேதி மயிலாப்பூரை சேர்ந்த பஷீர் அகமது என்பவரிடம் இருந்து, அந்த கார் பறிமுதல் செய்யப்பட்டது. அதற்குப் பின்னர்தான், விவகாரம் வேறு ரூட்டில் விஸ்வரூபம் எடுத்துப் பயணிக்கிறது. பறிமுதல் செய்யப்பட்ட சொகுசு காரின் நம்பர் ஜிழி06 ணி 0001. 'இதை மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் பயன்படுத்தினார். வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர் ஒருவர்தான் அவருக்கு இந்த காரை பரிசாகக் கொடுத்தார்!’ என்று முதலில் செய்தி கசிந்தது. ஏற்கெனவே காலாவதி மருந்து விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மீனாட்சி சுந்தரம் ஒரு பி.எம்.டபிள்யூ. காரை பரிசாகக் கொடுத்ததாக, இதே சபரீசன் மீது புகார் கிளம்பியது நினைவு இருக்கலாம்.
நாம் சென்னை தி.நகரில் இருக்கும் மத்திய வருவாய் புலனாய்வு அலுவலகத்துக்கு சென்றபோது, அந்த காரின் நம்பர் பிளேட்டைக் கழற்றி எடுத்துவிட்டார்கள். யாரும் அதை படம் எடுக்க முடியாதபடி காரை கவர் போட்டு மூடி இருந்தார்கள். இந்த கார் விவகாரம், முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட, 'கருணாநிதி குடும்பத்தில் யார் யார், என்னென்ன கார்களை பயன்படுத்துகிறார்கள், அவற்றின்நம்பர்கள் என்ன என எல்லா விவரங்களும் எனக்கு உடனடியாகக் கொடுங்கள்!’ என உளவுத் துறையிடம் கேட்டு இருக்கிறார். கருணாநிதி குடும்பத்தினரிடம் மொத்தம் 20-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சொகுசு கார்கள் இருக்கின்றனவாம். மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி 'ஹம்மர்’ சொகுசு காரை பயன்படுத்துகிறார். கருணாநிதியின் பயணத்துக்கு என்று 'லம்போகினி,’ 'ஆஸ்டன் மார்டின்,’ 'மாடிஃபைடு பென்ஸ்’ ஆகிய மூன்று கார்கள் உள்ளன. கருணாநிதி பெரும்பாலும் பென்ஸில்தான் பயணிக்கிறார். இந்த காரில், ஏ.சி. காற்று கீழ்ப்புறத்தில் இருந்து வருவது ஸ்பெஷல். 'கருணாநிதியின் சொந்தபந்தங்கள் பயன்படுத்தும் அனைத்து சொகுசு கார்களுக்கும் முறையாக வரி கட்டப்பட்டு உள்ளதா?’ என்று அதிகாரிகள் இப்போது தீவிர விசாரணையில் குதித்து இருக்கிறார்கள்.
இதனிடையே தற்போது பறிமுதல் செய்யப்பட்ட கார் சபரீசன் பயன்படுத்தியது அல்ல. உதயநிதி ஸ்டாலின்தான் பயன்படுத்தினார். அதற்கான வீடியோ ஆதாரம் ஒரு தனியார் தொலைக்காட்சி வசம் உள்ளது என்றும் இன்னொரு பரபரப்பு கிளம்பி இருக்கிறது.
முன்னணி கார் நிறுவனத்தின் மேலாளர் ஒருவரிடம் பேசியபோது, ''இந்தியா முழுவதும் சுமார் 500-க்கும் மேற்பட்ட சொகுசு கார்கள் முறையாக வரி கட்டாமல் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளன. அதைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்று அகமதாபாத்தைச் சேர்ந்த கார் டீலர் ஒருவர் அங்கு உள்ள உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதன் தொடர்ச்சியாகவே, தேடுதல் வேட்டை தீவிரம் அடைந்து இருக்கிறது. கடந்த 2005-ம் ஆண்டு பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி பயன்படுத்திய ஹம்மர் கார் பறிமுதல் செய்யப்பட்டது. அதே ஆண்டில் ஜோதிபாசுவின் மகன் சந்தன்பாசுவின் உயர் ரக காரும் சிக்கியது. 2006-ல் ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சௌதாலாவின் மகன் அஜய் சௌதாலா பயன்படுத்திய 'டொயோட்டா லேண்ட் க்ரூஸர் பிரேடோ’ கார் வரி ஏய்ப்பு காரணமாக பறிமுதல் செய்யப்பட்டது. சஞ்சய் பண்டாரி என்ற கார் கடத்தல் மன்னன் அப்போது கைது செய்யப்பட்டான். இந்தியா முழுவதும் கடந்த ஐந்து ஆண்டுகளில் 100-க்கும் அதிகமான கார்கள் சிக்கி இருக்கின்றன. வெளிநாட்டுப் பயணிகளுக்காக இந்த காரை டிராவல்ஸ் நடத்துபவர்கள் இறக்குமதி செய்தால், வரி விலக்கு உண்டு. இதைப் பயன்படுத்தி காரை இறக்குமதி செய்யும் கும்பல், பிறகு அரசியல் மற்றும் சினிமா பிரபலங்களுக்குப் பெரும் தொகைக்கு விற்றுவிடுகிறது. அரசாங்கம் கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்தினால் இது போன்ற வரி இழப்பைத் தடுக்க முடியும்!'' என்றார்.
மத்திய வருவாய் புலனாய்வு கூடுதல் இயக்குநர் (சென்னை) ராஜனிடம் பேசினோம். ''சென்னையில் நாங்கள் பறிமுதல் செய்த சொகுசு கார் பஷீர் அகமது என்பவருக்குச் சொந்தமானது. அவரது மயிலாப்பூர் வீட்டில்தான் அதைப் பறிமுதல் செய்தோம். இதற்கு முன்பு அந்த காரை அரசியல் பிரபலங்கள் யாரும் பயன்படுத்தினார்களா என்பது குறித்து எனக்குத் தெரியாது. எங்களின் இந்த அதிரடி நடவடிக்கை தொடரும்...'' என்றார்.
இது குறித்து, சபரீசனைப் பலமுறை தொடர்புகொள்ள முயற்சித்தும், பதில் பெற இயலவில்லை! அவர் விளக்கம் வந்தால் வெளியிடத் தயாராக உள்ளோம்.
2ஜி அலைக்கற்றையில் ஆரம்பித்த அதகளம், இப்போது ஓர் அயல்நாட்டு காரில் வந்து நிற்கிறது. மும்பையில் உள்ள நவசேவா துறைமுகத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, 'மஸராட்டி’ என்ற சொகுசு கார் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. அந்த காரை வாங்கிய அகமதாபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர், சென்னையில் ஒருவருக்கு அதை விற்பனை செய்தார். 2 கோடி மதிப்பு உடைய காரை மிக மிகக் குறைந்த மதிப்பாகக் காட்டி, வரி ஏய்ப்பு செய்ததாக புகார் கிளம்பியது. அதனால், அகமதாபாத் வருவாய் புலனாய்வுத் துறையினர், சென்னை வருவாய் புலனாய்வுத் துறையின் உதவியுடன் மஸராட்டி காரைத் தேடி வந்தனர். கடந்த 21-ம் தேதி மயிலாப்பூரை சேர்ந்த பஷீர் அகமது என்பவரிடம் இருந்து, அந்த கார் பறிமுதல் செய்யப்பட்டது. அதற்குப் பின்னர்தான், விவகாரம் வேறு ரூட்டில் விஸ்வரூபம் எடுத்துப் பயணிக்கிறது. பறிமுதல் செய்யப்பட்ட சொகுசு காரின் நம்பர் ஜிழி06 ணி 0001. 'இதை மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் பயன்படுத்தினார். வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர் ஒருவர்தான் அவருக்கு இந்த காரை பரிசாகக் கொடுத்தார்!’ என்று முதலில் செய்தி கசிந்தது. ஏற்கெனவே காலாவதி மருந்து விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மீனாட்சி சுந்தரம் ஒரு பி.எம்.டபிள்யூ. காரை பரிசாகக் கொடுத்ததாக, இதே சபரீசன் மீது புகார் கிளம்பியது நினைவு இருக்கலாம்.
நாம் சென்னை தி.நகரில் இருக்கும் மத்திய வருவாய் புலனாய்வு அலுவலகத்துக்கு சென்றபோது, அந்த காரின் நம்பர் பிளேட்டைக் கழற்றி எடுத்துவிட்டார்கள். யாரும் அதை படம் எடுக்க முடியாதபடி காரை கவர் போட்டு மூடி இருந்தார்கள். இந்த கார் விவகாரம், முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட, 'கருணாநிதி குடும்பத்தில் யார் யார், என்னென்ன கார்களை பயன்படுத்துகிறார்கள், அவற்றின்நம்பர்கள் என்ன என எல்லா விவரங்களும் எனக்கு உடனடியாகக் கொடுங்கள்!’ என உளவுத் துறையிடம் கேட்டு இருக்கிறார். கருணாநிதி குடும்பத்தினரிடம் மொத்தம் 20-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சொகுசு கார்கள் இருக்கின்றனவாம். மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி 'ஹம்மர்’ சொகுசு காரை பயன்படுத்துகிறார். கருணாநிதியின் பயணத்துக்கு என்று 'லம்போகினி,’ 'ஆஸ்டன் மார்டின்,’ 'மாடிஃபைடு பென்ஸ்’ ஆகிய மூன்று கார்கள் உள்ளன. கருணாநிதி பெரும்பாலும் பென்ஸில்தான் பயணிக்கிறார். இந்த காரில், ஏ.சி. காற்று கீழ்ப்புறத்தில் இருந்து வருவது ஸ்பெஷல். 'கருணாநிதியின் சொந்தபந்தங்கள் பயன்படுத்தும் அனைத்து சொகுசு கார்களுக்கும் முறையாக வரி கட்டப்பட்டு உள்ளதா?’ என்று அதிகாரிகள் இப்போது தீவிர விசாரணையில் குதித்து இருக்கிறார்கள்.
இதனிடையே தற்போது பறிமுதல் செய்யப்பட்ட கார் சபரீசன் பயன்படுத்தியது அல்ல. உதயநிதி ஸ்டாலின்தான் பயன்படுத்தினார். அதற்கான வீடியோ ஆதாரம் ஒரு தனியார் தொலைக்காட்சி வசம் உள்ளது என்றும் இன்னொரு பரபரப்பு கிளம்பி இருக்கிறது.
முன்னணி கார் நிறுவனத்தின் மேலாளர் ஒருவரிடம் பேசியபோது, ''இந்தியா முழுவதும் சுமார் 500-க்கும் மேற்பட்ட சொகுசு கார்கள் முறையாக வரி கட்டாமல் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளன. அதைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்று அகமதாபாத்தைச் சேர்ந்த கார் டீலர் ஒருவர் அங்கு உள்ள உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதன் தொடர்ச்சியாகவே, தேடுதல் வேட்டை தீவிரம் அடைந்து இருக்கிறது. கடந்த 2005-ம் ஆண்டு பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி பயன்படுத்திய ஹம்மர் கார் பறிமுதல் செய்யப்பட்டது. அதே ஆண்டில் ஜோதிபாசுவின் மகன் சந்தன்பாசுவின் உயர் ரக காரும் சிக்கியது. 2006-ல் ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சௌதாலாவின் மகன் அஜய் சௌதாலா பயன்படுத்திய 'டொயோட்டா லேண்ட் க்ரூஸர் பிரேடோ’ கார் வரி ஏய்ப்பு காரணமாக பறிமுதல் செய்யப்பட்டது. சஞ்சய் பண்டாரி என்ற கார் கடத்தல் மன்னன் அப்போது கைது செய்யப்பட்டான். இந்தியா முழுவதும் கடந்த ஐந்து ஆண்டுகளில் 100-க்கும் அதிகமான கார்கள் சிக்கி இருக்கின்றன. வெளிநாட்டுப் பயணிகளுக்காக இந்த காரை டிராவல்ஸ் நடத்துபவர்கள் இறக்குமதி செய்தால், வரி விலக்கு உண்டு. இதைப் பயன்படுத்தி காரை இறக்குமதி செய்யும் கும்பல், பிறகு அரசியல் மற்றும் சினிமா பிரபலங்களுக்குப் பெரும் தொகைக்கு விற்றுவிடுகிறது. அரசாங்கம் கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்தினால் இது போன்ற வரி இழப்பைத் தடுக்க முடியும்!'' என்றார்.
மத்திய வருவாய் புலனாய்வு கூடுதல் இயக்குநர் (சென்னை) ராஜனிடம் பேசினோம். ''சென்னையில் நாங்கள் பறிமுதல் செய்த சொகுசு கார் பஷீர் அகமது என்பவருக்குச் சொந்தமானது. அவரது மயிலாப்பூர் வீட்டில்தான் அதைப் பறிமுதல் செய்தோம். இதற்கு முன்பு அந்த காரை அரசியல் பிரபலங்கள் யாரும் பயன்படுத்தினார்களா என்பது குறித்து எனக்குத் தெரியாது. எங்களின் இந்த அதிரடி நடவடிக்கை தொடரும்...'' என்றார்.
இது குறித்து, சபரீசனைப் பலமுறை தொடர்புகொள்ள முயற்சித்தும், பதில் பெற இயலவில்லை! அவர் விளக்கம் வந்தால் வெளியிடத் தயாராக உள்ளோம்.
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: கருணாநிதியின் குடும்பத்தின் மீது கார் அட்டாக்...
சூரியனை மறைக்கும் இன்னொரு
கார் / கரிய மேகமோ / மோகமோ?
கார் / கரிய மேகமோ / மோகமோ?
நட்புடன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
Re: கருணாநிதியின் குடும்பத்தின் மீது கார் அட்டாக்...
அடுத்த ஆப்பு காருல வருது...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Similar topics
» அன்புமணி மீது விமர்சனம் எதிரொலி: தயாநிதி மாறன் கார் மீது கல்வீச்சு- பதற்றம்
» கருணாநிதியின் மகள் கனிமொழி மீது காவல் நிலையத்தில் புகார்
» திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் வீடு மீது கல்வீச்சு- ஒருவர் கைது
» உ.பியில் கார் மீது மோதிய ரயில் - 2 பேர் பலி
» விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி கார் மீது சரமாரியாக கல் வீச்சு
» கருணாநிதியின் மகள் கனிமொழி மீது காவல் நிலையத்தில் புகார்
» திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் வீடு மீது கல்வீச்சு- ஒருவர் கைது
» உ.பியில் கார் மீது மோதிய ரயில் - 2 பேர் பலி
» விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி கார் மீது சரமாரியாக கல் வீச்சு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|