ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்க்கஸாக மாறிய சமச்சீர் கல்வி !

Go down

சர்க்கஸாக மாறிய சமச்சீர் கல்வி ! Empty சர்க்கஸாக மாறிய சமச்சீர் கல்வி !

Post by மஞ்சுபாஷிணி Thu Jun 23, 2011 3:07 pm

சர்க்கஸாக மாறிய சமச்சீர் கல்வி !

புத்தகங்களே...
புத்தகங்களே!
தயவுசெய்து
குழந்தைகளை
கிழித்து விடாதீர்கள்

- அப்துல் ரகுமான்

'பாடத்திட்டம் தரமானதாக இல்லாத காரணத்தால், சமச்சீர் கல்வி இப்போதைக்கு நிறுத்தி வைக்கப்படுகிறது' என்றொரு அறிவிப்பு... அதையடுத்து, உயர் நீதிமன்றத்தில் அரசுக்கு எதிராக ஒரு வழக்கு... அங்கிருந்து அரசின் முடிவுக்கு எதிராக ஒரு தீர்ப்பு... உடனே உச்ச நீதிமன்றம் நோக்கி தமிழக அரசின் சார்பில் ஒரு ஓட்டம்... 'நிபுணர் குழு அமைத்து பாடத் திட்டத்தின் தரத்தை ஆராய்ந்து மூன்று வாரங்களில் பதில் தரவேண்டும்' என்று அங்கிருந்து ஒரு உத்தரவு...


சர்க்கஸாக மாறிய சமச்சீர் கல்வி ! Avl24


எல்லாவற்றையும் பதறியபடியே பார்த்துக் கொண்டிருந்த தமிழக மாணவர்களும் பெற்றோரும்... 'அடச்சே...' என்று தற்போது வெறுத்துப் போய் உட்கார்ந்திருக்கிறார்கள்!

ஜூன் முதல் வாரத்தில் திறக்கப்பட வேண்டிய பள்ளிகள், மூன்றாவது வாரத்தில்தான் திறக்கப்பட்டிருக்கின்றன. பாடம் என்று எதுவுமே நடத்தப்படாத பள்ளிக்கு... கையை வீசிக் கொண்டு பரிதாபமாகச் சென்று வருகின்றன குழந்தைகள்!

ஆசிரியர்களுக்கு 'பிரிட்ஜ் கோர்ஸ்’ எனப்படும் பயிற்சி, ஒரே நாளில் (?) கொடுக்கப்பட்டுள்ளது. அதைக் கற்றுக்கொண்டுவிட்ட (?) ஆசிரியர்கள், செயல்முறை கற்றல் கல்வி மூலம் பாடல்கள், நீதிக் கதைகள், மனக் கணக்குகள் என்று மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறார்கள். 'வீட்டில் இருந்து தொல்லை கொடுக்காமல், அங்கே போய் உட்கார்ந்து வந்தால்கூட போதும்' என்று பெற்றோரும் தினமும் அனுப்பி வைத்துக் கொண்டுள்ளனர்.

''சரி, உண்மையிலேயே சமச்சீர் கல்விக் கான பாடங்களின் தரம் குறைவானதாகத்தான் இருக்கின்றனவா?'' என்றபடி, அந்த பாடநூல் தயாரிப்புக் குழுவில் இருந்த ஆசிரியர்கள் சிலரைச் சந்தித்தோம். இந்த இக்கட்டான சூழலில் தங்களின் பெயர்கள் வெளிவருவதை விரும்பதாவர்களாகப் பேசிய அவர்களின் குரலில், ஏகத்துக்கும் வேதனை யின் வலி.
சர்க்கஸாக மாறிய சமச்சீர் கல்வி ! Avl24a
''நடைமுறையில் இருக்கும் கல்வி, குருவித் தலையில் பனங்காயை வைத்துப் பார்ப்பதாகத்தான் இருக்கிறது. அதாவது, தேவையற்ற மன அழுத்தத்தை மாணவர்களுக்கு உண்டாக்கும் அளவுக்கு இருக்கிறது. இப்படிப்பட்ட பல காரணங்களுக்காகத்தான் சமச்சீர் கல்வியே உருவானது. ஐந்தாவது படிக்கிற மாணவனுக்கு என்ன தெரிய வேண்டுமோ... அதை, செயல்வழிக் கற்றல் எனும் முறையில் அந்த மாணவன் எளிமையாக கற்றுக்கொள்ளும் வகையில் பாடத் திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு பாடமும் மாணவனின் ஆளுமையை, அறிவை, சுயமாக சிந்திக்கும் திறனை வளர்க்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. சுயசிந்தனையை வளர்க்காத பாடத் திட்டத்துக்குப் பழக்கப்பட்ட மாணவர்கள், மூன்றே மாதங்களில் மனப்பாடம் செய்து ஒப்பித்து மார்க் வாங்குவதில் என்ன பலன் இருக்கும்?’' என்று கேள்வி எழுப்பியவர்கள்,

''இத்தனைக்கும் வெறும் ஆசிரியர் குழு மட்டுமே ஓர் அறையில் அமர்ந்து கொண்டு இவற்றையெல்லாம் தயாரிக்கவில்லை. எழுத் தாளர்கள், குழந்தை மனநல மருத்துவர்கள், சம்பந்தப்பட்ட பாடங்களில் தேசிய அளவில் புகழ் பெற்ற நிபுணர்கள் என்று பலரையும் வைத்துத்தான் பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

மெட்ரிக் பள்ளிகளில் ஏற்கெனவே இருக்கும் பாடத் திட்டத்தைத்தான் பெற்றோர் விரும்புகின்றனர் என்பதும் ஏமாற்றுவேலை. தங்களின் பணத்தேவைக்காக பெற்றோர்களையெல்லாம் அதற்கு பழக்கி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்'' என்று தங்கள் கடின உழைப்பும் முயற்சிகளும் வீணாகிக் கொண்டிருக்கும் கோபத்தில் பேசினார்கள்.

சமச்சீர் பாடத்திட்டக் குழுவில் இருந்த மெட்ரிக் பள்ளி நிர்வாகியும், கல்வியாளருமான 'ஆயிஷா’ நடராசன் கூறுகையில், ''மெட்ரிக் பள்ளிக் கல்வி என்பது பெற்றோர்களின் டாக்டர், இன்ஜினீயர் ஆசையை நிறைவேற்றும் வகையிலான மனப்பாடம் செய்யும் கல்வியை அடிப்படையாகக் கொண்டது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை'' என்று சொன்னவர்,

''கல்வியே தனியார்மயமாகிவிட்ட சூழலில், 'இதுதான் பொதுவான 'சிலபஸ், இதைப் பின்பற்றுங்கள்' என்று சொல்வதோடு அரசு நிறுத்திக் கொள்வது நல்லது. அதைவிடுத்து, இந்த புத்தகங்களைத்தான் வாங்க வேண்டும் என்று எதற்காகக் கட்டாயப்படுத்த வேண்டும்? 'நேஷனல் கரிகுலம் ஃபிரேம் ஒர்க்’ என்கிற தேசிய கமிட்டி, சமச்சீர் கல்வியை நாடு முழுவதும் பரிந்துரைத்த போது கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் மாநில அளவில் அனைத்துப் பள்ளிகளும் பின்பற்றக்கூடிய பொதுவான சிலபஸை உருவாக்கின. அதன்படி தயாராகும் புத்தகங்களை, அரசிடமிருந்தோ.... தனியார் புத்தக நிறுவனங்களிடமிருந்தோ வாங்கிக் கொள்ளலாம் என்றும் அனுமதி அளித்துள்ளன. அதே நடைமுறையை இங்கேயும் பின்பற்றினால் பிரச்னை தீர்ந்துவிடும்'' என்றார் யதார்த்தமாக!

சர்க்கஸாக மாறிய சமச்சீர் கல்வி ! Avl24b

'ஒன்றாம் வகுப்புக்கும் ஆறாம் வகுப்புக்கும் ஏற்கெனவே சமச்சீர் பாடங்கள் அமலில் இருப்பதால்... அதுவே தொடரட்டும். மற்ற வகுப்புகளுக்கான சமச்சீர் கல்விப் பாடங்களின் தரம் குறித்து நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்யுங்கள்' என்று உச்ச நீதிமன்றம் சொல்லியிருப்பதால், தற்போது நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு மூன்று வாரத்தில் முடிவெடுத்து, உயர் நீதிமன்ற ஒப்புதலைப் பெறவேண்டும்.

இது எல்லாமே திட்டமிட்டபடி நடந்து முடிந்து, 'ஏற்கெனவே அச்சடிக்கப்பட்டிருக்கும் சமச்சீர் கல்வி புத்தகங்களே போதும்' என்று முடிவெடுத்தாலே... கிட்டத்தட்ட ஒரு மாதத் துக்கும் மேலான பள்ளி நாட்கள் ஏற்கெனவே வீணாகியிருக்கும். அதேசமயம்... 'அந்தப் பாட புத்தகங்கள் தரமற்றவை' என்று முடிவெடுத்து விட்டால், புதிய புத்தகங்களை அச்சிடுவதற்கு மூன்று, நான்கு மாதங்களாவது தேவைப்படும். அத்தனை பள்ளி நாட்களும் வீண் என்பது ஒருபுறமிருக்க... அதுவரை என்ன செய்வார்கள் மாணவர்களும் ஆசிரியர்களும்? கால் பரீட்சை, அரையாண்டு பரீட்சை என்னாகும்? பொதுத் தேர்வு எழுதும் 7 லட்சம் மாணவர்களின் நிலை என்னாகும்? என்றெல்லாம் பற்பல கேள்விகளுடன் அல்லாடிக் கொண்டு இருக்கிறார்கள் மாணவர்கள்.

சமூகத்தை தெளிவுபடுத்தத்தான் கல்வி. அந்தக் கல்வியே குழப்பத்தில் இருந்தால்?

நன்றி விகடன்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சர்க்கஸாக மாறிய சமச்சீர் கல்வி ! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum