Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருணாநிதி எம்.எல்.ஏ. பதவிக்கு ஆபத்து-அதிமுக முன்னாள் எம்.பி முத்துமணி
2 posters
Page 1 of 1
கருணாநிதி எம்.எல்.ஏ. பதவிக்கு ஆபத்து-அதிமுக முன்னாள் எம்.பி முத்துமணி
![கருணாநிதி எம்.எல்.ஏ. பதவிக்கு ஆபத்து-அதிமுக முன்னாள் எம்.பி முத்துமணி 19-karuna300](https://2img.net/h/thatstamil.oneindia.in/img/2011/06/19-karuna300.jpg)
சட்டசபை கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் எம்.எல்.ஏ. பதவியை கருணாநிதி வீனாக்குவதால் அவர் அந்த பதவியில் இருந்து விலகிக் கொள்வதே அவருக்கு அழகு என அதிமுக முன்னாள் எம்.பி முத்துமணி கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாநிலங்களவை முன்னாள் எம்.பி. எஸ். முத்துமணி ஒரு கட்டுரையில் கூறியுள்ளதாவது:
தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் அதன் அமர்வு காலங்களில் பங்கேற்பது குறித்து விதிமுறைகள் உள்ளது. அவற்றை எல்லாம் பொருட்படுத்தாத கருணாநிதி சட்டமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து வருகிறார்.
எப்படியென்றால், சட்டமன்றத்திற்கு வந்து நுழைவு இடத்தில் வருகைப் பதிவேட்டில் கையொப்பம் இட்டாலே சட்டமன்றத்தில் கலந்துகொண்டதாக எடுத்துக் கொள்ளப்படும் என கருணாநிதி போன்றவர்கள் கருதுகிறார்கள்.
ஆனால் உண்மையான அந்த விதிமுறை என்ன என்பதை இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 190(4) கூறுகிறது. அதாவது தொடர்ந்தாற்போல் ஒரு மாநில சட்டமன்ற கூட்டங்களுக்கு அனுமதியின்றி 60 நாட்களுக்கு மேல் ஒரு உறுப்பினர் வருகை தராமல் இருந்தால் அவருடைய இடம் காலியாக இருக்கிறது என அறிவிக்கப்படலாம்.
அந்த 60 நாட்களைக் கணக்கெடுக்கும் போது, தொடர்ந்தாற் போல் நான்கு நாட்களுக்கு மேல் சபையின் நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டு இருந்தாலும் அல்லது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலும் அத்தகைய நடவடிக்கைகளை கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என சொல்லப்பட்டிருக்கிறது.
இதிலிருந்து வருகைப் பதிவேட்டில் கையொப்பம் இட்டால் மட்டும் போதாது. சட்டமன்ற அமர்வுக் கூட்டத்தில் நேரடியாகப் பங்குபெற வேண்டும் என்பதே தெளிவாகின்றது. இதைப் புரிந்து கொள்ளாமல் கருணாநதி மக்களாட்சி மரபுகளை புறக்கணிக்கின்றார். இது அரசமைப்புச் சட்ட விதியையே அவமானப்படுத்துவது ஆகும்.
எனவே, இவர் சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து சட்டப்படி நீக்கப்படுவதற்கான முகாந்திரங்களை உருவாக்குகிறார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை விதி 20(1)ன்படி பேரவைக் கூட்டங்களுக்கு வராமல் இருப்பதற்கான அனுமதியை உறுப்பினர்களுக்கு அளிக்கலாம். அதற்கான விவாதம் ஏதுமின்றி அந்தத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படும்.
உள்பிரிவு (2) ன்படி பேரவையின் அனுமதியைப் பெறாமல் தொடர்ந்து 60 நாட்களுக்கு எல்லாக் கூட்டங்களுக்கும் எந்த உறுப்பினராவது வராமல் இருந்துவிட்டால் அவருடைய பதவி காலியானதாக அறிவிக்கப்படும்.
அதற்குரிய தீர்மானத்தைப் பேரவை உறுப்பினர் எவரேனும் முன்மொழிந்து அந்தத் தீர்மானம் திருத்தம் எதுவுமின்றி பேரவையின் வாக்கெடுப்புக்கு விடப்படும்.
அரசமைப்புச் சட்டத்தின் 190 ஆவது பிரிவின் 4 வது உட்பிரிவின்படி கணக்கிடப்பெற்ற 60 நாட்களுக்குத் தொடர்ந்து எல்லாக் கூட்டங்களுக்கும் வராதவராக அந்த உறுப்பினர் இருக்க வேண்டும்.
இந்த விதிமுறைகளின்படி பேரவையின் கூட்டங்களுக்கு 60 நாட்களுக்கு தொடர்ந்து ஒருவர் வராமல் இருந்தால் அவர் தன்னுடைய உறுப்பினர் பதவியையே இழந்துவிட நேரிடும் என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தற்போது முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு, கடந்த கால விதி மீறல்களுக்கு விடை கொடுத்து விட்டு அரசமைப்புச் சட்டத்தின்படி, பேரவை விதிமுறைகளின்படியும் அவையை நடத்திச் செல்வது என்று உறுதி பூண்டுள்ளது.
சட்டப் பேரவையின் முற்றத்தில் வைக்கப்பட்டுள்ள உறுப்பினர் வருகைப் பதிவேட்டில் கையொப்பம் இட்டுவிட்டு பேரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ளாமலே சென்றுவிடுவதை அனுமதிக்க முடியாது.
வருகைப் பதிவேடு என்பது உறுப்பினர்கள் கையொப்பம் இட்டுவிட்டு உள்ளே வருவதற்காகத்தான் வைக்கப்பட்டிருக்கிறது. அவைக்கு வராமல் சென்றுவிட்டால் அது வராமைப் பதிவேடாக மாறிவிடும். தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியர்கள் தங்கள் வருகைக்கான அட்டையை பஞ்ச் செய்துவிட்டு உள்ளே செல்வார்கள்.
ஆனால் அட்டையை பஞ்ச் செய்துவிட்டு உள்ளே செல்லாமல் வெளியே சென்றுவிட்டால் அவர் பணிக்கு வந்ததாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. அதே போன்று தான் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருப்பதாக கூறி வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட்ட உறுப்பினர் எவரேனும் கூட்டத்திற்கு வராமலே சென்றுவிட்டால் அவர் அன்றைய கூட்டத்திற்கு வரவில்லை என்றுதான் கணக்கிடப்படும்.
கருணாநிதியைப் பொறுத்தவரை புறக் கூடத்தில் வைக்கப்பட்டுள்ள வருகைப் பதிவேட்டில் மட்டும் கையொப்பம் இட்டுவிட்டு கூட்டத்திற்கு வராமல் சென்றுவிடுவதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்.
இம்முறை தன் மகன் ஸ்டாலினை தி.மு.க. சட்டமன்ற குழுவுக்கு தலைவராக ஆக்கிவிட்டு அவர் மட்டும் வெளியிலேயே தங்கிவிட்டார்.
தொடர்ந்து 60 நாட்களுக்கு அவர் சட்டமன்றக் கூட்டத்திற்கு வராமல் இருந்துவிட்டால், அவருடை பதவி காலியாகிவிட்டதாக அறிவிக்கும் தீர்மானம் ஒன்றை பேரவையில் கொண்டுவந்து நிறைவேற்றுவதற்கு வாய்ப்பிருக்கிறது.
இந்நிலையில் சட்டமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாத கருணாநிதி தன்னுடைய உறுப்பினர் பதவியை விட்டு விலகிக் கொள்வது நல்லது என்று முத்துமணி தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முந்தைய அதிமுக ஆட்சியின்போது எம்.எல்.ஏ.வாக இருந்தபோது கருணாநிதி அவைக் கூட்டங்களில் பங்கேற்றதில்லை. மாறாக கையெழுத்துப் போட்டு விட்டுச் சென்று விடுவார். அதேசமயம், கடந்த திமுக ஆட்சியின்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா அதுபோல இல்லாமல், அவ்வப்போது கூட்டங்களில் பங்கேற்றார், பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி தட்ஸ் தமிழ்
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: கருணாநிதி எம்.எல்.ஏ. பதவிக்கு ஆபத்து-அதிமுக முன்னாள் எம்.பி முத்துமணி
ivarukku ottu potta makkalthaan paavam seythavarkal.ivar jeyththaalum ethuvum seyyamaattaar enru therinthum ivara jeyikka vaiththu irukkaangale
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் பதவிக்கு ஆபத்து
» மோடி CM பதவிக்கு ஆபத்து வருமா? வராதா ?
» பதவிக்கு ஆபத்து-குற்றாலத்தில் கர்நாடக ரெட்டி சகோதரர்கள் யாகம்
» மு.கருணாநிதி மேயர் பதவிக்கு போட்டி.
» ரத்தப் பலி கேட்கும் அதிமுக அரசு- கருணாநிதி
» மோடி CM பதவிக்கு ஆபத்து வருமா? வராதா ?
» பதவிக்கு ஆபத்து-குற்றாலத்தில் கர்நாடக ரெட்டி சகோதரர்கள் யாகம்
» மு.கருணாநிதி மேயர் பதவிக்கு போட்டி.
» ரத்தப் பலி கேட்கும் அதிமுக அரசு- கருணாநிதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|