Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
எல்லாம் திமுக அரசு போட்ட திட்டங்கள்!- கருணாநிதி அறிக்கை
+5
ரா.ரமேஷ்குமார்
திவ்யா
சிவா
ரபீக்
முரளிராஜா
9 posters
Page 1 of 1
எல்லாம் திமுக அரசு போட்ட திட்டங்கள்!- கருணாநிதி அறிக்கை
![எல்லாம் திமுக அரசு போட்ட திட்டங்கள்!- கருணாநிதி அறிக்கை 18-karuna-2-300](https://2img.net/h/thatstamil.oneindia.in/img/2011/06/18-karuna-2-300.jpg)
தி.மு.க. ஆட்சியில் தொடங்கிய மின் திட்டங்களால் வருங்காலத்தில் மின் பற்றாக்குறை இல்லாத நிலை ஏற்படும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:
ஆளுநர் உரையின் மீதான விவாதத்திற்கு பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா, தான் ஆட்சியில் இருந்தபோது மேற்கொண்ட முயற்சிகளை தி.மு.க. அரசு தொடர்ந்திருந்தால் தமிழகத்தில் மின் தட்டுப்பாட்டை தவிர்த்திருக்கலாம் என்றும், ஜுலை முதல் தற்போதுள்ள 3 மணி நேர மின்வெட்டினை 2 மணி நேரமாக குறைப்போம் என்றும், தி.மு.க. ஆட்சி காலத்தில் மின் உற்பத்தியை அதிகப்படுத்த எதுவுமே செய்யவில்லை என்றும் புள்ளிவிவரங்களை அள்ளித்தெளித்திருக்கிறார்.
திமுக அரசின் திட்டங்கள்
2006-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு தொடங்கப்பட்ட எண்ணூர் அனல் மின்நிலைய இணைப்பு திட்ட (600 மெ.வா.) 2013 ஆகஸ்டிலும், மேட்டூர் அனல் மின்நிலையம் (600 மெ.வா.) 2011 ஜுலையிலும், வடசென்னை அனல் மின்நிலையம் (600 மெ.வா.) 2011 செப்டம்பரிலும், உடன்குடியில் பி.எச்.ஈ.எல். மற்றும் தமிழ்நாடு மின்வாரியம் இணைந்து தலா 800 மெ.வா. உற்பத்தி செய்யக்கூடிய 2 திட்டங்கள் 2013 மார்ச்; 2013 செப்டம்பரிலும், வடசென்னை அனல் மின்நிலையத்திலேயே மேலும் 600 மெ.வா. தயாரிக்கக்கூடிய ஒரு திட்டம் 2011 ஆகஸ்டிலும் உற்பத்தியை தொடங்குகின்றன.
ரூ.1,126 கோடியில் தொடங்கப்பட்ட கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளிலிருந்து, 183 மெ.வா. இணை மின்சாரம் தயாரிக்கக்கூடிய திட்டம் 2011 ஜுலையில் இயக்கத்திற்கு கொண்டுவரப்படும். மொத்தம் 4183 மெ.வா. மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான திட்டங்கள் தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்டன. இதன் காரணமாக 2010-2011ல் 1400 மெ.வா. மின்சாரமும், 2011-2012ல் 3316 மெ.வா. மின்சாரமும், 2012-2013ல் 1222 மெ.வா. மின்சாரமும், 2013-2014ல் 1860 மெ.வா. மின்சாரமும் - ஆக மொத்தம் 7798 மெ.வா. மின்சாரம் பல்வேறு மின் திட்டங்களின் மூலமாக கிடைக்க வழிவகை செய்யப்பட்டது.
இந்த புள்ளிவிவரங்கள், தி.மு.க. ஆட்சியில் புதிதாக மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய திட்டங்கள் எதையும் தொடங்கவில்லை என்ற குற்றச்சாட்டிற்கு தேவையான திடமான விளக்கமாக அமையுமென்று கருதுகிறேன்.
தொழிற்சாலைகள் தொடங்கியதால்...
தி.மு.க. ஆட்சி அமைந்த பின்னர் பல்வேறு புதிய தொழிற்சாலைகள் ஆங்காங்கு தொடங்கப்பட்டதால் மின் தேவை அதிகமாயிற்று. 2006 மே மாதத்திற்கு பிறகு டிட்கோ நிறுவனத்தின் முயற்சியினால் 27 தொழில்கள் தொடங்கப்பட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டுள்ளன. 24 தொழில்கள் தொடங்க அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் இதுவரை 12 தொழிற்சாலைகள் திறக்கப்பட்டுள்ளன.
இதுதவிர சிப்காட் மூலமாகவும், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலமாகவும் புதிய தொழில்களைத் தொடங்கத் தேவையான உதவிகள் செய்யப்பட்டு அதன் காரணமாகவும் தமிழகத்தில் தொழில்கள் பெருகி, அதற்கு தேவையான மின்சாரத்தை வழங்க வேண்டிய சூழ்நிலைக்கு தமிழகம் உள்ளாகியது. தமிழகத்தின் உச்சகட்ட மின்தேவை 11,000 மெ.வா. ஆனால் தி.மு.க. ஆட்சியிலே மின் உற்பத்தி சுமார் 7300 மெ.வா. ஆக இருந்தது. எனவே பற்றாக்குறை 3700 மெ.வா. இந்த பற்றாக்குறையை சமாளிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. மின் உற்பத்தியாளர்களிடமிருந்து 2200 மெ.வா. கொள்முதல் செய்யப்பட்டது. மின் சந்தையிலிருந்தும் கொள்முதல் செய்யப்பட்டது.
அனல் மின்நிலையங்களை தனியார் வணிக மின் திட்டங்களாக நிறுவுவதற்கு தமிழக அரசு ஊக்கமளித்தது. அதன் காரணமாக தமிழகத்தில் 18,140 மெ.வா. அளவிற்கு மின்சாரம் உற்பத்தி செய்ய 10 கடலோர அனல் மின் திட்டங்கள் அமைக்க தனியார் நிறுவனங்கள் முன்வந்தன. அவற்றில் ஒரு தனியார் நிறுவனம் 1200 மெ.வா. மின்சாரம் உற்பத்தி செய்ய பூர்வாங்க பணிகளை தொடங்கியது. அது 2011-2012ம் ஆண்டில் உற்பத்தியைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தட்டுப்பாடு வந்திருக்காது
இவைதவிர, இணை மின் உற்பத்தி மூலம் 487 மெ.வா.; தாவர சக்தி மூலம் 127 மெ.வா.; தன் பயன் உற்பத்தி மூலம் 851 மெ.வா. மின்சாரம் கிடைத்தது. இதுதவிர மத்திய தொகுப்பிலிருந்து 2350 மெ.வா. மின்சாரம் கேட்டுப்பெற்றோம். உச்சநேரத் தேவையை சமாளிப்பதற்காக 75 மெ.வா. மின்சாரம் கூடுதலாக 26-3-2008 முதல் பெறப்பட்டது. காற்றாலைகளின் மொத்தக் கொள்திறன் அப்போது 4888 மெ.வா. தனியார் காற்றாலைகள் மூலமாக 2006-2007ம் ஆண்டில் 578 மெ.வா.; 2007-2008ல் 381 மெ.வா.; 2008-2009ல் 431 மெ.வா. மற்றும் 2009-2010ல் 600 மெ.வா. என்ற அளவிற்கு மின் கட்டமைப்பில் இணைக்கப்பட்டிருந்தது.
இதையெல்லாம் அனுசரித்துத்தான் கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்திலேயே எதிர்கால தேவையைக் கணக்கிட்டு இந்த அளவிற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்குமானால் பற்றாக்குறை வந்திருக்காது என்று விளக்கம் தரப்பட்டது. ஜெயலலிதா தனது முந்தைய ஆட்சி காலத்தில் மேற்கொண்ட வல்லூர், வடசென்னை அனல் மின் நிலையங்களை தி.மு.க. அரசு தொடர்ந்திருந்தால் மின்தட்டுப்பாடு வந்திருக்காது என்றும் கூறியிருக்கிறார்.
பல மாநிலங்களில் மின்தடை
வல்லூர் அனல்மின் நிலையத் திட்டத்திற்கான அலகுகள் ஒன்று மற்றும் இரண்டிற்கான வேலைகள் 13-8-2007ல் தொடங்கப்பட்டன. அலகு மூன்றிற்கான வேலைகள் 28-7-2009ல் தொடங்கப்பட்டது. அலகுகள் 1, 2, மற்றும் 3 முறையே அக்டோபர் 2011, டிசம்பர் 2011 மற்றும் நவம்பர் 2012லும், தூத்துக்குடி அனல் மின்நிலையம் ஆகஸ்டு 2012லும், உடன்குடி அனல் மின்நிலையத்தின் முதலாவது அலகு மார்ச் 2013லும், 2-வது அலகு செப்டம்பர் 2013லும் செயலாக்கத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் உற்பத்தி நிலையை அடையும்போது, அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்திருக்கிறது. மின் தடை தமிழகத்திலே மட்டும்தான் இருக்கிறதா? மற்ற மாநிலங்களில் மின்தடையே இல்லையா? ஆந்திராவில் 4 மணி நேரம், கர்நாடகாவில் 3 மணி நேரம் மின்தடை உள்ளது. தமிழகத்திலும் 3 மணி நேரம் மின்தடை செய்யப்படுகிறது.
விவசாயத்திற்கு ஆந்திராவில் 7 மணி நேரமும், கர்நாடகாவில் 6 மணி நேரமும் தான் மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் 9 மணி நேரம் வழங்கப்படுகிறது. தொழிற்சாலைகளுக்கு ஆந்திராவிலும், கர்நாடகாவிலும் நாள் ஒன்றுக்கு 28 மில்லியன் ïனிட் அளவுக்கு மின்தடை. தமிழ்நாட்டில் 20 மில்லியன் யூனிட் அளவிற்கு மட்டுமே மின்தடை. எனவே மின் பற்றாக்குறை என்பது தமிழ்நாடு போன்ற ஒருசில மாநிலங்களில் மட்டுமே இருந்து வந்ததற்கு மாறாக; இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களும் மின் பற்றாக்குறையினால் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் அந்த மாநிலங்களிலிருந்தும் தமிழகத்திற்கு தேவையான மின்சாரத்தைப் பெற இயலாத நிலைமை ஏற்பட்டது.
பற்றாக்குறை இல்லாத நிலை
2001 முதல் 2006 வரையிலான தனது ஆட்சி காலத்தில், தமிழ்நாடு மின்வெட்டே இல்லாத மாநிலமாக இருந்தது என்று ஜெயலலிதா சொல்லி பெருமைப்பட்டுக் கொள்கிறார். 1991 முதல் 1996 வரை ஜெயலலிதா ஆட்சி காலத்திலே 16-10-1992 வரை தமிழ்நாட்டில் மின் கட்டுப்பாட்டு முறை இருந்ததா? இல்லையா? தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு அதிக தொழிற்சாலைகளை தொடங்காமல் இருந்திருந்தால் மின் கட்டுப்பாட்டு முறை வந்திருக்காதுதான். அதற்காக தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்காமல் ஓர் அரசு இருக்க முடியுமா?
அ.தி.மு.க. ஆட்சியிலே மின் உற்பத்தி திட்டங்களை அதிகமாகத் தொடங்காத காரணத்தால் தி.மு.க. ஆட்சியிலே மின் பற்றாக்குறை ஏற்பட்டது. ஆனால் தி.மு.க. ஆட்சியில் மின் உற்பத்தித் திட்டங்களைத் தொடங்கியதன் பயன் நிச்சயமாக வருங்காலத்தில் மின் பற்றாக்குறையை தமிழகத்தில் இல்லாமல் செய்திடும் என்று உறுதியாக நம்பலாம். அ.தி.மு.க. ஆட்சியினர் தங்கள் திறமையால்தான் தமிழகத்திலே மின் பற்றாக்குறை இல்லாத நிலையை ஏற்படுத்தியதாக தற்பெருமை கொள்ளலாம். எப்படியோ; மக்களுக்கு மின்சாரம் கிடைத்தால் போதும்!
தடையில்லாத, தரமான மின்சாரம் என்னருந் தமிழ் மக்களுக்கு கிடைக்குமானால், எல்லார்க்கும் எப்போதும் மகிழ்ச்சிதான்!
இவ்வாறு அவர் கூறியுள்ளார்
நன்றி தட்ஸ் தமிழ்
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: எல்லாம் திமுக அரசு போட்ட திட்டங்கள்!- கருணாநிதி அறிக்கை
உங்களுக்கு காமெடி நல்லா வருது தலிவா !~!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: எல்லாம் திமுக அரசு போட்ட திட்டங்கள்!- கருணாநிதி அறிக்கை
மக்கள் எனக்கு ஓய்வு அளித்துவிட்டார்கள் எனக் கூறினார், ஆனால் இன்னும் இவரது வாய் ஓய மாட்டேன் என்கிறதே!!!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![எல்லாம் திமுக அரசு போட்ட திட்டங்கள்!- கருணாநிதி அறிக்கை Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: எல்லாம் திமுக அரசு போட்ட திட்டங்கள்!- கருணாநிதி அறிக்கை
சிவா wrote:மக்கள் எனக்கு ஓய்வு அளித்துவிட்டார்கள் எனக் கூறினார், ஆனால் இன்னும் இவரது வாய் ஓய மாட்டேன் என்கிறதே!!!
அவர் ஓய்வுக்கே ஓய்வு கொடுப்பார்ர் !!!!!!!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: எல்லாம் திமுக அரசு போட்ட திட்டங்கள்!- கருணாநிதி அறிக்கை
ரபீக் wrote:உங்களுக்கு காமெடி நல்லா வருது தலிவா !~!
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
திவ்யா- மகளிர் அணி
- பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011
Re: எல்லாம் திமுக அரசு போட்ட திட்டங்கள்!- கருணாநிதி அறிக்கை
முதல்ல யார் ஆரம்பிக்கிறார்கள் என்பது முக்கியமல்ல கடைசியில் யார் முடிக்கிறார்கள் என்பது தான் முக்கியம் தாத்தா...
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: எல்லாம் திமுக அரசு போட்ட திட்டங்கள்!- கருணாநிதி அறிக்கை
சிரிக்காம பொய் சொல்றீங்களே!
![எல்லாம் திமுக அரசு போட்ட திட்டங்கள்!- கருணாநிதி அறிக்கை 745155](/users/1813/71/41/02/smiles/745155.gif)
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: எல்லாம் திமுக அரசு போட்ட திட்டங்கள்!- கருணாநிதி அறிக்கை
சிவா wrote:மக்கள் எனக்கு ஓய்வு அளித்துவிட்டார்கள் எனக் கூறினார், ஆனால் இன்னும் இவரது வாய் ஓய மாட்டேன் என்கிறதே!!!
தல உங்கள் மலேஷியா மந்திரவாதி கிட்ட சொல்லி அவர் வாய்க்கு ஒரு பூட்டு போட சொல்லுங்க தல
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: எல்லாம் திமுக அரசு போட்ட திட்டங்கள்!- கருணாநிதி அறிக்கை
மறுபடி
" வெள்ளி முளைக்கும்
சனி தொலையும்
ஞாயிறு உதிக்கும்"
மறந்துடாதீங்க
" வெள்ளி முளைக்கும்
சனி தொலையும்
ஞாயிறு உதிக்கும்"
மறந்துடாதீங்க
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சதாசிவம்
![எல்லாம் திமுக அரசு போட்ட திட்டங்கள்!- கருணாநிதி அறிக்கை 1772578765](https://2img.net/u/1813/71/41/02/smiles/1772578765.png)
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: எல்லாம் திமுக அரசு போட்ட திட்டங்கள்!- கருணாநிதி அறிக்கை
கலைஞர் பேசியதில் தவறேதுமில்லையே!
கடந்த 5 ஆண்டுகளில் ஜெ பேசியதை யாரும் மறக்க வேண்டாம்.
கடந்த 5 ஆண்டுகளில் ஜெ பேசியதை யாரும் மறக்க வேண்டாம்.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» போர் நின்றுவிட்டதாக இலங்கை அரசு பொய் சொன்னது போர்க்குற்றம்தான்: கருணாநிதி அறிக்கை
» இயேசுவைப் போல ஏழைகளை காத்து வருகிறது திமுக அரசு-கருணாநிதி
» பழி வாங்கும் செயல்களுக்காக அதிமுக அரசு மன்னிப்பு கேட்கும் நிலை வரும் : திமுக தலைவர் கருணாநிதி பேச்சு
» திமுக தேர்தல் அறிக்கை: முக்கிய அம்சங்கள்
» அரசு மணல் குவாரியால் பாதிக்கப்படும் குடிநீர்த் திட்டங்கள்
» இயேசுவைப் போல ஏழைகளை காத்து வருகிறது திமுக அரசு-கருணாநிதி
» பழி வாங்கும் செயல்களுக்காக அதிமுக அரசு மன்னிப்பு கேட்கும் நிலை வரும் : திமுக தலைவர் கருணாநிதி பேச்சு
» திமுக தேர்தல் அறிக்கை: முக்கிய அம்சங்கள்
» அரசு மணல் குவாரியால் பாதிக்கப்படும் குடிநீர்த் திட்டங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|