ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுவெறியனை மாற்றும் மந்திரம்

Go down

மதுவெறியனை மாற்றும் மந்திரம் Empty மதுவெறியனை மாற்றும் மந்திரம்

Post by unmaitamilan Thu Jun 16, 2011 7:14 am

மதுவெறியனை மாற்றும் மந்திரம் Thinkingman_
பழைய பதிவை படித்த நண்பர்கள் மிகவும் அருமையான பதிவு என்ற பாராட்டின் உச்ச விளிம்பில் மிண்டும் ஓர் பதிவு
னிதன்
மதுவை குடிக்கிறான் என்றாலும் உண்மையில் குடிக்கப்படுவது மதுவல்ல.
மனிதனின் வாழ்க்கைதான், மதுவில் கிடைக்கும் சுகங்களைப் பற்றி பகிரங்கமாக
குடிகார்கள் பேசுவதை காதுபட கேட்கிறோம், சில திரைப்படங்களில் மது
அருந்துவது சாதாரண மனிதனை கூட ராயல் சொசைட்டி வாசிகளாக மாற்றி விடுவதாக
மாயப்பிரச்சாரம் செய்யப்படுகிறது,




உண்மையில் மது மனிதனின்
மனிதத்தன்மையை கெடுத்து மிருக நிலைக்கு தள்ளிவிடுகிறது, இன்னும் எத்தனையோ
கொடுமைகளையும். கஷ்டங்களையும். கேவலங்களையும் அடுக்கி கொண்டே போகலாம்,
மதுப் பழகத்தின் கொடுமை. மது அருந்துபவர்களுக்கு தெரியாதா என்றால்
நிச்சயமாக அவர்கள் அதன் கொடுமையை நன்கு உணர்ந்தே தொடர்ந்து அந்த
பழக்கததில் ஊறிக்கிடக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும், கொடுமையை
தெரிந்தும் அதை ஏன் மீண்டும் செய்கிôறர்கள் என்ற வினா எழும்புவது இயற்கையே



ஒரு காலத்தில்
குடிகாரர்களை நான் ஆத்திரத்தோடும் அருவருப்போடும் தான் அணுகி வந்தேன்,
வேண்டுமென்றே அவர்கள் இந்த தீய பழக்கத்தை சிறிதும் பொறுப்பு இல்லாமல்
செய்து வருகிறார்கள் என்றே நம்பி இருந்தேன், ஆனால் “சிக்மெண்ட் பிராய்டு ”
‘ஜான் லாக்’ போன்ற மனோதத்துவ அறிஞர்களின் கருத்துக்களை படித்தும் அனுபவ
ரீதியாக பார்த்தும் எனது முந்தைய ஆத்திரமும். அருவறுப்பும் தேவையற்றது
என்பதை உணர்ந்தேன், அவர்களின் கருத்துக்கள் குடிகாரர்களின் பேரில் ஒருவித
அனுதாபத்தையும். கழிவிரக்கத்தையும் எனக்குள் ஏற்படுத்தியது என்றால் அது
மிகையாகாது,




குடிப்பழக்கத்தை பற்றிய
வரலாற்றை தேடி எடுத்தோம் என்றால் நமக்கு பெரும் அதிர்ச்சியும். வியப்பும்
ஏற்படுகிறது, புறநானூற்றுப் பாடல்கள் பலவற்றில் அக்கால தமிழ் அரசர்கள்
தமது நண்பர்களுக்கு கொடுத்த பெரும் விருந்துகளில் தாராளமாக மதுவகைகள்
பரிமாறப்பட்டதை பற்றிய குறிப்பிகள் விரிந்து கிடக்கின்றன, வேத காலத்திலும்
பலவிதமான யாகங்கள் செய்து முடித்த பின் யாகங்களில் கலந்து
கொண்டவர்களுக்கு ஃசோமபாணம். ஃசுறாபாணம்ஃ போன்ற மது வகைகள்
அளிக்கப்பட்டதற்கான விவரங்கள் மண்கலசங்களில் சீலிடப்பட்ட நாள்பட்ட
திராட்சைளில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு விதமான மது காந்தார தேசம் அதாவது
இன்றைய ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து பரத வருஷம் முழுக்க கொண்டு வரப்பட்டது
பற்றிய விவரங்கள் ஆதாரபூர்வமாக இன்று நமக்கு கிடைத்துள்ளது,





எகிப்திய பிரமிடுகளின்
சுவர்களில் அக்காலத்தில் மது எவ்வாறு தயாரிக்கப்பட்டது, அது
மன்னர்களையும். மக்களையும் எப்படியெல்லாம் ஆட்டுவித்தன என்பது பற்றி
விரிவாக எழுதப்பட்டுள்ளன, ரோமானிய சாம்ராஜ்யம் அதீதமான மது
பழக்கத்தினாலேயே அழிந்து போனதாக வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்,




ஆதிகாலம் தொட்டே மனித
சமுதாயத்தை மதுவின் மோகம் பிடித்து ஆட்டுவதற்கு என்ன காரணம்? என்று நாம்
சிந்தித்தோம் என்றால் மனோவியல். உடலியல். சமூவியல் ஆகிய முப்பரிமாண
கோணத்தில் அணுகினால் தான் முழுமையான விடை நமக்கு கிடைக்கும்,

தாய்ப்பால்
அருந்துகின்ற குழந்தை பிராயத்தில் ஏற்படும் பலவிதமான ஏக்க உணர்வுகளும்
ஏமாற்றங்களும் ஆழ்மனதில் பதிந்து வாலிப பருவத்தில் குடிப்பழக்கமா
உருவெடுக்கிறது, மனோதத்துவ அறிஞர்கள் கூறும் இக்கருத்து குடிகாரர்களின்
மனதை பகுந்து ஆராய்கின்றபோது முழுக்க முழுக்க உண்மையானதென்பதை நான்
அறிந்திருக்கிறேன்,




வாழ்க்கையில் ஏற்படுகின்ற
கசப்பான அனுபவங்கள் திடீர் இழப்புகள். நண்பர்களின் கூட்டமைப்புகள் போன்ற
காரணிகளும் மது அருந்தினால் சமுதாய அந்தஸ்து உயரும் என்ற போலியான
நம்பிக்கையும் மது உடலுக்கு அளப்பறிய சக்தியை தரும், மூளையை சுறுசுறுப்பு
அடைசெய்யும் என்ற ரீதியலான கருத்துக்களும் மது அருந்துதலுக்கு வேறு சில
காரணங்களாக அமைகிறது




மதுவெறியனை மாற்றும் மந்திரம் Hpim5331

எந்தக் காரணம் எப்படி இருந்தாலும் மது அருந்துபவர்கள் அதனால்
கிடைக்கும் சில மணிநேர சந்தோஷத்திற்காகவே குடிக்கிறார்கள், அந்த சந்தோஷ
தேடுதல் அதிகமாகும்போது தொடர்ந்து குடித்து மது அடிமைகளாகி விடுகிறார்கள்,
இவர்களிடம் கேட்டால் மது மகிழ்ச்சி தருவது என்ற இந்த காரணத்தை
கூறுகிறார்கள்,




உண்மையிலேயே மது சந்தோஷாத்தை
தருமா என்றால் நிச்சயமாக இல்லை என்றே கூற வேண்டும், காரணம் மனிதர்களை
அடிமைப்படுத்தும் மது. மாது. சூது போன்ற எந்த தீயப்பழகத்திலும் உண்மையான
இன்பம் இல்லை, மாறாக நமக்குள்ளேயே தான் இன்பம் நிசப்தமாக உறங்கி
கிடக்கிறது,

சூரியனில் வெளிச்சம்
இருக்கிறது, சூரியனுக்கு எதிரே கண்ணாடியை பிடித்தால் கண்ணாடியில் இருந்து
வெளிச்சம் வேறு இடத்துக்கு பிரதிபலிக்கும், இதைப் பார்த்து வெளிச்சம்
கண்ணாடியில் இருந்துதான் வருகிறது என்று வாதிடுவது எவ்வளவு தவறோ அவ்வளவு
தவறானது மதுபான லாகிரியில் இருந்து இன்பம் கிடைக்கிறது என்று சொல்வதாகும்,




அதாவது மகிழ்ச்சி என்பது
நமது ஆழ்மனதிற்குள் வருங்கால சிந்தனை. கடந்த கால சிந்தனை போன்ற திரைகளால்
மறைக்கப்பட்டு இருக்கிறது, எதிர்கால. வருங்கால. நினைவுகளை. வீழ்óத்தி
நிகழ்காலத்தில் நம் புலன்கள் ஐந்தையும் நிலை நிறுத்தும் போது சாஸ்வதமான
சந்தோஷம் நம்மை சூழ்ந்து கொள்கிறது,

மதுபோன்ற
லாகிரி வஸ்துக்களை பிரயோகப்படுத்தும் போது சில வினாடி நேரம் மட்டும் நம்
மனம் தற்கால சிந்தனையில் நின்று ஒரு நிரந்தமற்ற மகிழ்வை தருகிறது,
மீண்டும் மீண்டும் அந்த மகிழ்வை சுவைக்கவே தேனுக்குள் விழும் ஈக்கள் போல்
மதுவை நாடி மதியை இழக்கிறார்கள் குடிகாரர்கள்,

தொடர்ச்சியான
மதுப்பழக்கம் மனித உடலின் சில உறுப்புகளை நாளா வட்டத்தில் கரையான்
அரிப்பதை போல் அரித்து சீரழித்து விடுகிறது, குடல்புண் ஏற்பட்டு ரத்த
கசிவினாலும் குடல் நாளங்கள் வெடித்து இரத்த ஒழுக்கினாலும் மரணம்
சம்பவிக்கவும். கல்லீரல் கரணை (இண்ழ்ற்ட்ர்ள்ண்ள்) நோய் இருதயம் நுரையீரல்
போன்ற முக்கிய உறுப்புகள் திறன் இழப்பதும். வாய். தொண்டை. உணவு
குழாய்களில் புற்று நோய்கள் ஏற்படவும் மூளையும் நரம்பு மண்டலம்
தாக்கபடவும் மது பழக்கம் மூல காரணமாக அமைகிறது, அருந்திய சிறிது நேரத்தில்
மனிதனின் மூளையை மது பாதிப்படைய வைக்கிறது, இதனால் அவன் மனநோயால்
பாதிக்கப்பட்டவன் போல் நடந்து கொள்கிறான், இரத்தத்தில் சேரும் ஆல்கஹாலின்
(அப்ஸ்ரீட்ர்ஸ்ரீப்ர்) அளவுக்கு ஏற்றபடி குடிகாரனின் மனதில் ஒரு வித
கேளிக்கை மனப்பான்மையும். போலியான மன எழுச்சியும். அதிகமான பேச்சும்
ஏற்படுகிறது, நேரம் செல்ல செல்ல மனகுழப்பம் ஏற்பட்டு மேலெழுந்த வாரியாக
பேச்சும் உண்மை குறைந்து பொருளற்றதாக உள்ள வார்த்தைகளும் வெளிப்படும்,
தான் மிக்க சக்தி வாய்ந்தவன் என்றும் தன்னால் எதையும் சாதிக்க முடியும்
என்றும் அளவுக்கு அதிகமான தற்பெருமையும் மற்றவர்களின் மீது பொருளற்ற
எரிச்சலும் கூச்சமின்மையும் ஏற்பட்டு சுற்றுப்புறச்சூழலுக்கு இடைஞ்சலான பல
காரியங்களை அவன் செய்ய முற்படுகிறான்.



மதுபழக்கம் முற்றிப்போன காலத்தில் தனது செயல்கள் எதையுமே
கட்டுப்படுத்தும் திறன் குடிகாரனுக்கு இல்லாது போவதோடு அல்லாமல் உணர்ச்சி
அற்றவனாகவும் புலன் திறன்கள் குறைந்தவனாகவும் ஆகிறான், நாள் செல்ல செல்ல
எலிகள். பாம்புகள். நாய் மற்றும் பூனைகள் இன்னும் ஏதேதோ விசித்திர
விலங்குகள் தன்னை தாக்க வருவதாகவும் தனது காதுகளில் பயமுறுத்தும் பல
ஒலிகள் கேட்பதாகவும். தன்னை யாரோ சதாசர்வகாலமும் கண்காணிப்பதாகவும் பல
அமானுஷ்ய சக்திகள் தனக்கு வந்துவிட்டதாகவும் கூறுவார்கள், விஸ்கி
சாப்பிட்டவுடன் தன்னிடம் மாரியம்மன் வந்து பேசுவதாக கூறிய பரிதாபகரமான
ஒரு குடிகாரரை நான் சந்தித்து இருக்கிறேன்.



மேலும் குடிகாரர்களுக்கு
உடல். கை. கால்களில் நடுக்கம் பரபரப்பான மனநிலை. அதிகமான இரத்த அழுத்தம்
இதயதுடிப்பு. குமட்டல் அளவுக்கு அதிகமான வியர்வை போன்றவைகளும் ஏற்படும,
இந்த நிலையில் பிறரைத் தாக்கவும் வேறு சிலர் வன்முறை செயல்களில் ஈடுபடவும்
கூடும், இவர்களுக்கு தயமின். நியாசின் முதலிய வைட்டமின்கள். குறைந்து
மூளை நரம்பணுக்கள் சிறிது சிறிதாக சிதைவடைந்து காலநேர சூழ்நிலையை
முற்றிலுமாக கருத்தில் கொள்ளாத நிலை ஏற்படும்,





மது ஒரு மனிதனை தனிப்பட்ட
ரீதியில் பாதிப்பதோடு அல்லாது மூளை மற்றும் பாலுறுப்புகளில் பெரும் கேடு
ஏற்படுத்துவதால் அவனது இல்லத்தையும் குடும்ப அங்கத்தினர்களின் அமைதியான
வாழ்க்கையையும் கெடுத்து சமூக சீர்கேட்டிற்கு வழி வகுத்துவிடுகிறது,




இன்று நாட்டில் நடக்கும் பல
குற்ற செயல்களுக்கு மதுவே மூலகாரணமாக அமைந்து இருக்கிறது என்பதை
எல்லோரும் அறிவார்கள், கற்பழிப்புகள். சூறையாடல்கள். தெருச்சண்டைகள்
மற்றும் பெருவாரியான வன்முறை கலகங்கள் அனைத்தையும் மதுவிற்கு
அடிமையானவர்களே நிகழ்த்துகிறார்கள், இப்படிப்பட்ட இந்த கொடிய அரக்கனை
ஒழித்துவிட முடியாதா? என்றால் நிச்சயமாக பொருள் முதல் வாத சிந்தனை
அரசும். வணிகர்களும் இருக்கும் வரை மது அரக்கனை ஒழிக்க முடியாது என்றே
சொல்லலாம், மேலும் சட்ட திட்டங்களால் மட்டும் மதுபழக்கத்தை ஒழித்து
விடலாம் என்று அறுதியிட்டு கூற இயலாது, மதுவுக்கு எதிரான சிந்தனையை
குழந்தை பருவத்தில் இருந்தே ஏற்படுத்த வேண்டும், இதற்கான மனோதத்துவ
அடிப்படையில் அமைந்த தனிப்பிரிவை ஏற்படுத்தி மக்களை அதன் வழியில் செலுத்த
வேண்டும், மதுவால் உடலுக்கு. மனதுக்கு சமூகத்திற்கு ஏற்படும் தீங்குகள்
எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், அந்த கொடுமையால் அவதியுறுகிறவர்கள்
வாழ்க்கையை தொலைத்தவர்கள், அதிலிருந்து எப்படி வெளிவருவது முற்றிலுமாக
விடுதலை அடைந்து அதற்கான வழிவகைகள் என்ன என்று நீங்கள் கேட்பது எனக்கு
புரிகிறது, அந்த வழிவகைகளை கீழே கூறுகிறேன்.




முதலில்
மதுவுக்கு அடிமையானவர்கள் உடம்பிலிருந்து நச்சுத்தன்மையை முற்றிலுமாக
நீக்க அவர்களுக்கு அகத்திக்கீரையை தொடர்ந்து கொடுக்க வேண்டும்,
அகத்திகீரையில் உள்ள சில விசேஷ அமிலங்கள் ஆல்கஹாலின் வீரியத்தை
கட்டுப்படுத்திவிடும், அதன்பின் மது பழக்கத்தில் இருந்து வெளிவருவதற்கான
விசேஷ மூலிகை கூட்டு வைத்தியம் உள்ளது. அதை பாதிக்கப்பட்டவர்கள்
தொடர்ச்சியாக ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் தனது வாழ்நாளில் அந்திம
காலம் வரையில் மதுவின் பக்கமே செல்ல மாட்டார்கள்,



இது குடிகாரர்கள்
ஒத்துழைப்போடு செய்யும் வைத்தியம் ஆகும், ஒத்துழைக்காதவர்களுக்கு என்ன
செய்வது? அவர்களுக்காக அவர்கள் மீது தீவிர அன்பு வைத்திருக்கும் வேறொருவர்
பிரத்யேகமான ஒரு வழியை பின்பற்றலாம், அப்படி பின்பற்றும் போது
குடிகாரர்கள் தானாக குடியை நிறுத்திவிடுவார்கள், இதை படிக்கும் போது
உங்களுக்கு ஆச்சர்யம் ஏற்படும்,




அவ நம்பிக்கையும்
ஏற்படலாம், ஆனால். இப்படியொரு விசித்திர சிகிச்சை முறை சித்தர்கள் வைத்து
இருக்கிறார்கள், ராமனுக்கு தலைவலித்தால் ராபர்ட் மருந்து சாப்பிடும்
விந்தை வைத்தியத்தை வேறொரு கட்டுரையில் சொல்கிறேன், இப்போது விஷயத்திற்கு
வருகிறேன், குடிகாரர்களை குடிக்காமல் செய்ய ஒரு இரகசிய மந்திரம் உள்ளது,
அதை வாசகர்களின் நலன் கருதியும் மக்களின் முன்னேற்றம் கருதியும்
வெளியிடுகிறேன்,


ஓம் யங் சங் ரங் மங் க்லீம் கும்பட் நசி நசி ஸ்வாஹா



மதுவெறியனை மாற்றும் மந்திரம் Meditation

இந்த மந்திரத்தை குடிகாரர்களின் பெயரை சொல்லி அவர்களின்
குடிபழக்கத்தை கைவிட ஸ்ரீராமசந்திர மூர்த்தியை மனதில் நினைத்து தினசரி 108
முறை சூரிய உதயத்திற்கு முன் 91 நாட்கள் தொடர்ச்சியாக குடிகாரரின் தாய்.
தந்தை.. மனைவி அல்லது மகன் (இரத்தம் சம்பந்தப்பட்ட உறவு) இப்படி யார்
வேண்டுமானாலும் சொல்லி வந்தால் குடிமகன் திருமகனாகி விடுவான்,



இந்த மந்திரத்தை
பயன்படுத்தி பலர் நல்வாழ்க்கை பெற்றுள்ளார்கள், நீங்களும் உங்களை சார்ந்த
குடிகாரர்களை திருத்த இந்த மந்திரத்தை பயன்படுத்தி பாருங்களேன்,

நன்றி http://ujiladevi.blogspot.com/2011/06/blog-post_16.html
unmaitamilan
unmaitamilan
பண்பாளர்


பதிவுகள் : 82
இணைந்தது : 29/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum