ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீனாவின் அடுத்த தொல்லை "பிரம்மபுத்திரா' ?

2 posters

Go down

சீனாவின் அடுத்த தொல்லை "பிரம்மபுத்திரா' ?  Empty சீனாவின் அடுத்த தொல்லை "பிரம்மபுத்திரா' ?

Post by தாமு Tue Jun 14, 2011 11:38 am

இந்தியா மற்றும் பங்காளதேஷ் நாடுகளின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும்
பிரம்மபுத்திரா நதியை, அதன் மலைப் பகுதியிலிருந்தே தங்கள் நாட்டின் வறட்சி பாதித்த பகுதிக்கு திருப்பிவிட சீனா திட்டமிட்டுள்ளதாக வெளியாகி உள்ள தகவல் இந்தியா - சீனா இடையே ஒரு புதிய மோதலுக்கு வழி வகுக்கலாமமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.





ஏற்கனவே காஷ்மீர் மாநிலத்தவர்களுக்கு தனி விசா,அருணாச்சல் பிரதேசத்தின் சில பகுதிகளை தங்களுக்கு சொந்தம் கொண்டாடுவது, காஷ்மீர் எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைவது என இந்தியாவை கடந்த காலங்களில் பல வகைகளில் சீண்டி வந்துள்ளது சீனா.

பிரம்மபுத்திரா, சீனாவின ஆதிக்கத்திற்குட்பட்ட திபெத்திலுள்ள கயிலை மலையில் ஸாங்-போ என்ற பெயரில் புறப்பட்டு,இந்தியாவின் வடகிழக்கே அஸ்ஸாம் மாநிலம், வங்காள தேசம் வழியாகப் பாய்ந்து வங்காள விரிகுடாக் கடலில் கலக்கின்றது.

மொத்தம் 2800 கிமீ நீளமுள்ள இந்த ஆறு 1,700 கிமீ தூரம் திபெத்திலுள்ள 4000 மீட்டருக்கும் அதிகமான மலைகளிலேயே கிழக்கு நோக்கி பயணிக்கிறது.

பிறகு நாம்சா-படுவா மலையருகே, தெற்கு தென்மேற்காக வளைந்து அருணாச்சல பிரதேசத்தில் சியாங் என்ற பெயரில் நுழைந்து, அதன்பின் சமவெளிப் பகுதியை அடைகிறது. சமவெளிப்பகுதியில் இந்த நதி திகாங் என்று அழைக்கப்படுகிறது. சமவெளிப் பகுதியில் 35 கிமீ தொலைவு கடந்தபின், திபங் மற்றும் லோகித் என்ற ஆறுகளோடு கூடி மிகவும் அகன்ற ஆறாக ஆகி, பிரம்மபுத்திரா என்று பெயர் மாற்றமடைந்து அஸ்ஸாம் மாநிலத்தில் நுழைகிறது.

இவ்வாறு இந்தியாவுக்கு, குறிப்பாக வட கிழக்கு மாநிலங்களின் வளத்திற்கு ஆதாரமான பிரம்மபுத்திரா நதியை வைத்து, சீனா அவ்வப்போது கொடுத்து வரும் குடைச்சல்களில் ஒன்றுதான் தற்போதைய நதியை திருப்பிவிடும் பிரச்சனை.





ஏற்கனவே ஒரு ஆண்டுக்கு முன்னர் பிரம்மபுத்திரா நதியின் மீது,மின் உற்பத்திக்கான நீர் மின்திட்டத்திற்காக சீனா நீர் தேக்கம் ஒன்றை கட்டுவதாக வெளியான செய்தி பதற்றத்தை ஏற்படுத்தியது.

இது குறித்து அப்போதைய மத்திய நீர்வள அமைச்சர் பி.கே.பன்சால் இடம் கேட்டபோது, "பிரம்மபுத்திரா மீது சீனா கட்டுவது நீர்த் தேக்கம் அல்ல என்றும்,நீர் மின்திட்டத்திற்கான ஒரு சிறிய அணைதான் என்றும் கூறியிருந்தார்.


நமது எல்லையில் இருந்து 1,100 கி.மீ. தூரத்தில் அணை கட்டப்படுகிறது. இப்படிப்பட்ட 15 அணைகளை சீனா கட்டியுள்ளது. அவர்கள் நாட்டில் ஓடும் நதியின் பகுதி மீது நமக்கு எந்த உரிமையும் இல்லை. நம்மைப் பொறுத்தவரை பிரம்மபுத்திரா நதியில் நமக்கு வரவேண்டிய 79 பில்லியன் கன மீட்டர் நீர் வரவேண்டும்.அந்த நீர் திசை திருப்பப்படுவதாக எந்த ஆதாரமும் இல்லை" என்று கூறியிருந்தார்.

இந்நிலையில்தான் தற்போது பிரம்மபுத்திரா நதியை, அதன் மலைப் பகுதியிலிருந்தே தங்கள் நாட்டின் வறட்சி பாதித்த சின்ஜியான் மாகாணத்திற்கு திருப்பிவிட சீனா திட்டமிட்டுள்ளதாக வெளியாகி உள்ளது.

இவ்வாறு சீனாவின் வடமேற்கு பகுதிக்கு, குறிப்பாக சின்ஜியான் மாகாணத்திற்கு பிரம்மபுத்திரா (சீனாவில் ஸாங்போ) நதியை திருப்பிவிடுவது தொடர்பாக சீன அறிவியல் கூட நிபுணர்கள் குழு, புதிய திட்டம் ஒன்றை தயாரித்துள்ளது.

இந்த திட்டம் அமலானால், அது முந்தைய அணைக்கட்டும் திட்டம் போன்றல்லாமல், இந்தியாவுக்குள் வரும் நீர்வரத்தை குறைத்துவிடும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கிறார்கள் இந்திய நீர் வள நிபுணர்கள்.

ஆனால் இந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் சீனா உறுதியாக இருக்கிறது. இதனை சீன அறிவியல் கூட நிபுணர்கள் குழுவில் இடம்பெற்றுள்ள விஞ்ஞானி வாங் குவாங்கியான் உறுதிபடுத்தியுள்ளார்.

ஸாங்போ (பிரம்மபுத்திரா) நதியை,மலைப்பாதையிலிருந்து வறட்சி பாதித்த சின்ஜியான் மாகாணத்திற்கு திருப்பிவிட்டால், அது நிச்சயம் ஆண்டுதோறும் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறை பிரச்னைக்கு தீர்வை ஏற்படுத்தும் என்கிறார் குவாங்கியான்.

சீன மாகாணத்தின் வறட்சி பிரச்சனை தீர்ந்துவிடும்;ஆனால் பிரம்மபுத்திராவில் நீர் வரத்து குறைந்து இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் வறட்சியின் பிடிக்குள் சிக்கிக்கொள்ளுமே...?

இந்தியாவின் மத்திய அரசுக்கு சீனாவின் இந்த திட்டம் குறித்து ஏதேனும் தெரியுமா? இதனை தடுத்து நிறுத்த முயற்சி மேற்கொண்டுள்ளதா? என்று இந்திய அயலுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவிடம் கேட்டதற்கு, இந்தியா இது குறித்து கவலை அடைந்துள்ளதாகவும், பீஜிங்கில் உள்ள இந்திய தூதரகத்திடமிருந்து இது குறித்து அறிக்கை கேட்டுள்ளதாகவும், நிலைமையை அவதானிக்க தூதரக ரீதியாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பதிலளித்தார்.

இந்த பிரச்சனையை உடனடியாக சீன அரசின் கவனத்திற்கு மத்திய அரசு உடனடியாக கொண்டு செல்ல வேண்டும் என்று பா.ஜனதா பேச்சாளர் பிரகாஷ் ஜாவேத்கர் வலியுறுத்தியுள்ளார்.

வழக்கமாக இதுபோன்ற இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது சீன அதிகாரிகள் அளிக்கும் வெற்று வாக்குறுதிகளை கேட்டுவிட்டு அமைதியாகிவிடுவது போன்று இந்த முறையும், இந்திய மத்திய அரசு அமைதியாக இருந்தால், அது பின்னாளில் ஒட்டுமொத்த பிரம்மபுத்திர நதி நீரையும் பல அமைகளை கட்டி தங்களுக்கு திருப்பிவிடக்கூடிய அளவிற்கு சீனாவுக்கு துணிச்சலைக் கொடுத்துவிடும்.

எனவே போர்க்குற்றத்திலிருந்து இலங்கையை முட்டுக்கொடுத்து காப்பாற்றுவதில் காட்டும் அக்கறையை, இந்திய காங்கிரஸ் அரசு பிரம்மபுத்திரா விடயத்திலும் காட்டினால் நன்றாக இருக்கும்.






இந்தியா நிலை என்ன?




""பிரம்மபுத்ரா நதி நீர் மடை மாற்றம் செய்யப்படுவது குறித்து, சீனாவிடம் விளக்கம் கேட்கப்படும்,'' என, வெளியுறவுத் துறை அமைச்சர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். இமயமலையில் உற்பத்தியாகும் பிரம்மபுத்ரா நதி, சீனா வழியாக இந்தியாவுக்குள் பாய்கிறது. இந்த நதியின் குறுக்கே சீனா அணை கட்டி நீரை மடை மாற்றம் செய்வதால், இந்தியாவுக்குள் வரும் பிரம்மபுத்ரா நதி நீரின் அளவு குறைகிறது. இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாரதிய ஜனதா கட்சி வற்புறுத்தி வருகிறது.
இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா குறிப்பிடுகையில், "பிரம்மபுத்ரா நதி நீர் மடை மாற்றம் செய்யப்படுவது குறித்து சீனாவிடம் அறிக்கை கேட்போம். அந்நாடு அளிக்கும் அறிக்கையின் பேரில், நாம் ஆய்வு செய்து இந்த விஷயத்தை தூதரக மட்டத்தில் விவாதித்து தீர்வு காண்போம்' என்றார்.


gm



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

சீனாவின் அடுத்த தொல்லை "பிரம்மபுத்திரா' ?  Empty Re: சீனாவின் அடுத்த தொல்லை "பிரம்மபுத்திரா' ?

Post by ரபீக் Tue Jun 14, 2011 11:41 am

ங்கொய்யால !! இவனுங்க ஆட்டத்தை சீக்கிரம் அடக்கணும்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum