ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளால் கைவிடப்பட்ட தேசம் -மனுஷ்ய புத்திரன்

Go down

கடவுளால் கைவிடப்பட்ட தேசம் -மனுஷ்ய புத்திரன் Empty கடவுளால் கைவிடப்பட்ட தேசம் -மனுஷ்ய புத்திரன்

Post by கே. பாலா Tue Jun 07, 2011 2:03 am





24 மணி நேர செய்தி சேனல்கள் உலகம் முழுவதும் இருக்கின்றன. ஆனால் 24 மணி நேரமும் பரபரப்பான செய்திகளை உற்பத்தி செய்யும் ஒரு நாடு இருக்குமென்றால் அது இந்தியாதான். கடந்த சில மாதங்களாக இது உச்சத்திற்குப் போய்விட்டது. யார் எப்போது நியூஸ் மேக்கர்களாக மாறுவார்கள் என்று உத்தேசிக்கவே முடியாது. திடீர் திடீர் என புதுப் புது கதாநாயகர்கள் உருவாகி தேசத்தையே கிடுகிடுக்க வைக்கிறார்கள். இந்திய மத்தியதர வர்க்கத்திற்கு எந்த சமயம் தார்மீக ஆவேசத்தின் வயிற்று வலி வரும் என்று சொல்ல முடியாது. கொஞ்ச நேரத்தில் எந்த மருந்தும் இல்லாமல் அது தானாகவே சரியாகிவிடும். அரியணைக்கும் திஹார் ஜெயிலுக்கும் இடையே உள்ள தூரம் இவ்வளவு சிறியதாக இதற்கு முன்பு இருந்ததே இல்லை. ஒரு அறையிலிருந்து பக்கத்துக் கதவைத் திறந்துகொண்டு இன்னொரு அறைக்குப் போவது போல இருக்கிறது அதிகாரத்திலிருந்து சிறைவாசத்துக்குப் போவது.

இத்தனை கதாநாயகர்களுக்கும் ஒரே மைய நாயகன் ஊழல்தான்.

அன்னா ஹஸாரேயின் லோக் பால் மசோதாவிற்கு ஆதரவான போராட்டத்திற்குக் கிடைத்த பிரபல்யத்தை தொடர்ந்து யோகி ராம்தேவ் பாபா கறுப்புப் பணத்தை மீட்க அறிவித்த உண்ணாவிரதம் காங்கிரஸ் அரசால் பலவந்தமாகத் தடுத்து நிறுத்தப்பட்டிருகிக்கிறது. ராம் தேவை வரவேற்க நான்கு மத்திய அமைச்சர்கள் விமான நிலையம் சென்று பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். மூன்றாம் நாள் அவரைக் குண்டு கட்டாகக் கட்டி ஹெலிகாப்டரில் ஏற்றி ஹரித்துவாரில் கொண்டுபோய் இறக்கி விட்டுவிட்டு வருகிறார்கள். அன்னா ஹசாரேயை அனுமதித்த்வர்கள் ஏன் ராம்தேவினைக் கண்டு அஞ்சுகிறார்கள்? வெளிநாட்டில் இருக்கும் கறுப்புப் பணம் என்பது தலைக்குமேல் தொங்கிக் கொண்டிருக்கும் கத்தி. கற்பனை செய்ய முடியாத அளவுக்குப் பணம் பல்வேறு அரசியல் மற்றும் வணிக சக்திகளால் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கிறது. ராம்தேவ் பாம்புப் புற்றுக்குள் கையை விட்டுவிட்டார். கிட்டதட்ட ஒரு அரசாங்கமே ராம்தேவுடன் பேச்சுவார்த்தை நடத்தி தோல்வியடைந்த பிறகுதான் இந்த வன்முறை நாடகம்.

திக்விஜய்சிங் இப்போது ராம்தேவ் பாபாவை ஃப்ராட் என்கிறார். பேச்சுவார்த்தை நடத்தும்போது இது தெரியவில்லையா? ஒரு அரசாங்கத்தின் நான்கு அமைச்சர்கள் ஒரு ஃப்ராடுடன் எப்படி பேச்சுவார்த்தை நடத்த துணிந்தார்கள்? கறுப்புப் பணம் என்ற விமானத்தை ராம்தேவ் ஹைஜாக் செய்ய முயன்றார். பேரம் படியாததால் காங்கிரஸ் இப்போது கடத்தல்காரரைத் தீர்த்துக் கட்டும் முயற்சியில் இருக்கிறது.

ராம்தேவ் பாபா இத்தனை ஆயிரம் கோடிகளை எப்படிச் சேர்த்தார்? ஆயுர்வேத மருந்துகளைத் தயாரித்து விற்கும் அவருக்கு யோகா குருவிற்கு உரிய வரிவிலக்கு எப்படி அளிக்கப்பட்டது? அவருடைய நிறுவங்களுக்கு நிதி அளிப்பவர்கள் யார்? இதெல்லாம் அமலாக்கப் பிரிவின் மூலமாக காங்கிரஸ் எழுப்பத் தொடங்கியிருக்கும் கேள்விகள். நீ கணக்கு கேட்டால் நான் கண்க்கு கேட்பேன் என்று சொல்வது என்ன மாதிரியான தர்க்கம் என்றே புரியவில்லை. இதைச் செய்வதற்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கம். காறித்துப்புகிறது உலகம். பேரம், பிளாக் மெயில், சதி இவற்றைத் தவிர நாம் பார்ப்பதற்கு ஒன்றுமே இல்லையா?

ராம்தேவ் பாபா விசித்திரமான நடத்தைகள் உடையவராக இருக்கிறார். தனக்கு எதிராக சதி நடந்ததாக கூறுகிறார். தன்னை என்கவுண்டரில் கொல்ல முயற்சி என்கிறார். போலீஸ் வந்ததும் உண்ணாவிரத மேடையில் இருந்து குதித்து தப்பி ஓடுகிறார். பெண்கள் ஆடையில் மாறுவேசத்தில் இருந்த அவரை போலீஸ் பிடிக்கிறது. அவர் நோக்கம்தான் என்ன? தேசமே பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு போராட்டத்தை நடத்துபவர் ஏன் போலீஸைக் கண்டதும் மாறு வேஷத்தில் தப்பி ஓடுகிறார்? அவர் பயப்படக் கூடியவர் அல்ல. வேறு ஏதோ ஒரு உணர்ச்சிகரமான நாடகத்திற்கு அவர் திட்டமிட்டிருக்கக் கூடும். தலைமறைவாக இருந்து ‘ பாபாவைக் காணவில்லை’என சில நாட்களுக்குப் பெரும் பரபரப்பை உண்டாக்க நினைத்தாரா?

ராம்தேவின் போராட்டத்தினால் பி.ஜே.பி. மிகவும் புத்துணர்ச்சி பெற்றுவிட்டது. தனக்குப் பின்னால் ஆர்.எஸ்.எஸ். இல்லை என்று ராம்தேவ் எத்தனை முறை சொன்னாலும் அவர் உருவாக்கியிருக்கும் பர பரப்பை ஆர்.எஸ்.எஸ்.சும் பி.ஜே.பி.யுமே முன்னெடுத்துச் செல்கின்றன. ராம்தேவின் மத, சமூக, பண்பாட்டு அடையாளங்கள் இந்துத்துவா சக்திகளுக்கு மிகவும் நெருக்கமானவை. அத்வானி நீண்ட காலத்திற்குப் பிறகு உற்சாகமாகப் பேட்டி அளிக்கிறார். ராம்தேவ்வை ஆதரித்து அளிக்கும் பேட்டியில் ஜெயலலிதாவைப் புகழ்கிறார். பாரதீய ஜனதாவைத் தேசிய மைய நீரோட்டத்திற்கு மறுபடியும் கொண்டு வரும் ஒரு முயற்சியில் ஒவ்வொரு நாடகமாக படிப்படியாக அரங்கேற்றப்படுகின்றன. அரசியல் துருப்புச் சீட்டாக அன்று ராமஜென்ம பூமி. இன்று ராம்தேவ் பாபா- அன்னா ஹஸாரே.

ஊழல் என்பது இன்று இந்தியாவை சூழ்ந்திருக்கும் ஆழிப் பேரலை. பிரெஞ்சுப் புரட்சியில் கில்லட்டினுக்கு அனுப்பப்பட்ட ராஜ வம்சத்தினரின் அட்டூழியங்களை விட கடுமையானது இன்றைய இந்திய ஆளும் வர்க்கத்தின் அட்டூழியங்கள். மக்களிடம் தகிக்கும் கோபத்திற்கு எந்த திசையும் இல்லை. இவற்றை ஒரு ஆரோக்கியமான அரசியல் மாற்றத்திற்கு எடுத்துச் செல்லும் சக்திகளும் இல்லை.

அன்னா ஹஸாரேயையும் ராம்தேவ் பாபாவையும் தங்களைக் காப்பாற்ற வந்த கடவுளின் தூதர்களாக கருதும் ஒரு சமூகத்தைக் கடவுளால்கூட காப்பாற்ற முடியாது என்று சமீபத்தில் முகநூலில் எழுதினேன். அதையே இப்போதும் எழுதுகிறேன்.

நன்றி: உயிரோசை
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum