ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
நன்கொடை Poll_c10நன்கொடை Poll_m10நன்கொடை Poll_c10 
Dr.S.Soundarapandian
நன்கொடை Poll_c10நன்கொடை Poll_m10நன்கொடை Poll_c10 
heezulia
நன்கொடை Poll_c10நன்கொடை Poll_m10நன்கொடை Poll_c10 
i6appar
நன்கொடை Poll_c10நன்கொடை Poll_m10நன்கொடை Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

நன்கொடை

5 posters

Go down

நன்கொடை Empty நன்கொடை

Post by சிவா Mon Jun 06, 2011 4:31 pm

ன்னைப் பற்றி பள்ளி மாணவர்கள் இப்படி நினைப்பார்கள் என குமாரசாமி கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால், அவர் மக்களிடம் `வள்ளல்' என்று பெயர் எடுத்தவர். எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் நன்கொடை கேட்டு வந்தாலும், வாரிக் கொடுக்கத் தயங்கியதே இல்லை.

இந்த உண்மைகளைக் கேள்விப்பட்டு, சில மாணவர்கள் பள்ளி ஆண்டு விழாவுக்காக நன்கொடை வாங்கிச் செல்ல அவரது வீட்டிற்குள் நுழைந்தனர்.

அப்போது மின்விளக்கை அணைத்து விட்டு, ஒரு சிறிய மெழுகுவர்த்தியின் துணை யோடு குமாரசாமி புத்தகம் படித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு, அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், வந்த வழியே திரும்பிச் சென்றனர். அதற்குள் அவர்களைப் பார்த்துவிட்ட குமாரசாமி, வீட்டுக்குள் கூப்பிட்டார். அவர்களும் வந்தனர்.

"என்னைப் பார்க்க வந்த நீங்கள், பார்க்காமலேயே ஏன் திரும்பிச் செல்கிறீர் கள்?'' என்று கேட்டார்.

"ஐயா, நாங்கள் பள்ளி ஆண்டு விழாவுக்காக உங்களிடம் நன்கொடை வசூலிக்க வந்தோம். அப்போது நீங்கள் எரியும் மின்விளக்கை அணைத்துவிட்டு, மெழுகுவர்த்தியின் வெளிச் சத்தில் படிப்பதைப் பார்த்து விட்டு திரும்பிச் சென்றோம்'' என்றனர்.

"அதற்கும், நன்கொடை கேட்காமல் நீங்கள் திரும்பிச் சென்றதற்கும் என்ன சம்பந்தம்?''

"எரியும் மின்விளக்கை அணைத்துவிட்டு மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படிப்பதைப் பார்த்துவிட்டு, நீங்கள் கஞ்சத்தனம் கொண்டவர் எனத் தீர்மானித்து திரும்பிச் சென்றோம்'' என்றனர் மாணவர்கள்.

அவர்கள் கூறியதைக் கேட்ட குமாரசாமி, `கலகல'வென சிரித்துவிட்டுச் சொன்னார்.

"மாணவர்களே! புத்தகம் படிக்க சிறிய வெளிச்சம் போதுமானது. அதைவிட்டுவிட்டு பெரிய மின்விளக்கின் ஒளியில் படிப்பது என்னைப் பொறுத்தவரையில் வீணானது. ஆடம்பரத்தைக் குறைத்து விட்டு அதில் கிடைக்கக்கூடிய பணத்தை கஷ்டப்படும் ஏழைகளுக்குக் கொடுத்தால் அவர்களுக்கு எவ்வளவு உபயோகமாக இருக்கும்? அந்தக் காரணத்துக்காகத்தான் அப்படிச் செய்தேன்'' என்று கூறியபடியே ஐந்தாயிரம் ரூபாயை அவர்களிடம் நன்கொடையாகக் கொடுத்தார்.

அதைக்கண்ட மாணவர்கள் வாயடைத்துப் போயினர். அப்போது அவர் வீட்டு வானொலியில் இருந்து திருக்குறளும், அதற்கான பொருளும் ஒலிபரப்பாயின.

"வான்நின்று உலகம் வழங்கி வருதலால்

தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று''

என்று `வான் சிறப்பு' அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறியுள்ளார். அதாவது, மழை பொழிவதால் தான் இந்த உலகத்தில் உயிரினங்கள் வாழ முடிகிறது. எனவே, உலகத்தில் வாழும் உயிர்களுக்கெல்லாம் அமிழ்தம் என்பது மழைதான்'' என்ற விள க்கத்தைக் கேட்ட மாணவர்கள் வெட்கித் தலைகுனிந்தனர்.

``ஐயா, எங்களை மன்னித்து விடுங்கள். உங்களின் கொடைத்தன்மையைப் புரிந்து கொள்ளாமல் தவறாக நினைத்து விட்டோம். எதுவுமே எதிர்பார்க்காமல் மக்களுக்கு உதவும் மழையைப் போல், நீங்கள் கொடைவள்ளலாக இருந்து ஏழைமக்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்'' என்று அவருக்கு நன்றி சொல்லி விட்டு மாணவர்கள் பள்ளிக்குத் திரும்பினர்.

தாழை மு. ஷேக்தாசன்


நன்கொடை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நன்கொடை Empty Re: நன்கொடை

Post by முரளிராஜா Mon Jun 06, 2011 9:20 pm

அருமையான கதை
பகிர்ந்தமைக்கு நன்றி சிவா மாமா புன்னகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

நன்கொடை Empty Re: நன்கொடை

Post by அசுரன் Mon Jun 06, 2011 9:27 pm

மழையே இதுபோன்ற வள்ளல்களால் தான் பெய்கிறது என்பது என் கருத்து. மேன்மக்கள் மேன்மக்களே
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நன்கொடை Empty Re: நன்கொடை

Post by kitcha Mon Jun 06, 2011 10:08 pm

நன்கொடை 2825183110 நன்கொடை 2825183110


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நன்கொடை Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

நன்கொடை Empty Re: நன்கொடை

Post by றினா Mon Jun 06, 2011 10:13 pm

சூப்பருங்க


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

நன்கொடை Empty Re: நன்கொடை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum