Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த என்ன வழி?
5 posters
Page 1 of 1
பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த என்ன வழி?
பொதுத்துறையைசேர்ந்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய மூன்று எண்ணெய் நிறுவனங்கள், கடந்த 2010-11ம் நிதியாண்டில், கொழுத்த லாபம் கண்டுள்ளன. இந்த லாபம் போதாது; மக்களை வருத்தி, மேலும் லாபம் ஈட்ட வேண்டும் என்பதே, அரசு மற்றும் இந்நிறுவனங்களின் நிலைப்பாடாக உள்ளது என்பது வருத்தமளிக்கிறது.
கடந்த 2010ம் ஆண்டு ஜூன் மாதம், மத்திய அரசு, பெட்ரோல் மீதான விலைக் கட்டுப்பாட்டை நீக்கியது. அதாவது, சந்தை நிலவரத்திற்கேற்ப, எண்ணெயை சந்தைப்படுத்தும் நிறுவனங்கள், பெட்ரோலின் விலையை நிர்ணயித்துக் கொள்ளலாம். சர்வதேச சந்தையில் நிலவும், கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணம் காட்டி, இந்நிறு வனங்கள் பெட்ரோல் விலையை தாறுமாறாக உயர்த்தி வருகின்றன. ஆக, ஓராண்டு காலத்தில், பெட்ரோல் விலை, லிட்டருக்கு 32 சதவீதம் (15.40 ரூபாய்) உயர்ந்துள்ளது. இதுவரை இல்லாத வகையில், சென்ற மே 15ம் தேதி பெட்ரோல் விலையில், லிட்டருக்கு 5 ரூபாய் உயர்த்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, மீண்டும் விலையை உயர்த்தப் போவதாக, இந்நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டு வருகின்றன. தற்போது, டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை உயர்த்திக் கொள்ள, எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இவற்றின் விலை உயர்வு குறித்து, மத்திய அரசால் மட்டுமே, முடிவெடுக்க முடியும் என்ற சூழ்நிலை உள்ளது. எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் ஆகிய நான்கு எரிபொருள்கள் தவிர, எண்ணெய் சுத்திகரிப்பின் வாயிலாக, பல்வேறு உப பொருள்களையும் உற்பத்தி செய்து வருகின்றன. இவற்றின் விற்பனை மூலம், இந்நிறுவனங்கள் சத்தமில்லாமல் கொழுத்த லாபம் ஈட்டி வருகின்றன.
ஐ.ஓ.சி., என்று சுருக்கமாக அழைக்கப்படும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் மொத்த விற்றுமுதல், சென்ற 2010-11ம் நிதியாண்டில், 3 லட்சத்து 28 ஆயிரத்து 744 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. ஐ.ஓ.சி., வரலாற்றில் முதல் முறையாக இந்த அளவிற்கு விற்றுமுதல் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பெட்ரோலிய பொருள்களின் விற்பனை, 3.9 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. வரிக்கு பிந்தைய லாபம், 7,446 கோடி ரூபாயாக உள்ளது. (இந்நிறுவனத்திற்கு, இந்த லாபம் போதவில்லை போலும்) கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு லாப வரம்பும், ஒரு பீப்பாய்க்கு 4.47 டாலரிலிருந்து 5.95 டாலராக உயர்ந்துள்ளது. நடப்பாண்டு, ஜனவரி முதல் மார்ச் வரையிலான 3 மாத காலத்தில், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு லாப வரம்பு, ஒரு பீப்பாய்க்கு 7.85 டாலராக உயர்ந்துள்ளது. சென்ற நிதியாண்டில், அடக்க விலைக்கும் குறைவாக பெட்ரோலிய பொருள்களை வழங்கிய வகையில், ஐ.ஓ.சி., 22 ஆயிரத்து 605 கோடி ரூபாய் இழப்பீடு கோரியுள்ளது. இதில், 11 ஆயிரத்து 662 கோடி ரூபாய் வழங்கப்பட்டு விட்டது. இத்தகைய மானிய உதவியை பெற்ற நிலையிலும், நிறுவனத்திற்கு 4,845 கோடி ரூபாய் இழப்பு (லாபத்தில்) ஏற்பட்டுள்ளதாகவும், மொத்த கடன் சுமை 67 ஆயிரத்து 800 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்ற நிதியாண்டில், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் நிகர லாபம், 1,538 கோடி ரூபாயிலிருந்து, 1,547 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்நிறுவனத்திற்கு மத்திய அரசு, 9,149 கோடி ரூபாய் மானியம் வழங்கியுள்ளது. கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி செய்து வரும், ஓ.என்.ஜி.சி., மற்றும் கெயில் நிறுவனங்கள், 6,969 கோடி ரூபாய் மானிய விலையில், இவற்றை வழங்கியுள்ளன. இதே போல், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் நிகர லாபமும் அதிகரித்துள்ளது. இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை, 1 கோடியே 38 லட்சத்து 49 ஆயிரத்து 275 ரூபாயாகவும், நிகர லாபம் 17 லட்சத்து 70 ஆயிரத்து 360 ரூபாயாகவும் உள்ளது. இந்நிறுவனங்கள் நல்ல அளவில் லாபம் ஈட்டியுள்ள போதிலும், மத்திய அரசின் மானிய உதவியில்லை என்றால், இழப்பைத் தான் சந்திக்க வேண்டியிருக்கும் என்று தெரிவிக்கின்றன. பெட்ரோல் விலையை கடந்த மாதம் உயர்த்தியுள்ள போதிலும், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு சராசரியாக 5.50 ரூபாய் இழப்பு ஏற்படுவதாக இந்நிறுவனங்கள் கூறுகின்றன.
கடந்த 2010ம் ஆண்டு ஜூன் மாதம், மத்திய அரசு, பெட்ரோல் மீதான விலைக் கட்டுப்பாட்டை நீக்கியது. அதாவது, சந்தை நிலவரத்திற்கேற்ப, எண்ணெயை சந்தைப்படுத்தும் நிறுவனங்கள், பெட்ரோலின் விலையை நிர்ணயித்துக் கொள்ளலாம். சர்வதேச சந்தையில் நிலவும், கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணம் காட்டி, இந்நிறு வனங்கள் பெட்ரோல் விலையை தாறுமாறாக உயர்த்தி வருகின்றன. ஆக, ஓராண்டு காலத்தில், பெட்ரோல் விலை, லிட்டருக்கு 32 சதவீதம் (15.40 ரூபாய்) உயர்ந்துள்ளது. இதுவரை இல்லாத வகையில், சென்ற மே 15ம் தேதி பெட்ரோல் விலையில், லிட்டருக்கு 5 ரூபாய் உயர்த்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, மீண்டும் விலையை உயர்த்தப் போவதாக, இந்நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டு வருகின்றன. தற்போது, டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை உயர்த்திக் கொள்ள, எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இவற்றின் விலை உயர்வு குறித்து, மத்திய அரசால் மட்டுமே, முடிவெடுக்க முடியும் என்ற சூழ்நிலை உள்ளது. எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் ஆகிய நான்கு எரிபொருள்கள் தவிர, எண்ணெய் சுத்திகரிப்பின் வாயிலாக, பல்வேறு உப பொருள்களையும் உற்பத்தி செய்து வருகின்றன. இவற்றின் விற்பனை மூலம், இந்நிறுவனங்கள் சத்தமில்லாமல் கொழுத்த லாபம் ஈட்டி வருகின்றன.
ஐ.ஓ.சி., என்று சுருக்கமாக அழைக்கப்படும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் மொத்த விற்றுமுதல், சென்ற 2010-11ம் நிதியாண்டில், 3 லட்சத்து 28 ஆயிரத்து 744 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. ஐ.ஓ.சி., வரலாற்றில் முதல் முறையாக இந்த அளவிற்கு விற்றுமுதல் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பெட்ரோலிய பொருள்களின் விற்பனை, 3.9 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. வரிக்கு பிந்தைய லாபம், 7,446 கோடி ரூபாயாக உள்ளது. (இந்நிறுவனத்திற்கு, இந்த லாபம் போதவில்லை போலும்) கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு லாப வரம்பும், ஒரு பீப்பாய்க்கு 4.47 டாலரிலிருந்து 5.95 டாலராக உயர்ந்துள்ளது. நடப்பாண்டு, ஜனவரி முதல் மார்ச் வரையிலான 3 மாத காலத்தில், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு லாப வரம்பு, ஒரு பீப்பாய்க்கு 7.85 டாலராக உயர்ந்துள்ளது. சென்ற நிதியாண்டில், அடக்க விலைக்கும் குறைவாக பெட்ரோலிய பொருள்களை வழங்கிய வகையில், ஐ.ஓ.சி., 22 ஆயிரத்து 605 கோடி ரூபாய் இழப்பீடு கோரியுள்ளது. இதில், 11 ஆயிரத்து 662 கோடி ரூபாய் வழங்கப்பட்டு விட்டது. இத்தகைய மானிய உதவியை பெற்ற நிலையிலும், நிறுவனத்திற்கு 4,845 கோடி ரூபாய் இழப்பு (லாபத்தில்) ஏற்பட்டுள்ளதாகவும், மொத்த கடன் சுமை 67 ஆயிரத்து 800 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்ற நிதியாண்டில், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் நிகர லாபம், 1,538 கோடி ரூபாயிலிருந்து, 1,547 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்நிறுவனத்திற்கு மத்திய அரசு, 9,149 கோடி ரூபாய் மானியம் வழங்கியுள்ளது. கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி செய்து வரும், ஓ.என்.ஜி.சி., மற்றும் கெயில் நிறுவனங்கள், 6,969 கோடி ரூபாய் மானிய விலையில், இவற்றை வழங்கியுள்ளன. இதே போல், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் நிகர லாபமும் அதிகரித்துள்ளது. இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை, 1 கோடியே 38 லட்சத்து 49 ஆயிரத்து 275 ரூபாயாகவும், நிகர லாபம் 17 லட்சத்து 70 ஆயிரத்து 360 ரூபாயாகவும் உள்ளது. இந்நிறுவனங்கள் நல்ல அளவில் லாபம் ஈட்டியுள்ள போதிலும், மத்திய அரசின் மானிய உதவியில்லை என்றால், இழப்பைத் தான் சந்திக்க வேண்டியிருக்கும் என்று தெரிவிக்கின்றன. பெட்ரோல் விலையை கடந்த மாதம் உயர்த்தியுள்ள போதிலும், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு சராசரியாக 5.50 ரூபாய் இழப்பு ஏற்படுவதாக இந்நிறுவனங்கள் கூறுகின்றன.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த என்ன வழி?
பெட்ரோலிய பொருள்களுக்கு மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் வரிகளைக் குறைத்தால்,
விலையை உயர்த்த வேண்டிய அவசியம் இருக்காது என, பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள்
கருத்து தெரிவிக்கின்றனர். சென்னையில், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை, 67.22 ரூபாயாக
உள்ளது. தற்போது, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை, 107 டாலர் என்று வைத்துக்
கொண்டால், இதன் மதிப்பு 4,858 ரூபாயாக உள்ளது. ஒரு பீப்பாயின் எண்ணெய் கொள்ளளவு 160
லிட்டர். இதன்படி, ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் விலை 30.36 ரூபாய். இதில்
சுத்திகரிப்பு மற்றும் போக்குவரத்து செலவு, 13 ரூபாய், முகவர் தரகு கட்டணம் 1.17
ரூபாய் என்று வைத்துக் கொண்டால், ஒரு லிட்டர் பெட்ரோலின் அடக்க விலை, 44.53 ரூபாய்
என்ற அளவிற்கு வருகிறது. வரியாக 22.69 ரூபாய் செலுத்தப்படுகிறது. ஆக, ஒரு லிட்டர்
பெட்ரோலின் விற்பனை விலையில், 50 சதவீதம் வரியாக உள்ளது. சென்ற நிதியாண்டில்,
பெட்ரோலிய துறை வாயிலாக மத்திய அரசுக்கு, 1 லட்சத்து 35 ஆயிரத்து 433 கோடி
ரூபாயும், மாநில அரசுகளுக்கு 90 ஆயிரம் கோடி ரூபாயும், வரி வருவாயாக
கிடைத்திருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. பொதுத்துறையை சேர்ந்த எண்ணெய்
நிறுவனங்களின் மொத்த இழப்பு, 78 ஆயிரத்து 159 கோடி ரூபாய் என கணிக்கப்பட்டுள்ளது.
இதில், மத்திய அரசு மானியமாக, 61.3 சதவீதமும், ஓ.என்.ஜி.சி., உள்ளிட்ட எண்ணெய்
மற்றும் எரிவாயு உற்பத்தி நிறுவனங்கள், 38.7 சதவீத மானியமும் வழங்குகின்றன. இதன்படி
கணக்கிட்டால், மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய மானியம், 47
ஆயிரத்து 912 கோடி ரூபாய் என்ற அளவிற்கே உள்ளது. இதை, வரி வருவாயில் கழித்தால்,
மத்திய அரசின் நிகர வருவாய், 87 ஆயிரத்து 521 கோடி ரூபாயாக இருக்கும்.பெட்ரோலிய பொருள்களுக்கான வரியை குறைத்தால், மத்திய அரசின் மானியச் செலவும்,
நிகர வரி வருவாயும் குறையும். அதேசமயம், நுகர்வோர் எரிபொருளுக்காக செலவிடுவதும்
குறையும். ஒரு புறம் வரிகள் மூலம், வருவாயை பெறும் மத்திய அரசு, அதே வரிச் சுமை
காரணமாகவும், கச்சா எண்ணெய் விலை உயர்வாலும், எரிபொருள் விலையை உயர்த்தும் எண்ணெய்
நிறுவனங்களுக்கு மானியம் அளிக்கிறது. இந்த முரண்பாடான நடைமுறையை சீரமைக்க, குழு
ஒன்று அமைத்து, அதன் பரிந்துரைக்கேற்ப வரிச் சீர்திருத்தம் மேற்கொண்டால், எரிபொருள்
விலை உயர்வு தொடர்பாக நிரந்தர தீர்வு காணலாம். பெட்ரோல் விலை பிரச்னையிலிருந்து,
மக்கள் விடுபடலாம். அண்மைக்கால பணவீக்க உயர்விற்கு, பெட்ரோலிய பொருள்களின் விலை
உயர்வு, முக்கிய காரணமாக உள்ளது. பெட்ரோலிய பொருள்களின் விலையை அடிக்கடி
உயர்த்தாமல், மக்களின் அன்றாடத் தேவைப் பொருள்களை, தடையில்லாமல் வழங்கினாலே,
பணவீக்கம் கட்டுக்குள் இருக்கும். அதைவிடுத்து, ரிசர்வ் வங்கி மட்டும்,
வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்துவதால், அதிக பயன் கிடைக்கப் போவதில்லை.
வட்டிச் செலவின அதிகரிப்பால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிப்புக்குள்ளாகிறது.
மேலும், மோட்டார் வாகனம், தொழில் துறை, நுகர் பொருள்கள் என, அனைத்து துறைகளும்
இடர்பாட்டிற்கு உள்ளாகின்றன.
விலையை உயர்த்த வேண்டிய அவசியம் இருக்காது என, பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள்
கருத்து தெரிவிக்கின்றனர். சென்னையில், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை, 67.22 ரூபாயாக
உள்ளது. தற்போது, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை, 107 டாலர் என்று வைத்துக்
கொண்டால், இதன் மதிப்பு 4,858 ரூபாயாக உள்ளது. ஒரு பீப்பாயின் எண்ணெய் கொள்ளளவு 160
லிட்டர். இதன்படி, ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் விலை 30.36 ரூபாய். இதில்
சுத்திகரிப்பு மற்றும் போக்குவரத்து செலவு, 13 ரூபாய், முகவர் தரகு கட்டணம் 1.17
ரூபாய் என்று வைத்துக் கொண்டால், ஒரு லிட்டர் பெட்ரோலின் அடக்க விலை, 44.53 ரூபாய்
என்ற அளவிற்கு வருகிறது. வரியாக 22.69 ரூபாய் செலுத்தப்படுகிறது. ஆக, ஒரு லிட்டர்
பெட்ரோலின் விற்பனை விலையில், 50 சதவீதம் வரியாக உள்ளது. சென்ற நிதியாண்டில்,
பெட்ரோலிய துறை வாயிலாக மத்திய அரசுக்கு, 1 லட்சத்து 35 ஆயிரத்து 433 கோடி
ரூபாயும், மாநில அரசுகளுக்கு 90 ஆயிரம் கோடி ரூபாயும், வரி வருவாயாக
கிடைத்திருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. பொதுத்துறையை சேர்ந்த எண்ணெய்
நிறுவனங்களின் மொத்த இழப்பு, 78 ஆயிரத்து 159 கோடி ரூபாய் என கணிக்கப்பட்டுள்ளது.
இதில், மத்திய அரசு மானியமாக, 61.3 சதவீதமும், ஓ.என்.ஜி.சி., உள்ளிட்ட எண்ணெய்
மற்றும் எரிவாயு உற்பத்தி நிறுவனங்கள், 38.7 சதவீத மானியமும் வழங்குகின்றன. இதன்படி
கணக்கிட்டால், மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய மானியம், 47
ஆயிரத்து 912 கோடி ரூபாய் என்ற அளவிற்கே உள்ளது. இதை, வரி வருவாயில் கழித்தால்,
மத்திய அரசின் நிகர வருவாய், 87 ஆயிரத்து 521 கோடி ரூபாயாக இருக்கும்.பெட்ரோலிய பொருள்களுக்கான வரியை குறைத்தால், மத்திய அரசின் மானியச் செலவும்,
நிகர வரி வருவாயும் குறையும். அதேசமயம், நுகர்வோர் எரிபொருளுக்காக செலவிடுவதும்
குறையும். ஒரு புறம் வரிகள் மூலம், வருவாயை பெறும் மத்திய அரசு, அதே வரிச் சுமை
காரணமாகவும், கச்சா எண்ணெய் விலை உயர்வாலும், எரிபொருள் விலையை உயர்த்தும் எண்ணெய்
நிறுவனங்களுக்கு மானியம் அளிக்கிறது. இந்த முரண்பாடான நடைமுறையை சீரமைக்க, குழு
ஒன்று அமைத்து, அதன் பரிந்துரைக்கேற்ப வரிச் சீர்திருத்தம் மேற்கொண்டால், எரிபொருள்
விலை உயர்வு தொடர்பாக நிரந்தர தீர்வு காணலாம். பெட்ரோல் விலை பிரச்னையிலிருந்து,
மக்கள் விடுபடலாம். அண்மைக்கால பணவீக்க உயர்விற்கு, பெட்ரோலிய பொருள்களின் விலை
உயர்வு, முக்கிய காரணமாக உள்ளது. பெட்ரோலிய பொருள்களின் விலையை அடிக்கடி
உயர்த்தாமல், மக்களின் அன்றாடத் தேவைப் பொருள்களை, தடையில்லாமல் வழங்கினாலே,
பணவீக்கம் கட்டுக்குள் இருக்கும். அதைவிடுத்து, ரிசர்வ் வங்கி மட்டும்,
வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்துவதால், அதிக பயன் கிடைக்கப் போவதில்லை.
வட்டிச் செலவின அதிகரிப்பால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிப்புக்குள்ளாகிறது.
மேலும், மோட்டார் வாகனம், தொழில் துறை, நுகர் பொருள்கள் என, அனைத்து துறைகளும்
இடர்பாட்டிற்கு உள்ளாகின்றன.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த என்ன வழி?
ஒருவேளை பழய படிக்கு மட்டுவண்டி, குதிரை வண்டி பயன் படுத்த சொல்வாங்களோ
![பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த என்ன வழி? 502589](https://2img.net/u/1813/71/41/02/smiles/502589.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![என்ன?](https://2img.net/i/fa/i/smiles/icon_question.gif)
![என்ன?](https://2img.net/i/fa/i/smiles/icon_question.gif)
![என்ன?](https://2img.net/i/fa/i/smiles/icon_question.gif)
![பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த என்ன வழி? 502589](https://2img.net/u/1813/71/41/02/smiles/502589.gif)
![பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த என்ன வழி? 502589](https://2img.net/u/1813/71/41/02/smiles/502589.gif)
![பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த என்ன வழி? 502589](https://2img.net/u/1813/71/41/02/smiles/502589.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த என்ன வழி?
போக்குவரத்தின் மூலமே எரி பொருள் அதிகம் செல்வைடப்படுகிறது யென நினைக்கிறேன் அந்த வாகயில் அருகில் செல்லும் தூரங்களுக்கு மீதி வண்டி உபயோகபடுத்தாலும் நடராஜா சர்வீஸ் நாட்டுக்கும் நல்லது நமக்கும் நல்லது இரு சக்கர வாகனங்களை சரியான முரயில் பராமரிப்பதன் மூலமும் அடுத்த முறை காங்கிரஸை ஆட்சி கட்டிலை விட்டு அடித்து துரத்துவது போன்ற காரியங்களை செயலாம்
Re: பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த என்ன வழி?
அப்ப இனி நடக்கலாம்... நடப்பதால் இதய நோய் வராது...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த என்ன வழி? 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
Re: பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த என்ன வழி?
இதுதான் ...நடக்குற ...யோசனை.....பாப்போம்மஞ்சுபாஷிணி wrote:அப்ப இனி நடக்கலாம்... நடப்பதால் இதய நோய் வராது...
Re: பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த என்ன வழி?
எல்லோரும் பஸ் மற்றும் சைக்கிள் உபயோகித்தால் நலம் . சிக்கனம் மற்றும் உடல்நலதிற்கும் நல்லது.
uma rani- புதியவர்
- பதிவுகள் : 41
இணைந்தது : 10/01/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கிலோ ரூ.70 ஆக உயர்வு: வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை
» பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாளை மதிமுக ஆர்ப்பாட்டம்
» சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.70 குறைப்பு; டீசல் விலை 50 பைசா உயர்வு
» கச்சா எண்ணை விலை குறைந்ததால் பெட்ரோல் விலை ரூ.2 குறைகிறது
» பெட்ரோல். டீசல் விலை உயர்வால் தண்ணீர் விலை உயர்வு !
» பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாளை மதிமுக ஆர்ப்பாட்டம்
» சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.70 குறைப்பு; டீசல் விலை 50 பைசா உயர்வு
» கச்சா எண்ணை விலை குறைந்ததால் பெட்ரோல் விலை ரூ.2 குறைகிறது
» பெட்ரோல். டீசல் விலை உயர்வால் தண்ணீர் விலை உயர்வு !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|