Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரபாகரன் பயங்கரவாதிதானே? கழுகாரின் பதில். ஈழதேசத்தின் பார்வையில்.
+3
பது
SK
jeylakesengg
7 posters
Page 1 of 1
பிரபாகரன் பயங்கரவாதிதானே? கழுகாரின் பதில். ஈழதேசத்தின் பார்வையில்.
தமிழகத்தில் வெளியாகும் வாரம் இருமுறை இதழான ஜூனியர் விகடனின் இன்றைய வெளியீட்டில் கழுகார் கேள்வி பதில் பகுதியில் "பிரபாகரன்'பயங்கரவாதிதானே?" என்ற கேள்வி ஒரு வாசகரால் கேட்கப்பட்டது. அதற்கான பதில் வருமாறு.
இந்திய நாடாளுமன்றத்தில் குண்டு வீசி, நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட பகத்சிங் ஒரு விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
"கொள்ளைக்காரர்களையும் வரி வசூலிப்பவர்களையும் ஒன்றாகக் கருதமுடியாது. இருவரது செயலின் முடிவும் ஒரே மாதிரியாக இருந்தாலும் இருவரையும் ஒரே மாதிரியாக கருதிவிட முடியாது. எலிகளைக் கொல்லவும் சோற்றில் விஷத்தைக் கலக்கலாம். ஒரு மனிதனைக் கொல்லவும் அதே போல் செய்யலாம். சோற்றில் நஞ்சைக் கலப்பது நல்லதா கெட்டதா என்பதைப் பொறுத்தே செயலின் நோக்கத்தை நாம் முடிவு செய்ய முடியும். அதாவது செயலை அதற்கான நோக்கத்தில் இருந்துதான் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும்" என்றான் பகத்சிங்.
இந்த வேறுபாட்டை உணருங்கள். குற்றவாளியும் போராளியும் எந்த இடத்தில் வேறுபடுகிறார்கள் என்பது பற்றி சீனத் தந்தை மாவோ நிறைய எழுதி இருக்கிறார். என அந்தப்பதில் மேலும் தெரிவித்துள்ளது.
இதைத்தான் எங்களுரில் பனைக்கு கீழே நின்று பால் குடித்தாலும் தூரதே நின்று பார்ப்பவரிற்கு கள்ளுக் குடிப்பதாகத்தான் தோன்றும். இடம் சூழல் இவ்வாறான மயக்கத்தை ஏற்படுத்திவிடுகின்றது. அதற்காகத்தான் கண்ணால் பார்ப்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் என்று எமது முன்னோர்கள் சொல்லிவைத்துள்ளார்கள்.
அந்தவகையில் முன்னால் பாரதப் பிரதமர் இராசீவ் காந்தி அவர்களது ஒற்றை மரணத்தை முன்னிறுத்தி தமிழினத்தின் விடுதலைக்கு தாய்த்தமிழகம் முழுமையான ஒத்துழைப்பினை நல்காது விதண்டாவாதம் செய்து இன்றைய பேரழிவு நிலையில் கொண்டு வந்து விட்டதனை நாம் கண் கூடாகக் கண்டுணர்ந்துள்ளோம்.
முள்ளிவாய்க்கால் பேரழிவானது இந்த தூரநின்று தத்தமது பார்வையில் நின்று கொண்டு வீண் விதண்டாவாதம் செய்துவந்த தமிழகத்து அறிவார்ந்த சமூகம் கிட்ட நெருங்கி வந்து உண்மையினை உணர்ந்து கொள்ள வைத்துள்ளது. தாய்த் தமிழகத்தை விழிப்பயைடச் செய்ய இவ்வளவு பெரிய அழிவை சந்திக்க வேண்டியதாகிவிட்டதே...! அதுதான் பெரும் வருத்தமாகும்.
முள்ளிவாய்கால் பேரழிவானது தமிழகத்தை மட்டுமல்ல உலக நாடுகளையே சற்று அசைத்துப் போட்டுள்ளது என்றால் மிகையில்லை.
ஈழதேசம் ஆசிரியர் குழு.
:வணக்கம்: ஈழதேசம்
இந்திய நாடாளுமன்றத்தில் குண்டு வீசி, நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட பகத்சிங் ஒரு விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
"கொள்ளைக்காரர்களையும் வரி வசூலிப்பவர்களையும் ஒன்றாகக் கருதமுடியாது. இருவரது செயலின் முடிவும் ஒரே மாதிரியாக இருந்தாலும் இருவரையும் ஒரே மாதிரியாக கருதிவிட முடியாது. எலிகளைக் கொல்லவும் சோற்றில் விஷத்தைக் கலக்கலாம். ஒரு மனிதனைக் கொல்லவும் அதே போல் செய்யலாம். சோற்றில் நஞ்சைக் கலப்பது நல்லதா கெட்டதா என்பதைப் பொறுத்தே செயலின் நோக்கத்தை நாம் முடிவு செய்ய முடியும். அதாவது செயலை அதற்கான நோக்கத்தில் இருந்துதான் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும்" என்றான் பகத்சிங்.
இந்த வேறுபாட்டை உணருங்கள். குற்றவாளியும் போராளியும் எந்த இடத்தில் வேறுபடுகிறார்கள் என்பது பற்றி சீனத் தந்தை மாவோ நிறைய எழுதி இருக்கிறார். என அந்தப்பதில் மேலும் தெரிவித்துள்ளது.
இதைத்தான் எங்களுரில் பனைக்கு கீழே நின்று பால் குடித்தாலும் தூரதே நின்று பார்ப்பவரிற்கு கள்ளுக் குடிப்பதாகத்தான் தோன்றும். இடம் சூழல் இவ்வாறான மயக்கத்தை ஏற்படுத்திவிடுகின்றது. அதற்காகத்தான் கண்ணால் பார்ப்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் என்று எமது முன்னோர்கள் சொல்லிவைத்துள்ளார்கள்.
அந்தவகையில் முன்னால் பாரதப் பிரதமர் இராசீவ் காந்தி அவர்களது ஒற்றை மரணத்தை முன்னிறுத்தி தமிழினத்தின் விடுதலைக்கு தாய்த்தமிழகம் முழுமையான ஒத்துழைப்பினை நல்காது விதண்டாவாதம் செய்து இன்றைய பேரழிவு நிலையில் கொண்டு வந்து விட்டதனை நாம் கண் கூடாகக் கண்டுணர்ந்துள்ளோம்.
முள்ளிவாய்க்கால் பேரழிவானது இந்த தூரநின்று தத்தமது பார்வையில் நின்று கொண்டு வீண் விதண்டாவாதம் செய்துவந்த தமிழகத்து அறிவார்ந்த சமூகம் கிட்ட நெருங்கி வந்து உண்மையினை உணர்ந்து கொள்ள வைத்துள்ளது. தாய்த் தமிழகத்தை விழிப்பயைடச் செய்ய இவ்வளவு பெரிய அழிவை சந்திக்க வேண்டியதாகிவிட்டதே...! அதுதான் பெரும் வருத்தமாகும்.
முள்ளிவாய்கால் பேரழிவானது தமிழகத்தை மட்டுமல்ல உலக நாடுகளையே சற்று அசைத்துப் போட்டுள்ளது என்றால் மிகையில்லை.
ஈழதேசம் ஆசிரியர் குழு.
:வணக்கம்: ஈழதேசம்
jeylakesengg- இளையநிலா
- பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010
Re: பிரபாகரன் பயங்கரவாதிதானே? கழுகாரின் பதில். ஈழதேசத்தின் பார்வையில்.
அருமை நண்பா .... அரசுகள் தங்கள் கடமை ஐ ஒழுங்கா செய்யும் வரை .... பகத் சிங் ,அண்ணை போன்றவர்கள் தோன்றி கொண்டே இருப்பார்கள்... முற்றாக முள்ளிவாய்க்காலில் அழிதூ விட்டோம் என்று தப்பு கணக்கு போட்டால் அது அறியாமை !
Guest- Guest
Re: பிரபாகரன் பயங்கரவாதிதானே? கழுகாரின் பதில். ஈழதேசத்தின் பார்வையில்.
மதன் wrote: அருமை நண்பா .... அரசுகள் தங்கள் கடமை ஐ ஒழுங்கா செய்யும் வரை .... பகத் சிங் ,அண்ணை போன்றவர்கள் தோன்றி கொண்டே இருப்பார்கள்... முற்றாக முள்ளிவாய்க்காலில் அழிதூ விட்டோம் என்று தப்பு கணக்கு போட்டால் அது அறியாமை !
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: பிரபாகரன் பயங்கரவாதிதானே? கழுகாரின் பதில். ஈழதேசத்தின் பார்வையில்.
வீழ்வது நாமாயினும் வாழ்வது தமிழீழமாகட்டும்என்றவர் நம் thalivar
Re: பிரபாகரன் பயங்கரவாதிதானே? கழுகாரின் பதில். ஈழதேசத்தின் பார்வையில்.
bbat wrote:வீழ்வது நாமாயினும் வாழ்வது தமிழீழமாகட்டும்என்றவர் நம் thalivar
Guest- Guest
Re: பிரபாகரன் பயங்கரவாதிதானே? கழுகாரின் பதில். ஈழதேசத்தின் பார்வையில்.
இலங்கை இராணுவ ரவுடிகளின் கோர, பிசாசு முகத்தை கிழிக்கும் வகையில் அமைந்துள்ள போர்க்குற்ற திரைப்படம்! ஜூன் 14 ல் வெளியிடுவோம் - சனல் 4 அறிவிப்பு
[ செவ்வாய்க்கிழமை, 31 மே 2011, 10:07.28 PM GMT ]
இலங்கைப் போர்க்குற்ற ஆவணங்களை அவ்வப்போது வெளியிட்டு வரும் சனல் 4 தொலைக்காட்சி ஊடகம் அவ் ஆவணத் தொகுப்பினை திரைப்படமாக்கி எதிர்வரும் 14ம் திகதி உத்தியோகபூர்வமாக வெளியிடவுள்ளது.
ஒரு மணித்தியாலத்தை அடக்கிய இப்போர்க்குற்ற ஆவணத்தொகுப்பு திரைப்படத்தினை எதிர்வரும் 3ம் திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு சமர்ப்பிக்கவுள்ளது.
சனல் 4 ஊடகம் இத் திரைப்படத்தினை எதிர்வரும் 14ம் திகதி உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் என அறிவித்துள்ளது.
இதுவரையில் வெளியிடப்படாத போர்க்குற்ற ஆவணங்களும் இத்திரைப்படத்தில் அடங்குவதாகவும், போரினால் பாதிப்புற்றோரின் வாக்குமூலங்கள், நேரடிச்சாட்சியங்கள் ஆகியனவும் இத்திரைப்படத்தில் அடங்குவதாகவும் தெரிவித்துள்ளது.
தமிழ் இளைஞர்களை இலங்கை இராணுவ ரவுடிகள், நிர்வாணப்படுத்தி, கைகளை பின்னால் கட்டி உட்கார வைத்தும், நிற்க வைத்தும் பின்னாலிருந்து தலையில் சுட்டு கோரமாக கொல்லும் நெஞ்சைப் பதற வைக்கும் காட்சிகளையும் சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் தான் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இதுபோன்ற மேலும் பல கொடூரமான, கோரமான காட்சிகள் அடங்கிய முழுமையான வீடியோத் தொகுப்பை வெளியிடப் போவதாக சனல் 4 அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இலங்கை இராணுவ ரவுடிகளின் கோர, பிசாசு முகத்தை கிழிக்கும் வகையில் இந்தக் காட்சிகள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் காட்சித் தொகுப்பை ஐ.நா. மனித உரிமை ஆணையத்திடம் சமர்ப்பிக்கவுள்ளது சனல் 4.
உலகம் இதுவரை கண்டிராத மிக மோசமான போர்க்குற்றக் காட்சிகள் இதில் இடம் பெற்றிருப்பதாகவும், போரினால் பாதிக்கப்பட்டோர் அளித்த வாக்குமூலங்கள், சாட்சியங்கள், போர்க்குற்ற ஆவணங்கள் உள்ளிட்டவை இதில் இணைக்கப்பட்டிருப்பதாகவும் சனல் 4 கூறியுள்ளது.
இதனைத் தொடர்ந்து சனல்-4 தொலைக்காட்சி இலங்கையின் போர்க்குற்ற ஆவணங்களை தொகுத்து சினிமாப் படமாக தயாரித்துள்ளது. இது வருகிற 3 ம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
போர்க்குற்ற ஆவணங்கள் அடங்கிய இந்த சினிமா படம் வருகிற 14 ம் திகதி வெளியிடப்படுகிறது. இந்த தகவலை சனல்-4 தொலைக்காட்சி நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த வீடியோ தொகுப்பு சுமார் ஒரு மணி நேரம் ஓடக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாம்.
இத்தனை செய்தாலும் இந்த உலகம் ஈழத் தமிழர்களுக்காக அசைந்து கொடுக்குமா என்பதுதான் இப்போது நம் முன் உள்ள மிகப் பெரிய கேள்வி.
[ செவ்வாய்க்கிழமை, 31 மே 2011, 10:07.28 PM GMT ]
இலங்கைப் போர்க்குற்ற ஆவணங்களை அவ்வப்போது வெளியிட்டு வரும் சனல் 4 தொலைக்காட்சி ஊடகம் அவ் ஆவணத் தொகுப்பினை திரைப்படமாக்கி எதிர்வரும் 14ம் திகதி உத்தியோகபூர்வமாக வெளியிடவுள்ளது.
ஒரு மணித்தியாலத்தை அடக்கிய இப்போர்க்குற்ற ஆவணத்தொகுப்பு திரைப்படத்தினை எதிர்வரும் 3ம் திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு சமர்ப்பிக்கவுள்ளது.
சனல் 4 ஊடகம் இத் திரைப்படத்தினை எதிர்வரும் 14ம் திகதி உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் என அறிவித்துள்ளது.
இதுவரையில் வெளியிடப்படாத போர்க்குற்ற ஆவணங்களும் இத்திரைப்படத்தில் அடங்குவதாகவும், போரினால் பாதிப்புற்றோரின் வாக்குமூலங்கள், நேரடிச்சாட்சியங்கள் ஆகியனவும் இத்திரைப்படத்தில் அடங்குவதாகவும் தெரிவித்துள்ளது.
தமிழ் இளைஞர்களை இலங்கை இராணுவ ரவுடிகள், நிர்வாணப்படுத்தி, கைகளை பின்னால் கட்டி உட்கார வைத்தும், நிற்க வைத்தும் பின்னாலிருந்து தலையில் சுட்டு கோரமாக கொல்லும் நெஞ்சைப் பதற வைக்கும் காட்சிகளையும் சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் தான் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இதுபோன்ற மேலும் பல கொடூரமான, கோரமான காட்சிகள் அடங்கிய முழுமையான வீடியோத் தொகுப்பை வெளியிடப் போவதாக சனல் 4 அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இலங்கை இராணுவ ரவுடிகளின் கோர, பிசாசு முகத்தை கிழிக்கும் வகையில் இந்தக் காட்சிகள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் காட்சித் தொகுப்பை ஐ.நா. மனித உரிமை ஆணையத்திடம் சமர்ப்பிக்கவுள்ளது சனல் 4.
உலகம் இதுவரை கண்டிராத மிக மோசமான போர்க்குற்றக் காட்சிகள் இதில் இடம் பெற்றிருப்பதாகவும், போரினால் பாதிக்கப்பட்டோர் அளித்த வாக்குமூலங்கள், சாட்சியங்கள், போர்க்குற்ற ஆவணங்கள் உள்ளிட்டவை இதில் இணைக்கப்பட்டிருப்பதாகவும் சனல் 4 கூறியுள்ளது.
இதனைத் தொடர்ந்து சனல்-4 தொலைக்காட்சி இலங்கையின் போர்க்குற்ற ஆவணங்களை தொகுத்து சினிமாப் படமாக தயாரித்துள்ளது. இது வருகிற 3 ம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
போர்க்குற்ற ஆவணங்கள் அடங்கிய இந்த சினிமா படம் வருகிற 14 ம் திகதி வெளியிடப்படுகிறது. இந்த தகவலை சனல்-4 தொலைக்காட்சி நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த வீடியோ தொகுப்பு சுமார் ஒரு மணி நேரம் ஓடக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாம்.
இத்தனை செய்தாலும் இந்த உலகம் ஈழத் தமிழர்களுக்காக அசைந்து கொடுக்குமா என்பதுதான் இப்போது நம் முன் உள்ள மிகப் பெரிய கேள்வி.
Re: பிரபாகரன் பயங்கரவாதிதானே? கழுகாரின் பதில். ஈழதேசத்தின் பார்வையில்.
உலகம் இன்னமும் போர்க்குற்ற மிழைத்ததற்கு மகிந்தவை தண்டிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் உண்டேயொழிய. தமிழருக்கு நல்ல, என்றும் நிம்மதியான வாழ்வொன்றை வழங்கவேண்டுமென்ற
நோக்கம் இன்னமும் பெரிதாக எழுந்துவிடவில்லை.
இலங்கையை பிரிக்க கூடாது என்ற கொள்கையிலிருந்து சற்றும் இறங்கிவந்ததாய் காணோம். ஈழம் பிரிக்காதவரை. ஈழதமிழனுக்கு நிம்மதிவாழ்வு வரப்போவதில்லை
நோக்கம் இன்னமும் பெரிதாக எழுந்துவிடவில்லை.
இலங்கையை பிரிக்க கூடாது என்ற கொள்கையிலிருந்து சற்றும் இறங்கிவந்ததாய் காணோம். ஈழம் பிரிக்காதவரை. ஈழதமிழனுக்கு நிம்மதிவாழ்வு வரப்போவதில்லை
Re: பிரபாகரன் பயங்கரவாதிதானே? கழுகாரின் பதில். ஈழதேசத்தின் பார்வையில்.
பாராளுமன்றத்தில் குண்டு வீசிய பகத்சிங் மகான் ஆகிவிட்டார்.
அதே பாராளுமன்ற கட்டிடத்தில் குண்டு வீசிய அப்சல் குரு தீவிரவாதியாகிவிட்டார்.
இரண்டு நிகழ்வுக்கும் வித்தியாசம் இருக்கிறது.
அதே பாராளுமன்ற கட்டிடத்தில் குண்டு வீசிய அப்சல் குரு தீவிரவாதியாகிவிட்டார்.
இரண்டு நிகழ்வுக்கும் வித்தியாசம் இருக்கிறது.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Similar topics
» அம்பலமாகும் தி.மு.க. உள் கதைகள்! கழுகாரின் பார்வையில்!
» ஏற்காட்டில் 'தம்பி பிரபாகரன்' உணவகம்- பிரபாகரன் மீது அன்பு குறையாத தமிழர்
» கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்
» இரும்பு வேலிக்குப் பதில் ரோஜா செடி: போலீஸார் நடவடிக்கைக்கு விவசாயிகளின் நல்லெண்ண பதில்
» உன் ஒரு பார்வையில்
» ஏற்காட்டில் 'தம்பி பிரபாகரன்' உணவகம்- பிரபாகரன் மீது அன்பு குறையாத தமிழர்
» கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்
» இரும்பு வேலிக்குப் பதில் ரோஜா செடி: போலீஸார் நடவடிக்கைக்கு விவசாயிகளின் நல்லெண்ண பதில்
» உன் ஒரு பார்வையில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|