ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொபைல் துணுக்குகள்

Go down

மொபைல் துணுக்குகள்  Empty மொபைல் துணுக்குகள்

Post by ந.கார்த்தி Tue May 31, 2011 2:07 pm

எச்.டி.சி.யின் ஜி.பி.எஸ். போன்

விண்டோஸ் மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குப் பெயர் பெற்ற எச்.டி.சி.
மொபைல் போன்கள் வரிசையில் அண்மையில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது
எச்.டி.சி. டி.ஒய்.டி.என். போன். இதில் போன் பயன்படுத்து பவரை வழி நடத்த
ஜி.பி.எஸ். சிஸ்டம் இணைக்கப் பட்டுள்ளது. 2.8 அங்குல வண்ணத்திரையுடன்
டைப்பிங் கீ போர்டும் இணைந்து இது வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்த கோணத்திலும்
இந்த போனின் திரையைத் திருப்பி வைத்துக் கொள்ள முடியும். இதனால் இமெயில்
செய்திகளை வசதியாக அமைக்கவும் படிக்கவும் முடியும். அது மட்டுமின்றி இந்த
வசதி கேம்ஸ் விளையாடுபவர்களுக்கும் உதவிடுகிறது.

இந்த போன் இன்டர்நெட் இணைப்பிலும் சிறப்பாகச் செயல்படுகிறது. நான்கு பேண்ட்
நெட்வொர்க் செயல்பாடு இருப்பதால் எந்த நாட்டின் போனுடன் தொடர்பு கொண்டு
எளிதாகச் செயல்பட முடிகிறது. 3.5 ஜி தொழில் நுட்பம் மற்றும் ஹை–பி
நெட்வொர்க் தொழில் நுட்பம் ஆகிய இரண்டும் இன்டர்நெட் தொடர்பை வேகமாகத்
தருகின்றன.

விண்டோஸ் மொபைல் சிஸ்டம் இருப்பதால் ஆபீஸ் தொகுப்பின் அனைத்து வசதிகளும்
இதில் தரப்பட்டுள்ளன. வேர்ட், எக்ஸெல், பவர்பாய்ண்ட், பி.டி.எப். வியூவர்
என அனைத்து பிசினஸ் அப்ளிகேஷன்களும் எளிதாக இயக்கக் கிடைக்கின்றன. இதில்
பிசினஸ் கார்ட் ஸ்கேனரும் தரப்பட்டுள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ.
33,000.
3ஜி சோதனை இயக்கம்: பார்தி ஏர்டெல் சாதனை

உலகில் பல நாடுகளில் 3ஜி இயக்கத்தில் மொபைல் போன் பயன்பாடு இயங்கிக்
கொண்டிருக்கும் நிலையில் இந்தியாவில் இந்த வசதி இதோ அதோ என்று இழுத்துக்
கொண்டு போய்க் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பார்தி ஏர்டெல் நிறுவனம் 3ஜி
இயக்கத்தை சோதனை முறையில் அனைத்து நிறுவன மொபைல் போன் வழியாக வெற்றிகரமாக
இயக்கியதாக அறிவித்துள்ளது. 3ஜி இயக்கத்திற்கான ஸ்பெக்ட்ரம் என்னும்
அலைவரிசை ஒதுக்கீடு விரைவில் ஏல முறையில் நடைபெறும் என அரசின் தொலை தொடர்பு
துறை அறிவித்துள்ளது. எனவே இதனைப் பெற பல நிறுவனங்கள் தங்களைத் தயார்
படுத்திக்கொள்ளும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன. அதில் பார்தி ஏர்டெல்
முந்திக் கொண்டுள்ளது.

மொபைல் போனில் இணைய இணைப்பு மற்றும் தகவல் இறக்கம் மிக வேகமாக நடைபெற 3ஜி
உதவும். வயர்லெஸ் இணைய இணைப்பும் மிக திறன் கொண்டுள்ளதாக இருக்கும்.
ஏற்கனவே செசைல்ஸில் இந்த இணைப்பை பார்தி ஏர்டெல் வழங்கி வருவதால்
இந்தியாவில் இதனை எளிதாக இந்நிறுவனம் மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம்.
25 ஆயிரம் கிராமங்களுக்கு பிராட்பேண்ட்

பிஎஸ்.என்.எல். நிறுவனம் மேலும் 25 ஆயிரம் கிராமங்களுக்கு பிராட்பேண்ட்
இன்டர்நெட் இணைப்பைத் தர நோக்கியா சீமென்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம்
மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே இது போன்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் நோக்கியா
சீமென்ஸ் 7 ஆயிரம் கிராமங்களுக்கு பிராட்பேண்ட் இணைப்பைத் தந்தது. அத்துடன்
20 மண்டலங்களில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் நகர இணைப்புகளையும் இதே
நிறுவனம் வழங்கி வருகிறது. இந்தியாவில் ஏற்கனவே 34 லட்சம் பிராட்பேண்ட்
இணைப்புகள் இயங்கி வருகின்றன. இவற்றில் ஏறத்தாழ 17 லட்சம் இணைப்புகளை
பி.எஸ்.என்.எல். வழங்கி வருகிறது. 25 ஆயிரம் கிராமங்களுக்கு இணைப்பினை
வழங்குவதில் பி.எஸ்.என்.எல். முழுமை யடையும் பட்சத்தில் கிராமங்களை
பிராட்பேண்ட் இணைப்பு மூலம் இணைப்பதில் பி.எஸ்.என்.எல். நிறுவனமே முதலிடம்
பெறும். நோக்கியா நிறுவனத்தின் புதிய தொழில் நுட்பம் குறைந்த செலவில் அதிக
திறன் கொண்ட இணைப்பை வழங்க உதவுவதாகவும் பி.எஸ்.என்.எல். பத்திரிக்கைக்
குறிப்பு கூறுகிறது

5.b . புளுடூத் என்ற பெயர் வந்தது எப்படி? 900 ஆண்டுகளில் ஹெரால்ட்
புளுடூத் என்ற மன்னர் டென்மார்க்கை ஆண்டு வந்தார். டென்மார்க்கையும் நார்வே
நாட்டின் ஒரு பகுதியையும் இணைத்து பின் கிறித்தவ மதத்தை தன் நாட்டில்
அறிமுகப்படுத்தினார்.
தன்னுடைய பெற்றோர் நினைவாக ஜெல்லிங் ரூன் ஸ்டோன் என்னும் நினைவுச் சின்னத்தினை உருவாக்கினார்.

(இன்றைய நார்வே நாட்டு ஸ்டாம்பில் இதன் படம் இடம் பெற்றுள்ளது) பின் 986ல்
தன் மகனுடன் ஏற்பட்ட போரில் மரணமடைந்தார். இந்த புளுடூத் தொழில்
நுட்பத்தினை நார்டிக் நாடுகளின் (டென்மார்க், ஸ்வீடன், நார்வே மற்றும்
பின்லாந்து) விஞ்ஞானிகள் தான் உருவாக்கினர். இவர்களுக்கு அந்த சரித்திர
காலத்து அரசன் மீது இருந்த பிரியத்தில் உருவாக்கிய தொழில் நுட்பத்திற்கு
புளுடூத் என்று பெயரிட்டனர். மற்றபடி இத் தொழில் நுட்பம் செயல்படும்
விதத்திற்கும் பெயருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
பேரட் டி.எப்.7700 டிஜிட்டல் போட்டோ பிரேம் வீடுகளை ஹை டெக்காக மாற்றும்
வழிகளில் தற்போது டிஜிட்டல் போட்டோ பிரேம்கள் ஒரு இடத்தைப் பிடித்துள்ளன.
அதனால் பல நிறுவனங்கள் இவற்றை இறக்குமதி செய்து விற்பனை செய்து வருகின்றன.
நம் நாட்டிலும் இவை தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. அண்மையில்
வந்துள்ள பேரட் டி.எப். 7700 தொழில் நுட்ப ரீதியில் இவ்வகையில் முதலில்
நிற்கிறது. இதில் இதற்கென ஒரு தொலைபேசி எண்ணும் சிம் கார்டும் இணைந்து
தரப்படுகிறது. இதனால் கேமரா இணைந்துள்ள மொபைல் போனில் இருந்து எந்த
இடத்தில் போட்டோ எடுத்தாலும் அதனை நேரடியாக டிஜிட்டல் போட்டோ பிரேமிற்கு
அனுப்ப முடிகிறது. இந்த வசதி இதுவரை இத்தகைய போட்டோ பிரேமில் இல்லாத
ஒன்றாகும்.

.மேலும் வழக்கம் போல மினி யு.எஸ்.பி.போர்ட் ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளது.
மினி கார்டுகளில் பதிந்து எடுத்துச் செல்லும் போட்டோக்களை இந்த பிரேமிற்கு
மாற்றிக் கொள்ளலாம். கருப்பு லெதர் பிரேமில் 7 அங்குல டி.எப்.டி. திரை
பளிச்சென்று போட்டோக்களைக் காட்டுகிறது. இதன் திரை ஒளிரும் தன்மை 720 றூ
480 பிக்ஸெல்களாகும். இதில் பேக்லைட் அட்ஜஸ்ட்மென்ட் தரப்பட்டுள்ளது.
பிரைட்னெஸ் கண்ட்ரோல் படங்களின் தன்மைக்கேற்ப இயக்க உதவுகிறது. இதனுடைய
மெமரியில் 500 படங்கள் வரை சேமிக்கலாம். இதன் அளவு 193 றூ147றூ 21 மிமீ .
எடை 580 கிராம். டிஸ்பிளே டைமன்ஷன் 130 றூ 87 மிமீ. இரண்டு பேண்ட்
செயலாக்கத்தில் ஜி.பி.ஆர்.எஸ். இணைப்பு கிடைக்கிறது. இது இந்தியாவில்
விரைவில் விற்பனைக்கு வரும். அப்போது விலை தெரியவரும்.
. மீண்டும் 6300

நோக்கியா நிறுவனம் தன்னுடைய 6300 மொபைல் போனை மீண்டும் சில கூடுதல்
வசதிகளுடன் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை 6300 ஐ எனப்
பெயரிட்டுள்ளது. இதில் வை– பி மற்றும் வி.ஓ.ஐ.பி. தொழில் நுட்பம்
இணைக்கப்பட்டுள்ளது. இது ஏறத்தாழ அண்மையில் நோக்கியா வெளியிட்ட 6301 போலத்
தோன்றினாலும் முற்றிலும் வேறுபட்ட வடிவில் உள்ளது. இதன் கிராபைட் கலர்
மற்றவற்றிலிருந்து இதனை வேறுபடுத்திக் காட்டுகிறது. முந்தைய மாடலைப் போல
இதிலும் 2 அங்குல வண்ணத்திரை உள்ளது.
நெட் இணைப்பிற்கு புளுடூத் மற்றும் ஏ2டிபி வசதி தரப்பட்டுள்ளது. மினி
யு.எஸ்.பி., ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, 2.5 எம்.எம். ஹெட் செட் சாக்கெட்
ஆகியவற் றுடன் கூடுதல் மெமரிக்கான எஸ்.டி. கார்ட் போர்ட் தரப்பட்டுள்ளது.
இதன் சிறப்பான அம்சம் இதில் இணைக்கப்பட்டுள்ள நோக்கியா மேப்ஸ் தான். ஆனால்
இதில் ஜி.பி.எஸ். சிஸ்டம் பதியப்படவில்லை. ஆனால் ஜி.பி.ஆர்.எஸ். மற்றும்
எட்ஜ் கனெக்டிவிடி இணைப்பை எளிதாக்குகிறது. விரைவில் வர்த்தக ரீதியாக வர
இருக்கும் இந்த போன் ரூ.11,000 அளவில் விலை யிடப்படலாம் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
12 கோடியே 50 லட்சம் மொபைல் தயாரித்த நோக்கியா இந்தியா

கடந்த இரண்டு ஆண்டுகள் இயக்கத்தில் நோக்கியாவின் சென்னை தொழிற்சாலை 12
கோடியே 50 லட்சம் மொபைல் போன்களைத் தயாரித்து வழங்கியுள்ளது. தொடர்ந்து
பெருகி வரும் மொபைல் பயன் பாட்டின் தேவைகளை நிறைவு செய்திட மேலும் 5,000
பேரை வேலைக்கு அமர்த்திட திட்டமிடுகிறது. தற்போது 8,000 பேர் இங்கு பணி
புரிகின்றனர். ஏற்கனவே 21கோடி டாலர் முதலீடு செய்திட்ட நோக்கியா இந்த
ஆண்டில் மேலும் 7 கோடியே 50 லட்சம் டாலர் முதலீடு செய்திட
முடிவெடுத்துள்ளது. இத்துடன் நோக்கியாவின் மொத்த முதலீடு வரும் டிசம்பரில்
28.5 கோடி டாலராக இருக்கும். உற்பத்தி செலவு மற்றும் தரத்தில் மிகச் சிறந்த
ஒரு தொழிற்சாலையாக சென்னை தொழிற்சாலை இயங்குவதாக நோக்கியா அறிவித்துள்ளது.
நோக்கியாவிற்கு உலகெங்கும் 9 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
TMT


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


மொபைல் துணுக்குகள்  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum