Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladiesby VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியர்களிடம் எவ்வளவு கறுப்பு பணம் உள்ளது?-மத்திய அரசு ஆய்வு
5 posters
Page 1 of 1
இந்தியர்களிடம் எவ்வளவு கறுப்பு பணம் உள்ளது?-மத்திய அரசு ஆய்வு
புதுடெல்லி, மே.30-
இந்தியாவுக்கு உள்ளேயும், வெளிநாடுகளிலும் முறைகேடாக பதுக்கி வைக்கப்பட்டுள்ள மொத்த கறுப்பு பணத்தின் அளவை மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது. இன்னும் 16 மாதங்களுக்குள் மொத்த கறுப்பு பணத்தையும் வருமான வரி வளையத்துக்குள் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் கோடிக்கணக்கில் குவித்து வைத்துள்ள கறுப்பு பணம் குறித்த விவகாரம் சூடுபிடித்துள்ளது. இது தொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தீவிரமாக விசாரித்து வருகிறது. கறுப்பு பண விவகாரத்தில் போதை மருந்து கடத்தல் மற்றும் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என சுப்ரீம் கோர்ட்டு சந்தேகம் எழுப்பியது.
மேலும், ஊழல் மூலமாக கறுப்பு பணம் குவிக்கப்படுவதால் ஊழல்வாதிகளை தண்டிக்கும் `லோக்பால் சட்ட மசோதா'வை நிறைவேற்றும் பணியை முடுக்கி விடுமாறு காந்தியவாதி அன்னா ஹசாரே வலியுறுத்தி வருகிறார். வெளிநாடுகளில் இந்தியர்கள் குவித்து வைத்துள்ள கறுப்பு பணத்தை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க கோரி யோகா குரு பாபா ராம்தேவ், வருகிற 4-ந் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கறுப்பு பணத்துக்கு எதிரான விழிப்புணர்வு அதிகரித்து வருவதால் மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது. மத்திய நேரடி வரிகள் வாரியத் தலைவர் சுதிர் சந்திரா தலைமையில் 9 பேர் கொண்ட உயர்மட்ட கமிட்டியை நேற்று முன்தினம் மத்திய அரசு அமைத்தது. வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கறுப்பு பணம் பற்றிய அறிக்கையை 6 மாதங்களுக்குள் அந்த கமிட்டி அளிக்கும். கறுப்பு பணத்தை `தேசிய சொத்து' என அறிவிக்க வகை செய்யும் சட்ட வரையறையை கொண்டு வரும் யோசனையும் முன் வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து விளக்குவதற்காக யோகா குரு ராம்தேவை மத்திய நேரடி வரிகள் வாரிய அதிகாரிகள் கடந்த வாரம் சந்தித்தனர். இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில், மேலும் ஒரு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி, இந்தியாவுக்கு உள்ளேயும், இந்தியாவுக்கு வெளியேயும் இந்தியர்கள் குவித்து வைத்துள்ள மொத்த கறுப்பு பணம் எவ்வளவு? என்பது குறித்து மத்திய நிதி அமைச்சகம் ஆய்வு செய்கிறது.
இந்த ஆய்வை, மத்திய அரசின் மூன்று உயர்மட்ட அமைப்புகள் மேற்கொண்டுள்ளதாக நிதி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த மார்ச் மாதம் தொடங்கப்பட்ட இந்த ஆய்வை, `அப்ளைடு பொருளாதார ஆய்வு தேசிய கவுன்சில்', `பொது நிதி மற்றும் கொள்கைக்கான தேசிய நிறுவனம்', `நிதி மேலாண்மை தேசிய நிறுவனம்' ஆகிய 3 நிறுவனங்களும் மேற்கொண்டு வருகின்றன. இன்னும் 16 மாதங்களுக்குள் இந்த ஆய்வை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே, கடந்த 1985-ம் ஆண்டிலும் இதுபோல கறுப்பு பணத்தின் அளவு குறித்து `பொது நிதி மற்றும் கொள்கைக்கான தேசிய நிறுவனம்' ஆய்வு மேற்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலவரப்படி, ரூ.23 லட்சம் கோடி முதல் ரூ.70 லட்சம் கோடி வரை இந்தியர்களின் கறுப்பு பணம் இருப்பதாக நிதி அமைச்சகம் கருதுகிறது. கணக்கில் காட்டப்படாமல் உள்ள இத்தகைய பணம் மற்றும் சொத்துகளை கண்டறிந்து அவற்றை வருமான வரி வளையத்துக்குள் கொண்டு வரும் முயற்சியை நிதி அமைச்சகம் தொடங்கியுள்ளது.
இது தவிர, இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தத்தில் திருத்தம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளும் நடைபெறுகின்றன. இதற்கிடையே, பெரிய தொழில் நிறுவனங்களைப் போல ஒவ்வொரு அரசியல் கட்சியும் ஆண்டுதோறும் வரவு செலவு கணக்குகளை சமர்ப்பிக்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையத்துக்கு இந்திய தணிக்கை கணக்கு நிறுவனம் யோசனை தெரிவித்துள்ளது.
இது தொடர்பான பரிந்துரைகள் அடங்கிய இறுதி அறிக்கை கடந்த 27-ந் தேதி அன்று சமர்ப்பிக்கப்பட்டது. அந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தினால் ஒவ்வொரு அரசியல் கட்சியும் பெறும் நிதி குறித்த தகவல்களை ஆண்டு வரவு-செலவு தணிக்கை அறிக்கை மூலமாக அறிந்து கொள்ளலாம். எனவே, இந்த பரிந்துரைகளை அமல்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
அது குறித்து விளக்கம் கேட்பதற்காக, பதிவு பெற்ற அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அமலாக்கப் பிரிவு, வருமான வரித்துறை போன்ற நிதி விவகாரம் தொடர்பான மத்திய அரசு அமைப்புகள் போன்றவற்றுக்கு தேர்தல் ஆணையம் விரைவில் கடிதம் அனுப்புகிறது. இந்த சூழ்நிலையில், கறுப்பு பணம் குறித்த வழக்கை விசாரித்து வரும் சுப்ரீம் கோர்ட்டு பெஞ்சில் இடம் பெற்றுள்ள நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி சுதர்சன் ரெட்டி வருகிற ஜுலை 7-ந் தேதி ஓய்வு பெறுகிறார்.
ஏற்கனவே, `கறுப்பு பணம் குறித்து விசாரிக்க சி.பி.ஐ., வருமான வரித்துறை, அமலாக்கப் பிரிவு, தேசிய புலனாய்வு அமைப்பு போன்ற பல்வேறு விசாரணை அமைப்புகளின் உயர் அதிகாரிகளை கொண்ட சிறப்பு விசாரணைக் குழு அமைக்க வேண்டும்' என நீதிபதிகள் சுதர்சன் ரெட்டி, நிஜ்ஜார் ஆகியோர் தெரிவித்தனர்.
அதற்கு, மத்திய அரசு தயக்கம் காட்டியது. சிறப்பு விசாரணைக் குழுவுக்கு பதிலாக மத்திய வருவாய் செயலாளர் தலைமையில் ஒரு கமிட்டியை அமைத்தது. அதை சுப்ரீம் கோர்ட்டு ஏற்கவில்லை. இந்த நிலைமையில், நீதிபதி சுதர்சன் ரெட்டி ஓய்வு பெறுகிறார். கோடை விடுமுறைக்கு பிறகு ஜுலை 4-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு திறக்கப்படும். எனவே, ஜுலை 7-ந் தேதிக்கு பின்னர் புதிய நீதிபதியை கொண்டு அமைக்கப்படும் சுப்ரீம் கோர்ட்டு புதிய பெஞ்சு, கறுப்பு பண வழக்கை விசாரிக்கும். அப்போது, மத்திய அரசின் புதிய நடவடிக்கைகள் குறித்து சுப்ரீம் கோர்ட்டு ஆய்வு செய்யும்.
மாலை மலர்
இந்தியாவுக்கு உள்ளேயும், வெளிநாடுகளிலும் முறைகேடாக பதுக்கி வைக்கப்பட்டுள்ள மொத்த கறுப்பு பணத்தின் அளவை மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது. இன்னும் 16 மாதங்களுக்குள் மொத்த கறுப்பு பணத்தையும் வருமான வரி வளையத்துக்குள் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் கோடிக்கணக்கில் குவித்து வைத்துள்ள கறுப்பு பணம் குறித்த விவகாரம் சூடுபிடித்துள்ளது. இது தொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தீவிரமாக விசாரித்து வருகிறது. கறுப்பு பண விவகாரத்தில் போதை மருந்து கடத்தல் மற்றும் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என சுப்ரீம் கோர்ட்டு சந்தேகம் எழுப்பியது.
மேலும், ஊழல் மூலமாக கறுப்பு பணம் குவிக்கப்படுவதால் ஊழல்வாதிகளை தண்டிக்கும் `லோக்பால் சட்ட மசோதா'வை நிறைவேற்றும் பணியை முடுக்கி விடுமாறு காந்தியவாதி அன்னா ஹசாரே வலியுறுத்தி வருகிறார். வெளிநாடுகளில் இந்தியர்கள் குவித்து வைத்துள்ள கறுப்பு பணத்தை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க கோரி யோகா குரு பாபா ராம்தேவ், வருகிற 4-ந் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கறுப்பு பணத்துக்கு எதிரான விழிப்புணர்வு அதிகரித்து வருவதால் மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது. மத்திய நேரடி வரிகள் வாரியத் தலைவர் சுதிர் சந்திரா தலைமையில் 9 பேர் கொண்ட உயர்மட்ட கமிட்டியை நேற்று முன்தினம் மத்திய அரசு அமைத்தது. வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கறுப்பு பணம் பற்றிய அறிக்கையை 6 மாதங்களுக்குள் அந்த கமிட்டி அளிக்கும். கறுப்பு பணத்தை `தேசிய சொத்து' என அறிவிக்க வகை செய்யும் சட்ட வரையறையை கொண்டு வரும் யோசனையும் முன் வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து விளக்குவதற்காக யோகா குரு ராம்தேவை மத்திய நேரடி வரிகள் வாரிய அதிகாரிகள் கடந்த வாரம் சந்தித்தனர். இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில், மேலும் ஒரு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி, இந்தியாவுக்கு உள்ளேயும், இந்தியாவுக்கு வெளியேயும் இந்தியர்கள் குவித்து வைத்துள்ள மொத்த கறுப்பு பணம் எவ்வளவு? என்பது குறித்து மத்திய நிதி அமைச்சகம் ஆய்வு செய்கிறது.
இந்த ஆய்வை, மத்திய அரசின் மூன்று உயர்மட்ட அமைப்புகள் மேற்கொண்டுள்ளதாக நிதி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த மார்ச் மாதம் தொடங்கப்பட்ட இந்த ஆய்வை, `அப்ளைடு பொருளாதார ஆய்வு தேசிய கவுன்சில்', `பொது நிதி மற்றும் கொள்கைக்கான தேசிய நிறுவனம்', `நிதி மேலாண்மை தேசிய நிறுவனம்' ஆகிய 3 நிறுவனங்களும் மேற்கொண்டு வருகின்றன. இன்னும் 16 மாதங்களுக்குள் இந்த ஆய்வை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே, கடந்த 1985-ம் ஆண்டிலும் இதுபோல கறுப்பு பணத்தின் அளவு குறித்து `பொது நிதி மற்றும் கொள்கைக்கான தேசிய நிறுவனம்' ஆய்வு மேற்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலவரப்படி, ரூ.23 லட்சம் கோடி முதல் ரூ.70 லட்சம் கோடி வரை இந்தியர்களின் கறுப்பு பணம் இருப்பதாக நிதி அமைச்சகம் கருதுகிறது. கணக்கில் காட்டப்படாமல் உள்ள இத்தகைய பணம் மற்றும் சொத்துகளை கண்டறிந்து அவற்றை வருமான வரி வளையத்துக்குள் கொண்டு வரும் முயற்சியை நிதி அமைச்சகம் தொடங்கியுள்ளது.
இது தவிர, இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தத்தில் திருத்தம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளும் நடைபெறுகின்றன. இதற்கிடையே, பெரிய தொழில் நிறுவனங்களைப் போல ஒவ்வொரு அரசியல் கட்சியும் ஆண்டுதோறும் வரவு செலவு கணக்குகளை சமர்ப்பிக்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையத்துக்கு இந்திய தணிக்கை கணக்கு நிறுவனம் யோசனை தெரிவித்துள்ளது.
இது தொடர்பான பரிந்துரைகள் அடங்கிய இறுதி அறிக்கை கடந்த 27-ந் தேதி அன்று சமர்ப்பிக்கப்பட்டது. அந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தினால் ஒவ்வொரு அரசியல் கட்சியும் பெறும் நிதி குறித்த தகவல்களை ஆண்டு வரவு-செலவு தணிக்கை அறிக்கை மூலமாக அறிந்து கொள்ளலாம். எனவே, இந்த பரிந்துரைகளை அமல்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
அது குறித்து விளக்கம் கேட்பதற்காக, பதிவு பெற்ற அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அமலாக்கப் பிரிவு, வருமான வரித்துறை போன்ற நிதி விவகாரம் தொடர்பான மத்திய அரசு அமைப்புகள் போன்றவற்றுக்கு தேர்தல் ஆணையம் விரைவில் கடிதம் அனுப்புகிறது. இந்த சூழ்நிலையில், கறுப்பு பணம் குறித்த வழக்கை விசாரித்து வரும் சுப்ரீம் கோர்ட்டு பெஞ்சில் இடம் பெற்றுள்ள நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி சுதர்சன் ரெட்டி வருகிற ஜுலை 7-ந் தேதி ஓய்வு பெறுகிறார்.
ஏற்கனவே, `கறுப்பு பணம் குறித்து விசாரிக்க சி.பி.ஐ., வருமான வரித்துறை, அமலாக்கப் பிரிவு, தேசிய புலனாய்வு அமைப்பு போன்ற பல்வேறு விசாரணை அமைப்புகளின் உயர் அதிகாரிகளை கொண்ட சிறப்பு விசாரணைக் குழு அமைக்க வேண்டும்' என நீதிபதிகள் சுதர்சன் ரெட்டி, நிஜ்ஜார் ஆகியோர் தெரிவித்தனர்.
அதற்கு, மத்திய அரசு தயக்கம் காட்டியது. சிறப்பு விசாரணைக் குழுவுக்கு பதிலாக மத்திய வருவாய் செயலாளர் தலைமையில் ஒரு கமிட்டியை அமைத்தது. அதை சுப்ரீம் கோர்ட்டு ஏற்கவில்லை. இந்த நிலைமையில், நீதிபதி சுதர்சன் ரெட்டி ஓய்வு பெறுகிறார். கோடை விடுமுறைக்கு பிறகு ஜுலை 4-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு திறக்கப்படும். எனவே, ஜுலை 7-ந் தேதிக்கு பின்னர் புதிய நீதிபதியை கொண்டு அமைக்கப்படும் சுப்ரீம் கோர்ட்டு புதிய பெஞ்சு, கறுப்பு பண வழக்கை விசாரிக்கும். அப்போது, மத்திய அரசின் புதிய நடவடிக்கைகள் குறித்து சுப்ரீம் கோர்ட்டு ஆய்வு செய்யும்.
மாலை மலர்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: இந்தியர்களிடம் எவ்வளவு கறுப்பு பணம் உள்ளது?-மத்திய அரசு ஆய்வு
இப்பவாவது ஞானம் வந்ததே..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: இந்தியர்களிடம் எவ்வளவு கறுப்பு பணம் உள்ளது?-மத்திய அரசு ஆய்வு
இனி எல்லாம் வெளியே வரும் போல
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: இந்தியர்களிடம் எவ்வளவு கறுப்பு பணம் உள்ளது?-மத்திய அரசு ஆய்வு
இதெல்லாம் வெறும் கண் துடைப்பு தான் அண்ணாகலைவேந்தன் wrote:இப்பவாவது ஞானம் வந்ததே..!
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Similar topics
» கருப்புப் பணம்-அம்பலப்படுத்துமா மத்திய அரசு?
» பொருளாதாரம் பலவீனமாக உள்ளது துணிச்சலான நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்குகிறது மாநிலங்களவையில் ப.சிதம்பரம் பேச்சு
» வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்களின் கறுப்பு பணம்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்
» கறுப்பு பணம் பதுக்கியவர்கள் பட்டியல் வெளியாகுமா? மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
» இந்தியர் கறுப்பு பணம் பற்றி சுவிஸ் வங்கி விவரம் கொடுக்கும்: சுவிட்சர்லாந்து அரசு தகவல்
» பொருளாதாரம் பலவீனமாக உள்ளது துணிச்சலான நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்குகிறது மாநிலங்களவையில் ப.சிதம்பரம் பேச்சு
» வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்களின் கறுப்பு பணம்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்
» கறுப்பு பணம் பதுக்கியவர்கள் பட்டியல் வெளியாகுமா? மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
» இந்தியர் கறுப்பு பணம் பற்றி சுவிஸ் வங்கி விவரம் கொடுக்கும்: சுவிட்சர்லாந்து அரசு தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|