Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்by Anthony raj Today at 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:47 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 4:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 4:36 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 4:29 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 4:27 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 4:23 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
புற்றுநோய்க்கு சைபர்நைஃப் தொழில்நுட்பம்
2 posters
Page 1 of 1
புற்றுநோய்க்கு சைபர்நைஃப் தொழில்நுட்பம்
ஜேம்ஸ்பாண்ட் படங்களில் கதாநாயகனை லேசர் கதிர்கொண்டு, எதிரிகள் தாக்குவதைப் பார்த்திருப்போம். நாயகன் வளைந்து, நெளிந்து எங்கு, எப்படிச் செல்கிறாரோ... அப்படியே அந்தக் கருவியும் சென்று தாக்கும். அதே தொழில்நுட்பத்தில் அறிமுகமாகி உள்ளது, சைபர்நைஃப் எனும் அதிநவீன அறுவை சிகிச்சைக் கருவி. நோயாளி மூச்சுவிடும் அசைவைக்கூட கணக்கிட்டு, புற்று நோய்க் கட்டியை தாக்கி அழிக்கும் இந்தக் கருவி.
ஒரு காலத்தில் புற்று நோய்க்கான அறுவை சிகிச்சை சிக்கலானதாகவும், பக்கவிளைவுகள் நிரம்பியதாகவும், அதிக செலவுவைப்பதாகவும் இருந்தது. ஆனால், இன்றைய நவீனத் தொழில்நுட்பத்தின் காரணமாக, சில மணி நேரங்களில் அறுவை சிகிச்சை முடிந்து நோயாளிகள் வீடு திரும்ப முடிகிறது.
அப்போலோ ஸ்பெஷாலிட்டி கேன்சர் மருத்துவமனையின் மூத்த மருத்துவர் டி.ராஜா இதுபற்றிச் சொல்கிறார். ''சில புற்றுநோய்களை மருந்து கொடுத்தே குணப்படுத்த முடியும். அறுவை சிகிச்சையில் சில வகை குணமாகும். ஒரு சில வகைப் புற்று நோய்க்கு ரேடியேஷன் சிகிச்சைதான் சிறந்தது. எந்த உறுப்பை புற்று நோய் தாக்கி உள்ளது, எந்த வகையான புற்று நோய், எவ்வளவு தூரம் தாக்கி உள்ளது என்பதைப் பொறுத்தே, சிகிச்சை முறையை முடிவு செய்வோம். மார்பகப் புற்று நோய், வாய்ப் புற்று நோய் என்றால், அறுவை சிகிச்சையே சிறந்த தீர்வு. ஆனால், ரத்தப் புற்று நோய்க்கு அறுவை சிகிச்சை செய்யாமல், கீமோதெரபி செய்ய வேண்டும். வியாதி அதிகமாகப் பரவி இருந்தால், குறிப்பிட்ட உறுப்பில் புற்று நோய் காரணமாக வலி அதிகமாக இருந்தால், கதிரியக்கம் கொடுப்பது மட்டுமே உடனடி ஆறுதல்.
ஆனால், கதிரியக்கம் கொடுக்கும்போது, சுற்றிலும் உள்ள நல்ல திசுக்களும் கதிரியக்கம் செல்லும் பாதையில் நிற்பதால் பாதிக்கப்பட்டது. அதனால் குறிப்பிட்ட உறுப்பில் உள்ள புற்றுக் கட்டிக்கு 50-60 கிரே கதிரியக்கம் கொடுக்க வேண்டும் என்றால், மொத்தமாக ஒரே பக்கத்தில் இருந்து கொடுக்காமல்... நான்கு பக்கங்களில் இருந்து, அந்த 50 கிரேவைப் பிரித்துக் கொடுத்தார்கள். இப்படி செய்வதால், சுற்றிலும் உள்ள நல்ல திசுக்களில் ரேடியேஷன் அளவு அதிக பாதிப்பை உண்டாக்காது.
புதிய தொழில்நுட்பத்தின்படி, ஸ்கேன் மற்றும் கம்ப்யூட்டரை இணைத்து, புற்றுக்கட்டியின் முப்பரிமாணத்தைத் துல்லியமாக காண முடிகிறது. நான்கு பக்கம் இருந்து கதிரியக்கம் கொடுத்ததைவிட, தற்போது மொத்த டோஸையும் பல பங்குகளாகப் பிரித்து பல கோணங்களில் இருந்தும் புற்றுக் கட்டி அழிக்கப்படுகிறது. இந்த புதிய சிகிச்சை முறையை ஸ்டீரியோடாக்டிஸ் என்பார்கள். சமீப காலங்களில் மிக வேகமாக வளர்ச்சி அடையும் இந்தத் துறையில் அடுத்த கட்டமாக ஐ.எம்.ஆர்.டி. மற்றும் ஐ.ஜி.ஆர்.டி. தொழில்நுட்பங்கள் வந்துள்ளன. மேலும் ரேடியோ சர்ஜரி என்ற தொழில்நுட்பமும் புழக்கத்தில் வந்துவிட்டது.
பொதுவாக கத்திவைத்து, அறுத்து செய்வதைத்தான் அறுவை சிகிச்சை என்போம். கத்தி இல்லாமல் உயர் ஆற்றல் பீம் ரேடியேஷனைக்கொண்டு புற்று நோய்க் கட்டியைப் பொசுக்கும் நுட்பத்தை இந்த அறுவை சிகிச்சையில் கொண்டுவந்தனர்.
இந்த அனைத்து சிகிச்சைக்கும் உச்சகட்ட வளர்ச்சியாக வந்து இருப்பது, சைபர்நைஃப். இது அதிக எண்ணிக்கையிலான ரேடியேஷன் பீம்களை பல்வேறு கோணங்களில் இருந்தும் புற்றுக் கட்டி மீது செலுத்தக்கூடியது. இதனுடன் பொருத்தப்பட்டுள்ள எக்ஸ்ரே கேமரா, நோயாளிகளைத் துல்லியமாகக் கண்காணிக்கும். சுவாசித்தல், அசைதல்போன்ற சின்னஞ்சிறு அசைவுகளையும் பதிவு செய்து, ரோபோ கருவிக்கு அனுப்பிவைக்கும். உடனே ரோபோ தன்னை அதற்கு ஏற்றதுபோன்று சரிப்படுத்திக்கொண்டு, மிகத் துல்லியமாகப் பல்வேறு கோணங்களில் இருந்தும் புற்றுக் கட்டி மீது கதிரியக்கத்தைச் செலுத்தும். தாக்க வேண்டிய பகுதி மில்லி மீட்டரைவிடக் குறைவாக இருந்தாலும், இந்தக் கருவியால் துல்லியமாகச் சென்றடைய முடியும். இந்த சிகிச்சை மூலம் வலி இல்லாத, ரத்த இழப்பு இல்லாத, தழும்பு இல்லாத அறுவை சிகிச்சை புற்று நோயாளிகளுக்குக் கிடைக்கிறது.
இந்த சிகிச்சைக்கு, முதலில் நோயாளியை சி.டி. ஸ்கேன் செய்வோம். அதன் மூலம் புற்றுக்கட்டியின் அளவு, வடிவம், இடம்போன்றவை துல்லியமாகக் கண்டறியப்பட்டு, டிஜிட்டல் தகவல்கள் சைபர்நைஃப் கருவிக்கு அளிக்கப்படும். எப்படி சிகிச்சை அளிப்பது என்று திட்டமிடப்பட்டு, அதன்படி சைபர்நைஃப் கருவி நோயாளியைச் சுற்றி பல இடங்களில் இருந்து கதிரியக்கத்தைச் செலுத்தி புற்றுக் கட்டியைத் தாக்கி அழிக்கும். புற்றுக் கட்டியின் தன்மையைப் பொறுத்து, 30 முதல் 90 நிமிடங்கள் வரை சிகிச்சை நீடிக்கும். பல கட்டங்களாக சிகிச்சை அளிக்கப்படுவதாக இருந்தால், ஐந்து நாட்கள் சிகிச்சை அளிக்கப்படும். இந்த சிகிச்சையில் மிக மிகக் குறைந்த அளவே பக்க விளைவுகள் காணப்படுகின்றன. அதுவும் சிகிச்சை முடிந்த சில வாரங்களிலேயே சரியாகிவிடும். இந்த சைபர்நைஃப் கருவி, ப்ராஸ்டேட், நுரையீரல், முதுகுத் தண்டுவடம், மூளை, கல்லீரல், கிட்னி புற்று நோய்க்கு பயன்படுத்தப்படுகிறது'' என்றார்.
புற்றுநோயை பயமின்றி எதிர்கொள்ளும் நிலை சீக்கிரமே வரும் என நம்புவோம்!
- பா.பிரவீன்குமார், படம்: ச.இரா.ஸ்ரீதர்
ஜி.வி
ஒரு காலத்தில் புற்று நோய்க்கான அறுவை சிகிச்சை சிக்கலானதாகவும், பக்கவிளைவுகள் நிரம்பியதாகவும், அதிக செலவுவைப்பதாகவும் இருந்தது. ஆனால், இன்றைய நவீனத் தொழில்நுட்பத்தின் காரணமாக, சில மணி நேரங்களில் அறுவை சிகிச்சை முடிந்து நோயாளிகள் வீடு திரும்ப முடிகிறது.
அப்போலோ ஸ்பெஷாலிட்டி கேன்சர் மருத்துவமனையின் மூத்த மருத்துவர் டி.ராஜா இதுபற்றிச் சொல்கிறார். ''சில புற்றுநோய்களை மருந்து கொடுத்தே குணப்படுத்த முடியும். அறுவை சிகிச்சையில் சில வகை குணமாகும். ஒரு சில வகைப் புற்று நோய்க்கு ரேடியேஷன் சிகிச்சைதான் சிறந்தது. எந்த உறுப்பை புற்று நோய் தாக்கி உள்ளது, எந்த வகையான புற்று நோய், எவ்வளவு தூரம் தாக்கி உள்ளது என்பதைப் பொறுத்தே, சிகிச்சை முறையை முடிவு செய்வோம். மார்பகப் புற்று நோய், வாய்ப் புற்று நோய் என்றால், அறுவை சிகிச்சையே சிறந்த தீர்வு. ஆனால், ரத்தப் புற்று நோய்க்கு அறுவை சிகிச்சை செய்யாமல், கீமோதெரபி செய்ய வேண்டும். வியாதி அதிகமாகப் பரவி இருந்தால், குறிப்பிட்ட உறுப்பில் புற்று நோய் காரணமாக வலி அதிகமாக இருந்தால், கதிரியக்கம் கொடுப்பது மட்டுமே உடனடி ஆறுதல்.
ஆனால், கதிரியக்கம் கொடுக்கும்போது, சுற்றிலும் உள்ள நல்ல திசுக்களும் கதிரியக்கம் செல்லும் பாதையில் நிற்பதால் பாதிக்கப்பட்டது. அதனால் குறிப்பிட்ட உறுப்பில் உள்ள புற்றுக் கட்டிக்கு 50-60 கிரே கதிரியக்கம் கொடுக்க வேண்டும் என்றால், மொத்தமாக ஒரே பக்கத்தில் இருந்து கொடுக்காமல்... நான்கு பக்கங்களில் இருந்து, அந்த 50 கிரேவைப் பிரித்துக் கொடுத்தார்கள். இப்படி செய்வதால், சுற்றிலும் உள்ள நல்ல திசுக்களில் ரேடியேஷன் அளவு அதிக பாதிப்பை உண்டாக்காது.
புதிய தொழில்நுட்பத்தின்படி, ஸ்கேன் மற்றும் கம்ப்யூட்டரை இணைத்து, புற்றுக்கட்டியின் முப்பரிமாணத்தைத் துல்லியமாக காண முடிகிறது. நான்கு பக்கம் இருந்து கதிரியக்கம் கொடுத்ததைவிட, தற்போது மொத்த டோஸையும் பல பங்குகளாகப் பிரித்து பல கோணங்களில் இருந்தும் புற்றுக் கட்டி அழிக்கப்படுகிறது. இந்த புதிய சிகிச்சை முறையை ஸ்டீரியோடாக்டிஸ் என்பார்கள். சமீப காலங்களில் மிக வேகமாக வளர்ச்சி அடையும் இந்தத் துறையில் அடுத்த கட்டமாக ஐ.எம்.ஆர்.டி. மற்றும் ஐ.ஜி.ஆர்.டி. தொழில்நுட்பங்கள் வந்துள்ளன. மேலும் ரேடியோ சர்ஜரி என்ற தொழில்நுட்பமும் புழக்கத்தில் வந்துவிட்டது.
பொதுவாக கத்திவைத்து, அறுத்து செய்வதைத்தான் அறுவை சிகிச்சை என்போம். கத்தி இல்லாமல் உயர் ஆற்றல் பீம் ரேடியேஷனைக்கொண்டு புற்று நோய்க் கட்டியைப் பொசுக்கும் நுட்பத்தை இந்த அறுவை சிகிச்சையில் கொண்டுவந்தனர்.
இந்த அனைத்து சிகிச்சைக்கும் உச்சகட்ட வளர்ச்சியாக வந்து இருப்பது, சைபர்நைஃப். இது அதிக எண்ணிக்கையிலான ரேடியேஷன் பீம்களை பல்வேறு கோணங்களில் இருந்தும் புற்றுக் கட்டி மீது செலுத்தக்கூடியது. இதனுடன் பொருத்தப்பட்டுள்ள எக்ஸ்ரே கேமரா, நோயாளிகளைத் துல்லியமாகக் கண்காணிக்கும். சுவாசித்தல், அசைதல்போன்ற சின்னஞ்சிறு அசைவுகளையும் பதிவு செய்து, ரோபோ கருவிக்கு அனுப்பிவைக்கும். உடனே ரோபோ தன்னை அதற்கு ஏற்றதுபோன்று சரிப்படுத்திக்கொண்டு, மிகத் துல்லியமாகப் பல்வேறு கோணங்களில் இருந்தும் புற்றுக் கட்டி மீது கதிரியக்கத்தைச் செலுத்தும். தாக்க வேண்டிய பகுதி மில்லி மீட்டரைவிடக் குறைவாக இருந்தாலும், இந்தக் கருவியால் துல்லியமாகச் சென்றடைய முடியும். இந்த சிகிச்சை மூலம் வலி இல்லாத, ரத்த இழப்பு இல்லாத, தழும்பு இல்லாத அறுவை சிகிச்சை புற்று நோயாளிகளுக்குக் கிடைக்கிறது.
இந்த சிகிச்சைக்கு, முதலில் நோயாளியை சி.டி. ஸ்கேன் செய்வோம். அதன் மூலம் புற்றுக்கட்டியின் அளவு, வடிவம், இடம்போன்றவை துல்லியமாகக் கண்டறியப்பட்டு, டிஜிட்டல் தகவல்கள் சைபர்நைஃப் கருவிக்கு அளிக்கப்படும். எப்படி சிகிச்சை அளிப்பது என்று திட்டமிடப்பட்டு, அதன்படி சைபர்நைஃப் கருவி நோயாளியைச் சுற்றி பல இடங்களில் இருந்து கதிரியக்கத்தைச் செலுத்தி புற்றுக் கட்டியைத் தாக்கி அழிக்கும். புற்றுக் கட்டியின் தன்மையைப் பொறுத்து, 30 முதல் 90 நிமிடங்கள் வரை சிகிச்சை நீடிக்கும். பல கட்டங்களாக சிகிச்சை அளிக்கப்படுவதாக இருந்தால், ஐந்து நாட்கள் சிகிச்சை அளிக்கப்படும். இந்த சிகிச்சையில் மிக மிகக் குறைந்த அளவே பக்க விளைவுகள் காணப்படுகின்றன. அதுவும் சிகிச்சை முடிந்த சில வாரங்களிலேயே சரியாகிவிடும். இந்த சைபர்நைஃப் கருவி, ப்ராஸ்டேட், நுரையீரல், முதுகுத் தண்டுவடம், மூளை, கல்லீரல், கிட்னி புற்று நோய்க்கு பயன்படுத்தப்படுகிறது'' என்றார்.
புற்றுநோயை பயமின்றி எதிர்கொள்ளும் நிலை சீக்கிரமே வரும் என நம்புவோம்!
- பா.பிரவீன்குமார், படம்: ச.இரா.ஸ்ரீதர்
ஜி.வி
Re: புற்றுநோய்க்கு சைபர்நைஃப் தொழில்நுட்பம்
மிகவும் கொடுமையான நோய் இது
இந்த நோயால் தான் நான் என் தாயை இழந்தேன்
இந்த நோயால் தான் நான் என் தாயை இழந்தேன்
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: புற்றுநோய்க்கு சைபர்நைஃப் தொழில்நுட்பம்
முரளிராஜா wrote:மிகவும் கொடுமையான நோய் இது
இந்த நோயால் தான் நான் என் தாயை இழந்தேன்
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பதிவு செய்... திட்டமிடு...தாக்கு! (புற்றுநோய்க்கு சைபர்நைஃப் தொழில்நுட்பம்)
» புற்றுநோய்க்கு வழிவகுக்கும் பாக்கு
» புற்றுநோய்க்கு புதிய மருந்து!
» கணைய புற்றுநோய்க்கு தடுப்பூசி?
» மார்பகப் புற்றுநோய்க்கு புதிய மாத்திரை
» புற்றுநோய்க்கு வழிவகுக்கும் பாக்கு
» புற்றுநோய்க்கு புதிய மருந்து!
» கணைய புற்றுநோய்க்கு தடுப்பூசி?
» மார்பகப் புற்றுநோய்க்கு புதிய மாத்திரை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|