ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

Top posting users this week
ayyasamy ram
டெல்லியிலேயே தங்கிடவா? மகளிடம் தழுதழுத்த அப்பா... Poll_c10டெல்லியிலேயே தங்கிடவா? மகளிடம் தழுதழுத்த அப்பா... Poll_m10டெல்லியிலேயே தங்கிடவா? மகளிடம் தழுதழுத்த அப்பா... Poll_c10 
heezulia
டெல்லியிலேயே தங்கிடவா? மகளிடம் தழுதழுத்த அப்பா... Poll_c10டெல்லியிலேயே தங்கிடவா? மகளிடம் தழுதழுத்த அப்பா... Poll_m10டெல்லியிலேயே தங்கிடவா? மகளிடம் தழுதழுத்த அப்பா... Poll_c10 
mohamed nizamudeen
டெல்லியிலேயே தங்கிடவா? மகளிடம் தழுதழுத்த அப்பா... Poll_c10டெல்லியிலேயே தங்கிடவா? மகளிடம் தழுதழுத்த அப்பா... Poll_m10டெல்லியிலேயே தங்கிடவா? மகளிடம் தழுதழுத்த அப்பா... Poll_c10 
VENKUSADAS
டெல்லியிலேயே தங்கிடவா? மகளிடம் தழுதழுத்த அப்பா... Poll_c10டெல்லியிலேயே தங்கிடவா? மகளிடம் தழுதழுத்த அப்பா... Poll_m10டெல்லியிலேயே தங்கிடவா? மகளிடம் தழுதழுத்த அப்பா... Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
டெல்லியிலேயே தங்கிடவா? மகளிடம் தழுதழுத்த அப்பா... Poll_c10டெல்லியிலேயே தங்கிடவா? மகளிடம் தழுதழுத்த அப்பா... Poll_m10டெல்லியிலேயே தங்கிடவா? மகளிடம் தழுதழுத்த அப்பா... Poll_c10 
heezulia
டெல்லியிலேயே தங்கிடவா? மகளிடம் தழுதழுத்த அப்பா... Poll_c10டெல்லியிலேயே தங்கிடவா? மகளிடம் தழுதழுத்த அப்பா... Poll_m10டெல்லியிலேயே தங்கிடவா? மகளிடம் தழுதழுத்த அப்பா... Poll_c10 
mohamed nizamudeen
டெல்லியிலேயே தங்கிடவா? மகளிடம் தழுதழுத்த அப்பா... Poll_c10டெல்லியிலேயே தங்கிடவா? மகளிடம் தழுதழுத்த அப்பா... Poll_m10டெல்லியிலேயே தங்கிடவா? மகளிடம் தழுதழுத்த அப்பா... Poll_c10 
VENKUSADAS
டெல்லியிலேயே தங்கிடவா? மகளிடம் தழுதழுத்த அப்பா... Poll_c10டெல்லியிலேயே தங்கிடவா? மகளிடம் தழுதழுத்த அப்பா... Poll_m10டெல்லியிலேயே தங்கிடவா? மகளிடம் தழுதழுத்த அப்பா... Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

டெல்லியிலேயே தங்கிடவா? மகளிடம் தழுதழுத்த அப்பா...

+7
கே. பாலா
பாலாஜி
ரா.ரமேஷ்குமார்
krishnaamma
உதயசுதா
ரபீக்
மஞ்சுபாஷிணி
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

டெல்லியிலேயே தங்கிடவா? மகளிடம் தழுதழுத்த அப்பா... Empty டெல்லியிலேயே தங்கிடவா? மகளிடம் தழுதழுத்த அப்பா...

Post by மஞ்சுபாஷிணி Thu May 26, 2011 11:57 am

15-க்கு 10 அடி நீள அகலம்தான் அந்த அறை. கல் படுக்கையும் ஒரு காற்றாடியும். தமிழகத்துக்கே இலவசத் தொலைக்காட்சிப் பெட்டி அளித்தவரின் மகளுக்கு சிறையில் சிறப்புச் சலுகையாக ஒரு சின்னத் தொலைக்காட்சிப் பெட்டி. படிப்பதற்கான மனநிலை இருக்குமோ இருக்காதோ... கைவசம் ஆறு புத்தகங்கள்... ஆம், திஹார் சிறையில் கனிமொழி!
தி.மு.க-வின் ராஜ்யசபா எம்.பி, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள்... சக்தி வாய்ந்த அடையாளங்கள் சட்டத்தின் முன் தோற்கடிக்கப்பட, திஹாரில் சிறை எண் 6-ல் அடைக்கப்பட்டார் கனிமொழி. அலைக்கற்றை விவகாரத்தில் கனிமொழியின் பெயர் அடிபடத் தொடங்கிய நாளில் இருந்தே, கருணாநிதியின் தூக்கம் தொலைந்துவிட்டது. கட்சியின் உயர்நிலை செயல்திட்டக் குழுவைக் கூட்டி, 'இது கனிமொழி மீதான பிரச்னை இல்லை. கட்சியின் மதிப்புக்கு பங்கம் உண்டாக்கும் பிரச்னை!’ எனச் சொல்லி தீர்வுக்கு வழி கேட்டார். ஆனால், 'காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகுவது நல்லது அல்ல!’ என கட்சிக்காரர்களே கருணாநிதியின் எண்ணத் துக்கு அணை போட்டார்கள். ''கனிமொழி என் மகள் மட்டும் அல்ல... இந்தக் கட்சிக்காக பெரிதாகத் தொண்டாற்றியவர். அவரும் அவருடைய தாயாரும் படுகிற பாட்டை என்னால் சொல்ல முடியவில்லை!'' எனக் கட்சி நிர்வாகிகள் மத்தியில் கருணாநிதியால் தழுதழுக்க மட்டுமே முடிந்தது.

டெல்லியிலேயே தங்கிடவா? மகளிடம் தழுதழுத்த அப்பா... P10
'பிரசித்தி பெற்ற வழக்கறிஞரான ராம்ஜெத்மலானியை வாதாட வைத்தால், நிச்சயம் கனிமொழிக்கு பெயில் கிடைக்கும்’ என நம்பினார் கருணாநிதி. ஆனால், ஜெத்மலானியின் வாதமும் கனிமொழி யைக் காப்பாற்றாமல் கைவிட்டதுதான் கருணாநிதியின் பெரும் துயரம்.
20-ம் தேதி காலையில் கணவர் அரவிந்தனுடன் சி.பி.ஐ. கோர்ட்டுக்கு வந்தார் கனிமொழி. டி.ஆர்.பாலு உள்ளிட்ட தி.மு.க. எம்.பி-க்களுடன் மகளிர் அணியினரும் குழுமி இருந்தார்கள். 'பெயில் மனு நிராகரிக்கப்பட்டால், அடுத்த கணமே கைதாக வேண்டி இருக்கும்!’ என்பதால், மகன் ஆதித்யனை கனிமொழி கோர்ட்டுக்கு அழைத்து வரவில்லை.
டெல்லியிலேயே தங்கிடவா? மகளிடம் தழுதழுத்த அப்பா... P10aமீடியா வெளிச்சம் படாமல் பையனை வளர்ப்பதில் ஒரு காலத்தில் உறுதியாக இருந் தவர் கனிமொழி. ஆதித்யனின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்க வந்த ஒரு முன்னாள் அமைச்சரைக் கையெடுத்துக் கும்பிட்டு, 'அவனைப் பெரிய ஆளா ஆக்கிடாதீங்க!’ என வேண்டியவர். ஆனால், கோர்ட்டுக்கு அனுதினமும் வந்து கையெழுத்திட வேண்டும் என உத்தரவு வந்தபோது, மகனோடு வர வேண்டிய இக்கட்டு கனிமொழிக்கு.
20-ம் தேதி மதியம் தீர்ப்பை வாசித்த நீதிபதி சைனி, 'குற்றச் சதியில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் வலுவாக இருக்கின்றன. சாட்சி களைக் கலைக்கும் வாய்ப்பும் அதிகம். அதனால், முன் ஜாமீன் மனு நிராகரிக்கப்படுகிறது!’ என அறிவிக்க, அரவிந்தனின் தோளில் சாய்ந்து கண் கலங்கினார் கனிமொழி.
மகளுக்கு எப்படியும் பெயில் கிடைத்துவிடும் என நம்பி இருந்த ராஜாத்தி அம்மாள் பதறி அடித்து டெல்லிக்குக் கிளம்பினார். ஆனால், அவர் வருவதற்கு முன்னரே, திஹார் ஜெயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார் கனிமொழி. சிறைக்குள் போகும் முன்னர் கனிமொழி,
அரவிந்தனைக் கூப்பிட, அவர் பதறியடித்து ஓடி வந்தார். 'நான் ஆதித்யனிடம் பேசணுமே...’எனக் குரல் உடைந்து சொல்லியிருக்கிறார் கனிமொழி. அதற்கு போலீஸ் அனுமதி மறுக்க, 'என்னைப் பிரிஞ்சு ஒருநாள்கூட இருக்க மாட்டான். ஆதி கிட்ட நான் ஸாரி கேட்டதா சொல்லிடுங்க!’என்ற படியே சிறை வளாகத்துக்குள் போனார் கனிமொழி.
சிறை விதிகளின்படி, வாட்ச், அணிகலன்கள் உள்ளிட்டவற்றைக் கழற்றிவிட வேண்டும். 'கைப்பையை நீங்கள் வைத்துக்கொள்ளலாம். ஆனால், மூக்குத்தியைக் கழற்றிக் கொடுங்கள்!’ என சிறை அதிகாரி சொல்ல, கனிமொழி எதிர்பாரா அதிர்ச்சியில் நிலை குலைந்தது அங்கேதான். 'அஞ்சாவது படிக்கிற காலத்தில் இருந்து மூக்குத்தி போடுறேன். அவசியம் கழற்றித்தான் ஆகணுமா?’ எனக் கலங்கினார் கனி. மூக்குத்தியை அவ்வளவு சுலபமாகக் கழற்ற முடியவில்லை. தி.மு.க-வின் எம்.பி-க்களான வசந்தி ஸ்டான்லியும் ஹெலன் டேவிட்சனும் போலீஸ் அனுமதி பெற்று உள்ளே போக, அங்கே கனி அமர்த்தப்பட்டு இருந்த கோலம் அவர்களைக் கதறவைத்துவிட்டதாம். சிறை சம்பிரதாயங்களை முடித்துவிட்டு, கண்ணீர் முட்ட உள்ளே போன கனிமொழி திரும்பத் திரும்பச் சொன்ன வார்த்தைகள்... 'ஆதித்யனைப் பத்திரமாப் பார்த்துக்கங்க!’
''திஹார் சிறையில் பணியாற்றும் பெண் அதிகாரி ஒருவர் இரண்டு வாரங்களுக்கு முன் சி.ஐ.டி. நகருக்கு அழைத்து வரப்பட்டார். சிறை எப்படி இருக்கும், என்னென்ன சாப்பாடு, உள்ளே யாருக்கு அதிகாரம்அதிகம் போன்ற விவரங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டார்கள். அதனால், 6-ம் எண் அறையைப் பார்த்து கனிக்கு பெரிதாக அதிர்ச்சி இல்லை. அரை மணி நேரத்துக்குப் பிறகு கூடுதலாக இரண்டு தலையணைகள் கேட்டு வாங்கிக்கொண்டார். இரவு அவர் சரியாகத் தூங்கவில்லை. பெண் அதிகாரி ஒருவர் மூலம் மகனுடைய செல்போனுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பச் சொன்னார். இந்த வருடம் ஆதித்யன் ஆறாம் வகுப்பு சேர வேண்டும். அவனைப் பற்றிய கவலைதான் கனிமொழியை வாட்டுகிறது!'' என்கிறார்கள் டெல்லி தி.மு.க. புள்ளிகள்.
டெல்லியிலேயே தங்கிடவா? மகளிடம் தழுதழுத்த அப்பா... P10bஅடுத்த நாள் பாட்டியாலா சி.பி.ஐ. கோர்ட்டுக்கு வந்தார் கனிமொழி. அதற்கு முன்னதாகவே கோர்ட்டுக்கு வந்து வராண்டாவில் காத்திருந்த ராஜாத்தி அம்மாள் மகளைக் கட்டிப் பிடித்துக் கலங்கினார். ''என்னால்தானே இத்தனையும்...'' என ராஜாத்தி சொல்லி அழ, அவரை அமைதியாக்கி, ரகசியமாக ஏதோ சொன்னார் கனிமொழி. உடனே சரத் ரெட்டியையும் ஆ.ராசாவையும் சந்தித்து ஏதோ பேசினார் ராஜாத்தி அம்மாள். அப்போது, கண்ணீர் மறைந்து... கோபமும் ஆவேசமுமாக இருந்தது அவருடைய முகம்.
ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி, ஆதித்யனை அழைத்து வர, கனிமொழிக்கு மீண்டும் கண்ணீர் கோத்துக்கொண்டது. ''அம்மா, எப்போ வெளியே வரப்போறேன்னு தெரியலை. பத்திரமா இரு. அம்மாவைப் பார்க்கணும்னு அடம் பிடிக்காதே...'' எனத் தளும்பிய கண்களுடன் கனிமொழி சொல்ல, ''நான் பத்திரமாப் பார்த்துக்கிறேன். நீங்க தைரியமா இருங்க!'' என ஆறுதல் சொன்னார் பரமேஸ்வரி.டெல்லியில் உள்ள ஆ.ராசாவின் வீட்டில் அவருடைய மனைவி பரமேஸ்வரியின் பராமரிப்பில்தான் இருக்கிறார் ஆதித்யன்.
காந்தி அழகிரி, துரை தயாநிதி ஆகியோர் கோர்ட்டில் கனிமொழியைச் சந்தித்தனர். 'அண்ணி...’ என அடக்க மாட்டாமல் கனிமொழி விசும்ப, அவரைத் தோளில் சாய்த்துத் தேற்றினார் காந்தி அழகிரி. இதற்கிடையில், ஸ்டாலின் சொல்லி அனுப்பிய ஆறுதலும் கனிமொழிக்கு ஆறுதல் வார்த்து இருக்கிறது.
23-ம் தேதி காலையிலேயே டெல்லி கிளம்பிய கருணாநிதி, திஹாருக்குப்போய் கனிமொழியைச் சந்தித்தார். அங்கே கனிமொழி சில விஷயங்களை வேதனையோடு சொல்லிக் கலங்க, 'நான் இங்கேயே தங்கிடவாம்மா?’ என தழுதழுத்திருக்கிறார் கருணாநிதி. விழிகள் துடைத்து தன்னைத்தானே டெல்லியிலேயே தங்கிடவா? மகளிடம் தழுதழுத்த அப்பா... P10cதேற்றிக்கொண்ட கனிமொழி, 'நீங்க கிளம்புங்கப்பா... நான் பார்த்துக்கிறேன். ஆதித்யனை கவனிச்சுக்கங்க!’ எனச் சொல்லி இருக்கிறார்.
எப்போதும் இல்லாத அளவுக்கு டெல்லியில் தற்போது 42 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக அனல் அடிக்கிறது. மகள் படும் துயரம் பொறுக்காமல் கருணாநிதி எத்தகைய முடிவையும் எடுப்பார் என்கிற நிலையில், டெல்லியின் அனல் இன்னும் அதிகமாகலாம்!



நன்றி விகடன்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

டெல்லியிலேயே தங்கிடவா? மகளிடம் தழுதழுத்த அப்பா... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

டெல்லியிலேயே தங்கிடவா? மகளிடம் தழுதழுத்த அப்பா... Empty Re: டெல்லியிலேயே தங்கிடவா? மகளிடம் தழுதழுத்த அப்பா...

Post by ரபீக் Thu May 26, 2011 11:59 am

திமுகாவின் சென்டிமெண்ட் காலம் போல


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

டெல்லியிலேயே தங்கிடவா? மகளிடம் தழுதழுத்த அப்பா... Empty Re: டெல்லியிலேயே தங்கிடவா? மகளிடம் தழுதழுத்த அப்பா...

Post by உதயசுதா Thu May 26, 2011 12:10 pm

மதுரைல இவங்க ஆளுக பத்திரிக்கை அலுவலகத்தை எரிச்சு மூணு பேர் சாவுக்கு காரணமான இவங்களுக்கு இப்ப தெரிஞ்சு இருக்கும் பாசம் என்பதை பற்றி.இவர்களுக்கு மட்டும் தான் பாசம் பந்தம் எல்லாம் இருக்கா?


டெல்லியிலேயே தங்கிடவா? மகளிடம் தழுதழுத்த அப்பா... Uடெல்லியிலேயே தங்கிடவா? மகளிடம் தழுதழுத்த அப்பா... Dடெல்லியிலேயே தங்கிடவா? மகளிடம் தழுதழுத்த அப்பா... Aடெல்லியிலேயே தங்கிடவா? மகளிடம் தழுதழுத்த அப்பா... Yடெல்லியிலேயே தங்கிடவா? மகளிடம் தழுதழுத்த அப்பா... Aடெல்லியிலேயே தங்கிடவா? மகளிடம் தழுதழுத்த அப்பா... Sடெல்லியிலேயே தங்கிடவா? மகளிடம் தழுதழுத்த அப்பா... Uடெல்லியிலேயே தங்கிடவா? மகளிடம் தழுதழுத்த அப்பா... Dடெல்லியிலேயே தங்கிடவா? மகளிடம் தழுதழுத்த அப்பா... Hடெல்லியிலேயே தங்கிடவா? மகளிடம் தழுதழுத்த அப்பா... A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

டெல்லியிலேயே தங்கிடவா? மகளிடம் தழுதழுத்த அப்பா... Empty Re: டெல்லியிலேயே தங்கிடவா? மகளிடம் தழுதழுத்த அப்பா...

Post by krishnaamma Thu May 26, 2011 12:48 pm

இவங்க லால் எல்லாம் வெயீல் ஜாஸ்த்தி ஆகணுமா? நாங்க இல்ல அவதி படுவது. புத்திர பாசம் யாரை விட்டது
ஆனா ஒண்ணு இன்றய நிலமை இல் தரித்திர பக்ஷம் கூலர் ஆவது வேண்டும். அவ பாவம் தான், ஃபேன் ஆவது இருக்கோ இல்லாயோ. ஏ‌சி லயே இருந்தவ சோகம் அது தான் நம்ம எக்ஸ் முதல்வர் குரல் உடைந்து விட்டது .


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

டெல்லியிலேயே தங்கிடவா? மகளிடம் தழுதழுத்த அப்பா... Empty Re: டெல்லியிலேயே தங்கிடவா? மகளிடம் தழுதழுத்த அப்பா...

Post by ரா.ரமேஷ்குமார் Thu May 26, 2011 12:56 pm

ராசா இருக்கும் இடம் தானே அந்த ரோஜாக்கு சொர்க்கம் புன்னகை


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

டெல்லியிலேயே தங்கிடவா? மகளிடம் தழுதழுத்த அப்பா... Empty Re: டெல்லியிலேயே தங்கிடவா? மகளிடம் தழுதழுத்த அப்பா...

Post by பாலாஜி Thu May 26, 2011 1:16 pm

படிக்கும் போது கஷ்டமாதான் இருக்கு ... ஆனா அதிகாரம் இருக்கும் போது என்ன ஆட்டம் போட்டீங்க.

கனிமொழி அவர்களே இப்பொழுதாவது நினையுங்கள் சாதாரண மக்கள் படும் துயரங்களை . உங்களுக்கு ஜெயில் வாழ்க்கைதான் துயரமாக உள்ளது , ஆனால் தமிழக மக்களுக்கு சாதாரண வாழ்க்கையே ஜெயில் போல துயரமாக உள்ளது .



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

டெல்லியிலேயே தங்கிடவா? மகளிடம் தழுதழுத்த அப்பா... Empty Re: டெல்லியிலேயே தங்கிடவா? மகளிடம் தழுதழுத்த அப்பா...

Post by கே. பாலா Thu May 26, 2011 1:33 pm

வை.பாலாஜி wrote:படிக்கும் போது கஷ்டமாதான் இருக்கு ... ஆனா அதிகாரம் இருக்கும் போது என்ன ஆட்டம் போட்டீங்க.

கனிமொழி அவர்களே இப்பொழுதாவது நினையுங்கள் சாதாரண மக்கள் படும் துயரங்களை . உங்களுக்கு ஜெயில் வாழ்க்கைதான் துயரமாக உள்ளது , ஆனால் தமிழக மக்களுக்கு சாதாரண வாழ்க்கையே ஜெயில் போல துயரமாக உள்ளது .

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

டெல்லியிலேயே தங்கிடவா? மகளிடம் தழுதழுத்த அப்பா... Empty Re: டெல்லியிலேயே தங்கிடவா? மகளிடம் தழுதழுத்த அப்பா...

Post by haveafun.all Thu May 26, 2011 2:27 pm

ஈழ தமிழ் மக்களின் சாபம், தமிழனின் கோபம், அராஜகதுக்கு ஆளான மக்களின் துயரம்.....இன்னும் எத்துனையோ....! இது பத்தாது பரிக்கப்பட்ட ஒவ்வொன்றும் உயிர்தான்...இதோ துடித்துக்கொண்டிருப்பதும் அதே தான்..!
அரசன் கொன்றான்...தெய்வம் இப்பொழுதுதான் ஆரம்பித்து இருக்கிறது...!
avatar
haveafun.all
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 17
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

டெல்லியிலேயே தங்கிடவா? மகளிடம் தழுதழுத்த அப்பா... Empty Re: டெல்லியிலேயே தங்கிடவா? மகளிடம் தழுதழுத்த அப்பா...

Post by கலைவேந்தன் Thu May 26, 2011 2:57 pm

வை.பாலாஜி wrote:படிக்கும் போது கஷ்டமாதான் இருக்கு ... ஆனா அதிகாரம் இருக்கும் போது என்ன ஆட்டம் போட்டீங்க.

கனிமொழி அவர்களே இப்பொழுதாவது நினையுங்கள் சாதாரண மக்கள் படும் துயரங்களை . உங்களுக்கு ஜெயில் வாழ்க்கைதான் துயரமாக உள்ளது , ஆனால் தமிழக மக்களுக்கு சாதாரண வாழ்க்கையே ஜெயில் போல துயரமாக உள்ளது .


சியர்ஸ் சியர்ஸ்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

டெல்லியிலேயே தங்கிடவா? மகளிடம் தழுதழுத்த அப்பா... Empty Re: டெல்லியிலேயே தங்கிடவா? மகளிடம் தழுதழுத்த அப்பா...

Post by மகா பிரபு Thu May 26, 2011 3:04 pm

உப்பை தின்று இருந்தால் தண்ணீர் குடித்துதான் ஆக வேண்டும். அதற்காக தருமபுரி மாதிரி பேருந்தையெல்லாம் எரிச்சுடாதீங்க.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

டெல்லியிலேயே தங்கிடவா? மகளிடம் தழுதழுத்த அப்பா... Empty Re: டெல்லியிலேயே தங்கிடவா? மகளிடம் தழுதழுத்த அப்பா...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum