ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈசாப் குட்டி கதைகள்

4 posters

Go down

ஈசாப் குட்டி கதைகள் Empty ஈசாப் குட்டி கதைகள்

Post by சிவா Wed May 25, 2011 12:08 pm

வெட்டுக்கிளியும் ஆந்தையும்

மத்தியான வேளையில் மரப்பொந்தில் ஆந்தை தூங்கிக் கொண்டிருந்தது.கீழே புல்தரையில் வெட்டுக்கிளி பாட்டுப்பாடிச் செய்துகொண்டிருந்த ஆர்ப்பாட்டம் சகிக்க முடியவில்லை.கொஞ்சம் பாடுவதை நிறுத்தும்படி ஆந்தை கேட்டது.வெட்டுக்கிளி கேட்கவில்லை.கேட்காததோடு மட்டுமல்ல: ஆந்தையைப் பார்த்துத்திட்டியது."நீ குருட்டுக் கழுதை! பகலில் வெளியே தலை நீட்டுவதில்லை யோக்கியமானவர்கள் எல்லாரும் இரவில் தூங்கிய பின்புதான் நீ வெளியே வருவாய்"என்று துரித்தது.

ஆந்தை சிறிதுநேரம் யோசனை செய்தது. தந்திரத்தால்தான் வெட்டுக்கிளியை அடக்க வேண்டும் என்று தீர்மானித்து,பின்வருமாறு சொல்லிற்று:

"நண்பனே, என்னைத் தூங்கவிடாமல் நீ செய்ய விரும்பினால் செய்துவிட்டுப் போ.ஆனால் விழித்துக் கொண்டிருப்பதற்கு இனிமையாய் இருப்பதற்காகவாவது உன் சங்கீதம் உபயோகப்படட்டுமே! உன் சாரீரம் இனிமையானது.அதைத் தேவகானம் மாதிரி செய்வதற்கு என்னிடம் ஓர் அமிர்தம் இருக்கிறது.அதில் இரண்டு துளி நீ சாப்பிட்டால் போதும். உன் குரலும் அமிர்தமாய் விடும்.மேலே வா,தருகிறேன்"என்றது.

ஆந்தை பேச்சைக் கேட்டு ஏமாந்த வெட்டுக்கிளி மரத்தில் ஏறிய ஆந்தையிடம் போயிற்று.பக்கத்தில் வ்ந்ததும ஆந்தை பிடித்து நசுக்கிக் கொன்றது.

பயமுறுத்தலைவிட நயவஞ்சகம் பலமானது


ஈசாப் குட்டி கதைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈசாப் குட்டி கதைகள் Empty Re: ஈசாப் குட்டி கதைகள்

Post by சிவா Wed May 25, 2011 12:13 pm

பொன் முட்டையிடும் வாத்து


ஒருவனிடம் இருந்த வாத்து தினம் ஒரு பொன் முட்டை இட்டு வந்தது. வாத்துக்காரன் பேராசை கொண்டவன்.தினம் ஒரு முட்டைக்காகக் காத்துக் கொண்டிருப்பதைவிட வாத்தின் வயிற்றைக் கீறினால் புரா முட்டைகளையும் ஒரே தடவையில் எடுத்துக் கொள்ளலாமே என்று நினைத்தான்.

கத்தியை எடுத்து வாத்தின் வயிற்றைக் கீறினான்.வயிறு வெறும் வயிறாய் இருந்தது. வாத்தும் செத்துப் போயிற்று,தினம் கிடைத்து வந்த ஒரு பொன் முட்டையும் கிடைக்காமல் போயிற்று.

பேராசைக்காரனுக்கு புத்தி மட்டு


Last edited by சிவா on Wed May 25, 2011 12:18 pm; edited 1 time in total


ஈசாப் குட்டி கதைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈசாப் குட்டி கதைகள் Empty Re: ஈசாப் குட்டி கதைகள்

Post by Tamilzhan Wed May 25, 2011 12:16 pm

சிவா wrote:பொன் முட்டையிடும் வாத்து
ஒருவனிடம் இருந்த வாத்து தினம் ஒரு பொன் முட்டை இட்டு வந்தது. வாத்துக்காரன் பேராசை கொண்டவன்.தினம் ஒரு முட்டைக்காகக் காத்துக் கொண்டிருப்பதைவிட வாத்தின் வயிற்றைக் கீறினால் புரா முட்டைகளையும் ஒரே தடவையில் எடுத்துக் கொள்ளலாமே என்று நினைத்தான்.

கத்தியை எடுத்து வாத்தின் வயிற்றைக் கீறினான்.வயிறு வெறும் வயிறாய் இருந்தது. வாத்தும் செத்துப் போயிற்று,தினம் கிடைத்து வந்த ஒரு பொன் முட்டையும் கிடைக்காமல் போயிற்று.

பேராசைக்காரனுக்கு புத்தி மட்டு

இந்த மாதிரி கதையை நான் கேட்டதே இல்ல.... தேங்ஸ் அங்கில்.... ஈசாப் குட்டி கதைகள் 755837


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

ஈசாப் குட்டி கதைகள் Empty Re: ஈசாப் குட்டி கதைகள்

Post by பாலாஜி Wed May 25, 2011 12:18 pm

Tamilzhan wrote:

இந்த மாதிரி கதையை நான் கேட்டதே இல்ல.... தேங்ஸ் அங்கில்.... ஈசாப் குட்டி கதைகள் 755837


சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஈசாப் குட்டி கதைகள் Empty Re: ஈசாப் குட்டி கதைகள்

Post by சிவா Wed May 25, 2011 12:20 pm

தச்சனும் குரங்கும்

ஒரு தச்சன் மரத்தை அறுத்துக் கொண்டிருந்தான்.சாப்பாட்டு நேரம் வந்ததும் அறுத்த பிளவில் சக்கையைத் திணித்து விட்டுச் சாப்பிடப் போனான்.மரத்தின் மேலிருந்து பார்த்துக் கொண்டிருந்தது ஒரு குரங்கு: தச்சன் போனதும் கிழே இறங்கி வந்து சக்கையை ஆட்டி அசைத்துப் பிடுங்கியது.சக்கை வெளியே வந்ததும் பிளவாய் இருந்த மரம் படீரென்று ஒன்று சேர்ந்தது.அந்தப் பிளவில் அகப்பட்டிருந்த குரங்கின் காலும்,வாலும் நசுங்கிப் போயின.

விஷமம் செய்வது சுலபம்,அதனால் ஏற்படும் கெடுதலில் இருந்து தப்புவது கடினம்

(இது தமிழனுக்குப் பொருந்தும் என்று நான் இங்கு கூறவில்லை)


ஈசாப் குட்டி கதைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈசாப் குட்டி கதைகள் Empty Re: ஈசாப் குட்டி கதைகள்

Post by Tamilzhan Wed May 25, 2011 12:24 pm

சிவா wrote:(இது தமிழனுக்குப் பொருந்தும் என்று நான் இங்கு கூறவில்லை)
அப்போ மலையாளிக்கு பொருந்துமா..? ஈசாப் குட்டி கதைகள் 440806


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

ஈசாப் குட்டி கதைகள் Empty Re: ஈசாப் குட்டி கதைகள்

Post by சிவா Wed May 25, 2011 12:27 pm

மரமும் மனிதனும்

ஒரு மனிதன் காட்டுக்குள் சென்று மரங்களைப் பார்த்து, மரங்களே என் கோடாலிக்கு ஒரு கைப்பிடி கொடுக்க மாட்டீர்களா? என்று கேட்டான்.

மனிதன் மீது இரக்கங்கொண்ட ஒரு மரம், தான் கொடுப்பதாகச் சொல்லிற்று. அந்த மரத்திலிருந்து ஒரு கைப்பிடியைத் தன் கோடாலிக்குப் போட்டதும் அங்குள்ள மரங்களை வெட்ட ஆரம்பித்தான்.

வெகு சீக்கிரம் பல மரங்கள் கீழே விழுந்தன.அதைப் பார்த்த ஒரு கிழட்டு மரம், நம்மவன் ஒருவன் அந்த மனிதனுக்குக் கைபிடி கொடுக்காவிட்டால், இத்தனை மரங்களை அவன் வெட்டிருக்க முடியுமா? என்று பிரலாபித்தது.

சமுகத்திற்கு விரோதமாகக் கோடாலிக்காம்பாக நடத்து கொள்ள வேண்டாம்


ஈசாப் குட்டி கதைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈசாப் குட்டி கதைகள் Empty Re: ஈசாப் குட்டி கதைகள்

Post by சிவா Wed May 25, 2011 12:29 pm

ஓநாயும் மேய்ப்பவர்களும்

மேய்ப்பவர்கள் குடிசை வழியாக ஓநாய் போயிற்று. உள்ளே ஆட்டுக் கறியை ஒரு தட்டில் வைத்து,அதைச் சுற்றி மேய்ப்பவர்கள் உட்கார்ந்து ருசியாய்ச் சாப்பிட்டுக் கொண்டிருத்தார்கள்.அதைப் பார்த்து ஓநாய், நான் மட்டும் இந்த மாதிரி ஆட்டுக்கறியை வைத்து தின்பதைப் பார்த்தால் இந்த மனிதர்கள் என்ன கூச்சல் போடுவார்கள்! என்று சொல்லிக் கொண்டே போயிற்று.

தங்கள் செய்யும் அதே காரியத்தைப் பிறர் செய்வதை மனிதர்கள் சகிக்க மாட்டார்கள்


ஈசாப் குட்டி கதைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈசாப் குட்டி கதைகள் Empty Re: ஈசாப் குட்டி கதைகள்

Post by சிவா Wed May 25, 2011 12:31 pm

கரடியும் நரியும்

கரடி ஒரு நாள் பெருமையாகச் சொல்லியதாவது: மனிதர் சவத்தின்மீது எனக்கு மரியாதை உண்டு,என்னவானாலும் சரி, சவத்தைத் தொட்டு அவமரியாதை செய்வது மட்டும் என்னிடம் கிடையாது. அதைக் கேட்டுக் கொண்டிருந்த நரி அடடா,என்ன மரியாதை! சவத்திடம் உள்ள அதே மரியாதையை மனிதர் உயிரோடு இருக்கும்போது நீ காட்டுவாயானால்,நீ சொல்லுவதற்கு அர்த்தமுண்டு என்று இடித்துக் கூறியது.

வீண்பெருமை கொள்ளக் கூடாது


ஈசாப் குட்டி கதைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈசாப் குட்டி கதைகள் Empty Re: ஈசாப் குட்டி கதைகள்

Post by உமா Wed May 25, 2011 1:05 pm

அண்ணா எல்லா கதையும் சூப்பர்....இன்னும் இருந்தால் பதிவிடுங்கள்....
ஈசாப் குட்டி கதைகள் 224747944



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஈசாப் குட்டி கதைகள் Empty Re: ஈசாப் குட்டி கதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum