ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
எனது உலகின் முதல் விண்வெளி பயணம்!--யூரி ககாரின் Poll_c10எனது உலகின் முதல் விண்வெளி பயணம்!--யூரி ககாரின் Poll_m10எனது உலகின் முதல் விண்வெளி பயணம்!--யூரி ககாரின் Poll_c10 
VENKUSADAS
எனது உலகின் முதல் விண்வெளி பயணம்!--யூரி ககாரின் Poll_c10எனது உலகின் முதல் விண்வெளி பயணம்!--யூரி ககாரின் Poll_m10எனது உலகின் முதல் விண்வெளி பயணம்!--யூரி ககாரின் Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
எனது உலகின் முதல் விண்வெளி பயணம்!--யூரி ககாரின் Poll_c10எனது உலகின் முதல் விண்வெளி பயணம்!--யூரி ககாரின் Poll_m10எனது உலகின் முதல் விண்வெளி பயணம்!--யூரி ககாரின் Poll_c10 
VENKUSADAS
எனது உலகின் முதல் விண்வெளி பயணம்!--யூரி ககாரின் Poll_c10எனது உலகின் முதல் விண்வெளி பயணம்!--யூரி ககாரின் Poll_m10எனது உலகின் முதல் விண்வெளி பயணம்!--யூரி ககாரின் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது உலகின் முதல் விண்வெளி பயணம்!--யூரி ககாரின்

Go down

எனது உலகின் முதல் விண்வெளி பயணம்!--யூரி ககாரின் Empty எனது உலகின் முதல் விண்வெளி பயணம்!--யூரி ககாரின்

Post by மகா பிரபு Wed May 25, 2011 11:36 am

நன்றி நக்கீரன் :::


""காகரின் விண்வெளியில் நுழைந்துவிட்டார். ஆனால் அங்கு அவர் எந்த கடவுளையும் பார்க்கவில்லை.''
- நிகிட்டா குருசேவ், 1961.

மனிதன் முதன் முதலில் விண்வெளியில் பயணம் செய்து 50 ஆண்டுகளாகின்றது. இந்த மாபெரும் சாதனையை புரிந்தவர் ரஷ்ய விண்வெளி வீரர் யூரிஅலெக்சேவிச் ககாரின். இவர் 1961 ஏப்ரல் 12-ஆம் தேதி, வாஸ்டாக்-1 விண்கலத்தில், விண்வெளியில், 1 மணி 48 நிமிடங்கள் பறந்து சாதனை படைத்தார். பூமியின்
சுற்றுப்பாதையில் பூமியை வலம் வந்த முதல் மனிதர் என்ற பெருமையை பெற்றார். அன்று இந்த விண்வெளி சாதனையை உலகமே பாராட்டி மகிழ்ந்தது. இந்த அரிய நிகழ்வு நடந்து, 50 ஆண்டுகள் ஆனதை, ரஷ்ய அரசு மிகச்சிறப்பாக அண்மையில் கொண்டாடியது.

1961-இல் விண்வெளிக்கு முதன் முதலில் சென்ற யூரி ககாரின் நினைவாக ரஷ்யாவில் ஆண்டுதோறும் ஏப்ரல் 12-ஆம் தேதி விண்வெளி வீரர்கள் தினமாக கொண்டாடப் பட்டு வருகின்றது. மனித விண்வெளிப் பயணத்துக்கான சர்வதேச நாள் (International Day of Human Space Flight) ஆண்டுதோறும் ஏப்ரல் 12-ஆம் தேதி
கொண்டாடப்படுகிறது. விண்வெளிக்கு முதன் முதலில் பயணம் செய்த ரஷ்யரான யூரி ககாரின் நினைவாக இந்நாளை சிறப்பு நாளாக உலகெங்கும் கொண்டாடுவதற்கு ஐக்கிய நாடுகள் பொதுச்சபை தீர்மானித்துள்ளது.

அந்த வகையில் யூரி ககாரின் விண்வெளி பயண அனுபவத்தை இங்கு வெளியிடுகிறோம். இது விண்வெளிக்கு சென்று திரும்பியவுடன் யூரி ககாரின் பேசிய முதல் சொற்பொழிவு என்பது குறிப்பிடத்தக்கது. இன்று என்னுடைய சுயசரிதையை அறிந்து கொள்வதற்கு மக்கள் ஆர்வமாக உள்ளனர். அதனால் என்னைப்பற்றி முதலில் அறிமுகம் செய்து கொள்கிறேன்.

நான் ஒரு ஏழை விவசாயக் குடும்பத்தில் 1934-ஆம் ஆண்டு மார்ச் 9-ஆம் தேதி
பிறந்தேன். என்னுடைய பிறப்பிடம் ஸ்மோலன்ஸ்க் பகுதி. என்னுடைய பரம்பரையில் இளவரசர்களோ அறிஞர்களோ பிறந்ததில்லை. ரஷ்ய புரட்சிக்கு முன்னர் என்னுடைய பெற்றோர் மிகவும் ஏழை விவசாயிகளாக இருந்தனர்.

நான் மாஸ்கோவிற்கு அருகிலுள்ள லூயிபெர்ஸ்டி என்னுமிடத்தில் சாதாரண பள்ளியில் படித்தேன். அதற்கு பிறகு சாராடாவ் தொழில் நிறுவனத்தில் பொறியியல்
வடிவமைப்பாளராக பணிபுரிந்தேன். இருந்தபோதிலும் என்னுடைய நீண்டகால கனவு, நான் ஒரு விமான ஓட்டியாக வேண்டுமென்பதுதான். 1955-இல் தொழில்நுட்பத்தில் பட்டப்படிப்பு முடித்து, சாராடோ விமான அகாடமியில் பைலட் படிப்பை முடித்தேன். அதன் பிறகு ஒரன்பர்க் விமான பள்ளியில் சேர்ந்தேன். 1957-இல் அங்கு நான் ஏர்போர்ஸ் பைட்டர் பைலட் என்ற பட்டம் பெற்றேன். பின்பு சோவியத் விமானப்படை பிரிவில் பணிபுரிந்தேன். என்னுடைய லட்சியம், நான் விண்வெளி வீரராக வர வேண்டும் என்பதுதான். பல்வேறு தேர்விற்கு பிறகு விண்வெளி வீரரானேன்.

அடுத்து விஞ்ஞானிகளால் நடத்தப்பட்ட பல கட்ட பயிற்சிகளில் தேர்ச்சி பெற்றேன்.
விண்வெளிக்கு பயணிக்க தேவையான தொழில்நுட்பத்தையும் கற்றுக்கொண்டேன். நான் இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னை இந்த விண்கலத்தில் அனுப்பிய நமது கட்சிக்கும், நமது அரசாங்கத்திற்கும் எனது குழுவிற்கும், நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கின்றேன். நமது நாட்டிற்கும், மக்கள் மற்றும் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் எனது நன்றியை காணிக்கையாக்குகிறேன்.

விண்வெளி பயணத்திற்கு முன்னர் நான் நலமாகவும் நல்ல உடல் ஆரோக்கியத்துடனும் இருந்தேன். எனக்கு இந்த விண்வெளிப் பயணம் வெற்றியை அளிக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. எனது திட்டம் மிகவும் சவாலானது. நமது தொழில்நுட்ப வல்லுநர்கள், விஞ்ஞானிகள், என்ஜினியர்கள் மற்றும் தோழர்கள் என்னுடைய வெற்றியை குறித்து ஒரு நொடிக்கூட சந்தேகப்படவில்லை. நான் சென்ற விண்கலம் மிகச்சிறந்ததாக வடிவமைக்கப்பட்டது. என்னுடைய விண்வெளி ஓடம் விண்வெளியில் நுழைந்தபோது அதனுடைய செயல்பாடு, அதிர்வு, சத்தம் போன்றவை என்னிடத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

விண்வெளி சுற்றுப்பாதையில் நுழைந்தபோது நான் இருந்த கலம் தனியாக பிரிந்தது. அப்போது விண்வெளியில் நான் எடையின்மையை உணர்ந்தேன். ஆரம்பத்தில் இந்த உணர்வு எனக்கு ஒருமாதிரியாகதான் இருந்தது. ஆனால் இந்த பயணத்திற்கு முன்னர் விண்வெளிக்கு சென்றால் அங்கே எடையின்மையை குறித்து சிறப்பாக பயிற்சி பெற்றதால் எனக்கு ஒன்றும் தெரியவில்லை. அந்த சூழ்நிலைக்கேற்ப பழக அதிக நேரம் தேவைப்படவில்லை.

என்னுடைய சொந்த கருத்து என்னவெனில், எடையின்மை உடல் உறுப்புகள் நம்மிடத்தில் இல்லாதது போன்ற ஒரு மனநிலையை ஏற்படுத்தும். அவ்வளவுதான். அதனால் உடலுக்கு எந்த தீங்கும் ஏற்படாது. என்னுடைய விண்வெளி பயணத்தின்போது சாப்பிட்டேன். தண்ணீர் குடித்தேன். தொடர்ந்து ரேடியோ மூலம் பூமியில் உள்ள அனைத்து சேனல்களிலும் தொடர்பு வைத்திருந்தேன். என்னை சுற்றியுள்ள சுற்றுப்புறத்தை புரிந்துக் கொண்டேன். நான் விண்வெளி ஓடத்தின் செயல்பாடுகள் குறித்து பூமிக்கு தகவல் அனுப்பினேன். சுயமாக தகவல்களை பதிவும் செய்தேன். என்னுடைய குறிப்பு புத்தகம் மற்றும் டேப்ரெக்காடர்களிலும் நான் என்னுடைய எடையின்மையை உணர்ந்து செய்த வேலைகள் அனைத்தும் அருமையாக இருந்தது.

விண்வெளி ஓடம் தானாகவே தனது நிலைப்பாட்டை சரி செய்துகொண்டது. பிரேகிங் முறை செயல்படுத்தப்பட்டதால் விண்வெளி ஓடத்தின் வேகம் குறைய தொடங்கியது. விண்வெளி ஓடம் பத்திரமாக தரை இறங்கியது.

எனக்கு பெரும் வரவேற்பு செய்த எனது சோவியத் மக்களை சந்தித்தேன். இது எனக்கு மிகுந்த உற்சாகத்தையும், அளவில்லா மகிழ்ச்சியையும் தந்தது. விண்வெளி ஓடம் தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில் பத்திரமாக தரை இறங்கியது.

அடுத்து, நான் விண்வெளியில் எவற்றை கண்டேனோ அவைகளை உங்களிடத்தில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

175-300 கி.மீ. செங்குத்து உயரத்திலிருந்து பூமியை பார்க்கும்போது பூமி மிகவும் துல்லியமாக தெரிந்தது. இன்னும் தெளிவாக தெரிந்தது பெரிய மலை சிகரங்கள், பெரிய நதிகள், பெரிய வன பகுதிகள், கடற்கரைகள் மற்றும் தீவுகள். பூமியின் பரப்பை மறைத்து செல்லும் மேகங்கள், அவற்றின் நிழல்கள் பூமியின் மீது விழுவது ஆகியவை தெளிவாக தெரிந்தது.

வானத்தின் நிறம் முற்றிலும் கருப்பாக இருந்தது. இந்த கருப்பின் பின்னணியில் நட்சத்திரங்கள் தெளிவாகவும், பிரகாசமாகவும் தெரிந்தன. இந்த பூமியானது நீலநிற ஒளிவட்டத்தால் சூழப்பட்டிருந்தது. இந்த ஒளிவட்டம் குறிப்பாக தொடுவானத்தில் நன்றாக தெரிந்தது. மெல்லிய நீலநிறத்தில் இருந்த வானம், பிறகு அடரத்தியான நீலநிறம், பிறகு கருநீலநிறமாகவும் பின்பு ஊதா நிறமாகவும் இறுதியில் முழுவதும் கருமை நிறமாகவும் இருந்தது.

நான் இங்கே விண்கல வடிவமைப்பாளர்கள், பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப
வல்லுனர்கள் மற்றும் சோவியத் நாடு முழுமைக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். "வோஸ்டக்' மிக சிறந்த அற்புதமான விண்கலம். இதனை உருவாக்கியதற்காக நாம் பெருமைபடுவோம்.

எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. ஏனெனில் சோவியத் யூனியன்தான் உலக வரலாற்றில் முதன்முதலாக விண்வெளி ஓடம் ஏவியது என்ற பெருமையை பெற்றுள்ளது. முதல் விமானம், முதல் செயற்கைகோள், முதல் விண்வெளி ஓடம், மனிதனை முதன்முதலில் விண்வெளிக்கு அனுப்பியது என பல பெருமைகளை பெற்றது நமது நாடுதான். தனிப்பட்ட முறையில் நான் விண்வெளிக்கு இன்னும் சிலமுறை செல்ல விரும்புகிறேன். எனக்கு பறப்பது மிகவும் பிடிக்கும். என்னுடைய மிகப்பெரிய ஆசை என்னவெனில் நான் வெள்ளி, செவ்வாய் ஆகிய கிரகங்களுக்கும் செல்ல வேண்டும் என்பதுதான். நன்றி.

(1968-ஆம் ஆண்டு மிக் -15 யுடிசி என்ற விமானத்தில் பறந்த போது, ஏற்பட்ட விமான விபத்தில் இறந்து போனார்.)

தமிழில்: கே. கேசவன்.

நன்றி நக்கீரன் :::
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» விண்வெளி பயணம் இனப்பெருக்க திறனை பாதிக்கும்
» விண்ணைத் தொட்ட மனிதர்கள் - யூரி ககாரின்
» உலகின் முதல் பெண் விண்வெளி வீரர் -ஏற்காடு இளங்கோ நூல் .
» அட்லாண்டிஸ் விண்வெளி ஓடத்தின் இறுதிப் பயணம்: 30 வருட விண்வெளி ஓட சகாப்தம் முடிந்தது
» எனது 10000 -மாவது சிறப்பு பதிவு உலகின் முதல் 'விமான கார்' ஏலம் - ஆரம்ப விலை ரூ.5 1/2 கோடி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum