ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகத்தில் சிறந்தது

3 posters

Go down

உலகத்தில் சிறந்தது Empty உலகத்தில் சிறந்தது

Post by சிவா Wed Nov 12, 2008 1:19 am

முல்லா மன்னரிடம் சில காலம் அமைச்சராக இருந்தார். முல்லாவின் மீது மன்னருக்கு அதிக அபிமானம் இருந்தது. அதனால் அவரை எப்போதுமே தன்னுடன் வைத்துக் கொண்டு அவருடன் உரையாடி மகிழ்ந்தார்.

மன்னர் உணவருந்தும் சமயத்திலெல்லாம் முல்லாவையும் தம்முடன் அமர்ந்து உணவருந்தச் சொல்வார்.

ஒருநாள் மன்னரும் முல்லாவும் வழக்கம்போல அருகருகே அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தனர்.

அன்று பீன்ஸ் கறி சமைக்கப்பட்டிருந்தது.

மன்னருக்கு அன்று அதிகமான பசியாக இருந்ததால் பீன்ஸ் கறியை மிகவும் விரும்பிச் சாப்பிட்டார்.

சாப்பாட்டின் இடையே மன்னர் முல்லாவை நோக்கி, முல்லா உலகத்திலேயே மிகவும் சிறந்த காய் பீன்ஸ் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது நீர் என்ன நினைக்கிறீர்? என்று கேட்டார்.

சந்தேகமே வேண்டாம். பீன்ஸ் காய்க்கு நிகராக வேறு காயைச் சொல்லவே முடியாது என்று முல்லா ஆமாம் போட்டார்.

மன்னர் உடனே சமையற்காரனை அழைத்து இனி சமையலில் பீன்ஸ் கறிக்குத் தான் முதலிடம் தர வேண்டும். அன்றாடம் ஏதாவது ஒரு உருவத்தில் பீன்ஸை உணவுடன் சேர்ந்து விடு என்று உத்திரவிட்டார்.

நாள் தவறாமல் உணவில் பீன்ஸை சேர்த்துக் கொண்டதால் மன்னருக்கு அந்த காயின் மீது சலிப்பும் வெறுப்பும் ஏற்பட்டது.

அன்று சாப்பாட்டின் போது பீன்ஸ் பரிமாறப்பட்டபோது மன்னர் முல்லாவை நோக்கி உலகத்திலேயே மிகவும் மோசமான காய் பீன்ஸ் என்றுதான் நினைக்கிறேன். நீர் என்ன நினைக்கிறீர்? என்று கேட்டார்.

ஆமாம் மன்னர் அவர்களே, எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. நான் அறிந்த மட்டில் இவ்வளவு மோசமான சுவையே இல்லாத பீன்ஸைப் போன்ற காயைக் கண்டதே இல்லை என்றார் முல்லா

என்ன முல்லா * பத்து நாட்களுக்கு முன்னால் நான் கேட்டபோது உலகத்திலேயே மிகவும் சிறந்த காய் பீன்ஸ் என்று சொன்னீர். இப்பொழுது தலை கீழாக மாற்றிப் பேசுகிறீரே என்று மன்னர் கேட்டார்.

முல்லா சிரித்துக் கொண்டே மன்னர் அவர்களே! என்ன செய்வது? நான் தங்களிடம் அல்லவா வேலை பார்க்கிறேன். பீன்ஸிடமல்லவே என்றார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகத்தில் சிறந்தது Empty Re: உலகத்தில் சிறந்தது

Post by krishnaamma Wed Oct 14, 2015 10:53 am

ஹா ...ஹா...ஹா....இதே போல கத்தரிக்காயை தெனாலி ராமனுடன் இணைத்து சொல்வார்கள் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உலகத்தில் சிறந்தது Empty Re: உலகத்தில் சிறந்தது

Post by ayyasamy ram Wed Oct 14, 2015 4:27 pm

krishnaamma wrote:ஹா ...ஹா...ஹா....இதே போல கத்தரிக்காயை தெனாலி ராமனுடன் இணைத்து சொல்வார்கள் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1168899
-
சூப்பருங்க
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82771
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உலகத்தில் சிறந்தது Empty Re: உலகத்தில் சிறந்தது

Post by ayyasamy ram Mon Jun 22, 2020 5:13 pm

உயர்ந்த கறிகாய் கத்தரிக்காய்
-
உலகத்தில் சிறந்தது 19

'நீராருங் கடல் உடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்’
என்ற நமது தமிழ்த் தாய் வாழ்த்தை எழுதிய
மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை, தமது மனோன்மணீயம்
என்ற காப்பியத்தில் மன்னனுக்குத் தீங்கு செய்த மந்திரி
குடிலனைப் பற்றி எழுதுகிறார்.

தலையாட்டி பொம்மைகளாக மந்திரிகள் இருப்பதைப்
பற்றித் தெனாலிராமன் கதையொன்று விவரிக்கிறது.

கத்தரிக்காய் மேல் ஆசைகொண்ட மன்னர் கிருஷ்ண
தேவராயர், அதை அதிகம் விரும்பிச் சாப்பிட்டார்.
கத்தரிக்காய் உயர்ந்த கறிகாய் என்று தெனாலிராமனிடம்
புகழ்ந்தார்.

'ஆம், அதனால்தான் இயற்கை அந்தக் காயின் தலையில்
மட்டும் அழகிய கிரீடத்தை வைத்து அழகு பார்க்கிறது!’
என அதன் எழிலைப் புகழ்ந்தான் தெனாலிராமன்.
அரசருக்குக் கத்தரிக்காய் பிடிக்கிறது என்பதால் அன்று
தொட்டு கத்தரிக்காய்க் கறி, கத்தரிக்காய்க் கூட்டு,
கத்தரிக்காய்க் குழம்பு என்று நாள்தோறும் கத்தரிக்காய்
சமைக்கப்பட்டது.

அதிகக் கத்தரிக்காய் சாப்பிட்டதால் அரசர் சொறியும்
சிரங்கும் வந்து அவதிப்பட்டார். கத்தரிக்காய் தோலுக்கு
ஆகாது என்றும் இனி உணவில் அதை விலக்க வேண்டும்
என்றும் சொன்னார் மருத்துவர்.

இப்போது 'கத்தரிக்காய் மிக மோசமான காய்’எனத்
தெனாலிராமனிடம் அலுத்துக் கொண்டார் மன்னர்.

'ஆம்! அதிலென்ன சந்தேகம், அதன் கெடுதலை
அறிந்துதான் இயற்கை அதன் தலையில் ஆணியடித்து
வைத்திருக்கிறது!’ என்றான் தெனாலிராமன்!

மன்னர் திகைத்தார். 'நான் சொல்வதற்கேற்ப மாற்றிச்
சொல்கிறாயே?’ எனக் கடிந்துகொண்டார்.

தெனாலிராமன் சிரித்தவாறே பதில் சொன்னான்:
'அதனால் என்ன மன்னா? நீங்கள் தான் என் மன்னர்.
உங்களுக்கேற்றபடிப் பேசுவதே என் கடமை.
கத்தரிக்காயா என் மன்னர்?' தனக்கேற்றபடிப் பேசும்
மந்திரிகளை நம்பக் கூடாது என்ற உண்மையை
அவ்விதம் தெனாலிராமன் மன்னன் கிருஷ்ண
தேவராயருக்குப் புகட்டினான் என்கிறது கதை.
-
------------------------------------
திருப்பூர் கிருஷ்ணன்
குறளின் குரல் - 78- குங்குமம் (ஆன்மீகம்)
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82771
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உலகத்தில் சிறந்தது Empty Re: உலகத்தில் சிறந்தது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum