ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
கனிமொழிக்கு, கருணாநிதி ஆறுதல் : திகார் சிறையில் சந்தித்தார்  Poll_c10கனிமொழிக்கு, கருணாநிதி ஆறுதல் : திகார் சிறையில் சந்தித்தார்  Poll_m10கனிமொழிக்கு, கருணாநிதி ஆறுதல் : திகார் சிறையில் சந்தித்தார்  Poll_c10 
ayyasamy ram
கனிமொழிக்கு, கருணாநிதி ஆறுதல் : திகார் சிறையில் சந்தித்தார்  Poll_c10கனிமொழிக்கு, கருணாநிதி ஆறுதல் : திகார் சிறையில் சந்தித்தார்  Poll_m10கனிமொழிக்கு, கருணாநிதி ஆறுதல் : திகார் சிறையில் சந்தித்தார்  Poll_c10 
mohamed nizamudeen
கனிமொழிக்கு, கருணாநிதி ஆறுதல் : திகார் சிறையில் சந்தித்தார்  Poll_c10கனிமொழிக்கு, கருணாநிதி ஆறுதல் : திகார் சிறையில் சந்தித்தார்  Poll_m10கனிமொழிக்கு, கருணாநிதி ஆறுதல் : திகார் சிறையில் சந்தித்தார்  Poll_c10 
VENKUSADAS
கனிமொழிக்கு, கருணாநிதி ஆறுதல் : திகார் சிறையில் சந்தித்தார்  Poll_c10கனிமொழிக்கு, கருணாநிதி ஆறுதல் : திகார் சிறையில் சந்தித்தார்  Poll_m10கனிமொழிக்கு, கருணாநிதி ஆறுதல் : திகார் சிறையில் சந்தித்தார்  Poll_c10 

Top posting users this month
heezulia
கனிமொழிக்கு, கருணாநிதி ஆறுதல் : திகார் சிறையில் சந்தித்தார்  Poll_c10கனிமொழிக்கு, கருணாநிதி ஆறுதல் : திகார் சிறையில் சந்தித்தார்  Poll_m10கனிமொழிக்கு, கருணாநிதி ஆறுதல் : திகார் சிறையில் சந்தித்தார்  Poll_c10 
ayyasamy ram
கனிமொழிக்கு, கருணாநிதி ஆறுதல் : திகார் சிறையில் சந்தித்தார்  Poll_c10கனிமொழிக்கு, கருணாநிதி ஆறுதல் : திகார் சிறையில் சந்தித்தார்  Poll_m10கனிமொழிக்கு, கருணாநிதி ஆறுதல் : திகார் சிறையில் சந்தித்தார்  Poll_c10 
mohamed nizamudeen
கனிமொழிக்கு, கருணாநிதி ஆறுதல் : திகார் சிறையில் சந்தித்தார்  Poll_c10கனிமொழிக்கு, கருணாநிதி ஆறுதல் : திகார் சிறையில் சந்தித்தார்  Poll_m10கனிமொழிக்கு, கருணாநிதி ஆறுதல் : திகார் சிறையில் சந்தித்தார்  Poll_c10 
VENKUSADAS
கனிமொழிக்கு, கருணாநிதி ஆறுதல் : திகார் சிறையில் சந்தித்தார்  Poll_c10கனிமொழிக்கு, கருணாநிதி ஆறுதல் : திகார் சிறையில் சந்தித்தார்  Poll_m10கனிமொழிக்கு, கருணாநிதி ஆறுதல் : திகார் சிறையில் சந்தித்தார்  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனிமொழிக்கு, கருணாநிதி ஆறுதல் : திகார் சிறையில் சந்தித்தார்

5 posters

Go down

கனிமொழிக்கு, கருணாநிதி ஆறுதல் : திகார் சிறையில் சந்தித்தார்  Empty கனிமொழிக்கு, கருணாநிதி ஆறுதல் : திகார் சிறையில் சந்தித்தார்

Post by தாமு Tue May 24, 2011 8:06 am



ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கி, ஜாமின் மறுக்கப்பட்டு, டில்லி திகார் சிறையில் இருக்கும் தன் மகள் கனிமொழியை, முன்னாள் முதல்வரும், தி.மு.க., தலைவருமான கருணாநிதி நேற்று நேரில் சந்தித்தார். பயப்படாமல் இருக்கும்படி ஆறுதல் கூறினார்.



ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராஜ்யசபா எம்.பி., கனிமொழியின் ஜாமின் மனுவை, கடந்த வெள்ளியன்று, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் நீதிபதி சைனி நிராகரித்ததால், அன்று மாலையே, திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.உடன் கனிமொழியின் தாயார் ராஜாத்தி டில்லி வந்தார். மறுநாள், பாட்டியாலா கோர்ட்டில் கனிமொழி ஆஜரான போது, மகளை கட்டிப்பிடித்து கண்ணீர் சிந்தினார் ராஜாத்தி.கோர்ட்டில் நடைபெற்ற உருக்கமான சந்திப்புக்கு பின், கனிமொழியின் தந்தை கருணாநிதி, எப்போது டில்லிக்கு வருவார் என்ற பரபரப்பு ஏற்பட்டது.கனிமொழி கைது செய்தி கேள்விப்பட்டவுடனே, கருணாநிதி, டில்லிக்கு கிளம்பலாம் என, முதலில் செய்திகள் வெளியாகின. ஆனால், அன்றைய தினம், நிருபர்களிடம் பேசிய அவர், "தற்போதைக்கு டில்லி செல்லும் திட்டம் இல்லை' என்று கூறினார்.அடுத்த நாள், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் காங்கிரஸ் தலைவர் சோனியா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சியில், கருணாநிதி கலந்து கொள்வார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.ஆனால், அந்த நிகழ்ச்சியில், தி.மு.க., சார்பில், டி.ஆர்.பாலு மட்டும் பங்கேற்றார். இது, தி.மு.க., - காங்கிரஸ் இடையே இணக்கமான உறவு இல்லை என்பதை வெளிப்படுத்தியது.



இந்நிலையில், நேற்று காலை, சென்னையிலிருந்து டில்லிக்கு வந்தார் கருணாநிதி. காலை, 11.30 மணிக்கு, டில்லி விமான நிலையம் வந்து சேர்ந்த அவர், அங்கிருந்து நேராக கான்மார்க்கெட் அருகில் உள்ள தாஜ்மான்சிங் நட்சத்திர ஓட்டலுக்கு விரைந்தார்.அங்கு, தி.மு.க ., எம்.பி.,க்கள் சிலருடன் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார். சிறிய ஓய்வுக்கு பின், மாலை, 5 மணிக்கு, ஓட்டலை விட்டு கிளம்பினார். அவருடன் ராஜாத்தி, கனிமொழியின் கணவர் அரவிந்தன், டி.ஆர்.பாலு ஆகியோர் உடன் சென்றனர். இரண்டு கார்கள் மற்றும் ஒரு எஸ்.பி.ஜி., வாகனம் புடைசூழ, திகார் சிறைக்கு சென்ற கருணாநிதி, சரியாக, 5.45 மணிக்கு உள்ளே சென்றார்.மீடியாக்கள் குவிந்திருந்த கேட்டை தவிர்த்து விட்டு, வேறுவழியாக, கருணாநிதியும், அவருடன் வந்தவர்களும் உள்ளே சென்றனர். அப்போது, சிறைக்கு வெளியே, எம்.பி.,க்கள் சிவா, ரித்தீஷ், ஜெயதுரை போன்றவர்கள் காத்திருந்தனர்.



கருணாநிதி உள்ளே சென்றபோது, அதற்கு முன்பாகவே, சந்திப்புக்கான ஏற்பாடு, முறைப்படி செய்யப்பட்டிருந்தது. அதாவது, 1ம் நம்பர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ராஜாவையும், 4ம் நம்பர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சரத்குமார் ரெட்டியையும், கனிமொழி அடைக்கப்பட்டிருக்கும், 6ம் நம்பர் சிறைக்கு அழைத்து வந்திருந்தனர். அருகில் உள்ள சிறை கண்காணிப்பாளர் அறையில், இவர்கள் மூன்று பேரும் காத்திருக்க, கருணாநிதி அங்கு சென்றார்.இந்த சந்திப்பின்போது, கருணாநிதியுடன் ராஜாத்தி, அரவிந்தன், துரைமுருகன், பொன்முடி, சண்முகநாதன் ஆகியோர் உடனிருந்தனர். உடன் சென்றிருந்த டி.ஆர்.பாலு, வெளியிலேயே நின்று கொண்டிருந்தார். தன்னை சந்திக்க வந்த தந்தை கருணாநிதியை பார்த்ததும் கனிமொழி சற்று உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கியதாகக் கூறப்படுகிறது. அவருக்கு, பயப்படாமல் இருக்கும்படி கருணாநிதி ஆறுதல் கூறியதாகத் தெரிகிறது.
நீண்ட இடைவெளிக்குப்பின் சந்திக்கும் ராஜாவிடமும் சில நிமிடங்கள் பேசிய கருணாநிதி, அவருக்கும் ஆறுதல் தெரிவித்தார். பின்னர், சரத்குமார் ரெட்டியிடமும் ஆறுதல் தெரிவித்துவிட்டு, தனது, 45 நிமிட சந்திப்பை முடித்துக் கொண்டு கருணாநிதி வெளியே வந்தார்.



மகளைச் சந்தித்த பின், கருணாநிதி நேராக விமான நிலையத்துக்கு சென்று சென்னைக்கு கிளம்ப திட்டமிட்டிருப்பதாக முதலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தன் சென்னை பயணத்தை ரத்து செய்துவிட்டதாக, அப்போது தான் தகவலும் கிடைக்க, திரும்பவும் தாஜ்மான்சிங் ஓட்டலுக்கே திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.இதற்கு மாறாக, அந்த ஓட்டல் வேண்டாம் என்றும், வேறு ஓட்டலில் தங்க ஏற்பாடு செய்யும்படியும் கருணாநிதி தெரிவித்து விட்டதாக கூறப்பட்டது. ஓட்டலில் தங்கியிருந்த கருணாநிதியை, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் நேற்றிரவு சந்தித்துப் பேசினார்.



ஏற்கனவே, கருணாநிதி சென்னையில் அளித்த பேட்டியில், "சோனியாவை சந்திக்கப் போவதில்லை' என, கூறியிருந்தார். சோனியா, நேற்று ஒரு நாள் அவசரப் பயணமாக காஷ்மீர் சென்றிருந்தார். பிரதமர் மன்மோகனும் எத்தியோபியா பயணம் மேற்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



இதற்கிடையில், ஸ்பெக்ட்ரம் வழக்கு நடைபெறும் பாட்டியாலா கோர்ட்டில் ஆஜராக, நேற்று, கனிமொழி வந்த போது, அவரை மத்திய ரசாயன அமைச்சர் அழகிரி மனைவி காந்தியும், அவரது மகன் துரை தயாநிதியும் சந்தித்தனர். கனிமொழி நிலைகண்டு கலங்கினார் காந்தி. அங்கிருந்த ராஜாத்தியுடனும் காந்தி பேசினார். அதேநேரத்தில், முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலினும் நேற்றிரவு டில்லி வந்தார்.



- நமது டில்லி நிருபர் -



http://www.dinamalar.com/News_Detail.asp?Id=245468



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கனிமொழிக்கு, கருணாநிதி ஆறுதல் : திகார் சிறையில் சந்தித்தார்  Empty Re: கனிமொழிக்கு, கருணாநிதி ஆறுதல் : திகார் சிறையில் சந்தித்தார்

Post by கலைவேந்தன் Tue May 24, 2011 11:47 am

சோகமான சந்திப்பு... ஆனாலும் ஏனோ இரக்கம் வரவில்லை..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கனிமொழிக்கு, கருணாநிதி ஆறுதல் : திகார் சிறையில் சந்தித்தார்  Empty Re: கனிமொழிக்கு, கருணாநிதி ஆறுதல் : திகார் சிறையில் சந்தித்தார்

Post by ரபீக் Tue May 24, 2011 12:51 pm

ஏன் பிறந்தாய் மகளே ,,ஏன் பிறந்தாயோ ?
(பின்னணியில் இந்த பாட்டு ஒலித்திருக்குமோ?)


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கனிமொழிக்கு, கருணாநிதி ஆறுதல் : திகார் சிறையில் சந்தித்தார்  Empty Re: கனிமொழிக்கு, கருணாநிதி ஆறுதல் : திகார் சிறையில் சந்தித்தார்

Post by உமா Tue May 24, 2011 12:55 pm

ரபீக் wrote:ஏன் பிறந்தாய் மகளே ,,ஏன் பிறந்தாயோ ?
(பின்னணியில் இந்த பாட்டு ஒலித்திருக்குமோ?)


சோகத்திலும் ஒரு சுகம்...
உங்க பாட்டு..... கனிமொழிக்கு, கருணாநிதி ஆறுதல் : திகார் சிறையில் சந்தித்தார்  168300
கனிமொழிக்கு, கருணாநிதி ஆறுதல் : திகார் சிறையில் சந்தித்தார்  168300



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கனிமொழிக்கு, கருணாநிதி ஆறுதல் : திகார் சிறையில் சந்தித்தார்  Empty Re: கனிமொழிக்கு, கருணாநிதி ஆறுதல் : திகார் சிறையில் சந்தித்தார்

Post by ரபீக் Tue May 24, 2011 12:57 pm

உமா wrote:
ரபீக் wrote:ஏன் பிறந்தாய் மகளே ,,ஏன் பிறந்தாயோ ?
(பின்னணியில் இந்த பாட்டு ஒலித்திருக்குமோ?)


சோகத்திலும் ஒரு சுகம்...
உங்க பாட்டு..... கனிமொழிக்கு, கருணாநிதி ஆறுதல் : திகார் சிறையில் சந்தித்தார்  168300
கனிமொழிக்கு, கருணாநிதி ஆறுதல் : திகார் சிறையில் சந்தித்தார்  168300

எதுவும் உள்குத்து இல்லையே ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கனிமொழிக்கு, கருணாநிதி ஆறுதல் : திகார் சிறையில் சந்தித்தார்  Empty Re: கனிமொழிக்கு, கருணாநிதி ஆறுதல் : திகார் சிறையில் சந்தித்தார்

Post by உமா Tue May 24, 2011 1:01 pm

ரபீக் wrote:
எதுவும் உள்குத்து இல்லையே ?

நிச்ச்யம் இல்லை அண்ணா....
கனிமொழிக்கு, கருணாநிதி ஆறுதல் : திகார் சிறையில் சந்தித்தார்  359383



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கனிமொழிக்கு, கருணாநிதி ஆறுதல் : திகார் சிறையில் சந்தித்தார்  Empty Re: கனிமொழிக்கு, கருணாநிதி ஆறுதல் : திகார் சிறையில் சந்தித்தார்

Post by இரா.எட்வின் Tue May 24, 2011 2:45 pm

கலைவேந்தன் wrote:சோகமான சந்திப்பு... ஆனாலும் ஏனோ இரக்கம் வரவில்லை..!

எதற்கு தோழர் இறக்கம் வரணும் ?


”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

கனிமொழிக்கு, கருணாநிதி ஆறுதல் : திகார் சிறையில் சந்தித்தார்  38691590

இரா.எட்வின்

கனிமொழிக்கு, கருணாநிதி ஆறுதல் : திகார் சிறையில் சந்தித்தார்  9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்


பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

கனிமொழிக்கு, கருணாநிதி ஆறுதல் : திகார் சிறையில் சந்தித்தார்  Empty Re: கனிமொழிக்கு, கருணாநிதி ஆறுதல் : திகார் சிறையில் சந்தித்தார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum