ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடுதலைப் புலிகள் போராடியிருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்…?

2 posters

Go down

விடுதலைப் புலிகள் போராடியிருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்…? Empty விடுதலைப் புலிகள் போராடியிருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்…?

Post by Guest Thu May 19, 2011 7:20 am

புதுமாத்தளனும், முள்ளிவாய்க்காலும் தவிர்க்கப்பட்டிருக்குமா..?
சிங்களவரின் படுகொலைகளுக்கு நினைவு தினங்கள் தீர்வு தருமா..?

புலிகள் என்றொரு இயக்கம் தோன்றாமலும், போராட்டம் என்ற வடிவம் உருவாகாமலும் இருந்திருந்தால் ஈழத்தில் தமிழர்கள் நின்மதியாக வாழ்ந்திருக்க முடியுமா..?

புதுமாத்தளன் சோகங்களின் இரண்டாவது ஆண்டு நிகழ்வில் கொஞ்சம் வித்தியாசமாக சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

1956, 1958, 1978, 1983 என்று சிங்களவர்கள் நடத்திய கலவரங்கள் புலிகள் போராடாமல் இருந்தபோது வந்தவைதான்.

இதில் கலவரம் என்ற சொல் முக்கியமானது.

நிதானமாக இருக்க முடியாத ஓர் இனம் அடிக்கடி கலவரத்தில் ஈடுபடும்.. எனவேதான் புலிகள் என்ற அமைப்பு வந்தாலும் வராவிட்டாலும் புதுமாத்தளனில் கொல்லப்பட்ட மரணங்கள் கலவரம் என்ற வடிவில் வந்து சேர்ந்திருக்கும். கலவரம் பண்ணாமல் சிங்கள இனத்தால் வாழ முடியாது என்பதே வரலாறு. புலிகள் போராடினாலும், போராடாவிட்டாலும் சிங்கள சமுதாயத்தின் கலவர மனோநிலை அடங்கிப் போகாது.

சரி.. புலிகள் போராடியதால் என்ன நடந்தது..?

போராட்டக்களத்தில் நின்றவர்கள், அவர்களை நம்பி வன்னியில் இருந்தவர்கள், தளபதிகள், முக்கிய உறுப்பினர் உட்பட அனைவரும் கொல்லப்பட்டுவிட்டனர்..

இதற்கு யார் பொறுப்பு…?

இந்தியா என்று கோபப்படுகிறோம்…!

உலக சமுதாயம் காரணம் என்று விரக்தியடைகிறோம்..!

நமது கோபத்திலும் விரக்தியிலும் நியாயம் உண்டு…

ஆனால்..

இதற்கு நாமும் பொறுப்பு என்று நமது மனச்சாட்சியை தொட்டு வெளிப்படையாகக் கூற மறுக்கிறோம்…

இதற்கு ஓர் உதாரணம் :

இரண்டாவது உலக மகாயுத்தம் முடிந்ததும் நூரம்பேர்க் ஜட்ஜ்மன்ற் என்ற பிரபலமான வழக்கு நடைபெற்றது… அதில் போர்க் குற்றவாளிகள் தண்டனை பெற்றார்கள்..

போர் நடக்கும்போது சரணடையும், கைது செய்யப்படும் மனிதர்களை நடாத்துவதற்கு ஒரு வழிமுறை இருக்கிறது. நோயுற்ற போர்க் கைதிகளைக்கூட இறக்கவிடக்கூடாது என்ற விதி அதில் இருக்கிறது.

எதிரிகள் நமது கையில்… கேட்கப்பார்க்க நாதியில்லை என்று ஜேர்மனிய நாஜிகள் நடாத்திய போர்க்குற்றத்திற்காக பலரை தூக்குமரத்தில் ஏற்றியது இந்த வழக்கு. இம்மாதம் வெளியான வரலாறு டேனிஸ் சஞ்சிகையில் இந்த வழக்கு வெளியாகியுள்ளது. காயப்பட்டவர்களை பராமரிக்க மறுத்தவர்களில் தூக்குத் தண்டனை பெற்ற தளபதிகளின் பெயர்களும் பட்டியலாக வந்துள்ளது.

மகிந்தராஜபக்ஷ, கோத்தபாய ராஜபக்ஷ, டக்களஸ் தேவானந்தா போன்றவர்கள் இந்த நூரம்பேர்க் ஜட்ஜ்மன்ரை வாசித்துப் பார்க்க வேண்டும்.

அந்த நூரம்போர் ஜட்ஜ்மன்ற் ஒரு மகத்தான கவலையை வெளிப்படுத்துகிறது.. ஏன் இந்த மரணங்கள்.. இதற்கு யார் பொறுப்பு என்ற கேள்வியை ஏற்படுத்துகிறது…

உலகம்…
அத்தனை மதங்களும்…
அத்தனை சமுதாய தாபனங்களும்…
அத்தனை கல்விமான்களும்..
அத்தனை ஊடகங்களும்..
அத்தனை நாடுகளும் பொறுப்பு… என்று அந்த வாதாட்டம் முடிகிறது..

இதில் பொறுப்பு என்ற சொல் மிக முக்கியம்..

பாப்பரசர், அமெரிக்க அதிபர்கள், சாமியார்கள், இஸ்லாமிய காமய்னிகள், புத்தமத குருக்கள், மார்க்சிஸ்டுக்கள், ஆஸ்திகர், நாஸ்திகர், பொதுமக்கள் என்று அனைவருமே பொறுப்பற்று நடந்ததால்தான் இந்த உலக யுத்த அழிவு வந்ததென நூறம்பேர்க் வழக்கு சுட்டிக்காட்டுகிறது.

இதில் நமக்கு தொடர்பில்லை என்று வேடம்போடுவோர் ஏமாற்றுப் பேர்வழிகளே..

புதுமாத்தளனும், முள்ளிவாய்க்காலும் 140.000 பேரைக் கொன்றொழித்த போர். இந்தத் தவறும் யூதப் படுகொலை போன்றதே.. இதற்கும் மேலே சொன்ன அத்தனைபேருமே பொறுப்பு..

இதனால் தமிழர் மட்டுமல்ல..

புத்த, இந்து, கிறீத்தவ, இஸ்லாம் மதங்கள் தோல்வியடைந்திருக்கின்றன..
இந்தியா, சீனா, ஐ.நா, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, ரஸ்யா அனைவரும் தோல்வியடைந்திருக்கிறார்கள்…

இப்போது ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கை வெளியாகியிருக்கிறது…

புலிகள் மீது ஆறு பெரும் குற்றங்களும்…
சிங்கள இனவாத அரசின் மீது ஐந்து பெரும் குற்றங்களும் சுமத்தப்பட்டுள்ளன..

இனி என்ன செய்யலாம்…

படுகொலைகளின் இரண்டாவது ஆண்டு நினைவு வந்துவிட்டது தீபம் ஏற்றலாமா..?
யூலைக்கலவரத்திற்கு தீபம் ஏற்றி.. ஏற்றி.. மறந்து போனதுபோல இதுவும் ஒரு தொடர் கதையா..?
ஏற்றும் தீபங்களை மனச்சாட்சியோடு உற்றுப் பாருங்கள்..!
அந்த நெருப்பு உங்களிடம் ஒரு கேள்வி கேட்கும்..!
நீங்கள் இதற்கு பொறுப்பில்லையா என்று…?

பொறுப்பில்லை என்று சொல்ல எவராலும் முடியாது… எல்லோருமே ஏதோ ஒரு வகையில் பொறுப்பாளிகளே..

இனியாவது நாம் பொறுப்புடன் நடக்க வேண்டும்…!

ஐ.நா அறிக்கை சிங்கள இனவாத அரசை புதுமாத்தளனைவிட ஆபத்தான பொறிக்குள் தள்ளிக் கொண்டிருக்கிறது…

இலங்கைத் தமிழ் மக்களுக்கு தமிழீழத்தை எழுதிக் கொடுத்தால்கூட, தப்ப முடியாத வரலாற்று சேற்றை தன் முகத்தில் அது அப்பியிருக்கிறது..

ஐ.நா அறிக்கையில் இருந்து சிறீலங்காவை காப்பாற்ற இந்தியா, சீனா, ரஸ்யா போன்ற நாடுகளாலும் முடியாது என்பதே நிதர்சனம்..

இது ஈழத் தமிழினத்திற்கு ஓர் அரிய வாய்ப்பு..

இதை வென்றெடுக்க வேண்டும்…

அதை விளங்கியவர்கள், முன்னெடுக்க தகுதியானவர் எவரும் இப்போது உள்நாட்டிலும், வெளி நாடுகளிலும் ஆடுகளத்தில் இல்லை..

ஆகவே..

மக்களே.. தூய ஜனநாயக போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டும்.. எகிப்து, ரூனிசியா போல..

இதுவரை அரசியல் சாயம் பூசாத புதிய முகங்கள் ஜனநாயக போராட்டத்திற்கு தலைமை தாங்க வேண்டும்.

மத்திய கிழக்கு, வடக்கு ஆபிரிக்காவில் நடைபெறும் ஜனநாயகப் போராட்டம்போல மக்கள் போராட்டம் மலர வேண்டிய காலம் இது..

ஐ.நா அறிக்கையை துணையாக வைத்து, இந்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினால் ஈழத் தமிழ் மக்கள் சில முக்கிய இலக்குகளை குறுங்காலத்தில் தொட்டுவிட முடியும்.

பாலஸ்தீன பிரச்சனை முடிக்கப்பட்டு, பாலஸ்தீன ஸ்ரேற் வரப்போகிறது.. அதோடு இணைந்த போராட்டமான ஈழத் தமிழர் போராட்டமும் ஒரு நல்ல இலக்கை எட்ட வாய்ப்புள்ளது.

இறந்த பொதுமக்கள், மாவீரர் அனைவருடைய இறப்புகளுக்கும் நாமும் பொறுப்பேற்று அவர்கள் கனவுகளை நிறைவேற்றி வைக்க இதுதான் தருணம்..

ஒரு காலமும் சமுதாயம் பின்னடைவதில்லை.. அது ஒவ்வொரு காலத்திலும் வளர்ச்சியடைந்து செல்கிறது என்பது உலகப்புகழ் பெற்ற பழமொழி..

ஈழத் தமிழினமும் பின்னடைந்துவிடாது, அது வரலாற்றின் நியதி..

தீபத்திற்கு ஓர் அர்த்தமிருக்கிறது…

எண்ணெய் அறிவு..
திரி நெறி..
நெருப்பு உணர்ச்சி..

அறிவாகிய எண்ணெய் வற்றினால் உணர்ச்சியாகிய நெருப்பு நெறியாகிய திரியை எரித்து எல்லாவற்றையும் நாசமாக்கிவிடும்..

இறந்தவர்களை அஞ்சலிக்க தீபம் ஏற்றுவது இந்த மூன்று நிலையிலும் நாம் சமமாக இருக்கிறோம் என்று விளக்கத்தான். இந்த மூன்று நிலையையும் நாம் சமமாக வைத்திருந்தால் நமது விடுதலைத் தீபமும் ஊடுபற்றியிருக்காது..

புதுமாத்தளன் சோகங்களுக்கு தீபமேற்றுவோர் அந்தத் தீபங்களை ஒரு தடவை உற்று நோக்குங்கள்..

சிந்தனையை மாற்றிப் போடுங்கள்..

இந்த இரண்டாண்டு நினைவில் உங்களுக்காக இரண்டு நம்பிக்கைகள்..

ஒன்று…

புலிகள் போராடியிருக்காவிட்டால் ஒட்டுமொத்தத் தமிழினமுமே அழிக்கப்பட்டிருக்கும்..

இரண்டு…

புலம் பெயர் தமிழன் என்ற பலமிக்க சக்தி உலகில் பிறந்திருக்காது..

இந்த இரண்டு விடயங்களையும் மனதில் ஏந்தி நடவுங்கள்..

மூன்றாவதாக ஈழத் தமிழினத்திற்கான விடிவு வரும்…ஏனென்றால் புதுமாத்தளன் இழப்புக்களுக்கு மூன்றாவது ஆண்டு விளக்கேற்றும்போது ஒரு விடிவு வந்திருக்க வேண்டும்..

இரண்டாவது விளக்கின் தொடர்கதையாக மூன்றாவது விளக்கை ஏற்றினால் அது அஞ்சலியல்ல சடங்கு.. இதை இன்றாவது புலம் பெயர் ஊடகங்களை நடாத்துவோர் புரிந்து மக்களுக்குப் புது வழி காட்டவேண்டும்.

அலைகள் புதுமாத்தளன் இரண்டாவது ஆண்டு பார்வை.
avatar
Guest
Guest


Back to top Go down

விடுதலைப் புலிகள் போராடியிருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்…? Empty Re: விடுதலைப் புலிகள் போராடியிருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்…?

Post by jeylakesengg Thu May 19, 2011 9:56 am

புல்லை கண்டு நடுங்கும் மனிதன் இருக்கும் போதே சாகிறான்
புல்லை கத்தி ஆக்கும் மனிதன் இறந்த பின்பும் வாழ்கிறான்
தன்னை மட்டும் காத்து கொள்ளும் வாழ்வில் இல்லை நன்மையே !
தன்னை போல
பிறரை காக்கும் தர்மம் வெல்லும்
உண்மையே !


விடுதலைப் புலிகள் போராடியிருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்…? 678642
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down

விடுதலைப் புலிகள் போராடியிருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்…? Empty Re: விடுதலைப் புலிகள் போராடியிருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்…?

Post by SK Thu May 19, 2011 12:25 pm

நன்றி நன்றி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

விடுதலைப் புலிகள் போராடியிருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்…? Empty Re: விடுதலைப் புலிகள் போராடியிருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்…?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum