ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

`செல்போன்’ ஆராய்ச்சி…!

2 posters

Go down

`செல்போன்’ ஆராய்ச்சி…!  Empty `செல்போன்’ ஆராய்ச்சி…!

Post by ந.கார்த்தி Wed May 18, 2011 6:26 pm

இன்றைக்கு பலருக்கும் செல்போன் அவர்களது உடம்பின் ஓர் அங்கமாகவே ஆகிவிட்டது. செல்போன் இல்லாமல் ஒருநாளை ஓட்டுவதை அவர்களால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. உலக அளவிலான ஓர் ஆய்வு அதை உறுதிபடுத்துகிறது. பலர், தங்கள் செல்போனை இழப்பதைவிட பர்ஸை இழக்கவும் தயார் என்று தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான ஆய்வை மேற்கொண்ட, சந்தை ஆய்வு நிறுவனமான `சைனோவேட்’, இன்று வாழ்க்கைக்கான `ரிமோட் கண்ட்ரோலாக’ செல்போன் உள்ளது என்று தெரிவித்துள்ளது. தற்போது செல்போன் எல்லா இடங்களிலும் காணபடும் ஒன்றாக ஆகிவிட்டது, ஒன்றுக்கும் மேற்பட்ட செல்போன் வைத்திருப்பவர்களும் அதிகரித்து வருகின்றனர் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த ஆய்வில் கனடா, டென்மார்க், பிரான்ஸ், மலேசியா, ஆலந்து, பிலிபைன்ஸ், ரஷியா, சிங்கப்பூர், தைவான், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 11 நாடுகளைச் சேர்ந்த 8 ஆயிரம் பேர் பதில் கூறினர். அவர்களில் முக்கால்வாசி பேர், தங்களுடன் எப்போதும் செல்போனை எடுத்துச் செல்வதாகத் தெரிவித்தனர். குறிப்பாக ரஷியர்களும் சிங்கப்பூர்காரர்களும் செல்போனை பிரிவதே இல்லை என்ற தகவல் ஆச்சரியமானது.

சிங்கப்பூர்காரர்களிடமும் தைவான் மக்களிடமும் இந்த ஆய்வை மேற்கொண்டபோது அந்த நாட்டு மக்களில் நான்கில் ஒருவர், தங்கள் பர்ஸை விட செல்போன் தொலைந்தால்தான் அதிகக் கவலைபடுவோம் என்று தெரிவித்துள்ளனர். முன்றில் இரண்டு பங்கினர், தாங்கள் செல்போனுடன்தான் படுக்கைக்கு போவதாகவும், அதை `ஸ்விட்ச் ஆப்’ செய்வதே இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். `ஸ்விட்ச் ஆப்’ செய்ய நினைத்தாலும், தாங்கள் ஏதாவது முக்கியமான அழைப்பை `மிஸ்’ செய்துவிடுவோமோ என்ற பயத்தில் அணைப்பதில்லை என்று கூறிள்ளனர்.

“சில நேரங்களில் செல்போன் நேரடியாக பார்த்து பேசுவதை விடச் சிறந்ததாக உள்ளது. அவை எங்களின் வாழ்க்கைக்கான தொடர்புகள் ஆகும்” என்று தைவானைச் சேர்ந்த சைனோவெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜென்னி சாங் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

செல்போனை பயன்படுத்துவோரில் ஏறக்குறைய பாதி பேர், தாங்கள் விரும்புபவரை தங்கள் ஆசை வலையில் விழ வைக்க எஸ்.எம்.எஸ்.-ஐ பயன்படுத்துவதாகக் கூறிள்ளனர். `டேட்டிங்’குக்கான ஒப்புதலை பெற பலர் செல்போனை பயன்படுத்துவதாகவும், அதே அளவு எண்ணிக்கையிலானோர் தங்கள் காதலை முறித்துக்கொள்ள செல்போனை உபயோகிப்பதாகவும ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

செல்போன்கள் அவற்றின் பிரதான உபயோகமான பேசுவது, குறுந்தகவல் அனுப்புவது தவிர, அதிகமாக பயன்படுத்தபடுவது அலாரம் வைக்க, படம் பிடிக்க மற்றும் `கேம்ஸ்’ விளையாட ஆகும். மின்னஞ்சல் மற்றும் இணைய வசதியை பொறுத்தவரை 17 சதவீதம் பேர் தங்கள் செல்போன்களில் அதை பயன்படுத்துவதாகத் தெரிவித்தனர். இவ்விஷயத்தில் முன்னணியில் இருப்பவர்கள் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாட்டு மக்கள். பத்தில் ஒருவர், செல்போன் வழியாகத் தினமும் சமுக நட்பு இணையதளங்களான `பேஸ்புக்’, `மைஸ்பேஸ்’ ஆகியவற்றை பயன்படுத்துகின்றனர்.

“செல்போன்களில் வசதிகள் பெருக பெருக, பல தொழில்களும் பெரும் சவாலை எதிர்நோக்க ஆரம்பித்திருக்கின்றன. அதேநேரம், செல்போன் தயாரிப்பாளர்களுக்கும், செல்போன் சேவை அளிப்பவர்களுக்கும் வேலை வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன” என்கிறார், சைனோவெட் நிறுவனத்தின் சர்வதேச ஊடகத் தலைவர் ஸ்டீவ் கார்ட்டன்.

செல்போன்களில் வசதிகள் அதிகரித்தாலும், அதை பயன்படுத்துவோரில் 37 சதவீதம் பேர் தங்கள் செல்போனில் உள்ள அனைத்து வசதிகளையும் பயன்படுத்தத் தெரியாது என்று கூறிள்ளனர்.

நீங்களும் செல்போன் உபயோகிப்பவராகத்தான் இருப்பீர்கள்.

ஒரு நாளாவது செல்போனை `ஆப்’ செய்து ஒரு ஓரத்தில் போட்டுவிட்டு இருந்து பாருங்கள். நிச்சயம் உங்களால் முடியவே முடியாது. பளிச் பளிச் என்று அவ்வபோது வந்து விழும் எஸ்.எம்.எஸ். தகவல்களை படித்த உங்கள் கண்களுக்கும்… அடிக்கடி மிஸ்டு கால் கொடுத்த கஞ்ச நபர்களை செல்லமாக திட்டித் தீர்த்த உங்கள் உதடுகளுக்கும்… அது என்னவோ போல் இருக்கும்.

அதுவும், காதலர்கள் என்றால்… அவர்களால் செல்போனை பிரிந்து ஒரு மணிநேரம்கூட இருக்க முடியாது. சிலநேரங்களில் அன்பு மழையை கொட்டிக்கொண்டும், பலநேரங்களில் கிளுகிளுப்பை சேர்த்துக் கொண்டும் வந்து சேரும் எஸ்.எம்.எஸ்.களை பார்த்து, படித்து, ரசித்து பழக்கபட்டவர்கள், செல்போன் இல்லை என்றால் திண்டாடித்தான் போவார்கள்.

சிலர் இருக்கிறார்கள்… ஏ.டி.எம். கார்டு பாஸ் வேர்டு முதல் கேர்ள் பிரெண்ட் அட்ரஸ் வரை எல்லாவற்றைம் தங்கள் மொபைலில் பதிவு செய்து வைத்திருப்பார்கள்.

இவர்களால் தகவல் களஞ்சியமாக மாறிபோன செல் `மிஸ்’ ஆகிவிட்டால் எப்படி இருக்கும்? தலையே வெடித்து விடும்போல் இருக்குமா இல்லையா?

இதாவது பரவாயில்லை. இன்னும் சிலரோ, தங்களது படுக்கையறை அந்தரங்கங்களைக்கூட செல்போனில் படம் பிடித்து பதிவு செய்து வைத்துக்கொண்டு அவ்வபோது பார்த்து ரசிக்கிறார்கள். இந்த அந்தரங்க காட்சிகளைக் கொண்ட செல்போன் `மிஸ்’ ஆகி, அந்த காட்சிகள் உலகம் முழுவதும் உலா வந்துவிட்டால்… மானம் போய் விட்டால்…
இதை தவிர்க்க என்ன செய்யலாம்?

“இப்போதெல்லாம் மாமனாரிடம் தலை தீபாவளி, தலை பொங்கலுக்கு எந்த மருமகனும் காரோ, பைக்கோ எதிர்பார்பதில்லை. மார்க்கெட்டில் புதிதாக வந்து இறங்கியிருக்கும் செல்போனையே கேட்டு `டிமாண்ட்’ செய்கிறார்கள்.

விதவிதமான செல்போன்களின் வருகையால் இன்றைய காதலர்களுக்குத்தான் கொண்டாட்டம். கிளாசைக்கூட கவனிக்காமல் எங்கோ இருக்கும் காதலனுக்கு மெஸேஜ் அனுப்புவதும், எங்கோ இருக்கும் முகம் தெரியாத ரகசிய சிநேகிதிக்கு மெஸேஜ் அனுப்பிக் கொண்டிருபதும் இன்றைய பேஷனாகி போய்விட்டது. தன்னை மறந்து, உலகத்தை மறந்து, மொட்டை மாடியில் நடந்தபடியே மணிக்கணக்காக செல்போன் முலமாக பேசி இன்றைய காதலர்கள் காதலித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படி, எல்லாவற்றுக்கும் காரணமான செல்போன் தொலைந்துபோய்விட்டால்…? சொல்லும்போதே தலை சுற்றுகிறதே… ஒருவர் அவரது செல்போன் தொலைந்துபோய்விட்டது தெரிய வந்தால் பாதி பைத்தியக்காரனாகி விடுவார். எங்கே வெச்சோம்? அதன்பிறகு எங்கே போச்சு? என்று மீண்டும் மீண்டும் யோசிப்பார். குட்டி போட்ட பூனையாக அந்த இடத்தையே சுற்றி சுற்றி வருவார். நேரம் ஆக ஆக எரிச்சல் வரும்… கோபம் வரும்… உச்சக்கட்ட டென்ஷனுக்கு சென்று விடுவார். முக்கியமான தொடர்புகள் எல்லாம் போச்சே என்று மனிதர் புலம்ப ஆரம்பித்துவிடுவார். அவரது நம்பருக்கு அவரே தொடர்பு கொள்ள, `நீங்கள் தொடர்பு கொண்ட நம்பர் சுவிட்ச் ஆப் செய்யபட்டுள்ளது’ என்று பதில் வரும். அதிலேயே அவர் நொந்துபோய் விடுவார்.

என்னதான் புது மொபைல் பின்னர் வாங்கி உபயோகித்தாலும், கொஞ்ச நாட்களுக்காவது முதலில் பயன்படுத்திய மொபைலின் புராணத்தையே பாடிக் கொண்டிருபார். நமது வாழ்க்கையில் முதல்ல நடக்கும் எந்தவொரு விஷயத்தையும் மறக்க முடியாது இல்லியா..?”

இது ஒருபுறம் இருக்க… பாய் பிரெண்ட்களை விட செல்போன் மீதுதான் இன்றைய பெண்களுக்கு காதல்-மோகம் அதிகம் என்று கூறி திகைக்க வைக்கிறது ஆஸ்திரேலியாவில் நடத்தபட்ட ஒரு ஆய்வு.

பாய் பிரெண்ட்களை பிரிவதால் ஏற்படும் சோகத்தைவிட, மொபைல் `மிஸ்’ ஆனால் ஏற்படும் சோகமே அதிகம் என்று, அந்த ஆய்வில் கலந்துகொண்ட பெண்கள் கூறி, ஆய்வாளர்களையே திக்குமுக்காட வைத்திருக்கிறார்கள்.

இந்த உலகிலேயே உங்களுக்கு பிடித்தமானது எது? என்ற கேள்விக்கு, தங்களது அம்மாதான் என்று கருத்து தெரிவித்துள்ள பெரும்பாலான பெண்கள், இரண்டாவது இடத்தை தங்களது புகைபடங்களுக்கும், முன்றாவது இடத்தை மொபைல் போனுக்கும் கொடுத்திருக்கிறார்கள். தங்களது கேர்ள் பிரெண்டுக்கு நான்காவது இடத்தை அளித்துள்ள அவர்கள், பாய் பிரெண்ட்களுக்கு அதற்கு அடுத்த இடத்தையே கொடுத்து சப்பு கொட்டியுள்ளனர்.

செல்போன் பயன்படுத்துவதைக் காட்டிலும், அதை பாதுகாப்பாக வைத்திருப்பது இன்னும் முக்கியமான விஷயம்.
TMT


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


`செல்போன்’ ஆராய்ச்சி…!  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

`செல்போன்’ ஆராய்ச்சி…!  Empty Re: `செல்போன்’ ஆராய்ச்சி…!

Post by றினா Wed May 18, 2011 6:31 pm

nanri `செல்போன்’ ஆராய்ச்சி…!  2825183110


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum