Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்புள்ள தேர்தல் கமிஷனருக்கு, ஆனந்தி எழுதுவது
3 posters
Page 1 of 1
அன்புள்ள தேர்தல் கமிஷனருக்கு, ஆனந்தி எழுதுவது
13.05.2011 : ஐயா, வணக்கம் : நடந்து முடிந்த தேர்தலில், ரொம்பவும் தான் ஆட்டம் போட்டுவிட்டீர்கள். இப்படியே உங்கள் அட்டகாசம் தொடருமானால், ஆளுங்கட்சியினரால், வரும் காலங்களில் தேர்தல் கமிஷன் எப்படியெல்லாம் அடக்கப்பட்டு, பல் பிடுங்கிய பாம்பாக அடங்க நேரும் என்பதை, என் கற்பனைக்கு எட்டியவரை, உங்களுக்கு எச்சரிக்கையாக எழுதுகிறேன்.
தேர்தல் கமிஷனர் என்பவர், ஐ.ஏ.எஸ்., அதிகாரியாகவோ, பதவி உயர்வில் வருபவராக இல்லாமல், அவரையும் ஒரு தேர்தல் மூலமாகவே, ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கும் சட்டம் கொண்டு வரப்படும். இப்படி தேர்வாகும் கமிஷனர், தான்தோன்றியாக, சட்டாம்பிள்ளை தனமெல்லாம் செய்யாமல், தேர்தல் அறிவிப்பதோடு நிறுத்தி, மற்ற நடைமுறைகளை, அந்தந்த ஆளும் கட்சிகளிடம் கேட்டறிந்து தேர்தல் நடத்த வேண்டும்.
வேட்பாளர்களின் சொத்து கணக்கையெல்லாம், உங்களுக்கு சொல்ல வேண்டுமென்பது எத்தனை அயோக்கியத்தனம்? அவர்கள் கஷ்டப்பட்டு சேர்த்த சொத்தை பற்றி, உங்களுக்கு ஏன் சொல்ல வேண்டும். ஆகவே, இதை பற்றி விவரம் கேட்கும் கமிஷனரை, சட்டப்படி தண்டிக்க சட்டம் கொண்டு வரப்படும். ஆண்டுதோறும் வந்துபோகும் பண்டிகைகள், திருவிழாக்களை கொண்டாடும் செலவுகளுக்கெல்லாம், கட்டுப்பாடு இல்லாத போது, ஐந்தாண்டுக்கு ஒரு முறை கொண்டாடப்படும் தேர்தல் திருவிழா செலவுக்கு மட்டும் ஏன் கட்டுப்பாடு? பேனர், பிளக்ஸ் போர்டு தயாரிப்பாளர்கள் நலம் கருதியும், சுவர் விளம்பர தொழிலாளர்கள் நலன் கருதியும் இந்த கட்டுப்பாடு நீக்கப்படும். இந்த பணியாளர்களின் நலத்தை கருத்தில் கொண்டு, வாக்காளர்களின் வீட்டு சுவர்களை, விளம்பரம் எழுத வாங்கி தருவது, தேர்தல் கமிஷனின் பொறுப்பு என்பதும் சட்டமாக கொண்டு வரப்படும்.
தேர்தல் சமயங்களில் உள்நாட்டு, வெளிநாட்டு, பணபுழக்கம் தடையின்றி நடைபெற, தக்க வகையில், சட்டம் தளர்த்தப்படும். வேட்பாளர் ஒருவர், ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஐந்து கோடி ரூபாய் வரை பண பரிவர்த்தனை செய்கிறாரா என்பதை கமிஷன் கண்காணிக்க வேண்டும்; அது ஹவாலா பணமாக இருந்தாலும் தவறில்லை. அப்படி பணபரிவர்த்தனை செய்ய இயலாத வேட்பாளர்களை எச்சரிக்க வேண்டும். அப்படியும் அவர்களால் இதை செய்ய முடியாதபட்சத்தில், அவர்கள் தேர்தலில் நிற்க தகுதி இல்லாதவர்களாக அறிவிக்க வேண்டும்.
வேட்பாளர்கள் வீடுதோறும் சென்று ஓட்டுக்கு பணம் கொடுப்பது இயலாமல் போவதால், அதற்கான பண பட்டுவாடா மையங்களை தேர்தல் கமிஷனே அமைத்து கொடுத்து, அனைத்து வாக்காளர்களும் அந்த பயனை பெற்றுவிட்டனரா என கண்காணிப்பது கமிஷனின் கடமை. பணம் வாங்க வரும் வாக்காளர்கள், தங்கள் வாக்காளர் அடையாள அட்டையை காண்பித்து, அந்தந்த கட்சிகளின் முத்திரையை பெற வேண்டும். ஒருவர் ஒரு கட்சியிடம் மட்டுமே ஓட்டுக்காக பணம் பெறலாம். அப்படி பணம் பெற்ற வாக்காளர் அதே கட்சிக்கு ஓட்டு போடுகிறாரா என்பதை, கண்காணிப்பு கேமரா மூலம் கமிஷன் பதிவு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
எத்தனை சதவீதம் ஓட்டு விழுகிறதோ, அதில் குறைந்தபட்சம், 25 சதவீதமாவது கள்ள ஓட்டாக இருக்க வேண்டும் என்பதற்கான சட்ட திருத்தம் இடம் பெறும். குறைந்தபட்ச கள்ள ஓட்டுகளை போடச் செய்வது, கமிஷனின் முக்கிய கடமை. இதற்காக அந்தந்த பகுதி திருமண மண்டபங்கள், பள்ளிக்கூடங்கள் போன்ற முக்கியமான இடங்களை, தேர்தல் கமிஷனின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும். கள்ள ஓட்டிற்கு போதிய திருவாளர்களை, அந்தந்த மாநிலங்களில் கிடைக்காத பட்சத்தில், அவர்களை வெளிமாநிலங்களிலிருந்தோ, அயல் நாடுகளிலிருந்தோ கொண்டு சேர்க்க கமிஷனுக்கு போதிய உரிமைகள் வழங்கப்படும். அப்படி இறக்குமதி செய்யும் கள்ள வாக்காளர்களின் விமான பயண செலவு, தங்கும் வசதி, சாப்பாட்டு செலவு இத்தனைக்கும் கமிஷனே பொறுப்பு. அதற்கான தொகையை பட்ஜெட்டில் கேட்டு, பெற்றுக் கொள்வது கமிஷனின் கடமை.
இந்த தேர்தலில் ஓட்டு எண்ணுவதை அநியாயத்திற்கு ஒரு மாதத்திற்கு தள்ளி வைத்த நீங்கள், அடுத்து வரும் தேர்தல்களில் அதையே ஒரு ஆண்டு, ஏன் ஐந்து ஆண்டு கூட தள்ளி வைக்கும் துணிச்சல் பெற்றுவிடுவீர்கள். ஆகவே, இந்த தேர்தலில் யார், யார் ஓட்டு போட்டனர் என்பதையும் கேமராவில் பதிவு செய்தது போல, யார், யாருக்கு ஓட்டு போட்டனர் என்பதையும் கேமராவில் பதிவு செய்து, உடனுக்குடன் வெளியிட வேண்டும். இப்படி உத்தரவு போட்டால் தான், உங்கள் கொட்டம் அடங்கும்.
இத்தனை பொறுப்புகளோடு நீங்கள் செயல்படப்போவதால், தேர்தல் முடிந்து அடுத்த ஆட்சி ஏற்படும் சூட்டோடு, அந்தந்த கட்சியின் விருப்பத்திற்கேற்ப, அந்த தேர்தல் கமிஷனர், அதிகாரிகள் வெளிநாடு சுற்றுப்பயணத்திற்கோ அல்லது நிரந்தரமாக ஓய்வு பெற வீட்டிற்கோ உடனே அனுப்பப்படுவர்; சந்தோஷம் தானே!
இப்படிக்கு, ஆனந்தி (சென்னை சேலையூரை சேர்ந்த வாசகர் எஸ்.கார்த்திகேயன் எழுதிய கடிதம்.)
தினமலர்
தேர்தல் கமிஷனர் என்பவர், ஐ.ஏ.எஸ்., அதிகாரியாகவோ, பதவி உயர்வில் வருபவராக இல்லாமல், அவரையும் ஒரு தேர்தல் மூலமாகவே, ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கும் சட்டம் கொண்டு வரப்படும். இப்படி தேர்வாகும் கமிஷனர், தான்தோன்றியாக, சட்டாம்பிள்ளை தனமெல்லாம் செய்யாமல், தேர்தல் அறிவிப்பதோடு நிறுத்தி, மற்ற நடைமுறைகளை, அந்தந்த ஆளும் கட்சிகளிடம் கேட்டறிந்து தேர்தல் நடத்த வேண்டும்.
வேட்பாளர்களின் சொத்து கணக்கையெல்லாம், உங்களுக்கு சொல்ல வேண்டுமென்பது எத்தனை அயோக்கியத்தனம்? அவர்கள் கஷ்டப்பட்டு சேர்த்த சொத்தை பற்றி, உங்களுக்கு ஏன் சொல்ல வேண்டும். ஆகவே, இதை பற்றி விவரம் கேட்கும் கமிஷனரை, சட்டப்படி தண்டிக்க சட்டம் கொண்டு வரப்படும். ஆண்டுதோறும் வந்துபோகும் பண்டிகைகள், திருவிழாக்களை கொண்டாடும் செலவுகளுக்கெல்லாம், கட்டுப்பாடு இல்லாத போது, ஐந்தாண்டுக்கு ஒரு முறை கொண்டாடப்படும் தேர்தல் திருவிழா செலவுக்கு மட்டும் ஏன் கட்டுப்பாடு? பேனர், பிளக்ஸ் போர்டு தயாரிப்பாளர்கள் நலம் கருதியும், சுவர் விளம்பர தொழிலாளர்கள் நலன் கருதியும் இந்த கட்டுப்பாடு நீக்கப்படும். இந்த பணியாளர்களின் நலத்தை கருத்தில் கொண்டு, வாக்காளர்களின் வீட்டு சுவர்களை, விளம்பரம் எழுத வாங்கி தருவது, தேர்தல் கமிஷனின் பொறுப்பு என்பதும் சட்டமாக கொண்டு வரப்படும்.
தேர்தல் சமயங்களில் உள்நாட்டு, வெளிநாட்டு, பணபுழக்கம் தடையின்றி நடைபெற, தக்க வகையில், சட்டம் தளர்த்தப்படும். வேட்பாளர் ஒருவர், ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஐந்து கோடி ரூபாய் வரை பண பரிவர்த்தனை செய்கிறாரா என்பதை கமிஷன் கண்காணிக்க வேண்டும்; அது ஹவாலா பணமாக இருந்தாலும் தவறில்லை. அப்படி பணபரிவர்த்தனை செய்ய இயலாத வேட்பாளர்களை எச்சரிக்க வேண்டும். அப்படியும் அவர்களால் இதை செய்ய முடியாதபட்சத்தில், அவர்கள் தேர்தலில் நிற்க தகுதி இல்லாதவர்களாக அறிவிக்க வேண்டும்.
வேட்பாளர்கள் வீடுதோறும் சென்று ஓட்டுக்கு பணம் கொடுப்பது இயலாமல் போவதால், அதற்கான பண பட்டுவாடா மையங்களை தேர்தல் கமிஷனே அமைத்து கொடுத்து, அனைத்து வாக்காளர்களும் அந்த பயனை பெற்றுவிட்டனரா என கண்காணிப்பது கமிஷனின் கடமை. பணம் வாங்க வரும் வாக்காளர்கள், தங்கள் வாக்காளர் அடையாள அட்டையை காண்பித்து, அந்தந்த கட்சிகளின் முத்திரையை பெற வேண்டும். ஒருவர் ஒரு கட்சியிடம் மட்டுமே ஓட்டுக்காக பணம் பெறலாம். அப்படி பணம் பெற்ற வாக்காளர் அதே கட்சிக்கு ஓட்டு போடுகிறாரா என்பதை, கண்காணிப்பு கேமரா மூலம் கமிஷன் பதிவு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
எத்தனை சதவீதம் ஓட்டு விழுகிறதோ, அதில் குறைந்தபட்சம், 25 சதவீதமாவது கள்ள ஓட்டாக இருக்க வேண்டும் என்பதற்கான சட்ட திருத்தம் இடம் பெறும். குறைந்தபட்ச கள்ள ஓட்டுகளை போடச் செய்வது, கமிஷனின் முக்கிய கடமை. இதற்காக அந்தந்த பகுதி திருமண மண்டபங்கள், பள்ளிக்கூடங்கள் போன்ற முக்கியமான இடங்களை, தேர்தல் கமிஷனின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும். கள்ள ஓட்டிற்கு போதிய திருவாளர்களை, அந்தந்த மாநிலங்களில் கிடைக்காத பட்சத்தில், அவர்களை வெளிமாநிலங்களிலிருந்தோ, அயல் நாடுகளிலிருந்தோ கொண்டு சேர்க்க கமிஷனுக்கு போதிய உரிமைகள் வழங்கப்படும். அப்படி இறக்குமதி செய்யும் கள்ள வாக்காளர்களின் விமான பயண செலவு, தங்கும் வசதி, சாப்பாட்டு செலவு இத்தனைக்கும் கமிஷனே பொறுப்பு. அதற்கான தொகையை பட்ஜெட்டில் கேட்டு, பெற்றுக் கொள்வது கமிஷனின் கடமை.
இந்த தேர்தலில் ஓட்டு எண்ணுவதை அநியாயத்திற்கு ஒரு மாதத்திற்கு தள்ளி வைத்த நீங்கள், அடுத்து வரும் தேர்தல்களில் அதையே ஒரு ஆண்டு, ஏன் ஐந்து ஆண்டு கூட தள்ளி வைக்கும் துணிச்சல் பெற்றுவிடுவீர்கள். ஆகவே, இந்த தேர்தலில் யார், யார் ஓட்டு போட்டனர் என்பதையும் கேமராவில் பதிவு செய்தது போல, யார், யாருக்கு ஓட்டு போட்டனர் என்பதையும் கேமராவில் பதிவு செய்து, உடனுக்குடன் வெளியிட வேண்டும். இப்படி உத்தரவு போட்டால் தான், உங்கள் கொட்டம் அடங்கும்.
இத்தனை பொறுப்புகளோடு நீங்கள் செயல்படப்போவதால், தேர்தல் முடிந்து அடுத்த ஆட்சி ஏற்படும் சூட்டோடு, அந்தந்த கட்சியின் விருப்பத்திற்கேற்ப, அந்த தேர்தல் கமிஷனர், அதிகாரிகள் வெளிநாடு சுற்றுப்பயணத்திற்கோ அல்லது நிரந்தரமாக ஓய்வு பெற வீட்டிற்கோ உடனே அனுப்பப்படுவர்; சந்தோஷம் தானே!
இப்படிக்கு, ஆனந்தி (சென்னை சேலையூரை சேர்ந்த வாசகர் எஸ்.கார்த்திகேயன் எழுதிய கடிதம்.)
தினமலர்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அன்புள்ள தேர்தல் கமிஷனருக்கு, ஆனந்தி எழுதுவது Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அன்புள்ள தேர்தல் கமிஷனருக்கு, ஆனந்தி எழுதுவது
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
செந்தில்குமார்- பண்பாளர்
- பதிவுகள் : 214
இணைந்தது : 04/10/2009
Re: அன்புள்ள தேர்தல் கமிஷனருக்கு, ஆனந்தி எழுதுவது
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அன்புள்ள முதல்வருக்கு, ஆனந்தி எழுதுவது ...
» அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது
» அன்புள்ள உறவுக்கு - பகை எழுதுவது !
» அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது !
» கட்டாய ஹெல்மெட்டிற்கு எதிர்ப்பு போலீஸ் கமிஷனருக்கு நோட்டீஸ்
» அன்புள்ள கலைஞர் டி.வி.க்கு ஆனந்தி எழுதுவது
» அன்புள்ள உறவுக்கு - பகை எழுதுவது !
» அன்புள்ள தமிழுக்கு ஆதிரா எழுதுவது !
» கட்டாய ஹெல்மெட்டிற்கு எதிர்ப்பு போலீஸ் கமிஷனருக்கு நோட்டீஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|