ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாலியின் நினைவு நாடாக்கள் -

2 posters

Go down

வாலியின் நினைவு நாடாக்கள் - Empty வாலியின் நினைவு நாடாக்கள் -

Post by ரபீக் Thu May 12, 2011 12:14 pm

பிறையும் வில்லும்!

1931 - அக்டோபர் மாதம் 29 - ஆம் தேதி - வியாழக் கிழமை, இரவு எட்டு மணியளவில்-

ரோகிணி நட்சத்திரத்தில், ரிஷப ராசியில் -

திருச்சி மாவட்டத்தில் உள்ள, 'திருப்பராய்த் துறை’ என்னும் - பாடல் பெற்ற ஒரு

சிவஸ்தலத்தில் -

பிரஜோற்பத்தி வருடத்தில், பிறந்தவன் நான்.

தந்தையார் பெயர் வாங்கல் திரு. ஸ்ரீனிவாச அய்யங்கார். தாயார் பெயர் திருமதி.பொன்னம்மாள்.

வடகலை; அஹோபில மடத்தைச் சார்ந்த சிஷ்ய பரம்பரை; அருள்மிகு அழகிய சிங்கர் அவர்கள்தான், எங்கள் ஆசாரியர்.

எங்கள் குல தெய்வம் - கரூருக்கு அருகே உள்ள -

தான்தோன்றிமலை - அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி.

என் தந்தையார் - வெள்ளைக்காரன் காலத்தில் -

CUSTOMS AND EXCISE - இலாகாவில் இன்ஸ்பெக்டராக இருந்தவர். அந்த உத்தியோகத்தை SALT INSPECTOR என்றும் சொல்வதுண்டு.

கள்ளிறக்கும் மரங்களுக்கு SEAL வைப்பதும்; கடல் மீன்களுக்கு உப்படைப்பதும் - ஒழுங்காக நடக்கிறதா என்பதைக் கண்டறிந்து -

தவறிய ஒப்பந்தக்காரர்களுக்குத் தண்டனை வாங்கித் தருவதுதான் என் தந்தையார் வேலை.

பஞ்சக்கச்சம்; பன்னிரு திருமண்; முப்புரி நூல்; முடித்த குடுமி;

- இப்படிப் பரம ஆசார சீலராக வைதிகம் வழுவா வேதியராக வாழ்ந்த என் தந்தை -

காக்கி UNIFORM அணிந்து - CAMP PEON சகிதம் CASE பிடிக்கப் போவார்.

அப்படி - அற்றை நாளில் என் அப்பாவிடம் பணிபுரிந்த ஒரு CAMP PEON பற்றிச் சொல்லத்தான் -

என் - BIO DATAவை விரித்துரைக்கும்படி ஆகிவிட்டது.

ஒரு பிராமணருக்கு - மிக மிகப் பிடித்தமான ஊழியராகவும்; ஓர் உற்றுழியில் உடுக்கை இழந்தவன் கைபோல் உதவிய உத்தம புருஷனாகவும் விளங்கிய -

அந்த CAMP PEON-ன் பெயர் திரு. இப்ராஹிம்!

என்னை ஈன்றெடுத்த ஓரிரு வாரங்களிலேயே -

என் அன்னைக்கு 'ஜன்னி’ கண்டுவிட்டது; உடல் சீதளத்தின் உச்சத்தை எட்டி, உறுப்புகள் விறைத்துப்போய் - நினைவழிக்கும் கொடிய நோய் அது!

அந்தக் காலத்தில் அதற்கான வைத்தியமே - விறகுகளை அடுக்கித் தணல் மூட்டி, அதன் மீது சிறிது நேரம் நிற்கவைப்பார்கள் -

உடல் சீதளம் குறைந்து உஷ்ணம் பெற!

இந்த அசுர வைத்தியமெல்லாம், என் அம்மாவுக்கும் நடந்தது. இந்த நிலையில் பச்சை மண்ணாகக்கிடந்த எனக்குப் பாலூட்டுதல் எங்ஙனம்?

அந்தக் காலத்தில் புட்டிப் பாலெல்லாம், புழக்கத்திற்கு வரவில்லை. ஆவின் பாலால் மட்டும் - சின்ன சிசுவைக் காப்பாற்றிவிட முடியாது; அது சீவிக்க - தாய்ப்பால் MUST!

CAMP PEON இப்ராஹிமின் இல்லத்தரசி அதே நேரத்தில் ஓர் அழகிய குழந்தையை ஈன்றெடுத்துஇருந்தார்.

அந்த இஸ்லாமிய மாது தான் - ஓரிரு மாதங்கள் எனக்குத் தாய்ப்பால் ஊட்டி -

இன்றளவும் நான் பிழைத்திருக்கக் காரணமானவர்கள்.

இது - இந்துவென்றும்; இது - இஸ்லாமென்றும் -

முலைப் பாலைக்கொண்டு மூதலிப்பாருண்டோ? இன்று நான் - முத்தமிழ்ப் பாலருந்த, மூலக்காரணம் முஸ்லீம் பால்தான்!

இளமைப் பருவம் வந்தது. நான் திருச்சி வானொலியில் தற்காலிகப் பணியில் சேர்ந்தேன்.

'உனக்குக் கதை எழுத வருகிறது; எழுதய்யா!’

- என்று, ஊக்கமும் உள்வலியும் தந்து என்னை உற்சாகப்படுத்திய பெருமகனார் -

திரு.A.A.ஹகீம் அவர்கள். உடன் பிறந்த இளவலாய் என்னை வளர்த்தெடுத்தார். பின்னாளில் -

திரு.ஹகீம் அவர்கள் சென்னை வானொலியில் பெரிய அதிகாரியாகப் பணிபுரிந்தார்கள். திரு.ஜெய காந்தனுக்கும் நெருங்கிய நண்பராயிருந்தவர்.

வாயில் PIPE வைத்துப் புகைப்பார்; வெற்றிலைக் காவி வீற்றிருக்கும் பல் வரிசை தெரிய நகைப்பார். இன்னொரு சீதக்காதி அளவு சிந்தை விசாலமானவர்.

அதே - திருச்சி வானொலியில் இன்னொரு இஸ்லாமியப் பெருமகனார் இருந்து -

'ஓய்! நீர் பெரிய கவிஞனாக வருவீரய்யா!’ என்று, என் ஆரம்ப காலக் கவிதைகளைக் கண்டு, என்னை ஆசீர்வதித்தவர்.

அவரே பெரும் கவிஞர்; அவர்தான் 'செந்தாமரை’ எனும் புனைபெயரில் யாப்பொடியாப் பனுவல்களை யாத்த -

திரு.ஹமீது அவர்கள். சதாவதானி திரு.செய்குதம்பிப் பாவலரின் திருமகனார் இந்த ஹமீது!

சென்னைக்கு வந்தேன், சினிமா வாய்ப்புகள் தேடி.

அவ்வப்போது - கடனுக்கு சார்மினார் சிகரெட்டும், வெற்றிலை பாக்குப் புகையிலையும் தந்து -

'வாலி! நீ பெரிய ஆளானப்புறம் - இதுக்கான காசை, உங்கிட்ட வசூல் பண்ணிக்கிறேன்!’ என்று -

சளைக்காமல் கடன் தந்து, என்னை ஆதரித்தது - 'வெற்றிலை பாக்குக் கடை’

திரு.சுல்தான் அவர்கள்!

நாங்கள் - பின்னாளில் பிரபலமான பெரிய ஆளாக வருவோம் என்று கணித்துக் கடன் தந்தார் திரு.சுல்தான்.

அப்படியே வந்தோம், நானும் நாகேஷ§ம்!

படத்திற்குப் பாட்டெழுதும் வாய்ப்பு, இந்தப் பிறவியில் கிட்டாது என்று -

இதயம் ஒடிந்திருந்த வேளையில் - 'வாடா! கண்ணா! - உனக்கொரு வாய்ப்புத் தர்றேன்; கே.வி.மகாதேவன் மியூசிக்ல என் படத்துல எழுது!’ என்று -

பரிவோடு அழைத்து - நைந்து, நசிக்க இருந்த என் நம்பிகை வேரில் -

நாலு சொட்டு நீர் வார்த்து, அதற்கு உயிரூட்டியவர்.

மாடர்ன் தியேட்டர்ஸ் திரு.சுலைமான் அவர்கள்!

திரு.சுலைமான்தான், மாடர்ன் தியேட்டர்ஸில் 'பாசவலை’ படத்தில் பாட்டெழுத -

'பட்டுக்கோட்டை’க்கு வாய்ப்பு வாங்கித் தந்தவர். அவர்தான், சென்னைக்கு வந்து இரு பாகஸ்தர் களுடன், 'பத்மா ஃபிலிம்ஸ்’ என்று ஆரம்பித்து -

சிவாஜி; எம்.ஜி.ஆர்; மற்றும் ஷி.ஷி.ஸி. போன்றவர்களை வைத்துப் படம் எடுத்தவர்.

திரு. S.S.R; விஜயகுமாரி நடித்து, திரு. தாதாமிராசி இயக்கத்தில் தான் தயாரித்த 'நீங்காத நினைவு’ என்னும் படத்தில் -

எழுத்தாளர் திரு. ம.ரா-வின் சிபாரிசை ஏற்று உடனே எனக்கு வாய்ப்பளித்து, புகழேணியின் முதல் படியில் ஏற்றிவிட்டார்!

பிறகு -

திரு.டி.எம்.இப்ராஹிம் எனும் இசையமைப்பாளர், எனக்கு ஓரிரு படங்களில் பாட்டு வாங்கிக் கொடுத்து -

'கவலைப்படாதே! உன் ROOM வாசல்லேயும் ஏகப்பட்ட கார் நிற்கும் காலம் ஒண்ணு வரும்!’ என்று -

தாயினும் சாலப் பரிந்து பேசிய தயாபரன் அந்த இப்ராஹிம் பெருமகன்!

பன்னிரண்டு ஆண்டு காலம் - நான் நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் குடியிருந்தேன் - மனைவி, மகனோடு.

சினிமா வருமானம்தானே! முன்பின் வரும்; இருப்பினும், வாடகையை நான் கொடுக்கும்போது வாங்கிக்கொண்டு உதவியவர் -

அந்த வீட்டின் உரிமையாளர் திருமதி.ஸுனைதா பேகம் அவர்கள்.

இப்படி - என் வாழ்வு வடிவு பெற -

உளியாயிருந்து செதுக்கிய உள்ளங்கள் எல்லாம் -

முகமதியர் குலத்தில் முளைத்தவைதான் -

திரைப்படத்தைத் தாண்டி - இலக்கிய உலகிலும் எனக் கோர் இடத்தைத் தந்து அங்கீகரித்த பெருமகனார் -

அமரராகிவிட்ட நீதியரசர் திரு.இஸ்மாயில் அவர்கள். அவர், தலைமை ஏற்றிருந்த சென்னைக் கம்பன் கழகத்தில்-

பலமுறை என்னைப் பாட்டரங்கின் தலைவராக்கி அழகு பார்த்தவர்.

என்னுடைய 'அவதார புருஷ’னை ஆய்வு செய்து, ஐநூறு பக்கத்தில் ஒரு நூலை வெளியிட்டார்கள், அமரர். திரு. டாக்டர் சுப்புரெட்டியார் அவர்கள். அதற்கு நீண்ட அணிந்துரை அருளி - என்னைப் பெருமைப்படுத்தியவர் திரு.எம்.எம்.இஸ்மாயில் அவர்கள்!

இசைஞானி இளையராஜா அவர்கள் ஒரு நூலைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார்.

அதுதான் - கவிஞர் பெருந்தகை - என் இனிய இளவல் - திரு.மு.மேத்தா அவர்கள் வசன கவிதையாகப் புனைந்திருந்த நபிகள் நாயகம் அவர்களின் வரலாறு!

அதை - ஒரே இரவில் வாசித்து முடித்தேன். அற்புதமோ அற்புதம்! அதைப் படித்த பாதிப்பில்தான் - நான் 'அவதார புருஷ’னை - எழுதப் புகுந்தேன். திரு.மேத்தா, ஓர் இஸ்லாமியப் பெருமகன்.

ஆக - ஓர் இஸ்லாமிய விளக்குதான், இன்னோர் இந்து விளக்கை ஏற்றிவைத்தது எனலாம்!

என் மனைவி இறந்தபோது

மின் மயானம் வரை வந்து எனக்கு ஆறுதலைச் சொன்னவர்கள், இரு இஸ்லாமியப் பெருமக்கள்.

ஒருவர் - புகழ்சால் எலும்பு சிகிச்சை நிபுணர் (ORTHOPAEDIC SURGEON) திரு. டாக்டர் ஜாஹீர் ஹுசைன் அவர்கள்; மற்றொருவர் திராவிட முன்னேற்றக் கழகப் பிரமுகர் திரு. ஆயிரம்விளக்கு உசேன் அவர்கள்.

திரு.உசேன் அவர்கள் உடல் நலம் சரி இல்லாத நிலையிலும் - 'WALKER’ வைத்துக்கொண்டு வந்து என் வருத்தத்தில் பங்குகொண்டவர்.

வளர்ந்து வரும் திரைப்பட இளைய இயக்குநர் திரு.இப்ராஹிம் அவர்கள் -

இரவு முழுக்க என் வீட்டு வாசலில் விழித்தபடி அமர்ந்து - என் மனைவி மறைவுக்குத் துக்கம் காத்தவர்!

'பத்மஸ்ரீ’ விருதை என் சட்டையில் மாட்டும்போது - மேதகு திரு. அப்துல் கலாம் அவர்கள் சொன்னார்கள்.

'இது - உங்ககிட்ட இருக்கிறதுதான், பொருத்தம்!’

நான் -

கூன் பிறைகளால் உருவாக்கப் பெற்ற கோதண்டம்!

விகடன்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

வாலியின் நினைவு நாடாக்கள் - Empty Re: வாலியின் நினைவு நாடாக்கள் -

Post by உமா Thu May 12, 2011 3:21 pm

அண்ணா நினைவு நாடாக்கள் அல்ல....வரலாறு...அவ்வளவு நேரம் ஆகீற்று படிக்க...பகிர்வுக்கு நன்றி....



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum