ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்

3 posters

Go down

இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Empty இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்

Post by கே. பாலா Thu May 05, 2011 7:58 am

இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன் =வா. மணிகண்டன்

இன்று மதியம்
தூக்குப் போட்டு இறந்தவனின்
வீட்டில்
குழந்தைகள்
ரயில் விளையாட்டை
விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.


சட்டைகளைப் பிடித்துக் கொண்டு
ஓடும் மனிதப் பெட்டிகள்
துக்கம் கேட்க வந்த
ஒவ்வொருவரையும் நெருங்குகிறது.

ஒரு கணம்
ரயிலோடு சேர்ந்து ஓடுபவர்கள்
பின்னர்
பதட்டமடைந்தவர்களாக
குழந்தைகளை மிரட்டுகிறார்கள்.


மிரட்டல்களால்
அமைதிப்படுத்த முடியாத
சிலர்
தலையைக் குனிந்து கொள்கிறார்கள்

ரயிலில்
மூன்றாவதாக ஓடிக் கொண்டிருக்கும்
தன் மகனைப் பார்த்து
கேவி அழுகிறாள்
இறந்தவனின் மனைவி


குழந்தைகளால் நிராகரிக்கப்படும்
அழுகையின் சப்தங்கள்
அனாதைகளாகிக் கொண்டிருந்த
அந்த வீட்டில்
கீழே விழும் குழந்தைகளை
எடுத்துவிடாத
பெரியவர்களின் அமைதியால்
பிஞ்சு உலகில்
சிறகுகள் முளைக்கின்றன.

வேகத்தையும் கூச்சலையும்
அதிகரிக்கிறார்கள்.


இறந்தவனை நோக்கி
ரயில் ஓடுகையில்
அவனின்
வலது கால் கட்டைவிரலை
மிதித்துச் செல்கிறான்
கடைசிக்கு முந்தியவன்.


கூட்டத்தில் வெள்ளைச் சட்டையணிந்தவர்
எழுந்து வந்து
ரயிலின் கடைசிச் சிறுமியின்
முதுகில்
அறைகிறார்.


எல்லோரும் அவரைப்
பார்த்த கணம்
தூக்கிலிட்டவன்
பிரிவும் காதலும்
மிகுந்தவனாய்
அழுது கொண்டிருக்கும்
மனைவியை
பார்க்கிறான்

தன்
அசைவற்ற கண்களின்
வழியே
ஒரே ஒரு வினாடி மட்டும்.


திகைத்தவள்
அரைவினாடிக்கும் குறைவான
நேரத்தில்
தன் முகத்தை
வேறொரு பக்கம் திருப்புகிறாள்-
யாரும் பார்த்துவிடும் முன்.
மிக ரகசியமாக


நன்றி: உயிர்மை

(வா. மணிகண்டன் எழுதிய இக்கவிதையை "உயிர்மை " இதழில் படிதேன். அவலமும் , விளையாட்டும் , கலந்த ஒரு சூழல், வார்த்தைகளையும் கடந்த ஒரு கற்பனை பரப்பிற்கு நம்மை அழைத்து செல்கிறது)


Last edited by kbala on Thu May 05, 2011 2:54 pm; edited 1 time in total
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Empty Re: இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்

Post by கலைவேந்தன் Thu May 05, 2011 9:11 am

நல்ல கவிதை தான்... இறுதியில் தெரிவிக்க வந்த செய்தி கொஞ்சம் குழப்புகிறது...


எல்லோரும் அவரைப்
பார்த்த கணம்
தூக்கிலிட்டவன்
பிரிவும் காதலும்
மிகுந்தவனாய்
அழுது கொண்டிருக்கும்
மனைவியை
பார்க்கிறான்

தன்
அசைவற்ற கண்களின்
வழியே
ஒரே ஒரு வினாடி மட்டும்.
திகைத்தவள்
அரைவினாடிக்கும் குறைவான
நேரத்தில்
தன் முகத்தை
வேறொரு பக்கம் திருப்புகிறாள்-
யாரும் பார்த்துவிடும் முன்.
மிக ரகசியமாக

இது கள்ளக்காதல் காரணமாய் விளைந்த கொலையா?

கவிஞர் யாருக்காக இரக்கப்படுகிறார்..? இறந்தவனுக்காகவா? அவனது குழந்தைக்காகவா..? சோகம் அறியாமல் களிக்கும் குழந்தைகளுக்காகவா..? ஒரு சில நாள் துக்கம் அனுஷ்டித்து பிறகு இணைய நினைக்கும் அந்த காதலர்களின் தற்காலிக பிரிவுக்காகவா..?

படிமக்கவிதை போல எழுதப்பட்டு இருந்தாலும் சொல்ல வரும் கருத்தைப் பகிர்வதில் கொஞ்சம் குழம்பித்தான் போயிருக்கிறார்.

பகிர்வுக்கு நன்றி நண்பரே..



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Empty Re: இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்

Post by கே. பாலா Thu May 05, 2011 3:04 pm

உண்மைதான் கலை! கடைசில் கொஞ்சம் தெளிவாக சொல்லியிருக்கலாம். நான் ரசித்தது ஒரு மரணத்தை உணர முடியாத அந்த பிஞ்சு மனதை! அதன் விளையாட்டை. கவிஞர் சிறப்பாக கவிதையில் கொண்டுவந்திருக்கிறார்.! "
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Empty Re: இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்

Post by பூஜிதா Thu May 05, 2011 3:27 pm

நல்ல கவிதை ஆனன்ல் கிளைமாக்ஸ் கொஞ்சம் குழப்பம்


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்  Empty Re: இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum