ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

Top posting users this week
ayyasamy ram
ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம் Poll_c10ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம் Poll_m10ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம் Poll_c10 
heezulia
ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம் Poll_c10ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம் Poll_m10ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம் Poll_c10 
mohamed nizamudeen
ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம் Poll_c10ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம் Poll_m10ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம் Poll_c10 
VENKUSADAS
ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம் Poll_c10ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம் Poll_m10ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம் Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம் Poll_c10ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம் Poll_m10ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம் Poll_c10 
heezulia
ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம் Poll_c10ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம் Poll_m10ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம் Poll_c10 
mohamed nizamudeen
ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம் Poll_c10ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம் Poll_m10ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம் Poll_c10 
VENKUSADAS
ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம் Poll_c10ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம் Poll_m10ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம்

Go down

ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம் Empty இலங்கை அரசை காப்பாற்றியதில் தி.மு.க.,வுக்கு கூட்டு பொறுப்பு: விஜயகாந்த்

Post by தாமு Thu Apr 28, 2011 7:25 am



சென்னை:""மத்திய அரசில் பங்கு வகிக்கும் தி.மு.க.,விற்கு, இலங்கை அரசை காப்பாற்றியதில் கூட்டு பொறுப்பு உண்டு என்பதை நாடறியும்,'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.


அவரது அறிக்கை:பொதுமக்கள் மீது இலங்கை ராணுவம் வெடிகுண்டு வீசி கொன்றது எனவும், மருத்துவமனைகள், வழிப்பாட்டு தளங்கள், கல்விக்கூடங்கள் ஆகிய மக்கள் கூடும் இடங்களில் குண்டுகள் வீசப்பட்டன எனவும், காயமுற்றோருக்கு மனிதாபிமான உதவிகள் மறுக்கப்பட்டது எனவும், உள்நாட்டில் அகதிகளாக உள்ள தமிழர்களும், விடுதலைப்புலிகள் என சந்தேகத்திற்குரியவர்களும் கொடுமைப்படுத்தப்பட்டு மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளது எனவும் ஐ.நா., குழு அறிக்கை தந்துள்ளது. இலங்கை அரசு எவ்வளவோ முயற்சித்தும் இந்த அறிக்கை வெளியிடப்படுவதை தடுக்க முடியவில்லை. இந்த போர்க்குற்றம் குறித்து சர்வதேச குற்ற விசாரணை மன்றத்திற்கு உறுப்பு நாடுகள் அல்லது ஐ.நா., பாதுகாப்பு குழு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பான் -கீ -மூன் அறிவித்துள்ளார்.


ஐ.நா., அறிக்கை 40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டதாக கூறுகிறது. அந்த காலக்கட்டத்தில், முதல்வர் கருணாநிதி இங்கு இடைவேளை உண்ணாவிரத நாடகம் நடத்தினார். இலங்கை அரசு தமிழின படுகொலை நடத்துவதற்கு, இந்தியா உறுதுணையாக இருந்தது என்பதே ஒட்டுமொத்த தமிழர்களின் கருத்தாகும்.சர்வதேச அரங்கில் இலங்கை அரசுக்கு நெருக்கடி ஏற்பட்ட போதெல்லாம், மத்திய அரசு தான் தலையிட்டு காப்பாற்றியுள்ளது. கடந்த 2009ம் ஆண்டு ஜெனீவாவில் ஐ.நா., சபையின் மனித உரிமை மீறல் குழுவினர் இலங்கையை கண்டித்து தீர்மானம் கொண்டுவந்த போது, மத்திய அரசு அதை தடுத்தது.சர்வதேச நிதியத்தின் மூலம் இலங்கை அரசுக்கு நிதி உதவி வழங்க உலக நாடுகள் மறுத்த போது, மத்திய அரசு அளித்த உத்தரவாதத்தின்படி, இலங்கைக்கு நிதி உதவி கிடைத்தது.


அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் இலங்கை அரசுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொண்ட போதெல்லாம் மத்திய அரசு தலையிட்டு இலங்கை அரசை காப்பாற்றியது. அப்போதெல்லாம் காங்கிரசின் இந்த நடவடிக்கையை கருணாநிதி ஏன் தடுத்து நிறுத்தவில்லை?. எனவே, மத்திய அரசில் பங்கு வகிக்கும் தி.மு.க.,விற்கு இலங்கை அரசை காப்பாற்றியதில் கூட்டு பொறுப்பு உண்டு என்பதை நாடறியும். இந்த போர்க்குற்றங்களுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய ஐ.நா., பாதுகாப்பு சபையில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது. சர்வதேச கிரிமினல் கோர்ட்டில் இலங்கை அதிபர் ராஜபக்ஷேவையும், அந்நாட்டு ராணுவத்தையும், போர்க்குற்றம் புரிந்தவர்களாக வழக்கு தொடுக்க வேண்டிய தீர்மானத்திற்கு, மத்திய அரசு இப்போதாவது ஆதரவு அளிக்க வேண்டும்.


பாதிக்கப்பட்ட தமிழர்கள் மீதும், மனிதாபிமான உரிமைகள் மீதும் தனக்கு பற்று இருக்கிறது என்பதை, மத்திய அரசு நிரூபித்துக் காட்ட வேண்டும். இது உலகத் தமிழர்களின் எதிர்பார்ப்பு மட்டுமல்ல, இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கிற தமிழகத்தின் எதிர்பார்ப்பும் இதுதான். மத்திய அரசு வழக்கம் போல் இலங்கை அரசை ஆதரிக்கப் போகிறதா, அல்லது உலகம் போற்றும் மனித உரிமைகள் பக்கம் இருக்கப் போகிறதா?. மத்திய அரசு வழக்கம் போல், இலங்கை அரசு உதவி செய்தால் அதை கருணாநிதி எதிர்ப்பாரா அல்லது மத்திய அரசின் துதிபாடியாக வழக்கம் போல் இருப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


ஜனதா தளம் கட்சியின் ஆட்சிக்காலத்தில் இருந்து இன்றைய காங்கிரஸ் ஆட்சி வரை, 25 ஆண்டுகள் மத்திய அரசில் முதல்வர் கருணாநிதி பங்கு பெற்றுள்ளார். அப்போதெல்லாம், தமிழ் ஈழம் தான் தீர்வு என்று கருணாநிதிக்கு தெரியவில்லையா?.இலங்கையில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்ட நிலையில், இன்று ஒன்றும் தெரியாதவர் போல், தமிழ் ஈழம் தான் தி.மு.க.,வின் குறிக்கோள் என்று கூறுவது, யாரை ஏமாற்றுவதற்காக?. கருணாநிதி நடத்தும் கபட நாடகத்தின் ஒவ்வொரு அங்கத்தையும் உலக தமிழர்கள் உணர்ந்தே இருக்கின்றனர்.இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.





தினமலர் ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம் 678642



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம் Empty ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம்

Post by தாமு Thu Apr 28, 2011 7:38 am

சென்னை, ஏப்.27- ஈழத் தமிழர் விவகாரத்தில் முதல்வர் கருணாநிதிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இலங்கையில் தமிழினப் படுகொலை நடந்த பொழுதே இவை பற்றி நாம் எச்சரித்திருக்கிறோம். ஓரிரு நாட்களில் இலங்கையின் முப்படையினரும் 60,000 தமிழர்களை கொன்று குவித்தனர் என்று குறிப்பிட்டிருந்தோம். தற்போதைய ஐ.நா. சபையின் அறிக்கை சுமார் 40,000 தமிழர்கள் கொல்லப்பட்டிருப்பதாகக் கூறுகிறது. அந்த காலக் கட்டத்தில்தான் தமிழக முதல்வர் கருணாநிதி இடைவேளை உண்ணாவிரத நாடகம் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கள இனவெறி அரசு இத்தகைய தமிழினப் படுகொலை நடத்துவதற்கு இந்தியா உறுதுணையாக இருந்தது என்பதே உலகத் தமிழர்களின் ஒட்டு மொத்த கருத்தாகும். ஏற்கனவே சர்வதேச அரங்கில் சிங்கள இனவெறி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்ட பொழுதெல்லாம் இந்திய அரசுதான் தலையிட்டு காப்பாற்றி உள்ளது.

எனவே, மத்திய அரசின் ஆட்சியில் பங்கு வகிக்கும் தி.மு.கவிற்கும் சிங்கள இனவெறி அரசைக் காப்பாற்றியதில் கூட்டு பொறுப்பு உண்டு என்பதை நாடறியும்.

தற்பொழுது ஐ.நா. மன்றமே சிங்கள இனவெறி அரசு மனித உரிமை மீறி இருக்கிறது என்றும், அதிபர் ராஜபட்ச போர்க் குற்றவாளி என்றும் அறிவித்திருக்கிறது. இந்த போர்க் குற்றங்களுக்காக இந்த நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டிய ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது. சர்வதேச கிரிமினல் கோர்ட்டில் சிங்கள அரசின் இனவெறி அதிபர் ராஜபட்சயையும், அதன் ராணுவத்தையும் போர்க் குற்றம் புரிந்தவர்களாக வழக்குத் தொடுக்க வேண்டிய தீர்மானத்திற்கு இந்திய அரசு இப்பொழுதாவது ஆதரவு அளிக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட தமிழர்கள் மீதும், மனிதாபிமான உரிமைகள் மீதும், தனக்கும் பற்று இருக்கிறது என்பதை இந்திய அரசு நிரூபித்து காட்ட வேண்டும். இது உலகமெல்லாம் இருக்கின்ற தமிழர்களின் எதிர்பார்ப்பு மட்டுமல்ல, தமிழ்நாட்டின் எதிர்பார்ப்பும் இதுதான்.

இந்திய அரசு வழக்கம்போல் சிங்கள இனவெறி அரசுக்கு ஆதரவாக செயல்பட்டால் கருணாநிதி அதை எதிர்ப்பாரா? அல்லது மத்திய அரசின் துதிபாடியாக வழக்கம்போல் இருப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஜனதா தளத்தின் ஆட்சிக் காலத்தில் இருந்து இன்றைய காங்கிரஸ் ஆட்சி வரை மத்திய அரசின் ஆட்சியில் சுமார் 25 ஆண்டுகள் முதல்வர் கருணாநிதி பங்கு பெற்றுள்ளார். அப்பொழுதெல்லாம் இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு தனி ஈழம்தான் தீர்வு என்பது தெரியவில்லையா?

அங்குள்ள தமிழ் மக்கள் பல்லாயிரக் கணக்கில் கொல்லப்பட்டு அவர்கள் வாழும் பகுதிகள் சீரழிக்கப்பட்டுள்ளன. ஒன்றும் தெரியாதவர்போல் இன்று தமிழ் ஈழம்தான் தி.மு.கவின் குறிக்கோள் என்று கூறுவது யாரை ஏமாற்றுவதற்கு?

உண்மையில் இலங்கையில் உள்ள தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதற்கு துணை போய்விட்டு, இன்றும் நீலிக் கண்ணீர் வடிப்பது தமிழர்களை இன்னும் தொடர்ந்து ஏமாற்ற முடியும் என்ற நம்பிக்கையிலா? கருணாநிதி நடத்தும் கபட நாடகத்தின் ஒவ்வொரு அங்கத்தையும் உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் உணர்ந்தே இருக்கிறார்கள்.

ஆட்சி உங்கள் கையில், அதிகாரம் உங்கள் கையில், செய்ய வேண்டிய இடத்தில் இருக்கும் கருணாநிதி உலகத் தமிழர்களை ஏமாற்றுகிறார்.


இவ்வாறு விஜயகாந்த் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்


தினமணி ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம் 678642



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics
» கருணாநிதிக்கு ராம கோபாலன் கண்டனம்
» உரிமை மீறல் பிரச்சினை: சட்டப்பேரவையில் கருணாநிதிக்கு கண்டனம்
» கலாம் என்றால் கலகமா... கருணாநிதிக்கு முஸ்லீம்கள் கடும் கண்டனம்
» அப்துல் கலாமை அழைக்க வில்லை கருணாநிதிக்கு அசல் தமிழர்கள் கண்டனம்
» டெசோ மாநாட்டில் தமிழ் ஈழ கோரிக்கையை கைவிட்டது ஏன்?: கருணாநிதிக்கு தமிழருவி மணியன் கண்டனம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum