ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதலமைச்சர் பதவிக்கு டக்ளஸ் போட்டி

2 posters

Go down

முதலமைச்சர் பதவிக்கு டக்ளஸ் போட்டி Empty முதலமைச்சர் பதவிக்கு டக்ளஸ் போட்டி

Post by ஈழமகன் Sun Sep 06, 2009 1:11 pm

எதிர்வரும் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் பதவிக்குப் போட்டியிடுவது என சிறிலங்காப் படையினருடன் சேர்ந்து இயங்கும் துணைப் படைக்குழுவான ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சராக இருந்து தமிழ் மக்களுக்கு சேவையாற்றுவதிலும் பார்க்க முதலமைச்சராக இருந்து அதிகம் சேவையாற்ற முடியும் என தான் நம்புவதால், அந்தப் பதவிக்குப் போட்டியிட உள்ளதாக தேவானந்தா தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தல்களுக்குப் போவதற்கு முன்னதாக வடக்கில் உள்ள அனைத்து உள்ளூராட்சி சபைத் தேர்தல்களையும் நடத்துமாறு நாம் அரச தலைவரிடம் கேட்டுள்ளோம். இந்த ஆண்டு முடிவதற்குள் ஏனை உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படும் என எதிர்பார்க்கிறோம் என்றார் டக்ளஸ்.

எதிர்வரும் ஜனவரி மாதத்தில் வடக்கு மாகாண சபைக்கான தேர்தல்கள் நடத்தப்படலாம் என தான் எதிர்பார்க்கிறார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழர்களின் தலைமையில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை இல்லாமல் செய்வதற்காகவே தான் முதலமைச்சர் பதவிக்குப் போட்டியிட உள்ளார் எனவும் அவர் கூறினார்.

டக்ளஸ் தேவானந்தா, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மிக நீண்டகால விசுவாசி. 1994 ஆம் ஆண்டு தொடக்கம் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஆட்சியைத் தவிர்த்து அமைச்சரவையில் ஒரு உறுப்பினராக இருந்து வருகின்றார்.
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

முதலமைச்சர் பதவிக்கு டக்ளஸ் போட்டி Empty Re: முதலமைச்சர் பதவிக்கு டக்ளஸ் போட்டி

Post by kirupairajah Sun Sep 06, 2009 1:31 pm

'அரசாங்கத்துடனிருக்கும் கருணா எங்களுக்கு அதிகாரத்தைக கொடுக்க வேண்டாமென பிரச்சாரம் செய்கிறார்' சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்):
http://www.globaltamilnews.net/tamil_news....=2502&cat=1
13வது திருத்தச் சட்டத்தை அமுலாக்குவதற்கு எனக்கு எந்த வித அதிகாரமும் இல்லை. 13வது திருத்தச் சட்டத்திற்கு உரித்தான அதிகாரத்தை வழங்கும்படி மத்திய அரசாங்கத்தை நாங்கள் கேட்டிருக்கிறோம். ஆனால் அரசாங்கத்துடனிருக்கும் கருணா எங்களுக்கு அதிகாரத்தைக கொடுக்க வேண்டாமென பிரச்சாரம் செய்கிறார் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்துள்ளார்.

அவருடனான நேர்காணலின் முழுவடிவம் கீழே:


கேள்வி:கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கும் உங்களுக்குமான உறவு எப்படி இருக்கிறது?

பதில்: கட்சியை புனரமைப்பது சம்பந்தமான கருணாவின் கோரிக்கையால் கட்சிக்குள் ஒரு பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. கட்சியின் தலைமைப்பீடத்திற்கு அவர் தனது ஆட்களைக் கொண்டு வர விரும்புகிறார்.

இவ்வருடம் உள்ளுராட்சித் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல்களை கிழக்கில் நடாத்த அரசாங்கம் முனைந்த போது இந்தக் கட்சியை நானே பதிவு செய்தேன். கருணா அந்நேரம் வெளிநாட்டில் இருந்தார். நாங்கள் தேர்தலுக்குத் தயாராக வேண்டியிருந்த அந்த நேரத்தில் ரிஎம்.விபி என்ற இந்தக் கட்சியைப் பதிவு செய்தோம். இப்போது எந்த மாற்றத்தையும் செய்யும் எந்தத் தேவையும் இல்லை.

கேள்வி: ஏன் கருணா கட்சியைப் புனமைக்க வேண்டும் என்றும், வேறொரு பெயரில் பதிவு செய்ய வேண்டும் என்றும் கோருகிறார்?

பதில்: எங்களிடமிருந்து அரசியலதிகாரத்தை அவர் கைப்பற்றப் பார்க்கிறார் என்றே நான் புரிந்து கொள்கிறேன். த.ம.விபுலிகளில் அவர் எந்தவிதமான உத்தியோகபூர்வ இடத்தையும் கொண்டிருக்கவில்லை. அவர் திரும்பி வந்ததிலிருந்து எங்களுடைய அலுவலகங்களில் பலாத்காரமாக வந்து குடியிருக்கப் பார்க்கிறார். இந்தப்பிரச்சினை காரணமாக நான் புதிய கட்டிடத்திற்கு எனது இடத்தை மாற்றினேன்.

கேள்வி: கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக உங்களை நிறுத்த கருணா விரும்பவில்லை. தற்போதைய மட்டக்களப்பு மேயரான சிவகீதா பிரபாகரனையே நிறுத்த விரும்பியிருந்தார் என்று கூறப்படுகிறது. இது சரியா?

பதில்: இந்த மாவட்டத்தில் அவருக்கிருந்த அரசியல் அனுபவம் காரணமாக அவர் மேயர் பதவிக்குப் பொருத்தமானவர் என நாங்கள் தீர்மானித்தோம். முதலமைச்சர் பதவி முக்கியமானதென்பதோடு அது பெருமளவு சுமையானது என்பதால் அவருக்கு நெருக்கடியானது என்றும் நாங்கள் உணர்ந்தோம். இதனால் நான் அப்பதவிக்குப் போட்டியிட்டேன்.


முதலமைச்சர் பதவிக்கு டக்ளஸ் போட்டி Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

முதலமைச்சர் பதவிக்கு டக்ளஸ் போட்டி Empty Re: முதலமைச்சர் பதவிக்கு டக்ளஸ் போட்டி

Post by kirupairajah Sun Sep 06, 2009 1:31 pm

கேள்வி: 13வது திருத்தச்சட்டத்தின் கீழ் மாகாண சபைகளுக்கு உள்ள அதிகாரங்களைக் கொண்டு மாகாணத்திற்கான அபிவிருத்தியை மேற்கொள்வதில் நீங்கள் முகம் கொடுத்த பிரதானமான தடங்கல் என்ன?

பதில்: வெளிப்படையாக நான் உங்களுக்குச் சொல்வதானால் நான் அலுவலகத்தை இந்தவருடம் மே மாதம் எடுத்ததிலிருந்து ஒருவரைக் கூட மாகாண சபைக்கு என்னால் நியமிக்க முடியவில்லை. 13வது திருத்தச் சட்டத்தை அமுலாக்குவதற்கு எனக்கு எந்த வித அதிகாரமும் இல்லை. 13வது திருத்தச் சட்டத்திற்கு உரித்தான அதிகாரத்தை வழங்கும்படி மத்திய அரசாங்கத்தை நாங்கள் கேட்டிருக்கிறோம். ஆனால் அரசாங்கத்துடனிருக்கும் கருணா எங்களுக்கு அதிகாரத்தைக கொடுக்க வேண்டாமென பிரச்சாரம் செய்கிறார்.

கேள்வி: உங்களது உறுப்பினர்களால் திறக்கப்பட்ட பல அலுவலகங்கள் தற்போது மூடப்பட்டு வருவதைக் காண்கிறோம். இது ஏன்?

பதில்: புதிதாக விடுவிக்கப்பட்ட பிரதேசங்களிலும், நகரின் மையப்பகுதியிலும் அண்மையில் சில சம்பவங்கள் நடைபெற்றன. தமிழச்; சகோதரர்களுள்ளேயே மேலும் தாக்குதல்கள் நடைபெறாமல் தடுப்பதற்காகவே நாங்கள் அலுவலகங்களை மூடினோம்.

கேள்வி:உங்களால் விலக்கிவிடப்பட்ட முன்னாள் விடுலைப்புலி உறுப்பினர்கள் பலர் வந்து த.ம.விபுலிகளுள் மீள இணைவதாகத் தகவல் வருகிறதே? இது எவ்வளவு தூரம் பிரச்சினையாக இருக்கிறது?

பதில்: இது ஒரு பிரச்சினையான விடயம் தான். இவ்வாறானவர்களை அடையாளம் கண்டு நாங்கள் அவர்களைத் திருப்பி அனுப்புகிறோம். அவர்கள் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்பியிருந்தால் அவர்களை அவர்கள் வழியில் விட்டு விடுவோம். இல்லாது விட்டால் சட்டத்தினூடாக அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம். கிழக்கு மாகாணம் விடுவிக்கப்பட்ட பின்னர் புலி உறுப்பினர்கள் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கு வந்திருப்பதாக அறிகிறோம். படையினருடன் இணைந்து அவர்களைக் கண்டு பிடிக்க முயற்சி செய்து வருகிறோம்.

கேள்வி: நீங்கள் காவற்துறை அதிகாரத்தைக் கேட்கிறீர்கள், ஆனால் அவ்வாறான அதிகாரங்கள் அவசியமில்லை என்று கருணா சொல்கிறார். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

பதில்: காவற்துறை அதிகாரம் மாகாணசபைகளுக்கு பகிரப்பட்டிருந்தால் எங்களுடைய உறுப்பினர்கள் எல்லோரையும் எங்களால் பாதுகாத்துக் கொள்ளக் கூடியதாக இருந்திருக்கும். காவற்துறை படையில் இணைத்துக் கொள்ளப்பட்டிருப்பார்கள். உத்தியோகபூர்வமான ஒரு அங்கீகாரம் அவர்களுக்குக் கிடைத்திருக்கும். ஒழுக்க விதிகளுக்கு உட்பட்டவர்களாக ஆக்கப்பட்டிருப்பார்கள். சட்டத்திற்கு புறம்பாகச் செயற்பட்டால் சட்டத்தினூடாகவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடியதாக இருந்திருக்கும்.
கேள்வி: ரகு எனப்படுகிற குமாரசாமி நந்தகோபன் கொல்லப்பட்டதானது மொத்தத்தில் எத்தகையை விளைவை ஏற்படுத்தியது?

பதில்: அவருடைய இழப்பு எனக்கு மட்டுமல்ல மொத்தத் தமிழ்ச் சமூகத்திற்குமே பேரிழப்பாகும். அவர் உண்மையாகவே கிழக்கு மக்கள் குறித்து அக்கறை கொண்டிருந்தார். அவர் மட்டக்களப்பில் பிறந்து திருமலையில் வாழ்ந்ததால் கிழக்கு மாகாணத்;தின் பிரச்சினைகள் குறித்து நல்லஅறிவைக் கொண்டிருந்தார். திறம்படச் செயலாற்றக் கூடியவர்.

கேள்வி: நீங்கள் சொல்கிறீர்கள் ரகுவைக் கொன்றது புலிகள் அல்ல என்று. ஆனால் கருணா புலிகளைக் குற்றம்சாட்டுகிறாரே?

பதில்: நான் மீண்டும் கூறுகிறேன் இது புலிகளின் வேலை அல்ல. மாகாணத்தின் அபிவிருத்தியை விரும்பாத ஒரு கூட்டத்தினருடைய வேலை இது. மிகவிரைவில் நான் இதனை நிரூபிப்பேன். எங்களிடம் மிக முக்கியமான தடயங்கள் இருக்கின்றன. கொல்லப்படுவதற்கு முதல்நாள் அத்துருகிரியவில் நாங்கள் எங்கேயிருக்கிறோம் என்று ஒருவருக்கும் தெரியாது. எங்களுடைய நடமாட்டம் குறித்து யாரும் அறிந்திருக்கவில்லை. எங்களுடன் இருந்த ஒருவரைத் தவிர.

கேள்வி: தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் தமது பகுதிக்குள் வந்து தம்மை மிரட்டுவதாகவும் அச்சுறுத்துவதாகவும் காத்தான்குடி முஸ்லிம்கள் குற்றம்சாட்டுகிறார்களே? சில முஸ்லிம்கள் சுட்டும் கொல்லப்பட்டார்கள். இவ்வாறான சூழ்நிலையில் இன ஐக்கியத்தை எவ்வாறு பேணிக் காப்பாற்றுவீர்கள் என்று நம்புகிறீர்கள்?

பதில்: ஆம், கடந்த காலத்தில் சில சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. சம்பந்தப்பட்ட உறுப்பினர்களுக்கு நாங்கள் தண்டனை வழங்கியுள்ளோம். தற்போது முஸ்லிம்களிடம் நல்லபிப்பிராயத்தைப் பெற்று வருகிறோம்.

கேள்வி: கருணா திரும்பி வந்ததன் பிறகு அரசாங்கத்தில் தனக்கிருக்கும் செல்வாக்கையும் அதிகாரத்தையும் வைத்துக் கொண்டு உங்களை ஓரங்கட்டப் பார்ப்பதாக ஒரு வலுவான அபிப்பிராயம் இருக்கிறதே. அதைப்பற்றி என்ன சொல்வீர்கள்?

பதில்: கருணாவின் நடத்தைகளை அவர் எவ்வாறு மக்களுக்குத் துரோகமிழைத்துவிட்டு மேற்கு நாட்டுக்குச் சென்று ஒரு ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தார் என்பதை மக்கள் அறிவார்கள். அது அவருடைய சுயநலத்தை தெளிவாகக் காட்டுகிறது. மூதூர் சம்பூர் மக்களை விடுவிப்பதற்கு அரசாங்கப் படைகளுக்கு

கேள்வி: கருணா திரும்பி வந்ததன் பிறகு அரசாங்கத்தில் தனக்கிருக்கும் செல்வாக்கையும் அதிகாரத்தையும் வைத்துக் கொண்டு உங்களை ஓரங்கட்டப் பார்ப்பதாக ஒரு வலுவான அபிப்பிராயம் இருக்கிறதே. ஆதைப்பற்றி என்ன சொல்வீர்கள்?

பதில்: கருணாவின் நடத்தைகளை அவர் எவ்வாறு மக்களுக்குத் துரோகமிழைத்துவிட்டு மேற்கு நாட்டுக்குச் சென்று ஒரு ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தார் என்பதை மக்கள் அறிவார்கள். அது அவருடைய சுயநலத்தை தெளிவாகக் காட்டுகிறது. மூதூர் சம்பூர் மக்களை விடுவிப்பதற்கு அரசாங்கப் படைகளுக்கு உதவியவன் நான் தான். அந்த நடவடிக்கையில் எங்களுடைய உறுப்பினர்கள் சிலர் கொல்லப்பட்டார்கள். அந்த உறுப்பினர்களுடைய குடும்பத்திருக்கு கருணா தன்னுடைய அனுதாபங்களைக் கூடத் தெரிவிக்கவில்லை. இவ்வாறான நடவடிக்கைகளால் மக்கள் அவர் மீதான நம்பிக்கையை இழந்து விட்டார்கள். கிழக்கில் அவருக்கு அவ்வாறான ஒரு ஆதரவுத் தளம் இருக்குமானால் அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் முன்னுக்கு வந்து போட்டியிடுமாறு நான் அவருக்குச் சவால் விடுகிறேன்.

எங்களது முன்னுரிமை அபிவிருத்திக்கே. பொலிஸ் அதிகாரங்கள் உடனடியாக அவசியமானவை அல்ல – கருணா:

எங்களிடம் மாகாண நிர்வாகம் இருக்கிறது. எங்களது முன்னுரிமை அபிவிருத்திக்கே. பொலிஸ் அதிகாரங்கள் உடனடியாக அவசியமானவை அல்ல. கடந்த காலத்திலும் இவ்வாறு ஒரே கோரிக்கைகளையே ஒன்றன் மேல் ஒன்றாக வைத்தோம். அதே தவறையே மீண்டும் செய்ய முனைகிறோம். இப்போது நாங்கள் விடயங்களை வேறு விதமாகச் செய்ய வேண்டியுள்ளது. நாங்கள் கல்வி, விளையாட்டு, பொழுதுபோக்கு விடயங்களை அபிவிருத்தி செய்ய வேண்டியுள்ளது என பாராளுமன்ற உறுப்பினரான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.


முதலமைச்சர் பதவிக்கு டக்ளஸ் போட்டி Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

முதலமைச்சர் பதவிக்கு டக்ளஸ் போட்டி Empty Re: முதலமைச்சர் பதவிக்கு டக்ளஸ் போட்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum