ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அபயம் கேட்டதை அறிந்தோமா?

4 posters

Go down

அபயம் கேட்டதை அறிந்தோமா?  Empty அபயம் கேட்டதை அறிந்தோமா?

Post by யாதுமானவள் Tue Apr 26, 2011 4:27 pm



(முதல் முதலாய் ஈகரையில் இலங்கைத் தமிழர்களுக்காக என் கவிதையைப் பதிகிறேன்)


அழித்திட முழுதாய் முதற்குடி
இனமதற் காவன செய்கின்றார்
இழிசெயலி தற்குத்துணை செய்யும்
ஈனப்பிறவி களிங்கே இருக்கின்றார்
பழிகொள்ளும் பாவச் செயலினை
மூச்சாய்க் கொண்டவக் காடையரைச்
சுழித்திடும் அந்தப் பொன்னாள்
இங்குச் சடுதியில் வாராதோ

வெஞ்சினப் படைகொண்டு வேட்டை
நாயென எதிர்வந்து இழிஞர்களும்
பிஞ்சுக் குழந்தைகள் பலநூறோடு
பஞ்சுத் தலைகளைச் சாய்த்தனரே
எஞ்சிய ஈழவீரத் தமிழரின்
கல்லறை தோண்டிக் கொடியோர்கள்
மிஞ்சிய எலும்புத் துண்டுகள்
தெருவினில் வீசியும் மகிழ்ந்தனரே

கருங்குழல் பெண்கள் தலையினி
லியற்கை மணமுண்டு என்றவனே
கருகிடும் பெண்கள் கூந்தலும்
பொசுங்கிடும் மணத்தினை ரசித்தாயோ?
சுடுகின்ற கொடுஞ்செயல் புரிகின்றோனை
எரிதழல் கொண்டே தீய்க்காமல்
சுடுவிழி யொன்று நடுவினி
லிருப்பதை யீசாநீயேன் மறந்தாயோ?

காடையர் கொலைவெறி கொண்டே
தமிழனை உருக்குலைத் தெரிகின்றான்
ஆடைகள் அவிழ்த்துக் கண்களை
அடைத்துஆ டவர்பலரைச் சுடுகின்றான்
வாடைதான் பிணத்தின்வ ழியெங்கிலுமே
வதைத்தே உயிரை முடிக்கின்றான்
பீடையர் பிணந்திண்ணிக் கழுகாய்ப்
புவியினில் பிறந்ததும் இதற்காமோ?

மூடிய கண்ணுடன் முகத்தில்
முறுவலாய் மரத்தடி அமர்ந்தோனே
ஓடியே கதறித் துடித்திடும்
உயிர்களைக் காத்திட மறந்தாயோ?
நாடியே அடங்கிடும் வேளையிலா
வதுஉன்விழி திறப்பாயோ - அன்றி
நீடிய செவிப்பறை சேர்த்தே
அடைத்துச் செவிடாயி ருப்பாயோ?

யாழிசை மீட்டிப் பாடிடும்
குலத்தினில் ஏந்திழையா ளொருத்தி
ஏழிசை கீதம் பாடிடும்
குயிலாய் இசையுடன் இருந்தாளே
சூழவே காடையர் நின்றவள்
கற்பினைச் சூறையும் ஆடினரே
ஈழமே இஃதென் கொடுமையோ
என்றெம் நெஞ்சம் பதறியதே.

இம்மகள் சிங்கள வெறியருக்
கேதும் இடர்தான் செய்தனளோ
அம்மன மாக்கி மேனியைப்
பாவியர் அங்கனம் விட்டனரே
அம்மகள் மானம்காத் திடக்கீதைக்
கண்ணனும் அங்குவர வில்லையே
தம்மகள் தனையுமிழந் தவப்பேதை
தமிழளாய்ப் பிறந்ததா குற்றமங்கே?

கருவறை சிசுக்கள் உருவம்
அடையுமுன் மண்மேல் வீசுவதை
பெருவயி ரறுக்க வெளிவந்த
சிசுவும் உணர்ந்தந்தப் போழ்தினிலே
தருதலைப் படையினர் தமிழினம்
அழிப்பதைத் தடுத்திடத் திறள்கவென
ஒருகரம் நீட்டி உலகினை
நோக்கி அபயம் கேட்டதுவோ?

கொடியவச் சிங்களக் கொட்டம்
அடக்கி நம்மினம் காத்திடவே
நொடிப்பொழு தேனும் தாமதி
யாதுநா மொன்று சேர்ந்திடுவோம்
குடியது காத்துக் குலத்தமிழ்
வளர்ப்பது குலமக்கள் கடமையன்றோ
பொடிப்பொடி யாக்கிப் பகைதனைக்
கொன்று “தமிழீழம்” வென்றிடுவோம்!


Last edited by யாதுமானவள் on Tue Apr 26, 2011 4:33 pm; edited 1 time in total


அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Back to top Go down

அபயம் கேட்டதை அறிந்தோமா?  Empty Re: அபயம் கேட்டதை அறிந்தோமா?

Post by ரபீக் Tue Apr 26, 2011 4:31 pm

தமிழக மக்கள் மட்டுமன்றி அனைத்து மக்களும் ஏங்கிக்கொண்டிருக்கும் பிரச்சினையை ,வலியினை ,வேதனையை உணர்த்திய கவிதை ,,,,


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அபயம் கேட்டதை அறிந்தோமா?  Empty Re: அபயம் கேட்டதை அறிந்தோமா?

Post by யாதுமானவள் Tue Apr 26, 2011 5:16 pm

ரபீக் wrote:தமிழக மக்கள் மட்டுமன்றி அனைத்து மக்களும் ஏங்கிக்கொண்டிருக்கும் பிரச்சினையை ,வலியினை ,வேதனையை உணர்த்திய கவிதை ,,,,

நன்றி ரபீக்


அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Back to top Go down

அபயம் கேட்டதை அறிந்தோமா?  Empty Re: அபயம் கேட்டதை அறிந்தோமா?

Post by balakarthik Tue Apr 26, 2011 5:22 pm

நிச்சயம் விரைவில் ஈழம் மலரும் உங்கள் , எங்கள் கனவு பலிக்கும் நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் அபயம் கேட்டதை அறிந்தோமா?  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அபயம் கேட்டதை அறிந்தோமா?  Empty Re: அபயம் கேட்டதை அறிந்தோமா?

Post by யாதுமானவள் Tue Apr 26, 2011 5:39 pm

balakarthik wrote:நிச்சயம் விரைவில் ஈழம் மலரும் உங்கள் , எங்கள் கனவு பலிக்கும் நன்றி அபயம் கேட்டதை அறிந்தோமா?  677196 அபயம் கேட்டதை அறிந்தோமா?  677196 அபயம் கேட்டதை அறிந்தோமா?  677196 அபயம் கேட்டதை அறிந்தோமா?  677196 அபயம் கேட்டதை அறிந்தோமா?  677196 அபயம் கேட்டதை அறிந்தோமா?  677196

நன்றி கார்த்தீ....


அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Back to top Go down

அபயம் கேட்டதை அறிந்தோமா?  Empty Re: அபயம் கேட்டதை அறிந்தோமா?

Post by ஷீ-நிசி Thu Jun 23, 2011 11:35 pm

விரைவில் ஒரு விடியல் பிறக்கட்டும்
ஷீ-நிசி
ஷீ-நிசி
பண்பாளர்


பதிவுகள் : 145
இணைந்தது : 19/05/2011

Back to top Go down

அபயம் கேட்டதை அறிந்தோமா?  Empty Re: அபயம் கேட்டதை அறிந்தோமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum