Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ் ஈழத்தாய் மடியில் சாகும் திலீபன் -உண்ணாவிரத நினைவுகள்
2 posters
Page 1 of 1
தமிழ் ஈழத்தாய் மடியில் சாகும் திலீபன் -உண்ணாவிரத நினைவுகள்
''தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் ஐந்து கோரிக்கைகளையும் இலங்கை அரசு நிறைவேற்றும் வரையில், சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன்!'' என்று விடுதலைப் புலிகளின் அரசியல் பிரசாரத் தளபதி திலீபன் அறிவித்தபோது, யாரும் இத்தகைய விபரீதத்தை எதிர்பார்க்கவில்லை.
ஆனால், கல் நெஞ்சங்களையும் உருக்கும் வகையில் திலீபன் பச்சைத் தண்ணீர்கூட அருந்தாமல், முதலில் பேசும் திறன் இழந்து, நினைவு தப்பி... பிறகு 12-வது நாள் காலையில் மணி 10.58-க்கு தன் உயிரையே துறந்தபோது, உலகமே எழுந்து நின்று அந்தப் போராளிக்காகக் கண் கலங்கியது!
திலீபன் சுருண்டு படுத்தபடி கொஞ்சம் கொஞ்சமாய் மடிந்துகொண்டு இருந்தபோது, சுற்றிலும் பெருந்திரளாய் கூடியிருந்த யாழ் மக்கள் கதறியவண்ணம் இருந்தார்கள்.
திலீபனைத் தெரியாதவர்கள் யாழ்ப்பாணத்தில் இருக்க முடியாது. தனது 17-வது வயதில் பள்ளிப் படிப்பை முடித்ததும் திலீபனுக்கு ஜாஃப்னா மெடிக்கல் காலேஜில் மருத்துவம் படிக்க ஸீட் கிடைத்தது. ஆனால், தான் டாக்டராவதைவிட தன் மண்ணைக் காக்க வேண்டிய பொறுப்போடு நடந்துகொள்வது முக்கியமென விடுதலைப் புலிகளின் இயக்கத்தில் சேர்ந்தார். டாக்டராக திலீபன் உலவியிருக்கவேண்டிய ஜாஃப்னா மெடிக்கல் காலேஜில், மருத்துவர்களின் ஆராய்ச்சிக்குத் தனது சடலம் பயன்பட வேண்டி உடலையே தானமாகக் கொடுக்க திலீபன் எழுதிவைத்திருக்க, இன்று அவரின் உயிரற்ற உடல் அங்கே நுழைந்து இருக்கிறது.
'ஏற்கெனவே ஒரு முறை சிங்கள போலீஸாரின் தாக்குதலால் திலீபன் தன் குடலின் பெரும் பகுதியை இழந்திருக்கிறார். திலீபன் 12 நாட்களிலேயே உண்ணாவிரதத்தில் இறந்துபோனதற்கு இதுவும் ஒரு காரணம்...’ என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.
திலீபன், தாயற்றவர் என்றாலும், யாழ்ப்பாணத்தின் தாய்க்குலம் அவர் உண்ணாவிரத மேடையில் இருந்தபோது வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு கதறியது. சாதாரணக் குடும்பப் பெண்களும் தனி வீரம் வந்தாற்போல் சொற்பொழிவு ஆற்றினார்கள். மாணவ மாணவியர்களின் அமைதியான கண்ணீர் ஊர்வலம் கண்டு இந்திய ராணுவம்கூட நெகிழ்ந்தது.
திலீபன் உண்ணாவிரதத்தை அறிவித்ததுமே மூன்று கட்டளைகள் போட்டிருந்தார்.
முதலாவதாக, எந்த நிலையிலும் தன்உடலில் ஊசியோ, மருந்தோ செலுத்தக் கூடாது. இரண்டாவதாக, தன் இறந்துபோனாலொழிய தன்னை அந்த மேடையைவிட்டு நகர்த்தக் கூடாது. மூன்றாவதாக, விடுதலைப் புலிகளின் ஐந்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படுமென அதிகாரபூர்வமான அறிவிப்பு வந்தாலொழிய, தனது உண்ணாவிரதத்துக்கு எவரும் இடையூறு விளைவிக்கக் கூடாது என்பதுதான் அவை.
இதனால், இந்தியத் தூதர் தீட்சித், விடுதலைப் புலிகளின் ஐந்து கோரிக்கைகள் குறித்து, தான் சுமுகமான பேச்சுவார்த்தைக்கு வருவதாகவும், அதற்கு முன்பு திலீபனை உண்ணாவிரதத்தில் இருந்து காக்கும்படியும், பிரபாகரனுக்குக் கொழும்பில்இருந்து தந்தி மூலம் தெரிவித்தபோது, திலீபனின் கட்டளைக்கு இணங்க, பிரபாகரன் அதை மறுத்துவிட்டார்.
கடைசியாய்...
திலீபனின் உண்ணாவிரத மேடையில் காசி ஆனந்தன், திலீபனைப் பற்றிய தனது கவிதையைப் படிக்கப் படிக்க... சுற்றியிருந்த மக்களின் இதயம் துரித கதியில் துடிக்கத் துடிக்க...
அந்த மாவீரனின் உயிர் பறந்தேதான் போனது!
யாழ்ப்பாணத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நல்லூர் கந்தசாமிப் பிள்ளை கோயில் தன்னுள் இப்போது ஒரு சோக வரலாற்றைச் சுமந்து நிற்கிறது!
யாழ் நெஞ்சங்களை உருக்கிய காசி ஆனந்தன் கவிதையில் இருந்து சில வரிகள்...
திலீபன் அழைப்பது சாவையா?!
இந்தச் சின்ன வயதில் இது தேவையா?
உலகம் இதை எண்ணிப் பார்க்குமா?
இங்கே ஒரு தமிழ் ஈழம் பூக்குமா?
எரிமலையன்று வெடிக்காதா?
புயல் எதிரிகள் வாழ்வை முடிக்காதா?
பிரளயம் ஒன்று முளைக்காதா?
எங்கள் பிள்ளை இன்னுயிர் பிழைக்காதா?
நோய் மடியில் சாகாமல்
நொடிந்து மருத்துவர் வீட்டுப்
பாய் மடியில் சாகாமல்
பருத்த உன் அழகான
வாய் மடியில் தவழும் சிரிப்போடு
தமிழ் ஈழத் தாய் மடியில் சாகும் தம்பி!
தமிழ் நெருப்பே!
இத்தமிழ் ஈழத்தில்
இருந்த சமையலறையில்
கத்திரியும் புடலையும்
காய்ந்துகிடக்கிறது...
என் தமிழ் தாய்மார்
பானை அடுப்பேற்றி
ஐந்து நாள் ஆகிறது!
அடுப்பும் அழுகிறது!
புலிகள் அழுவதில்லை என்பார்...
உன் மரணம்
புலிகளையும் அழவைக்கும்
பொல்லாத மரணமய்யா!
பார்த்திருக்க... கண்கள்
முன் பச்சையிளம் பாலகனே!
பூத்த இளம் சிரிப்போடு
போகின்றாய்... போகின்றாய்!
எத்தனை இறுமாப்பு!
என்ன தலை நிமிர்வு!
செத்து மடியும்போதும்
உனக்கு ஒரு சிரிப்பு!
உண்ணாவிரத மேடையிலே...
உன்னை நான் கண்
கொண்டு பார்த்தேன்
களப் புலியே! நீ
கையில் புத்தகத்தை
வைத்துப் படித்தாய்!
புறப்படும் முன்
முத்தமிழைப் படித்து
முடிக்க நினைத்தாயா?!
பேசிக்கொண்டிருந்தாய்...
சிரித்துக்கொண்டிருந்தாய்...
பார்த்துக்கொண்டிருந்தாய்...
பறந்து போகின்றாயே!
மேடையா கட்டினோம்...
நல்லூரிலே உனக்குப்
பாடைதான் கட்டினோம்!
உயிரோடு பாடையிலே
உட்கார்ந்த தமிழ்ப் புலியே!
வயிறு எரியுதடா!
வயிறு எரியுதடா!
விகடன்
ஆனால், கல் நெஞ்சங்களையும் உருக்கும் வகையில் திலீபன் பச்சைத் தண்ணீர்கூட அருந்தாமல், முதலில் பேசும் திறன் இழந்து, நினைவு தப்பி... பிறகு 12-வது நாள் காலையில் மணி 10.58-க்கு தன் உயிரையே துறந்தபோது, உலகமே எழுந்து நின்று அந்தப் போராளிக்காகக் கண் கலங்கியது!
திலீபன் சுருண்டு படுத்தபடி கொஞ்சம் கொஞ்சமாய் மடிந்துகொண்டு இருந்தபோது, சுற்றிலும் பெருந்திரளாய் கூடியிருந்த யாழ் மக்கள் கதறியவண்ணம் இருந்தார்கள்.
திலீபனைத் தெரியாதவர்கள் யாழ்ப்பாணத்தில் இருக்க முடியாது. தனது 17-வது வயதில் பள்ளிப் படிப்பை முடித்ததும் திலீபனுக்கு ஜாஃப்னா மெடிக்கல் காலேஜில் மருத்துவம் படிக்க ஸீட் கிடைத்தது. ஆனால், தான் டாக்டராவதைவிட தன் மண்ணைக் காக்க வேண்டிய பொறுப்போடு நடந்துகொள்வது முக்கியமென விடுதலைப் புலிகளின் இயக்கத்தில் சேர்ந்தார். டாக்டராக திலீபன் உலவியிருக்கவேண்டிய ஜாஃப்னா மெடிக்கல் காலேஜில், மருத்துவர்களின் ஆராய்ச்சிக்குத் தனது சடலம் பயன்பட வேண்டி உடலையே தானமாகக் கொடுக்க திலீபன் எழுதிவைத்திருக்க, இன்று அவரின் உயிரற்ற உடல் அங்கே நுழைந்து இருக்கிறது.
'ஏற்கெனவே ஒரு முறை சிங்கள போலீஸாரின் தாக்குதலால் திலீபன் தன் குடலின் பெரும் பகுதியை இழந்திருக்கிறார். திலீபன் 12 நாட்களிலேயே உண்ணாவிரதத்தில் இறந்துபோனதற்கு இதுவும் ஒரு காரணம்...’ என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.
திலீபன், தாயற்றவர் என்றாலும், யாழ்ப்பாணத்தின் தாய்க்குலம் அவர் உண்ணாவிரத மேடையில் இருந்தபோது வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு கதறியது. சாதாரணக் குடும்பப் பெண்களும் தனி வீரம் வந்தாற்போல் சொற்பொழிவு ஆற்றினார்கள். மாணவ மாணவியர்களின் அமைதியான கண்ணீர் ஊர்வலம் கண்டு இந்திய ராணுவம்கூட நெகிழ்ந்தது.
திலீபன் உண்ணாவிரதத்தை அறிவித்ததுமே மூன்று கட்டளைகள் போட்டிருந்தார்.
முதலாவதாக, எந்த நிலையிலும் தன்உடலில் ஊசியோ, மருந்தோ செலுத்தக் கூடாது. இரண்டாவதாக, தன் இறந்துபோனாலொழிய தன்னை அந்த மேடையைவிட்டு நகர்த்தக் கூடாது. மூன்றாவதாக, விடுதலைப் புலிகளின் ஐந்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படுமென அதிகாரபூர்வமான அறிவிப்பு வந்தாலொழிய, தனது உண்ணாவிரதத்துக்கு எவரும் இடையூறு விளைவிக்கக் கூடாது என்பதுதான் அவை.
இதனால், இந்தியத் தூதர் தீட்சித், விடுதலைப் புலிகளின் ஐந்து கோரிக்கைகள் குறித்து, தான் சுமுகமான பேச்சுவார்த்தைக்கு வருவதாகவும், அதற்கு முன்பு திலீபனை உண்ணாவிரதத்தில் இருந்து காக்கும்படியும், பிரபாகரனுக்குக் கொழும்பில்இருந்து தந்தி மூலம் தெரிவித்தபோது, திலீபனின் கட்டளைக்கு இணங்க, பிரபாகரன் அதை மறுத்துவிட்டார்.
கடைசியாய்...
திலீபனின் உண்ணாவிரத மேடையில் காசி ஆனந்தன், திலீபனைப் பற்றிய தனது கவிதையைப் படிக்கப் படிக்க... சுற்றியிருந்த மக்களின் இதயம் துரித கதியில் துடிக்கத் துடிக்க...
அந்த மாவீரனின் உயிர் பறந்தேதான் போனது!
யாழ்ப்பாணத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நல்லூர் கந்தசாமிப் பிள்ளை கோயில் தன்னுள் இப்போது ஒரு சோக வரலாற்றைச் சுமந்து நிற்கிறது!
யாழ் நெஞ்சங்களை உருக்கிய காசி ஆனந்தன் கவிதையில் இருந்து சில வரிகள்...
திலீபன் அழைப்பது சாவையா?!
இந்தச் சின்ன வயதில் இது தேவையா?
உலகம் இதை எண்ணிப் பார்க்குமா?
இங்கே ஒரு தமிழ் ஈழம் பூக்குமா?
எரிமலையன்று வெடிக்காதா?
புயல் எதிரிகள் வாழ்வை முடிக்காதா?
பிரளயம் ஒன்று முளைக்காதா?
எங்கள் பிள்ளை இன்னுயிர் பிழைக்காதா?
நோய் மடியில் சாகாமல்
நொடிந்து மருத்துவர் வீட்டுப்
பாய் மடியில் சாகாமல்
பருத்த உன் அழகான
வாய் மடியில் தவழும் சிரிப்போடு
தமிழ் ஈழத் தாய் மடியில் சாகும் தம்பி!
தமிழ் நெருப்பே!
இத்தமிழ் ஈழத்தில்
இருந்த சமையலறையில்
கத்திரியும் புடலையும்
காய்ந்துகிடக்கிறது...
என் தமிழ் தாய்மார்
பானை அடுப்பேற்றி
ஐந்து நாள் ஆகிறது!
அடுப்பும் அழுகிறது!
புலிகள் அழுவதில்லை என்பார்...
உன் மரணம்
புலிகளையும் அழவைக்கும்
பொல்லாத மரணமய்யா!
பார்த்திருக்க... கண்கள்
முன் பச்சையிளம் பாலகனே!
பூத்த இளம் சிரிப்போடு
போகின்றாய்... போகின்றாய்!
எத்தனை இறுமாப்பு!
என்ன தலை நிமிர்வு!
செத்து மடியும்போதும்
உனக்கு ஒரு சிரிப்பு!
உண்ணாவிரத மேடையிலே...
உன்னை நான் கண்
கொண்டு பார்த்தேன்
களப் புலியே! நீ
கையில் புத்தகத்தை
வைத்துப் படித்தாய்!
புறப்படும் முன்
முத்தமிழைப் படித்து
முடிக்க நினைத்தாயா?!
பேசிக்கொண்டிருந்தாய்...
சிரித்துக்கொண்டிருந்தாய்...
பார்த்துக்கொண்டிருந்தாய்...
பறந்து போகின்றாயே!
மேடையா கட்டினோம்...
நல்லூரிலே உனக்குப்
பாடைதான் கட்டினோம்!
உயிரோடு பாடையிலே
உட்கார்ந்த தமிழ்ப் புலியே!
வயிறு எரியுதடா!
வயிறு எரியுதடா!
விகடன்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: தமிழ் ஈழத்தாய் மடியில் சாகும் திலீபன் -உண்ணாவிரத நினைவுகள்
திலீபனின் உண்ணாநோன்புக்கும், அவரது உயிர்த்தியாகத்துக்கும் ஓரளவாவது இலங்கை அரசு செவிசாய்த்திருந்தால், ஈழ நிலைமை இவ்வளவு மோசமாகியிருக்காது..
திலீபனின் மரணமும், அரசின் பாராமுகமும் புலிகளின் போராட்ட திசையை மாற்றிவிட்டிருக்கக்கூடும்..சாத்வீக வழிகளில் அவர்கள் நம்பிக்கை இழக்கக் காரணமாக இருந்திருக்கக்கூடும்..
திலீபனின் மரணமும், அரசின் பாராமுகமும் புலிகளின் போராட்ட திசையை மாற்றிவிட்டிருக்கக்கூடும்..சாத்வீக வழிகளில் அவர்கள் நம்பிக்கை இழக்கக் காரணமாக இருந்திருக்கக்கூடும்..
Similar topics
» தமிழ் இனி மெல்ல சாகும்!!!!
» மெல்லத் தமிழ் இனிச் சாகும்!
» “மெல்லத் தமிழ் இனிச் சாகும்” - பாரதி உரைத்தாரா?
» மெல்ல தமிழ் இனிச் சாகும் - மிக மிக அருமையான வீடியோ காணவும்
» நின் மடியில்!
» மெல்லத் தமிழ் இனிச் சாகும்!
» “மெல்லத் தமிழ் இனிச் சாகும்” - பாரதி உரைத்தாரா?
» மெல்ல தமிழ் இனிச் சாகும் - மிக மிக அருமையான வீடியோ காணவும்
» நின் மடியில்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|