ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூட்டு வலிக்கு டாடா..

2 posters

Go down

மூட்டு வலிக்கு டாடா..  Empty மூட்டு வலிக்கு டாடா..

Post by கார்த்திநடராஜன் Thu Apr 21, 2011 9:25 am

வயதானவர்களுக்கு மட்டும் அல்ல... இன்றைய இளைய தலைமுறையினரையும் மூட்டு வலி
துரத்தத் தொடங்கிவிட்டது. ஆரம்பத்தில் தைலம் தடவுவது, வெந்நீர் ஒத்தடம்
ஆகியவையே மூட்டு வலிக்கான சிகிச்சையாக இருந்தது. மருத்துவ வளர்ச்சியில்
மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கு வரவேற்பு குறைவாகவே இருந்தது. காரணம்,
அறுவை சிகிச்சை செய்தாலும், அதன் பயன் 10 முதல் 15 ஆண்டுகள்தான். அதன்
பிறகு மீண்டும் ஒரு முறை அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

ஆனால் இன்று, காலாகாலத்துக்கும் சிக்கல் இல்லாத தீர்வாக புதிய தொழில்நுட்பம் வந்துவிட்டது.

முழங்காலில் உள்ள மூட்டு, இரண்டு பக்க எலும்புகளுக்கு இடையே பந்துபோல
உருண்டுகொண்டு இருக்கிறது. பல்வேறு காரணங்களால் இரு எலும்புகளுக்கும் இடையே
உள்ள சவ்வு சேதம் அடைவதால், மூட்டு இயங்குவதில் பாதிப்பு ஏற்படுகிறது. இது
வலி, வீக்கத்தில் தொடங்கிக் கடைசியில் நடக்க முடியாத நிலையை
உருவாக்கிவிடுகிறது.



மூட்டு வலிக்கு முதுமை மட்டுமே காரணம் அல்ல. பாரம்பரியத் தன்மையாலும், 80
சதவிகிதம் பேருக்கு மூட்டுவலி ஏற்படுவதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன.
முன்பெல்லாம் இந்தப் பிரச்னை 40 - 50 வயதினரையே அதிகம் பாதிக்கும். ஆனால்,
இப்போது இளம் வயதினரும் மூட்டு வலியில் மாட்டிக்கொண்டு தவிக்கிறார்கள்.

அமெரிக்காவில் அறிமுகமான புதிய தொழில்நுட்பம் மூலமாக, சென்னையில் அறுவை
சிகிச்சை செய்துவரும் போர்டிஸ் மலர் மருத்துவமனையின் மூட்டு மாற்று அறுவை
சிகிச்சை நிபுணர் நந்தகுமாரிடம் பேசினோம். ''மூட்டு வலிக்கு முக்கியக்
காரணம் எலும்பில் ஏற்படும் தேய்மானம்தான். மூட்டு எலும்பு இணைப்பைச் சுற்றி
உள்ள ஜவ்வு முற்றிலும் தேய்ந்த பிறகு, அந்தக் கிண்ணம் போன்ற அமைப்பில்
இருந்து எலும்பு வெளியே வர ஆரம்பிக்கும். இதனால், மாடிப்படிகளில் ஏறினாலோ,
உட்கார்ந்து எழுந்தாலோ, வலி அதிக​மாக இருக்கும்.

பொதுவாக கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டால், கட்டுப் போடு​கிறோம்,
அதனால் அசைவு இருக்காது. ஆனால், முட்டியில் அசைவு இருந்துகொண்டே
இருப்பதால், கட்டுப் போட முடியாது. அதனால், தேய்ந்த எலும்பின் அடி பாகத்தை
மட்டும் எடுத்துவிட்டு புதிய இணைப்பு போடுகிறோம். இரு எலும்புகளும் சேரும்
இடத்தில் மெட்டல் வைத்து, சவ்வுக்கு பதிலாக ஒரு வகையான பிளாஸ்டிக் வைப்பது
பழைய தொழில்நுட்பம். குறைந்த காலமே இது பயன்பாட்டில் இருக்கும் என்பதால்,
இத்தகைய அறுவை சிகிச்சைகளை 55 வயதுக்கு மேற்பட்ட​வர்களுக்கு மட்டுமே
பரிந்துரைப்போம்.

இப்போதைய நவீன தொழில்நுட்பத்தின்படி, மெட்டலில் மாற்றத்தை ஏற்படுத்தி
இருக்கிறோம். இதற்காக ஆக்ஸீனியம் என்ற மெட்டலைப் பயன்படுத்துகிறோம்.
ஜவ்வுக்கு பதிலாக ஹெடென்சிட்டி பாலி எத்தலின் பயன்படுத்துகிறோம். சிலருக்கு
மெட்டல் அலர்ஜி இருக்கும். ஆனால், புதிய தொழில்நுட்பம் அந்த
குறைபாட்டையும் நீக்கிவிட்டது. இது, முன்பு பயன்படுத்தப்பட்ட
மெட்டல்களைவிட, 4,900 மடங்கு அரிப்புத்தன்மை குறைவானது. முந்தைய
தொழில்நுட்பங்களின் தோல்விக்குக் காரணமே, மெட்டலில் ஏற்பட்ட உராய்வும்
கீறல்களும்தான்.

இந்த மெட்டலைப் பயன்படுத்தும்போது, அதன் மேல் ஒரு கோட்டிங் ஏற்படுகிறது.
அது மூட்டு அசையும்போது, ஹைடென்சிட்டி பாலி எத்தலின் மீது உராய்வுகளை
ஏற்படுத்துவது இல்லை. உராய்வு ஏற்பட​வில்லை, உடையவில்லை என்றால், அந்த
மூட்டின் ஆயுள் அதிகரிக்கிறது. அதாவது 40 ஆண்டுகள் முதல் 60 ஆண்டுகள்
வரை​யிலும்கூட தாக்குப்பிடிக்கும் வண்ணம் இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த
அறுவைசிகிச்சை முறை அமெரிக்​காவில் கண்டுபிடிக்கப்பட்ட, சில மாதங்களுக்கு
உள்ளாகவே தமிழகத்தில் அறிமுகப்படுத்தி விட்டோம். இப்போது மூட்டு​வலிக்கு
அறுவை சிகிச்சை செய்பவர்களுக்கு குறைந்தது 40 ஆண்டுகளுக்குப் பிரச்னை
இருக்காது.

பழைய சிகிச்சை முறையில், மூட்டு மாற்று அறுவைசிகிச்சை செய்பவர்கள் மூன்று
வாரம் பெட் ரெஸ்ட் எடுக்க வேண்டும். அதன் பிறகு பிசியோதெரப்பி சிகிச்சை பெற
வேண்டும். ஆனால், புதிய சிகிச்சை முறையில், அறுவை சிகிச்சை முடிந்த அடுத்த
நாளே நடக்க முடியும், ஐந்தாவது நாளில் வீட்டுக்குச் செல்லலாம். புதிய
தொழில்நுட்பத்தில், எலும்பையும் மெட்டலையும் இணைக்க எலும்பு சிமென்ட் தேவை
இல்லை. இந்தப் புதிய முறையால், எலும்புக்கும் மெட்டலுக்கும் இடை​யிலான
இணைப்பு இளக வாய்ப்பு இல்லை. பழைய சிகிச்​சைக்கும், புதிய சிகிச்சைக்கும்
கட்டணமும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை!'' என்கிறார் நம்பிக்கை
வார்க்கும் விதமாக!

பா.பிரவீன்குமார்
நன்றி
TMT


யாதும் ஊரே யாவரும் கேளிர்
கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011

Back to top Go down

மூட்டு வலிக்கு டாடா..  Empty Re: மூட்டு வலிக்கு டாடா..

Post by மஞ்சுபாஷிணி Thu Apr 21, 2011 10:07 am

வலி உயிர் போகும் கொடுமை இது... நான் அனுபவித்திருக்கிறேன்... ஆஸ்பிடல் போனால் டாக்டர் சொன்ன முதல் வார்த்தை உங்க 78 கிலோ உடம்பு பாரத்தை குறைங்கம்மா அதன்பின் நான் மருத்துவம் தருகிறேன் என்றார். உடல் எடை குறைய நாள் பிடிக்கும் நான் மரண அவஸ்தையில் இருக்கிறேன் அதை தீர்க்க முதலில் வழி பாருங்கள் என்று சொன்னபோது ஐஸ்கட்டிகளை முட்டியில் வைத்து அரை மணி நேரம் கட்டி வைத்து அதன்பின் ஒரு மருந்து கொடுத்திருந்தார் அதை போடச்சொன்னார். ஒரு வாரத்தில் வலி நிவாரணம் கிடைத்தது. உடல் வெயிட்டும் குறைத்ததால் பரவாயில்லை இப்போது....

இப்போது இந்த பகிர்வு படிக்கும்போது ஆசுவாசமாக இருக்கிறது. உண்மையே இளைய வயதுடையினரும் இந்த வலியில் அவஸ்தை படுகிறார்கள்....

பயனுள்ள பகிர்வு தந்தமைக்கு அன்பு நன்றிகள் கார்த்தி...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மூட்டு வலிக்கு டாடா..  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum