ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குருவியின் கண்ணீர்! (கவிதை)

5 posters

Go down

குருவியின் கண்ணீர்! (கவிதை) Empty குருவியின் கண்ணீர்! (கவிதை)

Post by kirikasan Wed Apr 20, 2011 12:23 pm

முக்கிய குறிப்பு:
இந்தக் கவிதை எழுதி ஒருவருடமாகிறது. எங்கும் வெளியிடவில்லை. ஏனோ வெளியிட மனம்வரவில்லை.
இப்போது தருகிறேன். சில வெளிச்சங்கள் விடிவெள்ளி தெரிகின்றதோ என்ற ஆதங்கத்தில்


ஊருக்குள்ளே ஒருஆலமரம் அதில் ஜோடிக்குருவியொன்று
சேரத்துணையுடன் வீற்றிருந்து கதைபேசி திளைத்தனவே
நேரேதிசை யெங்கும் வெட்டவெளி மரம்பட்டு,வேலி சரிந்து
சூறைகொண்டசுடுகாடெனவே சிறு தீ புகைஆங்கு ஆங்கு

மாய அசுரனின் கால்படிந்ததென மாறிநிசப்தம்கொண்டு
பேயறைந்த சிறு தீவெனவே ஒருபூமிஅதிர்வு கண்டு
காயக்கிடந்ததை கண்டு கலங்கியே ஆலமரக்குருவி
வாயைத்திறந்தொரு வார்த்தை வினவிற்று ஏனோ இதுவுமென்று

சிட்டுக்குருவியின் கண்ணதிலே ஓரம் முட்டவே நீர் தளும்பி
சொட்டென்று கீழ்நோக்கி சொட்டும் திசைதனைக் கண்டது ஆண்குருவி
வட்ட அலைவிரி பொய்கை ஒன்று அதில் வண்ண மலர் சிலது
சட்டென்று துள்ளி விழும் சிறு மீனுடன் சத்தமின்றி இருக்க’

பக்கத்திலே கரைமீது இருவர்தம் பாதங்களில் படிந்து
நிற்கும் குருதியை நீரில் கழுவிபின் நேரேகரையடைந்தார்
சற்றுபெருத்தவன் சத்தமிட்டேஒரு சுற்று சுழன்றடித்து
மற்ற்வன்கண்டிட மேனிமுறுக்கியே சத்தமாய் பாட்டிசைத்தான்

ஒருவன்:

சத்தியவேதனை என்றொரு புத்தகம் குப்பையி லேகிடக்கு- அது
வைத்திருந்த கரம் பற்றியிருக்கஓர் கத்தி கொடுத்தாச்சு
கொட்டும் குருதியில் தோய்த்த துணியினில் கொடி பிடித்தாச்சு- தமிழ்
வெட்டி உயிர் கொல்ல கத்துற ஓலமே எங்கள் இசையாச்சு

மற்றவன்:

புத்தம் சரணமே கச்சாமிஎன்பதை விட்டு தொலைச்சாச்சு இனி
ரத்தம் வரணும் நீ வெட்டுகழுத்தென்ப தெங்கள் இசையாச்சு
நித்தம் கழுவியும் ரத்தம் பிடித்துடை காவி நிறமாச்சு- அதைக்
கட்டும்இனம் புத்தகோவில் விட்டு ஒரு கட்சியில் சேர்ந்தாச்சு

புத்திகலங்கிட நற்குடி மக்கள்தம் வீட்டினில் குண்டெறிந்தோம் -ஒரு
கத்திஎடுத்தவர் கண்களைத் தோண்டியே கட்டியும் தொங்கவிட்டோம்
வைத்தநிதிபல பொற்குவை அள்ளியே வஞ்சியர்கற்பழித்தோம் இன்னும்
எத்தனை வதைகள்செய்துமுடித்திட்டோம் எத்தனை இன்பமதோ

(குருவி)

ஆலமரத்திடை ஆண்குருவி இதைக் கேட்டதும் கண்சிவந்து
ஆலவிசமுண்ட தாகத் துடித்துமே அததனைகோபம் கொண்டு
ஓலமிடும் படுபாதகரே பெரும் வீரமா பேசுகிறீர்
பாலகர் பெண்களும் பாய்படுத்த கிழமானவர் கொன்றுவிட்டு


நேர்நின்று மோதினும் நீதிஇருக்கென்று காரணத்தை உரைத்து
பார்கொண்டதேசங்கள் வீரத்தமிழ்கரம் பின்னே பிணைத்து வைக்க
கூர்கொண்டை ஈட்டியை எட்ட நின்றெறியும்கெட்டிகாரச் சூரனே
வீரமிருந்திடின் நேர்மையுடன் நீயும் மோதுதல் ஆண்மையன்றோ

செத்தபாம்பைஒரு நெட்டை கம்புகொண்டு பத்துப்பேர் சேர்ந்தடிக்கும்
வித்தைதனில் ஒரு வித்தகர் நீரென்று வையம் முழுதறியும்
வீரம் செழித்த நிலையினிலே தமிழ் வென்றிடுவான் என்றதும்
சாரம்கெட்டுபடு கோரநஞ்செறிந்து கொன்ற நீகோழை அன்றோ

கல்லெடுத்து கடும் கோபம் கொண்டு கீழேநின்றிருந்தஒருவன்
புள்ளின ஜோடிகள் உள்ள திசைநோக்கி ஓங்கி எறிந்திடவே
துள்ளியெழுந்து பறந்தனவேயந்த ஜோடிக்குருவி ரண்டும்
வெள்ளிமுகில் வானில் ஓடும்திசைதனில் விர்ரெனப் பாட்டிசைத்தே

குருவிப்பாட்டு:

போருக்கென்றே ஒரு நீதி வகுத்தது பூமியென்னும் கோளம்
யாருக்குத்தேவையாம் என்று கிழித்தது மாபெரும் அன்னைதேசம்
சத்தியம் நேர்மை அகிம்சை எனசொல்லின் சட்டெனகைபிடித்து
பைத்தியம் என்றொரு பட்டம் கொடுத்துள்ளே தள்ளியது தேசம்

எத்தனை நாளிவர் பொய்யை மறைத்திங்கு வெள்ளையுடை அணிவர்
செத்தவர் தம்முடன் சேர்ந்த உண்மைகளும் வெட்டிக்குழிபுதைத்தார்
நித்தியமாய் மறைந்தோடும் என அவர் தப்புகணக்கெடுத்தார்
சத்தியதீயினை வைக்கோல் போருக்குள்ளே பத்திரமா யொழித்தார்

பற்றி எரிந்துடும் நாள்ஒன்றில் பாரடா அப்போ ஒளிபிறக்கும்
நித்திலம் எங்கணும் மூடும் இருள்தன்னை உண்மை ஒளிவிரட்டும்
அத்தனை பேர்களின் முன்னிலையில் அவர்செய்தபோர்க் குற்றமெல்லாம்
வெட்ட வெளிசசமாய் நிற்கின்றதாய் ஒரு வேளை பிறந்துவரும்

வீரத்தமிழ்மகன் செல்லும் அறவழி தூரம் நெடிதிருக்கும்
ஆயினும்மாசு மறுவற்றஇலட்சிய மேமுடிவில் ஜெயிக்கும்
கோரப்பலிகொண்ட முள்ளிவாய்க்கால் மண்ணின் பாவம்பழிகளுக்கு
சாபம் கிடைத்தவர் சஞ்சலம் கொள்கின்ற நாளும் நெருங்கிவரும்

அய்யோ என்று கத்திஓலமிட்ட சிறு பிள்ளையின் கூக்குரலும்
ஆ வென்றலறியே தம்முயிர் போகையில் துடித்தபெண் மகளும்
மண்ணில் குழிவெட்டி உள்ளேஉயிர்காக்க நின்றவர் கண்விழிக்க
மண்ணைமூடி அவர் மூச்சைஅடக்கிய மாபெரும் கோரங்களும்

விண்ணில் எழுந்துமே நிற்கின்றன அவை வீணில் கரைவதில்லை
என்றோ ஒருநாள் இடிமுழங்கி இந்த மண்ணில் இறங்கிவரும்
அன்று எரியும் இப்பேய்களின் தேசமும் ஆளும் கொடுங் கோலும்
நின்று வெல்லும் நீதி, சத்தியத்தீ புன்மை சாம்பலென எரிக்கும்


Last edited by kirikasan on Wed Apr 20, 2011 5:09 pm; edited 1 time in total
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

குருவியின் கண்ணீர்! (கவிதை) Empty Re: குருவியின் கண்ணீர்! (கவிதை)

Post by சிவா Wed Apr 20, 2011 12:32 pm

///புத்தம் சரணமே கச்சாமிஎன்பதை விட்டு தொலைச்சாச்சு இனி
ரத்தம் வரணும் நீ வெட்டுகழுத்தென்ப தெங்கள் இசையாச்சு
நித்தம் கழுவியும் ரத்தம் பிடித்துடை காவி நிறமாச்சு- அதைக்
கட்டும்இனம் புத்தகோவில் விட்டு ஒரு கட்சியில் சேர்ந்தாச்சு///


புத்த துறவிகளின் உண்மை நிலையை அழகாக் கூறியுள்ளீர்கள்!

///அய்யோ என்று கத்திஓலமிட்ட சிறு பிள்ளையின் கூக்குரலும்
ஆ வென்றலறியே தம்முயிர் போகையில் துடித்தபெண் மகளும்
மண்ணில் குழிவெட்டி உள்ளேஉயிர்காக்க நின்றவர் கண்விழிக்க
மண்ணைமூடி அவர் மூச்சைஅடக்கிய மாபெரும் கோரங்களும்///

///விண்ணில் எழுந்துமே நிற்கின்றன அவை வீணில் கரைவதில்லை
என்றோ ஒருநாள் இடிமுழங்கி இந்த மண்ணில் இறங்கிவரும்
அன்று எரியும் இப்பேய்களின் தேசமும் ஆளும் கொடுங் கோலும்
நின்று வெல்லும் நீதி, சத்தியத்தீ புன்மை சாம்பலென எரிக்கும்///

மனதை உருக்கும் வரிகள் அண்ணா!


குருவியின் கண்ணீர்! (கவிதை) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குருவியின் கண்ணீர்! (கவிதை) Empty Re: குருவியின் கண்ணீர்! (கவிதை)

Post by முரளிராஜா Wed Apr 20, 2011 12:34 pm

அருமையான வரிகள்
அருமையான கருத்து
வாழ்த்துக்கள் நண்பரே சூப்பருங்க
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

குருவியின் கண்ணீர்! (கவிதை) Empty Re: குருவியின் கண்ணீர்! (கவிதை)

Post by kirikasan Wed Apr 20, 2011 12:46 pm

சிவா wrote:
///விண்ணில் எழுந்துமே நிற்கின்றன அவை வீணில் கரைவதில்லை
என்றோ ஒருநாள் இடிமுழங்கி இந்த மண்ணில் இறங்கிவரும்
அன்று எரியும் இப்பேய்களின் தேசமும் ஆளும் கொடுங் கோலும்
நின்று வெல்லும் நீதி, சத்தியத்தீ புன்மை சாம்பலென எரிக்கும்///

மனதை உருக்கும் வரிகள் அண்ணா!

நன்றி அன்புடன் தங்கள் வார்த்தைகளுக்கு! நீண்ட நாட்களின்பின் தங்களை சந்திக்கும் மகிழ்வு இத்துயர்சொல்லும் கவிதையில் கிடைத்தது!
முரளிராஜா தங்களுக்கும் நன்றிகள்!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

குருவியின் கண்ணீர்! (கவிதை) Empty Re: குருவியின் கண்ணீர்! (கவிதை)

Post by யாதுமானவள் Wed Apr 20, 2011 1:20 pm

சகோதரர் கிரி,

ஆழமான வார்த்தைகள். அருமையான கோர்ப்புகள். ஈழக் காணியில் வீழும் உயிர்களை உணர்வு சிலிர்க்க தாங்கள் எழுதுவதைப் படிக்கும் ஒவ்வொருவரும் உணர்வாலாவது நாம் தமிழர் என ஒன்றுபட்டு தமிழீழம் வென்றெடுக்கத் தோள் கொடுப்பார்களாக!

வெட்டி உயிர் கொல்ல கத்துற ஓலமே எங்கள் இசையாச்சு -- மரண ஓலமே இசையான கொடுமை அரங்கேறும் ஈழம்

நித்தம் கழுவியும் ரத்தம் பிடித்துடை காவி நிறமாச்சு - காவிக்கறை இதுதானடா என்று சொல்லும் கோரம்

கத்திஎடுத்தவர் கண்களைத் தோண்டியே கட்டியும் தொங்கவிட்டோம் - தோரணங்களாய்க் கண்களைத் தொங்க விட்ட கொடூரம்....

இது கவிதையல்ல.... கண்ணீரல்ல.. ஒரு குருவியின் கதறல்...


அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Back to top Go down

குருவியின் கண்ணீர்! (கவிதை) Empty Re: குருவியின் கண்ணீர்! (கவிதை)

Post by kirikasan Wed Apr 20, 2011 3:26 pm

யாதுமானவள் wrote:சகோதரர் கிரி,

ஆழமான வார்த்தைகள். அருமையான கோர்ப்புகள். ஈழக் காணியில் வீழும் உயிர்களை உணர்வு சிலிர்க்க தாங்கள் எழுதுவதைப் படிக்கும் ஒவ்வொருவரும் உணர்வாலாவது நாம் தமிழர் என ஒன்றுபட்டு தமிழீழம் வென்றெடுக்கத் தோள் கொடுப்பார்களாக!

வெட்டி உயிர் கொல்ல கத்துற ஓலமே எங்கள் இசையாச்சு -- மரண ஓலமே இசையான கொடுமை அரங்கேறும் ஈழம்

நித்தம் கழுவியும் ரத்தம் பிடித்துடை காவி நிறமாச்சு - காவிக்கறை இதுதானடா என்று சொல்லும் கோரம்

கத்திஎடுத்தவர் கண்களைத் தோண்டியே கட்டியும் தொங்கவிட்டோம் - தோரணங்களாய்க் கண்களைத் தொங்க விட்ட கொடூரம்....

இது கவிதையல்ல.... கண்ணீரல்ல.. ஒரு குருவியின் கதறல்...


நன்றி சகோதரி! தங்கள் வாழ்த்து என்னை கௌரவித்தது
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

குருவியின் கண்ணீர்! (கவிதை) Empty Re: குருவியின் கண்ணீர்! (கவிதை)

Post by மஞ்சுபாஷிணி Wed Apr 20, 2011 5:20 pm

எத்தனை உயிர்களை காவுகொண்டப்பின்னரும் வேட்கை தீராமல் அலைகின்ற அரக்கர்களின் கொடூர மனதை படம் பிடித்து காட்டியது ஒவ்வொரு வரியும்....

உயிரிழந்த ஆன்மாக்களின் வேதனைக்குரல்....
ஆலோலம் பாடி களித்திடவேண்டிய சிட்டுக்குருவிகள் இங்கு நடக்கும் வேதனைகளை அமைதியுடன் பார்க்கும்படியான நிகழ்வுகள்....

சம்மட்டியால் ஓங்கி இதயத்தில் அடிக்கப்பட்ட அடிகளின் அழுத்தமான வரிகளுக்கு என் அன்பு வாழ்த்துக்கள் ஐயா...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

குருவியின் கண்ணீர்! (கவிதை) 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

குருவியின் கண்ணீர்! (கவிதை) Empty Re: குருவியின் கண்ணீர்! (கவிதை)

Post by kirikasan Wed Apr 20, 2011 6:02 pm

மஞ்சுபாஷிணி wrote:எத்தனை உயிர்களை காவுகொண்டப்பின்னரும் வேட்கை தீராமல் அலைகின்ற அரக்கர்களின் கொடூர மனதை படம் பிடித்து காட்டியது ஒவ்வொரு வரியும்....

உயிரிழந்த ஆன்மாக்களின் வேதனைக்குரல்....
ஆலோலம் பாடி களித்திடவேண்டிய சிட்டுக்குருவிகள் இங்கு நடக்கும் வேதனைகளை அமைதியுடன் பார்க்கும்படியான நிகழ்வுகள்....

சம்மட்டியால் ஓங்கி இதயத்தில் அடிக்கப்பட்ட அடிகளின் அழுத்தமான வரிகளுக்கு என் அன்பு வாழ்த்துக்கள் ஐயா...

நன்றி என்னும் சிறு சொல்லினுள் மாபெரும் உணர்வுகளை உள்ளடக்கிக் கூறுகிறேன்
நன்றி!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

குருவியின் கண்ணீர்! (கவிதை) Empty Re: குருவியின் கண்ணீர்! (கவிதை)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum