ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அது!-ஒரு திகில் கதை- இந்த கதையின் முடிவை உங்களால் ஊகிக்க முடிகிறதா?

+3
கலைவேந்தன்
ANTHAPPAARVAI
ஸ்ரீமதி வேலன்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அது!-ஒரு திகில் கதை- இந்த கதையின் முடிவை உங்களால் ஊகிக்க முடிகிறதா? Empty அது!-ஒரு திகில் கதை- இந்த கதையின் முடிவை உங்களால் ஊகிக்க முடிகிறதா?

Post by ஸ்ரீமதி வேலன் Tue Apr 19, 2011 5:32 pm

அது!”




-ஒரு திகில் கதை
(இதய பலவீனமானவர்கள் படிக்க வேண்டாம்)

அது!-ஒரு திகில் கதை- இந்த கதையின் முடிவை உங்களால் ஊகிக்க முடிகிறதா? 5RXANZCA2178STCAH48KQ0CA0QF8BSCA2TLNSVCAJ1QZU8CA34ZT37CADVPOCOCARJ3Y8YCA50FFU1CAMBWTK2CAB94SGZCAC1LNKNCAMZVURECADGG9PYCAGFYRGJCALXX85DCAUR2AXLCABF0NNSஅது ஒரு அம்மாவாசை நாள். நட்சத்திரங்கள் கூட ஒன்று விடாமல் மொத்தமாக காணாமல்
போயிருந்தது. போக்குவரத்து வசதி குறைவான அந்த மலை கிராமத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள அந்த பேருந்து நிறுத்தத்திற்கு நான் வேக வேகமாக வந்து சேர்ந்த பொழுது இரவு மணி சுமாராக 11.30 இருக்கும். அந்த நேரத்தில் அவ்வழியே பொள்ளாச்சிக்கு ஒரு கடைசி பேருந்து போவதாக சொல்லியிருந்தார்கள். அந்த இடத்தில் தார்சாலையை ஒட்டி பெரிய ஆலமரம் ஒன்று, ஒரு அடையாளமாக இருந்தது. அந்த இடத்தில் மட்டும் ஆச்சரியமாக ஒரு மின் கம்பத்தில் குழல் விளக்கு ஒன்று மங்கிய ஒளியை தந்து கடமையற்றியது. அந்த கும்மிருட்டுக்கு அது போதுமானதாக இல்லாவிட்டாலும், சற்று தூரத்திற்க்குள் உள்ளவைகளை அடையாளம் காண உதவியாக இருந்தது. இங்கேதான் அந்த "அது" இருப்பதாக கடைக்காரர் சொன்னார்.

சாலையின் மறுபுறம் ஒரு பெட்டியும் நான்கைந்து தட்டியும் வைத்த ஒரு தேநீர் கடை தெரிந்தது. மொத்த கடைக்கும் ஒரு சிம்னி விளக்கு மட்டுமே ஒளி கொடுத்தது. அந்த கடைசி பேருந்து வந்து சென்ற பிறகே அந்த ஒத்தை கடையும் அடைப்பார்கள் என்று எனக்கு முன்னதாக கிடைத்த தகவல். எனவே அந்த கடையின் வெளிச்சத்தை வைத்தே பேருந்து இன்னும் கடக்கவில்லை என்று ஊகித்து மகிழ்ச்சியடைந்தேன்.

தாழ்வான கூரை கொண்ட அந்த கடையில் குனிந்து நோக்கிய போது, கடைக்காரர்,

“என்ன தம்பி பொள்ளாச்சியா” என்றார்.

“ஆமாங்க, கடைசி பஸ் போய்டுசிங்களா?”

“இன்னும் இல்ல தம்பி. பதினொன்னேகாலுக்கே வர வேண்டியது. இன்னும் வரவில்லை, சில நாட்கள் தாமதமா வரும் சில நாட்கள் வராது. இப்பவே மணி பனிரெண்டாகபோகுது. இனி சந்தேகம்தான்”

திக்கென்று இருந்தது எனக்கு!.

“தம்பி டீ குடிக்கிறிங்களா?” என்றார் கடைக்காரர்.

“தாங்க”.

இந்த குளிருக்கு அது தேவைப்பட்டது. மதியத்திலிருந்து சாப்பிடவில்லை. வேறு ஏதாவது கிடைக்குமா என்று கடையை கண்ணால் அலசிய போது, பசிக்கு தோதாக அங்கு தொங்கிய பன் தென்பட்டது.

டீயும் பன்னும் கொஞ்சம் தெம்பை கொடுத்தது. நேரம் பனிரெண்டை தாண்டியது.

அடுப்பை அணைத்து, பத்திரங்களை கழுவ ஆரம்பித்தார் கடைகாரர்.

“என்னங்க கடைய அடைக்க போறிங்களா?”

“ஆமாம் தம்பி நான் இங்கிருந்து சைக்கிளில் இரண்டு கிலோமீட்டர் போகவேண்டும், இனி பஸ் வருவது சந்தேகம். இந்த நேரத்தில் இங்கு வந்து மாட்டிக்கிட்டீன்களே!. கொஞ்ச நேரம் பாருங்க, இல்லைனா இந்த வழியா எப்பவாவது மரம் ஏற்றிச்செல்லும் லாரி வரும். அதில் ஏறி பொள்ளாச்சி போய்டுங்க”
“சரிங்க”

“இந்த இடம் கொஞ்சம் மோசமான இடம்!. இன்று அம்மவசை வேறு. எப்படியாவது எதையாவது பிடிச்சு ஊர் போய் சேருங்க!”

“ஏங்க?”

“இந்த இடத்தில் ‘அது’ இருக்குங்க!. நானே ஒரு வாட்டி பாத்திருக்கேன். நீங்க நம்புரீங்களோ இல்லையோ?. சின்ன வயசா வேற இருக்கீங்க கவனமா இருங்க!” என்று சொல்லிவிட்டு என் பதிலை கூட எதிபாராமல் கடையை பூட்டி, சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டார்.

இவ்வளவு நேரம் துணைக்கு கடைக்காரர் இருக்கிறார் என்ற நம்பிக்கையிலிருந்த எனக்கு பயம் தலை தூக்கியது.

இப்போது அந்த கடைக்காரர் மீது எனக்கு கோபம் வந்தது. போற மனுஷன் சும்மா போக வேண்டியதுதானே? எதற்கு “அது” என்று எதையோ சொல்லிவிட்டு போகவேண்டும்?. பொதுவாக எனக்கு இந்த பேய் பிசாசு இவைகளில் நம்பிக்கை இல்லை. இவர் சொல்லாமல் போயிருந்தால் இந்த அமானுசிய சூழ்நிலையில் நான் ஓரளவு தைரியமாக இருந்திருப்பேன்.

நேரம் நள்ளிரவு ஒரு மணியை தொட்டது!. எங்கோ தூ.....ரத்தில் ஒரு நாய் ஊளையிட்டது. இந்த ஒத்தை குழல் விளக்கும் அவ்வப்பொழுது ஒரு நிமிடம் அணைந்து ஒளிர்ந்தது. வெகு தொலைவில் ஒரு வீடு இருக்கும் போலும். ஒரு சிறிய வெளிச்சம் மட்டும் மினிக்கிக்கொண்டிருந்தது. அண்ணாந்து ஆலமரத்தை பார்தேன். ஆலமரத்தில் காக்கை குருவிகள் இருக்கிறதா? தூங்கிவிட்டிருக்கும் போலும். அவ்வளவு அமைதி. மரத்தில் அந்த இருளினில் ஏதேதோ உருவங்கள் நின்றுகொண்டும் உட்கார்ந்து கொண்டும் என்னை நோட்டமிடுவதுபோல் எனக்கு பிரமை ஏற்பட்டது. சில் வண்டுகளின் அந்த இடைவிடாத ரீங்காரம்தான் என் பயத்தை கொஞ்சம் அதிகப்படுத்தியது.

அது!-ஒரு திகில் கதை- இந்த கதையின் முடிவை உங்களால் ஊகிக்க முடிகிறதா? CRYHZ5CAYC7CJGCAD3AED1CAK0HZETCALXE9E1CAAFZSNYCAQOSJGUCANMV6XNCAH4AHQ5CAVVBHCPCANF6Z13CARUVK7OCAHV9UEQCA6IU3UGCAJ3WMW0CA8U4YQKCA68RVMJCA97O2FHCADN0NPS நான் கோவையிலிருந்து கிளம்பும்போதே என் மனைவி சொன்னாள், இப்போதே மணி நான்கு ஆகிறது. இனி பொள்ளாச்சி போய் அங்கிருந்து அந்த கிராமத்தை அடைய எட்டு மணி ஆகிவிடும். திரும்ப தாமதமானால் பேருந்து கிடைப்பது சிரமம் என்று. நான்தான் கேட்கவில்லை. அனுபவிக்கிறேன்.

எனக்கு நீண்ட நாள் வர வேண்டிய பாக்கி அது. பால்ய காலத்து சிநேகிதன், நட்பு ரீதியாக அவசரத்திற்கு கேட்டானே என்று சுளையாக பத்தாயிரம் எடுத்து கொடுத்தேன். வருடம் இரண்டாகி ஆள் காணாமல் போய் நேற்றுதான் அவன் சித்தப்பா யதேச்சையாக சந்தித்தபோது இங்கு இருப்பதாக கூறினார். இன்று சம்பள நாள் ஆகையால் நேரடியாக சொல்லாமல் போனால் வாங்கலாம் என்ற எண்ணத்தில் இங்கு வந்தால் காரியம் ஆகவில்லை. காதிருந்ததுதான் மிச்சம். இங்கு தங்குவதற்கும் தோது இல்லை.

பயத்தை போக்க பாடலாம் என்று நினைத்தால், எனக்கு அவ்வளவாக பாடவராது. அதுவுமில்லாமல் நான் ஏடா கூடமாக பாடி, ஆலமரத்தில் நிம்மதியாக தூங்கிக்கொண்டிருக்கும் அந்த “அது” தன்னை தொந்தரவு செய்ததாக நினைத்து மேலிருந்து குதித்துவிட்டால் என்ன செய்வது என்ற காரணத்தினால் பாடாமல் இருந்துவிட்டேன்.

இந்த பயத்திலேயே மேற்கொண்டு ஒரு அரை மணிநேரம் காத்திருந்த பொழுது, அந்த சாலையின் சற்று தூரத்தில் இரண்டு விளக்கொளி மெதுவாக ஊர்ந்து என்னை நோக்கி வருவது தெரிந்தது!. எனக்கு அது பல சந்தேகங்களை ஏற்படுத்தியது. அது பேருந்து என்றால் அந்த ஒளி இன்னும் கொஞ்சம் பிரகாசமாகவும் வேகமாகவும் நகர்ந்து வரவேண்டும். மேலும் பேருந்தின் அந்த இயல்பான இரைச்சலும் இல்லை. அந்த குளிரிலும் எனக்கு வியர்க்க ஆரம்பித்தது!.

அந்த ஒளி அருகில் வந்த போதுதான் தெரிந்தது, அது ஒரு பேருந்து என்று. எனக்கு மகிழ்ச்சி தாளவில்லை!. அப்பாடா, இந்த இடத்திலிருந்து தப்பிக்க போகிறோம்!. இனி எது வந்தாலும் பயமில்லை!. இந்த மகிழ்ச்சியில், பேருந்து நிற்பதற்க்காக கூட காத்திராமல் ஓடிச்சென்று ஏறினேன். ஆனால், இந்த மகிழ்ச்சி நீடிக்காது!, ‘அந்த’ பயங்கரத்திடம் மாட்டப்போகிறோம்! என்று அப்போது உணரவில்லை.

பேருந்தின் முன் வழியாக ஏறியவுடன், அருகில் இருந்த இருக்கை காலியாக இருந்ததால் ஜன்னல் ஓரமாக அமர்ந்துகொண்டேன். இவ்வளவு நேரம் பயத்தில் தூக்கம் வாராவிட்டாலும், அசதியாக இருந்ததால், இனிமேலாவது பொள்ளாச்சிவரை தூங்கிக்கொண்டு போகலாம். அந்த இடம் சாய்வதற்கு வசதியாக இருந்தது.

அப்போதுதான் கவனித்தேன். முன்புறம் பயணிகள் இருக்கைகள் காலியாக இருந்தன. பின்புறம் திரும்பி பார்த்தேன். எல்லா இருக்கைகலுமே காலியாக இருந்தன. நள்ளிரவு கடந்துவிட்டதால், பயணிகள் யாரும் இல்லை என்று நினைத்துக்கொண்டு நடத்துனரை தேடினேன். அவரையும் காணவில்லை. எனக்கு பயம் கலந்த வியப்பு ஏற்பட்டது. பேருந்தின் நடுவில் ஒரே ஒரு விளக்கு மட்டும் மங்கலாக எரிந்து கொண்டிருந்தது. ஓட்டுனரை பார்த்து கேட்போம் என்றெண்ணி அவர் இருக்கை அருகில் சென்று பார்த்தேன். அந்த விநாடி என் இதயத் துடிப்பு கிட்டத் தட்ட நின்றுவிட்டது.

இருக்கையில் ஓட்டுனரை காணவில்லை!....? அது!-ஒரு திகில் கதை- இந்த கதையின் முடிவை உங்களால் ஊகிக்க முடிகிறதா? XEUJMMCAHJCLQ1CAOEAQ49CAR4OQHJCAG9BBQLCAPAVZ8PCADBO5N7CA0WSDKNCAY5VS9VCAN03OUACANQY011CAGW37LWCA3K0SEJCAJJ482JCANS3ZQXCA50JSRVCAQXGM5FCAZIO891CAS63B8C ஆனால், பேருந்து மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது....!

எனக்கு பயத்தில் மயக்கம் வருவது போல் இருந்தது. ஓட்டுனருக்கு பின் இருக்கையில் அமர்ந்துவிட்டேன். டீக்கடைக்காரர் சொன்னது உண்மைதான். அது தன் செயலை நடத்தி விட்டது. ஓரளவு தைரியத்தை எனக்குள் ஏற்படுத்திக்கொண்டு, பேருந்தில் இருந்து குதித்து விடலாம் என்று நினைத்து இருக்கையிலிருந்து எழ முற்பட்ட பொழுது,

பேருந்து மெதுவாக நின்றது.....!?

என்ன நடக்கப்போகிறதோ? ..... என்று யோசித்த போது....

என் தோளை ஒரு முரட்டு கை பற்றி இறுக்கியது.......!!!!!

இந்த கதையின் முடிவை உங்களால் ஊகிக்க முடிகிறதா?


வாழ்க்கை வாழ்வதற்கே! சிரி

என்றும் தமிழச்சி புன்னகை
ஓவியா ஸ்ரீ சூப்பருங்க மீண்டும் சந்திப்போம்
ஸ்ரீமதி வேலன்
ஸ்ரீமதி வேலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011

Back to top Go down

அது!-ஒரு திகில் கதை- இந்த கதையின் முடிவை உங்களால் ஊகிக்க முடிகிறதா? Empty Re: அது!-ஒரு திகில் கதை- இந்த கதையின் முடிவை உங்களால் ஊகிக்க முடிகிறதா?

Post by ANTHAPPAARVAI Tue Apr 19, 2011 5:51 pm

1. "தம்பி!.. நான் கெளம்பப் போறேன், இனி பேருந்து வராது... வாங்க என் வீட்டுல தங்கியிருந்துட்டு காலையில போகலாம்." என்று தட்டி எழுப்பினார் கடைக்காரர்!

2. ""தம்பி!.. பேருந்து வந்துடுச்சி.... எழுந்திரிங்க..." என்று தட்டி எழுப்பினார் கடைக்காரர்!

3. யோசிக்கிறேன்..............


அது!-ஒரு திகில் கதை- இந்த கதையின் முடிவை உங்களால் ஊகிக்க முடிகிறதா? Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

அது!-ஒரு திகில் கதை- இந்த கதையின் முடிவை உங்களால் ஊகிக்க முடிகிறதா? Empty Re: அது!-ஒரு திகில் கதை- இந்த கதையின் முடிவை உங்களால் ஊகிக்க முடிகிறதா?

Post by ஸ்ரீமதி வேலன் Tue Apr 19, 2011 5:55 pm

யோசிங்க ........... அது!-ஒரு திகில் கதை- இந்த கதையின் முடிவை உங்களால் ஊகிக்க முடிகிறதா? 838572


வாழ்க்கை வாழ்வதற்கே! சிரி

என்றும் தமிழச்சி புன்னகை
ஓவியா ஸ்ரீ சூப்பருங்க மீண்டும் சந்திப்போம்
ஸ்ரீமதி வேலன்
ஸ்ரீமதி வேலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011

Back to top Go down

அது!-ஒரு திகில் கதை- இந்த கதையின் முடிவை உங்களால் ஊகிக்க முடிகிறதா? Empty Re: அது!-ஒரு திகில் கதை- இந்த கதையின் முடிவை உங்களால் ஊகிக்க முடிகிறதா?

Post by கலைவேந்தன் Tue Apr 19, 2011 7:55 pm

ANTHAPPAARVAI wrote:1. "தம்பி!.. நான் கெளம்பப் போறேன், இனி பேருந்து வராது... வாங்க என் வீட்டுல தங்கியிருந்துட்டு காலையில போகலாம்." என்று தட்டி எழுப்பினார் கடைக்காரர்!

2. ""தம்பி!.. பேருந்து வந்துடுச்சி.... எழுந்திரிங்க..." என்று தட்டி எழுப்பினார் கடைக்காரர்!

3. யோசிக்கிறேன்..............

முதல் இரண்டு முடிவுகளும் சூப்பர்... சூப்பருங்க

மூனாவது பற்றி கருத்து சொல்ல விரும்பலை.. ஜாலி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

அது!-ஒரு திகில் கதை- இந்த கதையின் முடிவை உங்களால் ஊகிக்க முடிகிறதா? Empty Re: அது!-ஒரு திகில் கதை- இந்த கதையின் முடிவை உங்களால் ஊகிக்க முடிகிறதா?

Post by sweetusvaiz Tue Apr 19, 2011 8:05 pm

ஐயோ ஐயோ !!!!! ரொம்ப பயமா இருக்குது ......
""தம்பி!.. பேருந்து வந்துடுச்சி.... எழுந்திரிங்க..." என்று தட்டி எழுப்பினார் கடைக்காரர்!
யோசிக்கிறான் !!!!!!
sweetusvaiz
sweetusvaiz
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 38
இணைந்தது : 19/04/2011

Back to top Go down

அது!-ஒரு திகில் கதை- இந்த கதையின் முடிவை உங்களால் ஊகிக்க முடிகிறதா? Empty Re: அது!-ஒரு திகில் கதை- இந்த கதையின் முடிவை உங்களால் ஊகிக்க முடிகிறதா?

Post by ஸ்ரீமதி வேலன் Tue Apr 19, 2011 8:16 pm

யாராவது சொல்லுங்களேன்


வாழ்க்கை வாழ்வதற்கே! சிரி

என்றும் தமிழச்சி புன்னகை
ஓவியா ஸ்ரீ சூப்பருங்க மீண்டும் சந்திப்போம்
ஸ்ரீமதி வேலன்
ஸ்ரீமதி வேலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011

Back to top Go down

அது!-ஒரு திகில் கதை- இந்த கதையின் முடிவை உங்களால் ஊகிக்க முடிகிறதா? Empty Re: அது!-ஒரு திகில் கதை- இந்த கதையின் முடிவை உங்களால் ஊகிக்க முடிகிறதா?

Post by ANTHAPPAARVAI Tue Apr 19, 2011 10:21 pm

கலை wrote:
ANTHAPPAARVAI wrote:1. "தம்பி!.. நான் கெளம்பப் போறேன், இனி பேருந்து வராது... வாங்க என் வீட்டுல தங்கியிருந்துட்டு காலையில போகலாம்." என்று தட்டி எழுப்பினார் கடைக்காரர்!

2. ""தம்பி!.. பேருந்து வந்துடுச்சி.... எழுந்திரிங்க..." என்று தட்டி எழுப்பினார் கடைக்காரர்!

3. யோசிக்கிறேன்..............

முதல் இரண்டு முடிவுகளும் சூப்பர்... சூப்பருங்க

மூனாவது பற்றி கருத்து சொல்ல விரும்பலை.. ஜாலி

என்னா.... வில்லத்தனம்....! சிரிப்பு சிப்பு வருது


அது!-ஒரு திகில் கதை- இந்த கதையின் முடிவை உங்களால் ஊகிக்க முடிகிறதா? Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

அது!-ஒரு திகில் கதை- இந்த கதையின் முடிவை உங்களால் ஊகிக்க முடிகிறதா? Empty Re: அது!-ஒரு திகில் கதை- இந்த கதையின் முடிவை உங்களால் ஊகிக்க முடிகிறதா?

Post by ஸ்ரீமதி வேலன் Thu Apr 21, 2011 8:33 am

முடிவு :திரும்‌பி பார்த்தேன்! கண்டக்டர் கோபத்துடன் நின்றிருந்தார்!. "ஏன் சார் இப்படி பண்றீங்க? நாங்களே பஸ் பிரேக் டவுன் ஆனதால தள்ள முடியாம ஓட்டுனரையும் சேர்த்துகிட்டு தள்ளிவருகிறோம்!. நீங்க ஜம்முனு ஏறி உட்கார்ந்துகிட்டீங்க! இங்குதான் பேருந்தை இரவு முழுதும் நிருத்தப்போகிறோம். இறங்குங்க! ” என்றார்.


வாழ்க்கை வாழ்வதற்கே! சிரி

என்றும் தமிழச்சி புன்னகை
ஓவியா ஸ்ரீ சூப்பருங்க மீண்டும் சந்திப்போம்
ஸ்ரீமதி வேலன்
ஸ்ரீமதி வேலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011

Back to top Go down

அது!-ஒரு திகில் கதை- இந்த கதையின் முடிவை உங்களால் ஊகிக்க முடிகிறதா? Empty Re: அது!-ஒரு திகில் கதை- இந்த கதையின் முடிவை உங்களால் ஊகிக்க முடிகிறதா?

Post by கலைவேந்தன் Thu Apr 21, 2011 9:06 am

ஸ்ரீமதி வேலன் wrote:முடிவு :திரும்‌பி பார்த்தேன்! கண்டக்டர் கோபத்துடன் நின்றிருந்தார்!. "ஏன் சார் இப்படி பண்றீங்க? நாங்களே பஸ் பிரேக் டவுன் ஆனதால தள்ள முடியாம ஓட்டுனரையும் சேர்த்துகிட்டு தள்ளிவருகிறோம்!. நீங்க ஜம்முனு ஏறி உட்கார்ந்துகிட்டீங்க! இங்குதான் பேருந்தை இரவு முழுதும் நிருத்தப்போகிறோம். இறங்குங்க! ” என்றார்.

பிரில்லியண்ட் முடிவு... நான் நீதிபதி என்றால் இதைத்தான் தேர்ந்தெடுப்பேன்... பாராட்டுக்கள் ஸ்ரீ...! ஜாலி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

அது!-ஒரு திகில் கதை- இந்த கதையின் முடிவை உங்களால் ஊகிக்க முடிகிறதா? Empty Re: அது!-ஒரு திகில் கதை- இந்த கதையின் முடிவை உங்களால் ஊகிக்க முடிகிறதா?

Post by ஸ்ரீமதி வேலன் Thu Apr 21, 2011 10:43 am

நன்றி அண்ணா அது!-ஒரு திகில் கதை- இந்த கதையின் முடிவை உங்களால் ஊகிக்க முடிகிறதா? 2825183110 அது!-ஒரு திகில் கதை- இந்த கதையின் முடிவை உங்களால் ஊகிக்க முடிகிறதா? 755837


வாழ்க்கை வாழ்வதற்கே! சிரி

என்றும் தமிழச்சி புன்னகை
ஓவியா ஸ்ரீ சூப்பருங்க மீண்டும் சந்திப்போம்
ஸ்ரீமதி வேலன்
ஸ்ரீமதி வேலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011

Back to top Go down

அது!-ஒரு திகில் கதை- இந்த கதையின் முடிவை உங்களால் ஊகிக்க முடிகிறதா? Empty Re: அது!-ஒரு திகில் கதை- இந்த கதையின் முடிவை உங்களால் ஊகிக்க முடிகிறதா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum