Latest topics
» வலைவீச்சு- ரசித்தவைby ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
உடைந்த இதயம் மரணத்தின் இருப்பிடம்
3 posters
Page 1 of 1
உடைந்த இதயம் மரணத்தின் இருப்பிடம்
தனது ரத்த உறவினருக்கு சோக நிகழ்வு ஏற்பட்டால், எனது இதயம் வெடித்து விட்டதே என்பர். உதாரணம்: கணவன் மரணச் செய்தி கேட்டவுடன் அல்லது சில மணி நேரங்களில், சில தினங்களில் மனைவியும் திடீர் மரணமடைவது நாம் பார்க்கும் நிகழ்ச்சிகள் தான். இதற்கு காரணம் உடைந்த உள்ளம், துக்கச் செய்தி கேட்டவுடன் துயரம் அடையும் போது, மனதில் அழுத்தம் ஏற்பட்டு, நமது உடலிலுள்ள சிம்பத்தடிக் சிஸ்டம், ஊர்திகளிலுள்ள வேகத்தைத் தூண்டுவது போல, அதில் உள்ள “கேட்டகால் அமைன்’ வேதியியல் பொருள் சுரந்து, உடலின் செயல்பாட்டை மாற்றும். உலக இதய மையம் இதுபோன்று துக்கத்தில் இருப்பவர்களை ஆய்வு செய்தது. இதன் ஆய்வு முடிவு இதோ
துக்கத்தில் இருப்பவர்களுக்கு அதிகமாக இதயக் கோளாறு ஏற்பட்டு திடீர் மரணத்தை ஏற்படுத்தும். இந்த நிகழ்வு இளம் வயதிலிருந்து முதியோர் வரை ஏற்படலாம். நன்றாக எந்தவித கோளாறுமில்லாதவர் ரத்தக் கொதிப்பு, சர்க்கரை வியாதி, அதிக கெட்ட கொழுப்புள்ளவர்கள், பை – பாஸ், ஆஞ்சியோ பிளாஸ்டி ஸ்டென் சிகிச்சைப் பெற்றவர்கள், மிகவும் கவனமாக துக்க நிகழ்வுகளை அனுசரிக்க வேண்டும். முதியோர்கள் குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆணும், பெண்ணும் சரி துக்கத்தை கேட்டவுடனே கவனமாக இருக்க வேண்டும்.
உண்மை சம்பவம்
எனது 30 ஆண்டு நண்பர் சம்பத்; அவரது மனைவி லீலா. இருவரும் ஐகோர்ட் வக்கீல்கள்; இதய நோயாளிகள். மனைவி இறந்தவுடன் சம்பத் என்னிடம் “என் மனைவி காலை எழுந்து காலை கடன் கழிக்கச் சென்றவர் மரணமடைந்துவிட்டார்; எனது இதயம் போய்விட்டது’ என்று கூறினார். “இதுபோலவே, ஈ.வெ.ரா., தனது முதல் மனைவி நாகம்மை இறந்தவுடன்,”எனது இதயம், எனது உயிர், என் சொத்து சுகம் எல்லாம் போய்விட்டது. நான் இதயமில்லாதவன்’ என்று, துக்கத்தை வெளிப்படுத்தி கதறி அழுததாக வரலாறு.
சில ஆண்டுகளுக்கு முன், எனது டாக்டர் நண்பர் சேலத்தில் உள்ளவர், இறந்த செய்தி கேட்டு துக்கம் விசாரிக்கச் சென்றபோது, அவர் மனைவி திடீர் மரணமடைந்தார். டாக்டரது மனைவி மரணத்தின் துக்கத்தை விசாரித்து வந்தேன். இப்படி பல சம்பவங்கள் உண்டு.
என்ன நடக்கிறது?
நெருங்கிய உறவினர் மரணம் அடைந்தவுடன் இவர்கள் அளவில்லாத துயரத்தோடு அழுது கொண்டு இருப்பர். இந்த நேரத்தில், உடலில் ரத்த அழுத்தம் அதிகமாகிறது. இதயத் துடிப்பு அதிகமாகிறது. ரத்தத்தில் உறையும் தன்மை அதிகமாகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது.. இதனால் மாரடைப்பு அதிகமாக வருகிறது.
இது இளம் வயதினருக்கும் வரும், வயதானவர்களுக்கும் வரும். இது எப்படி? துக்கப்படும் போது ரத்தக் கொதிப்பு அதிகமாகிறது. அதே நேரம், ரத்தத்தின் அடர்த்தி தன்மை அதிகமாகிறது. இதனால், ரத்தம் உறைந்து, கரோனரி ரத்தக் குழாய் அடைப்பு ஏற்பட்டு மரணம் வரும். இது, சர்க்கரை ரத்தக் கொதிப்பு, முன்பே பை – பாஸ், ஸ்டென்ட் சிகிச்சை செய்தவர்களுக்கு மிகவும் எளிதாக வரும்.
துக்கம் ஆட்கொள்ளும் போது
ரத்தக் கொதிப்பு அதிகமாகி ரத்தத்தின் திரவத் தன்மை குறைந்து. சீக்கிரம் உறைந்து கரோனரி ரத்தக் குழாய் அடைத்து மாரடைப்பை உண்டாக்குகிறது. 20 ஆண்டுகளுக்கு முன், நான் கோவை மருத்துவக் கல்லூரியில் இதய நோய் பேராசிரியராக பணிபுரிந்த போது, 22 வயதுள்ள இளம் பெண் கூலித் தொழிலாளிக்கு மாரடைப்பு வந்து; ஐ.சி.யூ.,வில் அனுமதித்து வைத்தியம் செய்தேன். இதுபற்றி டாக்டர்களுக்கும், மக்களுக்கும் ஆச்சரியமாக இருந்தது.
இதன் காரணம், அந்த இளம் பெண்ணுக்கு கல்யாணமாகி ஒரு குழந்தை உள்ளது. கணவன் ஓடிப்போய்விட்டான். பெற்றோர் இல்லை. கூலி வேலை செய்து குழந்தையைக் காப்பாற்றி வர வேண்டிய நிலை. எவ்வளவு மனக்கவலை, மன அழுத்தம், சோகமே அவளது வாழ்க்கை. எப்படி அவளது இதயம் சீராக இயங்க முடியும்?
சில வருடங்களுக்கு முன், 28 வயது இளைஞர் மாரடைப்பு ஏற்பட்டு என்னிடம் வந்தார். அவரை சென்னை மையப்பகுதியிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்து, ஆஞ்சியோகிராம் செய்ததில் கரோனரி ரத்தக்குழாயில் முழு அடைப்புள்ளது தெரிந்தது. இரண்டு நாட்கள் கழித்து ஆஞ்சியோ பிளாஸ்டி செய்யப்போன போது, இந்த கரோனரி ரத்தக்குழாய் அடைப்பு இல்லை. எப்படி காணாமல் போனது; இதற்கு காரணம் என்ன?
இந்த இளைஞர் கல்யாணமாகி ஓராண்டில் விவாகரத்து வழக்கு, ஒரு குழந்தையின் தந்தை, நிரந்தரமற்ற ஐ.டி., பணி. இவர் இதயம் எப்படி துயரத்தையும் வேதனையும் தாங்கும்; இவருக்கு ஏற்பட்டது மாரடைப்பு. இது கரோனரி ரத்தக்குழாயில் ரத்தம் உறைந்து கட்டியாகி அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு வந்தது. குறிப்பிட்ட சில மருந்துகளை ஊசி மூலம் செலுத்தியதால் ரத்த உறைவு குறைந்து. அடைப்பு சீராக்கப்பட்டுள்ளது. இதை முன்கூட்டியே அறிந்து ஆலோசனை செய்பவர் தான், நவீன இதய நோய் நிபுணர்.
பை-பாஸ் கிராப்ட், ஆஞ்சியோ பிளாஸ்டி ஸ்டென்ட் செய்தவர்கள், மற்றும் ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோயுள்ளவர்கள், அதிக கொழுப்புள்ளவர்கள் இதயத்தில், சில பகுதிகள் இஸ்கிமியா என்ற ரத்தக் குறைபாடுள்ள இடங்கள் இருக்கும், இந்த இடங்கள், மிகவும் ஆபத்தான இடங்கள். இந்த இடத்திலிருந்து தான், அரித்மியா என்ற, தத்தளித்து தடுமாறும் துடிப்புகளின் உறைவிடம். அதாவது மரணத்தின் இருப்பிடம்.
நீங்கள் உங்கள் இதய நோயின் அறிகுறிகளை தகுந்த நேரத்தில் அறிந்து கொண்டு, தகுந்த மருத்துவரிடம் சிகிச்சை செய்து கொண்டால் நலமுடன் வாழலாம் நோயாளிகளே!
1.டாக்டர் சொல்வதை கேட்டு நடங்கள்.
2.வியாதியைப் பற்றிய பயத்தைப் போக்கி அமைதி காக்கவும்.
3. வியாதியால் நம்பிக்கை சோர்ந்து வாழாதீர்.
4. எதையும் ஏற்காமல் எதிர்பதமாக பேசி வாழாதீர்.
டாக்டர் சு.அர்த்தநாரி, எம்.டி.டி.எம்.,
துக்கத்தில் இருப்பவர்களுக்கு அதிகமாக இதயக் கோளாறு ஏற்பட்டு திடீர் மரணத்தை ஏற்படுத்தும். இந்த நிகழ்வு இளம் வயதிலிருந்து முதியோர் வரை ஏற்படலாம். நன்றாக எந்தவித கோளாறுமில்லாதவர் ரத்தக் கொதிப்பு, சர்க்கரை வியாதி, அதிக கெட்ட கொழுப்புள்ளவர்கள், பை – பாஸ், ஆஞ்சியோ பிளாஸ்டி ஸ்டென் சிகிச்சைப் பெற்றவர்கள், மிகவும் கவனமாக துக்க நிகழ்வுகளை அனுசரிக்க வேண்டும். முதியோர்கள் குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆணும், பெண்ணும் சரி துக்கத்தை கேட்டவுடனே கவனமாக இருக்க வேண்டும்.
உண்மை சம்பவம்
எனது 30 ஆண்டு நண்பர் சம்பத்; அவரது மனைவி லீலா. இருவரும் ஐகோர்ட் வக்கீல்கள்; இதய நோயாளிகள். மனைவி இறந்தவுடன் சம்பத் என்னிடம் “என் மனைவி காலை எழுந்து காலை கடன் கழிக்கச் சென்றவர் மரணமடைந்துவிட்டார்; எனது இதயம் போய்விட்டது’ என்று கூறினார். “இதுபோலவே, ஈ.வெ.ரா., தனது முதல் மனைவி நாகம்மை இறந்தவுடன்,”எனது இதயம், எனது உயிர், என் சொத்து சுகம் எல்லாம் போய்விட்டது. நான் இதயமில்லாதவன்’ என்று, துக்கத்தை வெளிப்படுத்தி கதறி அழுததாக வரலாறு.
சில ஆண்டுகளுக்கு முன், எனது டாக்டர் நண்பர் சேலத்தில் உள்ளவர், இறந்த செய்தி கேட்டு துக்கம் விசாரிக்கச் சென்றபோது, அவர் மனைவி திடீர் மரணமடைந்தார். டாக்டரது மனைவி மரணத்தின் துக்கத்தை விசாரித்து வந்தேன். இப்படி பல சம்பவங்கள் உண்டு.
என்ன நடக்கிறது?
நெருங்கிய உறவினர் மரணம் அடைந்தவுடன் இவர்கள் அளவில்லாத துயரத்தோடு அழுது கொண்டு இருப்பர். இந்த நேரத்தில், உடலில் ரத்த அழுத்தம் அதிகமாகிறது. இதயத் துடிப்பு அதிகமாகிறது. ரத்தத்தில் உறையும் தன்மை அதிகமாகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது.. இதனால் மாரடைப்பு அதிகமாக வருகிறது.
இது இளம் வயதினருக்கும் வரும், வயதானவர்களுக்கும் வரும். இது எப்படி? துக்கப்படும் போது ரத்தக் கொதிப்பு அதிகமாகிறது. அதே நேரம், ரத்தத்தின் அடர்த்தி தன்மை அதிகமாகிறது. இதனால், ரத்தம் உறைந்து, கரோனரி ரத்தக் குழாய் அடைப்பு ஏற்பட்டு மரணம் வரும். இது, சர்க்கரை ரத்தக் கொதிப்பு, முன்பே பை – பாஸ், ஸ்டென்ட் சிகிச்சை செய்தவர்களுக்கு மிகவும் எளிதாக வரும்.
துக்கம் ஆட்கொள்ளும் போது
ரத்தக் கொதிப்பு அதிகமாகி ரத்தத்தின் திரவத் தன்மை குறைந்து. சீக்கிரம் உறைந்து கரோனரி ரத்தக் குழாய் அடைத்து மாரடைப்பை உண்டாக்குகிறது. 20 ஆண்டுகளுக்கு முன், நான் கோவை மருத்துவக் கல்லூரியில் இதய நோய் பேராசிரியராக பணிபுரிந்த போது, 22 வயதுள்ள இளம் பெண் கூலித் தொழிலாளிக்கு மாரடைப்பு வந்து; ஐ.சி.யூ.,வில் அனுமதித்து வைத்தியம் செய்தேன். இதுபற்றி டாக்டர்களுக்கும், மக்களுக்கும் ஆச்சரியமாக இருந்தது.
இதன் காரணம், அந்த இளம் பெண்ணுக்கு கல்யாணமாகி ஒரு குழந்தை உள்ளது. கணவன் ஓடிப்போய்விட்டான். பெற்றோர் இல்லை. கூலி வேலை செய்து குழந்தையைக் காப்பாற்றி வர வேண்டிய நிலை. எவ்வளவு மனக்கவலை, மன அழுத்தம், சோகமே அவளது வாழ்க்கை. எப்படி அவளது இதயம் சீராக இயங்க முடியும்?
சில வருடங்களுக்கு முன், 28 வயது இளைஞர் மாரடைப்பு ஏற்பட்டு என்னிடம் வந்தார். அவரை சென்னை மையப்பகுதியிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்து, ஆஞ்சியோகிராம் செய்ததில் கரோனரி ரத்தக்குழாயில் முழு அடைப்புள்ளது தெரிந்தது. இரண்டு நாட்கள் கழித்து ஆஞ்சியோ பிளாஸ்டி செய்யப்போன போது, இந்த கரோனரி ரத்தக்குழாய் அடைப்பு இல்லை. எப்படி காணாமல் போனது; இதற்கு காரணம் என்ன?
இந்த இளைஞர் கல்யாணமாகி ஓராண்டில் விவாகரத்து வழக்கு, ஒரு குழந்தையின் தந்தை, நிரந்தரமற்ற ஐ.டி., பணி. இவர் இதயம் எப்படி துயரத்தையும் வேதனையும் தாங்கும்; இவருக்கு ஏற்பட்டது மாரடைப்பு. இது கரோனரி ரத்தக்குழாயில் ரத்தம் உறைந்து கட்டியாகி அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு வந்தது. குறிப்பிட்ட சில மருந்துகளை ஊசி மூலம் செலுத்தியதால் ரத்த உறைவு குறைந்து. அடைப்பு சீராக்கப்பட்டுள்ளது. இதை முன்கூட்டியே அறிந்து ஆலோசனை செய்பவர் தான், நவீன இதய நோய் நிபுணர்.
பை-பாஸ் கிராப்ட், ஆஞ்சியோ பிளாஸ்டி ஸ்டென்ட் செய்தவர்கள், மற்றும் ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோயுள்ளவர்கள், அதிக கொழுப்புள்ளவர்கள் இதயத்தில், சில பகுதிகள் இஸ்கிமியா என்ற ரத்தக் குறைபாடுள்ள இடங்கள் இருக்கும், இந்த இடங்கள், மிகவும் ஆபத்தான இடங்கள். இந்த இடத்திலிருந்து தான், அரித்மியா என்ற, தத்தளித்து தடுமாறும் துடிப்புகளின் உறைவிடம். அதாவது மரணத்தின் இருப்பிடம்.
நீங்கள் உங்கள் இதய நோயின் அறிகுறிகளை தகுந்த நேரத்தில் அறிந்து கொண்டு, தகுந்த மருத்துவரிடம் சிகிச்சை செய்து கொண்டால் நலமுடன் வாழலாம் நோயாளிகளே!
1.டாக்டர் சொல்வதை கேட்டு நடங்கள்.
2.வியாதியைப் பற்றிய பயத்தைப் போக்கி அமைதி காக்கவும்.
3. வியாதியால் நம்பிக்கை சோர்ந்து வாழாதீர்.
4. எதையும் ஏற்காமல் எதிர்பதமாக பேசி வாழாதீர்.
டாக்டர் சு.அர்த்தநாரி, எம்.டி.டி.எம்.,
Re: உடைந்த இதயம் மரணத்தின் இருப்பிடம்
நல்ல தகவல் அதுனாலதான் இதய நோயாளிகள் அதிகமாக உணர்சிவசபடகூடாதுனு தமிழ் சினிமா டாக்டருங்கோ கண்ணாடிய கழட்டிட்டு சொல்லுறாங்களோ
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: உடைந்த இதயம் மரணத்தின் இருப்பிடம்
நல்ல தகவல்... எலாவற்றையும் தாங்கி கல்லு போல உயிருடன் இருப்பவனை இதயம் இல்லாதவன்னு சொல்லலாமா..?
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: உடைந்த இதயம் மரணத்தின் இருப்பிடம்
கலை wrote:நல்ல தகவல்... எலாவற்றையும் தாங்கி கல்லு போல உயிருடன் இருப்பவனை இதயம் இல்லாதவன்னு சொல்லலாமா..?
Similar topics
» இதயம் இந்த இதயம் இன்னும் - எத்தனை இன்பங்களை தாங்கிடுமோ.....?
» செயற்கை இதயம் பொருத்தப்பட்டவர் இறந்தும் இயங்கிக்கொண்டிருக்கும் இதயம்
» என் இருப்பிடம்
» நிரந்தர இருப்பிடம் ...!
» அவரவர் இருப்பிடம்
» செயற்கை இதயம் பொருத்தப்பட்டவர் இறந்தும் இயங்கிக்கொண்டிருக்கும் இதயம்
» என் இருப்பிடம்
» நிரந்தர இருப்பிடம் ...!
» அவரவர் இருப்பிடம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|