ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்?

2 posters

Go down

வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Empty வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்?

Post by மஞ்சுபாஷிணி Fri Apr 15, 2011 10:55 am

வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்?

நெல்லை தி.மு.க. புள்ளிகளுக்கு தொல்லை!
தேர்தல் ஜுரம் கிடுகிடுவென உயர்ந்திருக்கும் நிலையில், நெல்லை மாவட்டம்

ஆலங்குளத்தில் நடந்த ஒரு கொலை படுடென்ஷனை ஏற்படுத்தி இருக்கிறது. கொலையானவர் முன்னாள் மத்திய அமைச்சர் ராதிகா செல்வியின் உதவியாளர் பாப்புராஜ். கொலை நடந்த இடம் தி.மு.க. அமைச்சர் பூங்கோதைக்கு சொந்தமான நர்ஸிங் கல்லூரி. டென்ஷனுக்குச் சொல்ல வேண்டுமா என்ன?
சமீபத்தில், ஆலங்குளம் தொகுதி தேர்தல் பிரசாரத்​துக்காக ராதிகா செல்வி வந்திருந்தார். அவரோடு வெளி மாவட்டங்களில் இருந்து அவரது ஆதரவாளர்களும் வந்திருந்தனர். அமைச்சர் பூங்கோதை​யின் நர்ஸிங் கல்லூரியின் மகளிர் விடுதியில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர். இந்த நிலையில், கடந்த 8-ம் தேதி இரவு இவர்களுக்குள் தகராறு ஏற்பட... அப்போது நடைபெற்ற மோதலில் பாப்புராஜ் கொல்லப்பட்டார் என்று சொல்லப்படுகிறது.

போலீஸ் தரப்பில் விசாரித்​தோம். ''ஏழெட்டு வருஷங்களுக்கு முந்தி வெங்கடேசப் பண்ணையார் குரூப்பில் இருந்தார் பாப்புராஜ். பண்ணையாரின் நம்பிக்கைக்கு உரியவர். சென்னையில் போலீஸ் என்கவுன்ட்​டரில் பண்ணையார் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு, கொஞ்ச நாள் ஒதுங்கி இருந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார் பாப்புராஜ். ராதிகா செல்வி அரசியலுக்கு வந்ததும், மறுபடியும் ஒரு குழு உருவானது. அதில் பாப்புராஜும் முக்கியமானவர். சம்பவம் நடந்த அன்று இவர்கள் தங்கி இருந்த மகளிர் விடுதியில் பார்ட்டி நடந்திருக்கிறது. அதில் சண்டை ஏற்பட்​டதால், பாப்புராஜ் உயிரிழந்து​விட்​​டார்...'' என்​கிறது போலீஸ்.

ஆனால், பாப்புராஜின் அண்ணன் ராதாகிருஷ்ண பாண்டியன் வேறு மாதிரி சொல்கிறார். ''என் தம்பி வெங்கடேசப் பண்ணையார் கூட்டத்தில் சேர்ந்தப்பவே, நாங்க அவனைக் கண்டிச்​சோம். அவன் கேட்கலை. ஆலங்குளத்தில் நடந்த கொலை... திட்டமிட்ட சதி. இதன் பின்னணியில் இருக்கும் முக்கியமானவங்களை போலீஸார் மூடி மறைக்குறாங்க. கொலை நள்ளிரவில் நடந்தது. ஆனால், எங்களுக்குக் காலையில் எட்டு மணிக்குத்தான் தகவலே சொன்னாங்க. பதறியடிச்சு ஓடினோம். ஆலங்குளம் ஸ்டேஷன் போலீஸ்காரங்க, 'சீதபற்பநல்லூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு உடலை எடுத்துட்டுப் போயிட்டதாக’ சொன்னாங்க. அங்கு போனோம். அங்கேயும் எந்தத் தகவலையும் சொல்லாமல் எங்களை உட்காரவெச்சுட்டாங்க. தம்பியோட உடலைக்கூட காட்டலை. நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கும் உடல் வரலை. இப்படி மதியம் மூணு மணி வரைக்கும் உடலைக் காட்டாமல் அலைக்கழிச்சதால், சாலை மறியல் செய்யப் பார்த்தோம். அப்புறம்தான் உடலைக் காட்டவே போலீஸ் சம்மதிச்சது.

நாங்க போலீஸ் வேனில் பாதி வழியில் போனப்ப, காட்டுக்குள் இருந்து ஒரு ஆம்புலன்ஸ் வந்துச்சு. அதில்தான் பாப்புராஜ் உடல் இருந்துச்சு. அவனோட உடலை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகாமல், எங்கேயோ காட்டுக்குள் வெச்சிருந்ததுக்குக் காரணம் என்ன? அவனது தலையில் குழி மாதிரி இருந்துச்சு. அது குண்டு அடிபட்ட இடமாக இருக்கலாம்... அந்தக் குண்டு உள்ளே இருந்துச்சுன்னா என்ன வகை துப்பாக்கி? யாருக்குச் சொந்தமான துப்பாக்கியின் குண்டு என்பது தெரிஞ்சுடும் என்பதால்தான், காட்டுக்குள் வெச்சு அந்தக் குண்டை எடுத்து இருக்காங்க. அதன் பிறகே தம்பி உடலைக் காட்டினாங்க. இந்த விவகாரத்தில் பெரியமர்மம் இருக்கு. சி.பி.ஐ. விசாரணை நடத்தணும். நாங்க விட​மாட்டோம்!'' என்றார் கோபத்துடன்.

'தேர்தலுக்கான பணப் பட்டுவாடாவில்ஏற்பட்ட மோதலே இந்தக் கொலைக்குக் காரணம்’ என்று எதிர்க் கட்சியினர் சொல்கிறார்கள். அத் துடன், கொலை​யான​வர் தேவர் சமூகத்​தைச் சேர்ந்தவர் என்பதால், ஆலங்குளம் பகுதியில் டென்ஷன் அதிகரித்தது. இந்த நிலையில், நெல்லை அரசு மருத்து​வமனையில் பிரேதப் பரிசோதனை முடிந்த பின்னர், கொந்தளித்த பாப்புராஜ் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினார்கள். போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்த பிறகே உடலை வாங்கினர்.

நர்ஸிங் கல்லூரி மொட்டை மாடியில் பாப்புராஜுடன் படுத்திருந்த பாலமுருகன் என்பவர் மறு நாள் காலையில் நெல்லை நீதிமன்றத்தில் சரண் அடைந்து, இந்தக் கொலையைச் செய்ததாக ஒப்புக்கொண்டு இருக்கிறார். ஆனால், ராதிகா செல்வியுடன் சென்ற ஏழு பேருமே அதே கல்லூரியில்தான் தங்கி இருந்தார்கள் என்பதால், அவர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் ஐந்து பேரை போலீஸ் கைது செய்திருக்கிறது.

நெல்லை சரக டி.ஐ.ஜி-யான சண்முக ராஜேஸ்வரன், ''கொலை வழக்குபற்றி சரியான முறையில் விசாரணை நடக்கிறது. நீதிமன்றத்தில் சரண் அடைந்தவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்து இருக்கிறோம். பாப்புராஜை அரிவாளால் வெட்டிக் கொன்று இருக்கிறார்கள். துப்பாக்கியால் சுட்டதற்கான அறிகுறி இல்லை. இருப்பினும் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்ததும் இந்த சந்தேகங்களுக்கு பதில் கிடைத்துவிடும்...'' என்றார்.

தி.மு.க. புள்ளிகளுக்கு தலைவலியை ஏற்படுத்தும் விவகாரமாக இது ஆரம்பமாகி இருக்கிறது!

- ஆண்டனிராஜ்,

நன்றி விகடன்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Empty Re: வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்?

Post by கலைவேந்தன் Fri Apr 15, 2011 3:18 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum