ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிகமாக "கொட்டும்' தொகுதிகளில் ஓட்டுப்பதிவுநிறுத்தம்? தேர்தலை ஒத்தி வைக்க பரிசீலனை!!

4 posters

Go down

அதிகமாக "கொட்டும்' தொகுதிகளில் ஓட்டுப்பதிவுநிறுத்தம்? தேர்தலை ஒத்தி வைக்க பரிசீலனை!! Empty அதிகமாக "கொட்டும்' தொகுதிகளில் ஓட்டுப்பதிவுநிறுத்தம்? தேர்தலை ஒத்தி வைக்க பரிசீலனை!!

Post by அருண் Tue Apr 12, 2011 3:07 pm

சென்னை: ""வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது தொடர்ந்தால், அந்த தொகுதிக்கு தேர்தல் ஒத்திவைக்கப்படும். தேர்தல் நடந்த பின் கூட, அந்தந்த தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யப்படும்,'' என, தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் எச்சரித்துள்ளார். இதையடுத்து, சில தொகுதிகளில் ஓட்டுப் பதிவு நிறுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பிரவீன்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:தேர்தல் பிரசாரம், மாலை 5 மணியுடன் முடிந்து விட்டது. இதன்பின், "டிவி'க்களில் கூட பிரசாரம் செய்யக் கூடாது. செய்தி தவிர, பிரசாரமாக ஒளிபரப்பினால், இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கக் கூடிய வகையில் வழக்கு பதிவு செய்யப்படும். எஸ்.எம்.எஸ்., மூலமும் பிரசாரம் செய்யக் கூடாது.
தேர்தலில் சில தொகுதிகளில் பணப் பட்டுவாடா செய்வது குறித்து கடுமையான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதையும் மீறி, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால், அந்த தொகுதிகளின் தேர்தல் தள்ளி வைக்கப்படும். பணப் பட்டுவாடா மற்றும் அதிகளவில் முறைகேடுகள் நடந்தது பற்றி, ஓட்டுப் பதிவுக்கு பிறகு கூட தகவல் கிடைத்தால், அந்த தொகுதியில் நடந்த தேர்தல் ரத்து செய்யப்படும்.

சில தொகுதிகளில், பணம் கொடுப்பதாக அதிகளவில் புகாரும், சில தொகுதிகளில் குறைந்தளவு புகாரும் வந்துள்ளன. இதுவரை, மொத்தம் 33 கோடியே 11 லட்சம் ரொக்கமும், 12 கோடியே 58 லட்சம் மதிப்புள்ள பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றில், கணக்கு காட்டியதன் அடிப்படையில், 5.18 கோடி ரூபாய் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.துணை முதல்வர் ஸ்டாலின் அவதூறாக பேசியதாக வந்த புகாரின் பேரில், இன்று (நேற்று) மாலை 5 மணிக்குள் விளக்கம் அளிக்குமாறு, அவருக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஏற்கனவே, ஜெயலலிதா மற்றும் விஜயகாந்துக்கு அனுப்பிய நோட்டீசுக்கு, அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். அதை பரிசீலித்து, தேர்தல் கமிஷன் முடிவு எடுக்கும்.

தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறியதாக, இதுவரை, 61 ஆயிரத்து 20 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இவற்றில், சுவர்களை சேதப்படுத்தியதாக, 55 ஆயிரத்து 254 வழக்குகளும், வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியதாக, 2,850 வழக்குகளும், வழிபாட்டுத்தலங்களை தவறாக பயன்படுத்தியதாக, 24 வழக்குகளும், சட்டவிரோத கூட்டங்கள் நடத்தியதாக, 154 வழக்குகளும், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக, 975 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.பணப் பட்டுவாடாவில் அதிகாரிகளுக்கு தொடர்பு இருந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பல இடங்களில் பணம் கொடுப்பதாக புகார்கள் வருகின்றன. ஆனால், பறக்கும் படையினர் அங்கு செல்வதற்குள், அவர்கள் பணத்தை கொடுத்து முடித்து ஓடி விடுகின்றனர்.இவ்வாறு பிரவீன்குமார் கூறினார்.

கொளத்தூரில் தடை?எந்த தேர்தலிலும் இல்லாத அளவிற்கு பிரசாரத்தின் சுருதியைக் குறைத்த தேர்தல் கமிஷன், பண வினியோகத்தை தடுக்க வங்கிக் கணக்குகளை கண்காணித்தல், வாகனச் சோதனை என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு கோடிக்கணக்கில் பணம், பொருள், நகை ஆகியவற்றை கைப்பற்றியுள்ளது.கடந்த நான்கு நாட்களாக தமிழகம் முழுவதும் பண வினியோகம் தீவிரமாக நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் தேர்தல் கமிஷன், வி.ஐ.பி., தொகுதிகளான திருவாரூர், ஸ்ரீரங்கம், ரிஷிவந்தியம், கொளத்தூர் மற்றும் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளை தீவிரமாக கண்காணித்து வருகிறது.மதுரையில் அழகிரி அதிகார எல்லையில் வரும் தொகுதிகள் மீது, கூடுதல் கவனம் செலுத்த உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. இந்த தொகுதிகளில் பண வினியோகம் நடந்தால், உடனே தேர்தலை ரத்து செய்யவும் தேர்தல் கமிஷன் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.

தினமலர்
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

அதிகமாக "கொட்டும்' தொகுதிகளில் ஓட்டுப்பதிவுநிறுத்தம்? தேர்தலை ஒத்தி வைக்க பரிசீலனை!! Empty Re: அதிகமாக "கொட்டும்' தொகுதிகளில் ஓட்டுப்பதிவுநிறுத்தம்? தேர்தலை ஒத்தி வைக்க பரிசீலனை!!

Post by உமா Tue Apr 12, 2011 3:38 pm

எப்படியோ தேர்தல் நல்ல முறையில் நடந்தால் சரி....
நம்ம பணத்தை கொள்ளையடிச்சு நமக்கே லஞ்சமா கொடுத்து ஓட்டு கேக்குறாங்க...

இது புரியாம பணத்தை வாங்கி ஏமாந்தும் போறாங்க ....

கடவுளே நீ தான் இவங்களுக்கு புரிய வெக்கணும்....

பகிர்வுக்கு நன்றி அருண்....



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

அதிகமாக "கொட்டும்' தொகுதிகளில் ஓட்டுப்பதிவுநிறுத்தம்? தேர்தலை ஒத்தி வைக்க பரிசீலனை!! Empty Re: அதிகமாக "கொட்டும்' தொகுதிகளில் ஓட்டுப்பதிவுநிறுத்தம்? தேர்தலை ஒத்தி வைக்க பரிசீலனை!!

Post by கலைவேந்தன் Tue Apr 12, 2011 3:43 pm

கெடுபிடியா இருந்ததால் தான் இம்முறை பல கோடிகளும் பல கேடிகளும் புரள்வது தடுக்கப்ப்ட்டது.. என்ன கொடுமை சார் இது



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

அதிகமாக "கொட்டும்' தொகுதிகளில் ஓட்டுப்பதிவுநிறுத்தம்? தேர்தலை ஒத்தி வைக்க பரிசீலனை!! Empty Re: அதிகமாக "கொட்டும்' தொகுதிகளில் ஓட்டுப்பதிவுநிறுத்தம்? தேர்தலை ஒத்தி வைக்க பரிசீலனை!!

Post by அப்துல் Tue Apr 12, 2011 6:33 pm

:நல்வரவு:
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

அதிகமாக "கொட்டும்' தொகுதிகளில் ஓட்டுப்பதிவுநிறுத்தம்? தேர்தலை ஒத்தி வைக்க பரிசீலனை!! Empty Re: அதிகமாக "கொட்டும்' தொகுதிகளில் ஓட்டுப்பதிவுநிறுத்தம்? தேர்தலை ஒத்தி வைக்க பரிசீலனை!!

Post by அப்துல் Tue Apr 12, 2011 6:34 pm

உமா wrote:எப்படியோ தேர்தல் நல்ல முறையில் நடந்தால் சரி....
நம்ம பணத்தை கொள்ளையடிச்சு நமக்கே லஞ்சமா கொடுத்து ஓட்டு கேக்குறாங்க...

இது புரியாம பணத்தை வாங்கி ஏமாந்தும் போறாங்க ....

கடவுளே நீ தான் இவங்களுக்கு புரிய வெக்கணும்....


:நல்வரவு:
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

அதிகமாக "கொட்டும்' தொகுதிகளில் ஓட்டுப்பதிவுநிறுத்தம்? தேர்தலை ஒத்தி வைக்க பரிசீலனை!! Empty Re: அதிகமாக "கொட்டும்' தொகுதிகளில் ஓட்டுப்பதிவுநிறுத்தம்? தேர்தலை ஒத்தி வைக்க பரிசீலனை!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum