ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்னா ஹசாரே உண்ணாவிரதம் வாபஸ்: கோரிக்கையை ஏற்று அரசாணை வெளியிடப்பட்டது

2 posters

Go down

அன்னா ஹசாரே உண்ணாவிரதம் வாபஸ்: கோரிக்கையை ஏற்று அரசாணை வெளியிடப்பட்டது Empty அன்னா ஹசாரே உண்ணாவிரதம் வாபஸ்: கோரிக்கையை ஏற்று அரசாணை வெளியிடப்பட்டது

Post by சிவா Sun Apr 10, 2011 9:16 am

காந்தியவாதி அன்னா ஹசாரேயின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்று, ஊழலுக்கு எதிரான சட்ட மசோதாவை ஆய்வு செய்வதற்கான கூட்டு குழுவை அமைத்தது. அதைத் தொடர்ந்து அன்னா ஹசாரே தனது உண்ணாவிரதத்தை நேற்று வாபஸ் பெற்றுக்கொண்டார்.

ஊழலுக்கு எதிரான போராட்டம்


காந்தியவாதியும், சமூக சேவை ஆர்வலருமான 73 வயது அன்னா ஹசாரே, ஊழலுக்கு எதிராக சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் தொடங்கினார். கடந்த திங்கட்கிழமை அன்று டெல்லி பாராளுமன்றம் அருகில் உள்ள ஜந்தர் மந்தரில் இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வந்தது.

பிரதமர், மந்திரிகள், எம்.பி.க்கள், நீதிபதிகள் உள்ளிட்ட உயர் பொறுப்பு வகிக்கும் அரசியல்வாதிகள், அதிகாரிகளின் ஊழலுக்கு எதிரான லோக்பால் சட்ட மசோதாவால் எந்த பயனும் இல்லை என்றும், அதை ஆய்வு செய்து திருத்தி அமைப்பதற்காக மக்கள் நல பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைக்க வேண்டும் என்றும் வற்புறுத்தி போராட்டம் நடைபெற்றது.

சமரச முயற்சி

இந்த உண்ணாவிரத போராட்டத்தின் தாக்கம் நாடு முழுவதும் எதிரொலித்தது. போராட்டத்துக்கு ஆதரவாக நாடு தழுவிய எழுச்சி ஏற்பட்டது. டெல்லியில் அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்த இடத்தில் ஏராளமான பொது மக்கள் திரண்டனர். அவர்களில் பலர் ஹசாரேயுடன் இணைந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வர காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் மத்திய மந்திரிகள் தீவிர முயற்சி மேற்கொண்டனர். நேற்று முன்தினம் காலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்படாததால், வருகிற 13-ந்தேதி அன்று நாடு முழுவதும் சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவதற்கு ஹசாரே அழைப்பு விடுத்தார்.

கூட்டு குழு அமைப்பு


இந்த நிலையில், கபில்சிபல் உள்ளிட்ட மத்திய மந்திரிகள், ஹசாரேயுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. ஹசாரேயின் கோரிக்கையை ஏற்று, பொது மக்கள் தரப்பிலும் மத்திய அரசு தரப்பிலும் தலா 5 உறுப்பினர்கள் வீதம் 10 உறுப்பினர்களைக் கொண்ட கூட்டு குழு அமைக்க மத்திய அரசு சம்மதம் தெரிவித்தது.

இதனால் சனிக்கிழமை (நேற்று) காலையில் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வதாக ஹசாரே அறிவித்து இருந்தார். அரசு அளித்த உறுதிமொழியின்படி லோக்பால் சட்ட மசோதாவை ஆய்வு செய்து திருத்தி அமைப்பதற்கான கூட்டு குழுவை நியமித்து நேற்று காலை மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை சார்பில் அரசாணை அறிவிக்கை வெளியிடப்பட்டது.

உண்ணாவிரதம் வாபஸ்


அதைத் தொடர்ந்து, 5-வது நாளான நேற்று காலை 10.45 மணிக்கு தனது 98 மணி நேர உண்ணாவிரத போராட்டத்தை அன்னா ஹசாரே வாபஸ் பெற்றார். ஒரு சிறுமி அவருக்கு பழச்சாறு வழங்கி உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைத்தார்.

அப்போது அங்கு கூடி இருந்தவர்கள் `வந்தே மாதரம்', `பாரத மாதாவுக்கு ஜே' என்று விண்ணதிர கோஷங்களை எழுப்பி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். முன்னதாக அவருடன் உண்ணாவிரதம் இருந்த பெண்களில் சிலருக்கு ஹசாரே பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.

10 உறுப்பினர்கள் குழு

திருத்த வரைவு மசோதா தயாரிப்பதற்கான குழுவுக்கு மூத்த மத்திய மந்திரி பிரணாப்முகர்ஜி தலைவராக இருப்பார். அவருடன் மத்திய மந்திரிகள் ப.சிதம்பரம், வீரப்ப மொய்லி, கபில்சிபல், சல்மான் குர்ஷித் ஆகியோர் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர். மந்திரி வீரப்ப மொய்லி குழுவின் அமைப்பாளராக செயல்படுவார்.

பொது மக்கள் தரப்பில் அன்னா ஹசாரே, ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி என்.சந்தோஷ் ஹெக்டே, முன்னாள் சட்ட மந்திரியும் சாந்திபூஷன், பிரபல சட்ட வல்லுனர் பிரசாந்த் பூஷன், பிரபல தகவல் அறியும் உரிமை ஆர்வலரான அரவிந்த் கெஜ்ரிவால் ஆகிய 5 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களில் சாந்தி பூஷன் குழுவின் இணைத் தலைவராக இருப்பார்.

இந்த குழுவின் முதல் கூட்டம், அடுத்த வாரம் நடைபெறும் என்று சட்ட மந்திரியும் குழுவின் அமைப்பாளருமான வீரப்ப மொய்லி கூறினார். உறுப்பினர்களின் வசதிக்கு ஏற்ப உத்தேசமாக 16-ந்தேதி நடைபெறலாம் என்று அவர் தெரிவித்தார்.

நீண்ட போராட்டத்தின் தொடக்கம்

உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டதும் அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் ஹசாரே பேசினார்.

அப்போது அவர், "ஊழலுக்கு எதிரான நீண்ட போராட்டத்தின் தொடக்கம்தான் இது. போராட்டம் தொடரும். சுதந்திர தினமான வருகிற ஆகஸ்டு 15-ந்தேதிக்குள் இந்த சட்டம் நிறை வேற்றப்பட வேண்டும். இல்லையென்றால் அன்றைய தினம் தேசியக் கொடியை ஏற்றி வைத்துவிட்டு, உங்களோடு இணைந்து மீண்டும் போராட்டத்தை தொடங்குவேன்'' என்று தெரிவித்தார்.

லோக்பால் மசோதாவை அடுத்து பண ஆதிக்கத்தை தடுப்பது உள்ளிட்ட தேர்தல் சீர்திருத்தம் மற்றும் கிராம பஞ்சாயத்து அளவில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளை திரும்பப் பெறும் உரிமை கோரியும் போராட்டங்கள் நடத்தப்படும் என்ற அறிவிப்பையும் அப்போது ஹசாரே வெளியிட்டார். அவர் மேலும் கூறியதாவது-

இளைஞர் சக்தி

"இந்த போராட்டத்துக்கு மக்கள் அளித்த ஆதரவு எனக்கு மிகப்பெரிய பலத்தை கொடுத்து உள்ளது. கறை படியாத கரம் கொண்ட போது மக்கள், ஊழலுக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு வழங்க வேண்டும். பகத்சிங், ராஜ்குரு, சுக்தேவ் போன்றவர்கள் தங்களுடைய தியாகத்தினால் வெள்ளையர்களை விரட்டி அடித்தனர். இங்கு நடைபெற்ற மக்கள் புரட்சி, தற்போதைய ஆட்சியார்களின் அமைதியை சீர்குலைத்துவிட்டது.

இந்த போராட்டத்தை உலகம் முழுவதும் பரவச்செய்த பத்திரிகை மற்றும் ஊடகங்கள், ஜனநாயகத்தின் 4-வது தூணாகிய அவர்களால் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்து விட்டனர். போராட்டத்துக்கு அதிக அளவில் ஆதரவு வழங்கிய `இளைஞர் சக்தி' நமது நாட்டின் வளமான வருங்காலத்துக்கான நம்பிக்கை ஒளியை ஏற்படுத்தி உள்ளது. மாநில அளவில் உள்ள மக்கள் நலச்சங்கங்களில் தவறானவர்கள் இணைந்து விடாமல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்''.

இவ்வாறு அன்னா ஹசாரே கூறினார்.

2-வது சுதந்திர போர்

உண்ணாவிரத மேடையில் அவருடன் இருந்த சமூக ஆர்வலர்கள் சுவாமி அக்னிவேஷ், மேதா பட்கர், கிரண்பெடி ஆகியோர், போராட்டம் வெற்றி பெற்றதற்கு மகிழ்ச்சி தெரிவித்தனர். ஹசாரேவின் `2-வது சுதந்திர போர்' தொடர வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

ஜந்தர் மந்தரில் விழாக்கோலம்

ஹசாரா உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட போது, அங்கு திரண்டு இருந்த இளைஞர்கள் மூவர்ணக் கொடியை அசைத்தும், பாடல்களை பாடிக் கொண்டும், டிரம் இசைக்கு ஏற்ப நடனம் ஆடியும் கோஷங்களை எழுப்பி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். ஜந்தர் மந்தர் பகுதியே விழாக்கோலம் பூண்டு இருந்தது போல் காணப்பட்டது.

மராட்டிய மாநிலத்தில் இருந்து வந்திருந்த மலைவாழ் மக்கள் குழுவினர் பாரம்பரிய நடனம் ஆடினார்கள். ஒருவருக்கு ஒருவர் கட்டித்தழுவி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். ஹசாரே மேடையில் பேசத் தொடங்கியபோது மகாத்மா காந்திக்கு பிடித்தமான ரகுபதி ராகவ ராஜாராம் பாடல் இசைக்கப்பட்டது.

புரட்சி வெடித்தது

அவருடைய ஒவ்வொரு வார்த்தைக்கும் கூடியிருந்தவர்கள் கைதட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். குர்கான் பகுதியில் இருந்து வந்திருந்த இளைஞர் அரவிந்த், "புரட்சி வெடித்துவிட்டது. அது காட்டுத்தீ போல் நாடு முழுவதும் பரவ வேண்டும்'' என்றார்.

"எங்களை ஒன்று சேர்த்ததற்காக ராஜாவுக்கு நன்றி, சுரேஷ்கல்மாடிக்கு நன்றி'' என்ற வாசகங்களுடன் பேனர் ஒன்றும் உண்ணாவிரதம் நடந்த மைதானத்தில் வைக்கப்பட்டு இருந்தது. ஸ்பெக்ட்ரம் மற்றும் காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஊழல்களை குறிப்பிடும் வகையில் இந்த பேனர் வைக்கப்பட்டு இருந்தது.

தினதந்தி


அன்னா ஹசாரே உண்ணாவிரதம் வாபஸ்: கோரிக்கையை ஏற்று அரசாணை வெளியிடப்பட்டது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அன்னா ஹசாரே உண்ணாவிரதம் வாபஸ்: கோரிக்கையை ஏற்று அரசாணை வெளியிடப்பட்டது Empty Re: அன்னா ஹசாரே உண்ணாவிரதம் வாபஸ்: கோரிக்கையை ஏற்று அரசாணை வெளியிடப்பட்டது

Post by ஆளுங்க Sun Apr 10, 2011 11:07 am

1947 ஆம் ஆண்டிற்கு பிறகு, மீண்டும் ஒரு அகிம்சை போர் நாட்டிற்குத் தேவைப்பட்டு இருக்கிறது!!!

போர் உண்மையிலேயே வெற்றி பெற்றதா என்பதை மழைக்கால நாடாளுமன்ற கூட்டத்தொடருக்குப் பிறகே தெரியும்!!


அன்னா ஹசாரே உண்ணாவிரதம் வாபஸ்: கோரிக்கையை ஏற்று அரசாணை வெளியிடப்பட்டது Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011

http://aalunga.in

Back to top Go down

Back to top

- Similar topics
» டாக்டர்கள் சொன்னால் ஹசாரே உண்ணாவிரதம் வாபஸ்?
» அன்னா ஹசாரே உண்ணாவிரதம் எதிரொலி... மைதானத்தில் நிரம்பி வழியும் கூட்டம்
» 27-ந் தேதி முதல் உண்ணாவிரதம் இருப்பேன் நான் செத்தால் காங்கிரசே பொறுப்பு அன்னா ஹசாரே
» அன்னா ஹசாரே குழுவை கலைச்சுட்டோம்: அன்னா ஹசாரே திடீர் அறிவிப்பு
» மனமன்மோகன்சிங் நல்லவர், சோனியாவால் பிரச்சினை; அன்னா ஹசாரே கடும் தாக்குஅன்னா ஹசாரே கடும் தாக்கு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum