Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
அம்மன் கோயிலில் மாதா!
+5
வித்யாசாகர்
nandhtiha
Ramya25
மீனு
சிவா
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
அம்மன் கோயிலில் மாதா!
கடலூர்: புதுச்சேரி & கடலூர் சாலையில் கொருக்கைமேடு என்ற கிராமத்தில் இருக்கிறது இந்த அங்காள பரமேஸ்வரி கோயில். புரிகிறது...
அம்மன் கோயில் இல்லாத ஊர் எங்கே இருக்கிறது என்றுதானே நீங்கள் கேட்க வருகிறீர்கள்? ஆனால், இந்தக் கோயிலில் ஒரு வித்தியாசமான ஆச்சரியம் இருக்கிறது.
இந்தக் கோயில் வளாகத்திலேயே வேளா-ங்கண்ணி மாதா வீற்றிருக்கிறார். பல ஆண்டுகளுக்கு முன் தற்போது கோயில் உள்ள இடத்தில் சிறிய கூரைக் கொட்டகையில் அம்மன் சிலையை வைத்து வழிபட்டு வந்துள்ளனர்.
வேளாங்கண்ணிக்கு இந்த வழியாக சென்ற பெண் ஒருவர், யாத்திரை முடிந்து திரும்பி வரும்போது மாதா சிலை ஒன்றை அம்மன் சிலை அருகில் வைத்துவிட்டுச் சென்றுள்ளார்.
அப்போது முதலே இங்கு வருபவர்கள் அம்மனையும் மாதாவையும் சேர்த்து தரிசனம் செய்வதை வழக்கமாக்கிக் கொண்டனர். நாளடைவில் அம்மனுக்கு கோயில் கட்டும்போது, மாதாவுக்கும் தனியாக கட்டிடம் கட்டி விட்டனர்.
வேளாங்கண்ணிக்கு இந்த வழியாக பாதயாத்திரை செல்பவர்கள் அவசியம் இங்குள்ள மாதாவையும், அம்மனையும் தரிசித்துவிட்டுச் செல்கின்றனர்.
Re: அம்மன் கோயிலில் மாதா!
அருமை.. கடவுள் ஒன்றே.. நம்மோட கஷ்டத்தை எந்த கடவுள் காது கொடுத்து கேட்டாலும் ..கஷ்டத்தை தீர்த்து வைத்தாலும் ..போதுமே.. கடவுளுக்காக நாம் இல்லை ..நமக்காக கடவுள் இருக்கும் போது மதத்தில் வேறுபாடு எதுக்கு
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: அம்மன் கோயிலில் மாதா!
இந்துக்களின் பரந்த மனப்பான்மைக்கு ஒரு சான்று ஆனால் கிருஸ்தவர்களின் எண்ணமோ இது இந்துக்களின் அறியாமை ,பலவீனம் என . அதே நேரம் சேர்சில் அம்மன் சிலையை யாராவது வைத்திருந்தால் பெரிய கலவரமே வெடித்திருக்கும். எல்லா பத்திரிக்கைகளின் தலைப்பு செய்தியாக இந்து மதவெறியர்களின் அட்டுழியம் ,சிறுபான்மை மேல் கட்டவிழ்த்து விட்ட மதவெறி இன்னும் எத்தனையோ வந்திருக்கும்.இதில் மனவருத்தத்துக்குரிய விஷயம் அப்பகுதியில் கிருஸ்தவர்களின் அறுவடை அதிகரித்தால் அம்மன் சிலை அப்புறப்படுத்தப்படும் என்பது உறுதி
Ramya25- பண்பாளர்
- பதிவுகள் : 110
இணைந்தது : 01/08/2009
அம்மன் கோயிலில் மாதா
திருமதி/செல்வி ரம்யா அவர்களுக்கு
நான் சமீபத்தில் வேளாங்கண்ணிக்குச்சென்றிருந்தேன். வேளாங்கண்ணி
என்ற பெயரின் பொருள் என்ன என்று கேட்டேன், கடலில் தவித்த மாலுமிக்கு தக்க வேளையில்
உதவி செய்ததால்வேளாங்கண்ணி என்றனர்.ஆனால் ஆங்கிலத்தில் veilankanni என்றல்லவோ
எழுதுகிறீர்கள் என்றும் கேட்டேன். அதற்கு வெயிலில் நின்று ஆடு மேய்க்கும்
சிறுவனுக்குக் காட்சி கொடுத்ததால் என்றனர். எத்தனையோ மாலுமிகள் இந்தியாவுக்கு வழி தெரியாமல்
திண்டாடி இருக்கின்றரே அப்பொழுதெல்லாம் ஏன் வழி காட்டவில்லை என்று கேட்டேன், சரியான
பதில் கிடைக்க வில்லை. நான் மதத்துவேஷம் கொண்டவளல்லள். அருகில் உள்ள சிக்கில் என்ற
சிறு கிராமத்துக்கும் சென்றேன். செந்தமிழ்க் கடவுள் முருகனுடைய ஆறு படை வீடுகளில்
ஒன்று. அங்கு அருள் புரியும் செவ்வேளுக்கு சிங்கார வடிவேலன் என்று திருப் பெயர்.
ஒவ்வொரு படைவீட்டிற்கும் ஒவ்வொரு பெயர் உண்டு. தணிகையில் குமரன், சாமி மலையில்
சாமிநாதன், செந்தூரில் குமரன், பழனியில் தண்டாயுத பாணி, பழமுதிர் சோலை முருகன்,
திருபரன் குன்றத்தில் சுப்பிரமணியன். எனக்குள் ஒரு சிறு பொறி தட்டியது. சூரனை
வதைக்க கன்னிகா பரமேஸ்வரியே வேலாக மாறி குமரன் கையில் புகுந்தாள் என்பது சரிதம்.
வேல் ஆம் கன்னி என்ற அம்மன் கோயில் மதம் மாறி வேளாங்கண்ணி ஆகி விட்டதோ என்ற ஒரு
சந்தேகம், வந்தது, இப்பொழுது ஒரு அம்மன் கோயிலில் மாதா சிலை வைக்கப் பட்டு வழிபடப்
பட்டு வருகிறது என்ற செய்தி என் ஐயத்தை வலுவுறச் செய்கிறது. மேலும்
வேளாங்கண்ணியில் சந்நிதி முன்பாக யானை ஒன்று இருந்ததாக நினைவு. ஹிந்து சமயத்தில்
சிவன் சந்நிதிக்கு முன் ரிஷப தேவரும், திருமால் திருக்கோயிலில் கருடனும். அம்மன்
கோயில் யோக பீடமாக இருந்தால் யானையும் அஸ்மிதா பீடமாக இருந்தால் யாளியும்
இருக்கும். புதிய ஏற்பாட்டைப் புரட்டிப் புரட்டிப் படித்துப் பார்த்தேன். அதில்
யானையைப் பற்றிய ஒரு சிறு குறிப்பும் காணப் படவில்லை. அதாவது மேரியும் ஏசுவும்
யானையைப் பார்த்ததே இல்லை என்றாகிறது. எப்படி இங்கு யானை வந்தது? கிறித்தவ
மதத்தில் தேர் என்ற விழாவே கிடையாதே. இந்தியாவில் மட்டும் தானே நடக்கிறது. இந்துக்
கோயிலில் தேர் உற்சவமானது ஆத்மாவை ரதத்தில் வருபவனாகவும் உடலைத்தேராகவும்,
புத்தியை சாரதியாகவும் மனத்தைக் கடிவாளமாகவும் நினைக்க வேண்டும் என்பதைக்
குறிக்கும் கடோபனிஷத் மந்திரத்தின் வெளிப்பாடே ஆகும். இவர்களுக்கும் தேர்
இழுக்கும் விழாவுக்கும் என்ன சம்பந்தம்? இதுபற்றித் தங்கள் கருத்தை அறிய
விரும்புகிறேன்.
அன்புடன்
நந்திதா
நான் சமீபத்தில் வேளாங்கண்ணிக்குச்சென்றிருந்தேன். வேளாங்கண்ணி
என்ற பெயரின் பொருள் என்ன என்று கேட்டேன், கடலில் தவித்த மாலுமிக்கு தக்க வேளையில்
உதவி செய்ததால்வேளாங்கண்ணி என்றனர்.ஆனால் ஆங்கிலத்தில் veilankanni என்றல்லவோ
எழுதுகிறீர்கள் என்றும் கேட்டேன். அதற்கு வெயிலில் நின்று ஆடு மேய்க்கும்
சிறுவனுக்குக் காட்சி கொடுத்ததால் என்றனர். எத்தனையோ மாலுமிகள் இந்தியாவுக்கு வழி தெரியாமல்
திண்டாடி இருக்கின்றரே அப்பொழுதெல்லாம் ஏன் வழி காட்டவில்லை என்று கேட்டேன், சரியான
பதில் கிடைக்க வில்லை. நான் மதத்துவேஷம் கொண்டவளல்லள். அருகில் உள்ள சிக்கில் என்ற
சிறு கிராமத்துக்கும் சென்றேன். செந்தமிழ்க் கடவுள் முருகனுடைய ஆறு படை வீடுகளில்
ஒன்று. அங்கு அருள் புரியும் செவ்வேளுக்கு சிங்கார வடிவேலன் என்று திருப் பெயர்.
ஒவ்வொரு படைவீட்டிற்கும் ஒவ்வொரு பெயர் உண்டு. தணிகையில் குமரன், சாமி மலையில்
சாமிநாதன், செந்தூரில் குமரன், பழனியில் தண்டாயுத பாணி, பழமுதிர் சோலை முருகன்,
திருபரன் குன்றத்தில் சுப்பிரமணியன். எனக்குள் ஒரு சிறு பொறி தட்டியது. சூரனை
வதைக்க கன்னிகா பரமேஸ்வரியே வேலாக மாறி குமரன் கையில் புகுந்தாள் என்பது சரிதம்.
வேல் ஆம் கன்னி என்ற அம்மன் கோயில் மதம் மாறி வேளாங்கண்ணி ஆகி விட்டதோ என்ற ஒரு
சந்தேகம், வந்தது, இப்பொழுது ஒரு அம்மன் கோயிலில் மாதா சிலை வைக்கப் பட்டு வழிபடப்
பட்டு வருகிறது என்ற செய்தி என் ஐயத்தை வலுவுறச் செய்கிறது. மேலும்
வேளாங்கண்ணியில் சந்நிதி முன்பாக யானை ஒன்று இருந்ததாக நினைவு. ஹிந்து சமயத்தில்
சிவன் சந்நிதிக்கு முன் ரிஷப தேவரும், திருமால் திருக்கோயிலில் கருடனும். அம்மன்
கோயில் யோக பீடமாக இருந்தால் யானையும் அஸ்மிதா பீடமாக இருந்தால் யாளியும்
இருக்கும். புதிய ஏற்பாட்டைப் புரட்டிப் புரட்டிப் படித்துப் பார்த்தேன். அதில்
யானையைப் பற்றிய ஒரு சிறு குறிப்பும் காணப் படவில்லை. அதாவது மேரியும் ஏசுவும்
யானையைப் பார்த்ததே இல்லை என்றாகிறது. எப்படி இங்கு யானை வந்தது? கிறித்தவ
மதத்தில் தேர் என்ற விழாவே கிடையாதே. இந்தியாவில் மட்டும் தானே நடக்கிறது. இந்துக்
கோயிலில் தேர் உற்சவமானது ஆத்மாவை ரதத்தில் வருபவனாகவும் உடலைத்தேராகவும்,
புத்தியை சாரதியாகவும் மனத்தைக் கடிவாளமாகவும் நினைக்க வேண்டும் என்பதைக்
குறிக்கும் கடோபனிஷத் மந்திரத்தின் வெளிப்பாடே ஆகும். இவர்களுக்கும் தேர்
இழுக்கும் விழாவுக்கும் என்ன சம்பந்தம்? இதுபற்றித் தங்கள் கருத்தை அறிய
விரும்புகிறேன்.
அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Re: அம்மன் கோயிலில் மாதா!
வணக்கம்மா, இருவருக்கும் வணக்கம்! பேசுங்கள் பேசுங்கள்..
உங்களை போலிருவர் பேசும்போது தான் எங்களை போலுள்ள, மன்னிக்கவும், என்னை போலுள்ள நிறைய பேருக்கு நிறைய ஞானம் கிடைக்க வாய்ப்பு ஏற்படுகிறது..
நந்திதாமா (அன்பு சகோதரி) நலம் தானே, கவிதை எல்லாம் படிக்கிறீர்களா? இடை இடையே ஒரு வணக்கமும் விடைபெருகிறேனாவது சொல்ல அனுமதி வேண்டுகிறேன்.
"தமிழன் இன்னலைக் கண்டு
கோழையாகிக் குறுகிய குவலயம்;
ஆரிய ஊமையாய் அடங்கிப்போனது,
சீரிய புலவர் சிலிர்த்து எழுந்தனர் -
சிறைக்குள் அடைத்துச் சிரித்தன பேய்கள்;
மறைத்தன ஊடக மாக்கள் கூட்டம் -
விழிகளில் கண்ணீர் வழிந்திட வேண்டாம்,
அழிவதே ஆயினும் அமர் களம் புகுவோம் -
வீழ்ந்திடில் சொர்க்கம்; வாழ்ந்திடில் ஈழம்!
தாழ்ந்து.. பணிந்து.. வாழ்தலே நரகம்!!
_நந்திதா
இக்கவிதை அபாரம்,
தமிழர்கள் மீண்டும் மீண்டும் படிக்க வேண்டிய கவிதை, மகாகவி பாரதியின் கோபம் இந்த வரிகளில் தெறிக்கிறது.. நிறைய எழுதுங்கள், எழுதுவதை பத்திரப் படுத்திக் கொடுங்கள். நன்றி!
உங்களை போலிருவர் பேசும்போது தான் எங்களை போலுள்ள, மன்னிக்கவும், என்னை போலுள்ள நிறைய பேருக்கு நிறைய ஞானம் கிடைக்க வாய்ப்பு ஏற்படுகிறது..
நந்திதாமா (அன்பு சகோதரி) நலம் தானே, கவிதை எல்லாம் படிக்கிறீர்களா? இடை இடையே ஒரு வணக்கமும் விடைபெருகிறேனாவது சொல்ல அனுமதி வேண்டுகிறேன்.
"தமிழன் இன்னலைக் கண்டு
கோழையாகிக் குறுகிய குவலயம்;
ஆரிய ஊமையாய் அடங்கிப்போனது,
சீரிய புலவர் சிலிர்த்து எழுந்தனர் -
சிறைக்குள் அடைத்துச் சிரித்தன பேய்கள்;
மறைத்தன ஊடக மாக்கள் கூட்டம் -
விழிகளில் கண்ணீர் வழிந்திட வேண்டாம்,
அழிவதே ஆயினும் அமர் களம் புகுவோம் -
வீழ்ந்திடில் சொர்க்கம்; வாழ்ந்திடில் ஈழம்!
தாழ்ந்து.. பணிந்து.. வாழ்தலே நரகம்!!
_நந்திதா
இக்கவிதை அபாரம்,
தமிழர்கள் மீண்டும் மீண்டும் படிக்க வேண்டிய கவிதை, மகாகவி பாரதியின் கோபம் இந்த வரிகளில் தெறிக்கிறது.. நிறைய எழுதுங்கள், எழுதுவதை பத்திரப் படுத்திக் கொடுங்கள். நன்றி!
Re: அம்மன் கோயிலில் மாதா!
வணக்கம் அன்புச் சகோதரா
அநேகமாக எல்லாக் கவிதைகளையும் கட்டுரைகளையும் படிக்கிறேன். உங்களுடைய கவிதைகளின் சொற்சுவை சொக்க வைகின்றன. பொருட் சுவை போறறத்தக்கன. பல தளங்களில் எழுத வேண்டி இருப்பதால் உடன் கருத்துப்பரிமாற்றம் செய்ய இயல்வில்லை, இதனை எழுதும் போது இந்திய நேர்ப்படி அதிகாலை. 1.44. இதை முடித்தவுடன் mirror neurons பற்றி எழுத வேண்டி இருக்கிறது. உலகத்தைக் காப்பவர் மூன்று உழவர்கள்
நல்லேர் உழவர் உறு பசிப்பிணி போக்குபவர், வில்லேர் உழவர் தறுகண் வீரர். அறத்தின் வழி நின்று அல்லலைப்போக்குபவர். சொல்லேர் உழவர் எழுதுகோலை ஏராகக்கொண்டு கல்லா நெஞ்சங்களைப்பண் படுத்துவோர், உங்கள் பேனா ஏராகட்டும் கவிதைகளை விதையுங்கள். கல்லார் நெஞ்சிருள் இல்லாதொழியட்டும்
நாளை சந்திப்போம்
என்றும் என் வாழ்த்துக்கள் உங்களுடன்
நந்திதா
அநேகமாக எல்லாக் கவிதைகளையும் கட்டுரைகளையும் படிக்கிறேன். உங்களுடைய கவிதைகளின் சொற்சுவை சொக்க வைகின்றன. பொருட் சுவை போறறத்தக்கன. பல தளங்களில் எழுத வேண்டி இருப்பதால் உடன் கருத்துப்பரிமாற்றம் செய்ய இயல்வில்லை, இதனை எழுதும் போது இந்திய நேர்ப்படி அதிகாலை. 1.44. இதை முடித்தவுடன் mirror neurons பற்றி எழுத வேண்டி இருக்கிறது. உலகத்தைக் காப்பவர் மூன்று உழவர்கள்
நல்லேர் உழவர் உறு பசிப்பிணி போக்குபவர், வில்லேர் உழவர் தறுகண் வீரர். அறத்தின் வழி நின்று அல்லலைப்போக்குபவர். சொல்லேர் உழவர் எழுதுகோலை ஏராகக்கொண்டு கல்லா நெஞ்சங்களைப்பண் படுத்துவோர், உங்கள் பேனா ஏராகட்டும் கவிதைகளை விதையுங்கள். கல்லார் நெஞ்சிருள் இல்லாதொழியட்டும்
நாளை சந்திப்போம்
என்றும் என் வாழ்த்துக்கள் உங்களுடன்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Re: அம்மன் கோயிலில் மாதா!
நன்றி சகோதரி.. எனக்கும் நேரமாகிவிட்டது தான், படித்திருப்பீர்கள் என்று நம்பிக்கை உண்டு. எனினும் கருத்து பரிமாற்றத்தின் மூலம் தானே நம் பாதையின் நீள அகலங்கள் தெரிய வருகிறது.
தவறெனில் சரி செய்துக் கொள்ளலாம், சரி எனில் இன்னும் உழைக்க தலைபடலாமில்லையா, அதனால் தான் எதிர்பார்த்திருந்தேன், இனி புரிந்துகொள்கிறேன்.
பார்த்தீர்களேயானால் நன்று. பனி செவ்வனே தொடரட்டும், ஓய்வெடுங்கள், மீண்டும் நாளைய உழைப்பிற்கு விழித்தெழ வேண்டுமே???
இரவு வணக்கம்! கடவுள் உங்களுக்குத் துணை இருப்பார்!
தவறெனில் சரி செய்துக் கொள்ளலாம், சரி எனில் இன்னும் உழைக்க தலைபடலாமில்லையா, அதனால் தான் எதிர்பார்த்திருந்தேன், இனி புரிந்துகொள்கிறேன்.
பார்த்தீர்களேயானால் நன்று. பனி செவ்வனே தொடரட்டும், ஓய்வெடுங்கள், மீண்டும் நாளைய உழைப்பிற்கு விழித்தெழ வேண்டுமே???
இரவு வணக்கம்! கடவுள் உங்களுக்குத் துணை இருப்பார்!
Re: அம்மன் கோயிலில் மாதா!
இனிய இரவு வணக்கங்கள் ..அக்கா ..சென்று வாருங்கள் மீண்டும் சந்திப்போம்..அன்பு மீனு
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: அம்மன் கோயிலில் மாதா!
இந்துக்களுக்கு மாரி அம்மா
கிருத்தவர்களுக்கு மேரி அம்மா
எழுத்தில்தான் வித்தியாசம் கடவுளின் செயல்களில் இல்லை
கிருத்தவர்களுக்கு மேரி அம்மா
எழுத்தில்தான் வித்தியாசம் கடவுளின் செயல்களில் இல்லை
சுடர் வீ- இளையநிலா
- பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009
Page 1 of 2 • 1, 2
Similar topics
» அரியகுளம் சுந்தரவல்லி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்...
» மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 108 வீணை வழிபாடு!
» ஸ்ரீ புவனேஸ்வரி மாதா !
» ரஜினி நலம் பெற பண்ணாரி அம்மன் கோயிலில் தங்கத் தேர் இழுத்த ரசிகர்கள்!
» மாதா வைஷ்ணவி தேவி
» மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 108 வீணை வழிபாடு!
» ஸ்ரீ புவனேஸ்வரி மாதா !
» ரஜினி நலம் பெற பண்ணாரி அம்மன் கோயிலில் தங்கத் தேர் இழுத்த ரசிகர்கள்!
» மாதா வைஷ்ணவி தேவி
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|