Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்திய வீரர்களுக்கு பரிசுகள் குவிந்தன: மத்திய, மாநில அரசுகள் போட்டி போட்டு அறிவிப்பு
Page 1 of 1
இந்திய வீரர்களுக்கு பரிசுகள் குவிந்தன: மத்திய, மாநில அரசுகள் போட்டி போட்டு அறிவிப்பு
உலக கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு பரிசுகள் குவிகின்றன. மத்திய, மாநில அரசுகள் போட்டி போட்டு வீரர்களுக்கு பரிசுகளை அறிவித்து வருகின்றன.
10-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய நாடுகளில் நடந்தது.
இந்தியா மீண்டும் `சாம்பியன்'
இதில், மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற பரபரப்பான இறுதிப் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி 28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உலக கோப்பையை கைப்பற்றியது.
இதன் மூலம், சொந்த மண்ணில் உலக கோப்பையை வென்ற முதல் அணி என்ற பெருமையையும் இந்தியா பெற்றது.
உலக கோப்பையை இந்திய அணி வென்ற சில நிமிடங்களில், இந்திய கிரிக்கெட் வாரியம் பரிசுத் தொகையை அறிவித்தது. அணி வீரர்களுக்கு தலா ரூ.1 கோடியும், பயிற்சியாளர் உள்ளிட்ட அணியின் உதவியாளர்களுக்கு ரூ.50 லட்சமும், தேர்வாளர்களுக்கு ரூ.25 லட்சமும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
பரிசு மழை
பெருமை மிகுந்த உலக கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பரிசுகள் குவிகின்றன. மத்திய மற்றும் மாநில அரசுகள், போட்டி போட்டுக் கொண்டு வீரர்களுக்கு வெகுமதி மற்றும் பரிசுப் பொருட்களை அறிவித்து வருகின்றன. இதனால் வீரர்கள் பரிசு மழையில் நனைந்து வருகின்றனர். உலக கோப்பையை வென்றால், இந்திய அணி வீரர்கள் அனைவருக்கும் புதிய ரக கார் பரிசாக வழங்கப்படும் என்று ஏற்கனவே ஹூண்டாய் கார் நிறுவனம் அறிவித்து உள்ளது.
உலக கோப்பையை வென்ற இந்திய அணியை கவுரவிக்கும் விதமாக பெங்களூர் வளர்ச்சி குழுமம் சார்பில், வீரர்கள் அனைவருக்கும் 4 ஆயிரம் சதுர அடி பரப்பில் தலா ஒரு வீட்டு மனை வழங்கப்படும் என்றும், அனைத்து வீரர்களையும் பெங்களூருக்கு அனைத்து பாராட்டு விழா நடத்தப்படும் என்றும் கர்நாடக மாநில முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்து இருக்கிறார்.
பெங்களூரில் உள்ள ஒரு சாலைக்கு கேப்டன் மகேந்திர சிங் டோனியின் பெயர் சூட்டப்படும் என்று பெங்களூர் மேயர் எஸ்.கே.நடராஜ் கூறி உள்ளார்.
டோனிக்கு ரூ.2 கோடி
டெல்லி மாநில முதல்-மந்திரி ஷீலா தீட்சித், இந்திய அணியின் கேப்டன் டோனிக்கு ரூ.2 கோடியும், அணியில் இடம் பிடித்த டெல்லியை சேர்ந்த வீரர்களான ஷேவாக், கவுதம் கம்பீர், விராட் கோக்லி, நெஹரா ஆகியோருக்கு தலா ரூ.1 கோடியும் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று நேற்று அறிவித்துள்ளார்.
இந்திய அணி கேப்டன் டோனி மற்றும் நட்சத்திர ஆட்டக்காரர் தெண்டுல்கர் ஆகியோருக்கு மலை வாசஸ்தலமான உத்தரகாண்ட் மாநிலம் முசோரியில் வீட்டு மனை அல்லது வீடு வழங்கப்படும் என்று அந்த மாநில முதல்-மந்திரி நிஷாங் அறிவித்து இருக்கிறார். உத்தரகாண்டில் கட்டப்படும் ஸ்டேடியத்துக்கு டோனி பெயர் சூட்டப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தெண்டுல்கர் ஓய்வுக்காக இங்கு அடிக்கடி குடும்பத்துடன் வருவது உண்டு. ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த டோனியின் மூதாதையர் வீடு உத்தரகாண்டில் உள்ள அல்மோரா மாவட்டத்தில் உள்ளது. இந்த மாநிலத்தின் தலைநகரான டேராடூனில் தான் டோனியின் திருமணம் கடந்த ஆண்டு நடந்தது. இந்த மாநிலத்துக்கும் டோனிக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதால் ஸ்டேடியத்துக்கு அவரது பெயர் வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
கவுரவ டாக்டர் பட்டம்
தனது சொந்த மாநிலமான ஜார்கண்ட்டில் கிரிக்கெட் அகாடமி அமைக்க வேண்டும் என்பது டோனியின் நீண்டகால கனவு ஆகும். அதனை நிறைவேற்றும் வகையில், டோனி கிரிக்கெட் அகாடமி தொடங்க நிலம் வழங்கப்படும் என்று ஜார்கண்ட் துணை முதல்-மந்திரி சுதேஷ் மகதோ நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார். டோனியுடன் கலந்து ஆலோசித்து எந்த இடத்தில் எவ்வளவு நிலம் வழங்குவது என்பது பற்றி தீர்மானிக்கப்படும் என்றும் அவர் கூறினார். ஜார்கண்ட் அரசின் சார்பில் டோனிக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என்றும் அப்போது அவர் தெரிவித்தார்.
உலக கோப்பையை வென்ற கேப்டன் டோனியை கவுரவிக்கும் வகையில், அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படும் என்று ஜார்கண்ட் மாநில மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி பைஜ்நாத் ராம் கூறினார்.
தெண்டுல்கருக்கு ரூ.1 கோடி
மராட்டிய மாநிலத்தை சேர்ந்த தெண்டுல்கர், ஜாகீர்கான் ஆகியோருக்கு தலா ரூ.1 கோடி பரிசாக வழங்கப்படும் என்று அந்த மாநில முதல்-மந்திரி பிரிதிவிராஜ் சவான் அறிவித்து உள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக், வேகப்பந்து வீச்சாளர் நெஹரா ஆகியோருக்கு கவுரவம் அளிக்கப்படும் என்று அரியானா மாநில முதல்-மந்திரி பூபிந்தர்சிங் ஹூடா தெரிவித்து இருக்கிறார்.
யுவராஜ்சிங்குக்கு நவீன கார்
உலக கோப்பை போட்டியில் தொடர்நாயகன் விருது பெற்ற யுவராஜ்சிங்குக்கு. ஜெர்மனியை சேர்ந்த சொகுசு கார் கம்பெனியின் தயாரிப்பான `ஆடி` ரக நவீன கார் வழங்கப்படும் என்றும், காருக்கான சாவியை இந்திய அணி முன்னாள் கேப்டன் ரவிசாஸ்திரி, யுவராஜ்சிங்கிடம் வழங்குவார் என்றும் அந்த நிறுவனத்தின் விற்பனை பிரிவு தலைவர் மும்பையில் தெரிவித்தார்.
பஞ்சாபை சேர்ந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் யுவராஜ்சிங், சுழற்பந்து பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் ஆகியோருக்கு தலா ரூ.1 கோடி ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று பஞ்சாப் மாநில துணை முதல்-மந்திரி சுக்பிர்சிங் பாதல் அறிவித்து உள்ளார். மேலும் அரசு சார்பில் விழா நடத்தி இந்திய அணி வீரர்கள் கவுரவிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.
விருதுகள்
குஜராத் அரசின் சார்பில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயர்ந்த விருதான `ஏகலைவா' விருது அந்த மாநிலத்தை சேர்ந்த யூசுப்பதான், முனாப் பட்டேல் ஆகியோருக்கு வழங்கப்படும் என்று அந்த மாநில அரசு அறிவித்து உள்ளது. இந்த விருது ரூ.1 லட்சமும், பாராட்டு பத்திரமும் கொண்டது ஆகும்.
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சுரேஷ்ரெய்னா, பியுஷ்சாவ்லா ஆகியோருக்கு கன்சிராம் சர்வதேச விளையாட்டு விருது வழங்கப்படும் என்று அந்த மாநில முதல்-மந்திரி மாயாவதி அறிவித்து உள்ளார். விருது பெறும் அவர்களுக்கு ரொக்கப்பரிசும் கிடைக்கும்.
ஷேவாக், நெஹரா ஆகியோருக்கு சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதுகள் வழங்கப்படும் என்று அரியானா மாநில அரசு அறிவித்து உள்ளது.
ரெயிலில் சலுகை
உலக கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு ரெயில்வே மந்திரி மம்தா பானர்ஜி, ரெயில் பயணத்தில் சலுகை அறிவித்து உள்ளார். வீரர்கள் துணை ஒருவருடன் தங்கள் வாழ்நாள் முழுவதும் முதல் வகுப்பு குளிர்சாதன பெட்டியில் கட்டணம் எதுவுமின்றி எங்கு வேண்டுமானாலும், எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் பயணம் செய்யலாம் என்று அவர் அறிவித்து இருக்கிறார்.
வீரர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ள மம்தா பானர்ஜி, இந்த வெற்றியை நாடே கொண்டாடும் வகையில் இன்று (திங்கட்கிழமை) தேசிய விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்றும் மத்திய அரசை கேட்டுக் கொண்டு உள்ளார்.
மம்தா பானர்ஜியின் இந்த கோரிக்கை பற்றி கொல்கத்தாவில் மத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜியிடம் நிருபர்கள் கருத்து கேட்ட போது, `எனக்கு வந்த இந்த கோரிக்கையை டெல்லிக்கு அனுப்பி இருக்கிறேன். இதுபற்றி பிரதமர்தான் முடிவு செய்ய வேண்டும்' என்று பதில் அளித்தார்.
வருமானம்
உலக கோப்பையை வென்றதால் பரிசு மழையில் நனையும் இந்திய அணி வீரர்கள் புதிய விளம்பரங்கள் மூலம் கோடிக்கணக்கில் பணத்தை அள்ளி குவிக்க இருக்கிறார்கள். கேப்டன் டோனி, யுவராஜ்சிங், தெண்டுல்கர், கம்பீர் உள்ளிட்ட வீரர்களை நோக்கி பல நிறுவனங்கள் படையெடுக்க காத்து இருக்கின்றன. இதனால் வீரர்களின் விளம்பர ஒப்பந்த கட்டணம் அதிரடியாக எகிறும்.
கேப்டன் டோனி தற்போது 23 கம்பெனிகளின் விளம்பர மாடலாக உள்ளார். அவருக்கு இன்னும் பல கம்பெனிகள் வலை விரிக்கும். டோனி ஒவ்வொரு விளம்பரத்துக்கும் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.10 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினதந்தி
10-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய நாடுகளில் நடந்தது.
இந்தியா மீண்டும் `சாம்பியன்'
இதில், மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற பரபரப்பான இறுதிப் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி 28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உலக கோப்பையை கைப்பற்றியது.
இதன் மூலம், சொந்த மண்ணில் உலக கோப்பையை வென்ற முதல் அணி என்ற பெருமையையும் இந்தியா பெற்றது.
உலக கோப்பையை இந்திய அணி வென்ற சில நிமிடங்களில், இந்திய கிரிக்கெட் வாரியம் பரிசுத் தொகையை அறிவித்தது. அணி வீரர்களுக்கு தலா ரூ.1 கோடியும், பயிற்சியாளர் உள்ளிட்ட அணியின் உதவியாளர்களுக்கு ரூ.50 லட்சமும், தேர்வாளர்களுக்கு ரூ.25 லட்சமும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
பரிசு மழை
பெருமை மிகுந்த உலக கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பரிசுகள் குவிகின்றன. மத்திய மற்றும் மாநில அரசுகள், போட்டி போட்டுக் கொண்டு வீரர்களுக்கு வெகுமதி மற்றும் பரிசுப் பொருட்களை அறிவித்து வருகின்றன. இதனால் வீரர்கள் பரிசு மழையில் நனைந்து வருகின்றனர். உலக கோப்பையை வென்றால், இந்திய அணி வீரர்கள் அனைவருக்கும் புதிய ரக கார் பரிசாக வழங்கப்படும் என்று ஏற்கனவே ஹூண்டாய் கார் நிறுவனம் அறிவித்து உள்ளது.
உலக கோப்பையை வென்ற இந்திய அணியை கவுரவிக்கும் விதமாக பெங்களூர் வளர்ச்சி குழுமம் சார்பில், வீரர்கள் அனைவருக்கும் 4 ஆயிரம் சதுர அடி பரப்பில் தலா ஒரு வீட்டு மனை வழங்கப்படும் என்றும், அனைத்து வீரர்களையும் பெங்களூருக்கு அனைத்து பாராட்டு விழா நடத்தப்படும் என்றும் கர்நாடக மாநில முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்து இருக்கிறார்.
பெங்களூரில் உள்ள ஒரு சாலைக்கு கேப்டன் மகேந்திர சிங் டோனியின் பெயர் சூட்டப்படும் என்று பெங்களூர் மேயர் எஸ்.கே.நடராஜ் கூறி உள்ளார்.
டோனிக்கு ரூ.2 கோடி
டெல்லி மாநில முதல்-மந்திரி ஷீலா தீட்சித், இந்திய அணியின் கேப்டன் டோனிக்கு ரூ.2 கோடியும், அணியில் இடம் பிடித்த டெல்லியை சேர்ந்த வீரர்களான ஷேவாக், கவுதம் கம்பீர், விராட் கோக்லி, நெஹரா ஆகியோருக்கு தலா ரூ.1 கோடியும் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று நேற்று அறிவித்துள்ளார்.
இந்திய அணி கேப்டன் டோனி மற்றும் நட்சத்திர ஆட்டக்காரர் தெண்டுல்கர் ஆகியோருக்கு மலை வாசஸ்தலமான உத்தரகாண்ட் மாநிலம் முசோரியில் வீட்டு மனை அல்லது வீடு வழங்கப்படும் என்று அந்த மாநில முதல்-மந்திரி நிஷாங் அறிவித்து இருக்கிறார். உத்தரகாண்டில் கட்டப்படும் ஸ்டேடியத்துக்கு டோனி பெயர் சூட்டப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தெண்டுல்கர் ஓய்வுக்காக இங்கு அடிக்கடி குடும்பத்துடன் வருவது உண்டு. ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த டோனியின் மூதாதையர் வீடு உத்தரகாண்டில் உள்ள அல்மோரா மாவட்டத்தில் உள்ளது. இந்த மாநிலத்தின் தலைநகரான டேராடூனில் தான் டோனியின் திருமணம் கடந்த ஆண்டு நடந்தது. இந்த மாநிலத்துக்கும் டோனிக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதால் ஸ்டேடியத்துக்கு அவரது பெயர் வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
கவுரவ டாக்டர் பட்டம்
தனது சொந்த மாநிலமான ஜார்கண்ட்டில் கிரிக்கெட் அகாடமி அமைக்க வேண்டும் என்பது டோனியின் நீண்டகால கனவு ஆகும். அதனை நிறைவேற்றும் வகையில், டோனி கிரிக்கெட் அகாடமி தொடங்க நிலம் வழங்கப்படும் என்று ஜார்கண்ட் துணை முதல்-மந்திரி சுதேஷ் மகதோ நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார். டோனியுடன் கலந்து ஆலோசித்து எந்த இடத்தில் எவ்வளவு நிலம் வழங்குவது என்பது பற்றி தீர்மானிக்கப்படும் என்றும் அவர் கூறினார். ஜார்கண்ட் அரசின் சார்பில் டோனிக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என்றும் அப்போது அவர் தெரிவித்தார்.
உலக கோப்பையை வென்ற கேப்டன் டோனியை கவுரவிக்கும் வகையில், அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படும் என்று ஜார்கண்ட் மாநில மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி பைஜ்நாத் ராம் கூறினார்.
தெண்டுல்கருக்கு ரூ.1 கோடி
மராட்டிய மாநிலத்தை சேர்ந்த தெண்டுல்கர், ஜாகீர்கான் ஆகியோருக்கு தலா ரூ.1 கோடி பரிசாக வழங்கப்படும் என்று அந்த மாநில முதல்-மந்திரி பிரிதிவிராஜ் சவான் அறிவித்து உள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக், வேகப்பந்து வீச்சாளர் நெஹரா ஆகியோருக்கு கவுரவம் அளிக்கப்படும் என்று அரியானா மாநில முதல்-மந்திரி பூபிந்தர்சிங் ஹூடா தெரிவித்து இருக்கிறார்.
யுவராஜ்சிங்குக்கு நவீன கார்
உலக கோப்பை போட்டியில் தொடர்நாயகன் விருது பெற்ற யுவராஜ்சிங்குக்கு. ஜெர்மனியை சேர்ந்த சொகுசு கார் கம்பெனியின் தயாரிப்பான `ஆடி` ரக நவீன கார் வழங்கப்படும் என்றும், காருக்கான சாவியை இந்திய அணி முன்னாள் கேப்டன் ரவிசாஸ்திரி, யுவராஜ்சிங்கிடம் வழங்குவார் என்றும் அந்த நிறுவனத்தின் விற்பனை பிரிவு தலைவர் மும்பையில் தெரிவித்தார்.
பஞ்சாபை சேர்ந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் யுவராஜ்சிங், சுழற்பந்து பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் ஆகியோருக்கு தலா ரூ.1 கோடி ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று பஞ்சாப் மாநில துணை முதல்-மந்திரி சுக்பிர்சிங் பாதல் அறிவித்து உள்ளார். மேலும் அரசு சார்பில் விழா நடத்தி இந்திய அணி வீரர்கள் கவுரவிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.
விருதுகள்
குஜராத் அரசின் சார்பில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயர்ந்த விருதான `ஏகலைவா' விருது அந்த மாநிலத்தை சேர்ந்த யூசுப்பதான், முனாப் பட்டேல் ஆகியோருக்கு வழங்கப்படும் என்று அந்த மாநில அரசு அறிவித்து உள்ளது. இந்த விருது ரூ.1 லட்சமும், பாராட்டு பத்திரமும் கொண்டது ஆகும்.
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சுரேஷ்ரெய்னா, பியுஷ்சாவ்லா ஆகியோருக்கு கன்சிராம் சர்வதேச விளையாட்டு விருது வழங்கப்படும் என்று அந்த மாநில முதல்-மந்திரி மாயாவதி அறிவித்து உள்ளார். விருது பெறும் அவர்களுக்கு ரொக்கப்பரிசும் கிடைக்கும்.
ஷேவாக், நெஹரா ஆகியோருக்கு சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதுகள் வழங்கப்படும் என்று அரியானா மாநில அரசு அறிவித்து உள்ளது.
ரெயிலில் சலுகை
உலக கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு ரெயில்வே மந்திரி மம்தா பானர்ஜி, ரெயில் பயணத்தில் சலுகை அறிவித்து உள்ளார். வீரர்கள் துணை ஒருவருடன் தங்கள் வாழ்நாள் முழுவதும் முதல் வகுப்பு குளிர்சாதன பெட்டியில் கட்டணம் எதுவுமின்றி எங்கு வேண்டுமானாலும், எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் பயணம் செய்யலாம் என்று அவர் அறிவித்து இருக்கிறார்.
வீரர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ள மம்தா பானர்ஜி, இந்த வெற்றியை நாடே கொண்டாடும் வகையில் இன்று (திங்கட்கிழமை) தேசிய விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்றும் மத்திய அரசை கேட்டுக் கொண்டு உள்ளார்.
மம்தா பானர்ஜியின் இந்த கோரிக்கை பற்றி கொல்கத்தாவில் மத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜியிடம் நிருபர்கள் கருத்து கேட்ட போது, `எனக்கு வந்த இந்த கோரிக்கையை டெல்லிக்கு அனுப்பி இருக்கிறேன். இதுபற்றி பிரதமர்தான் முடிவு செய்ய வேண்டும்' என்று பதில் அளித்தார்.
வருமானம்
உலக கோப்பையை வென்றதால் பரிசு மழையில் நனையும் இந்திய அணி வீரர்கள் புதிய விளம்பரங்கள் மூலம் கோடிக்கணக்கில் பணத்தை அள்ளி குவிக்க இருக்கிறார்கள். கேப்டன் டோனி, யுவராஜ்சிங், தெண்டுல்கர், கம்பீர் உள்ளிட்ட வீரர்களை நோக்கி பல நிறுவனங்கள் படையெடுக்க காத்து இருக்கின்றன. இதனால் வீரர்களின் விளம்பர ஒப்பந்த கட்டணம் அதிரடியாக எகிறும்.
கேப்டன் டோனி தற்போது 23 கம்பெனிகளின் விளம்பர மாடலாக உள்ளார். அவருக்கு இன்னும் பல கம்பெனிகள் வலை விரிக்கும். டோனி ஒவ்வொரு விளம்பரத்துக்கும் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.10 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினதந்தி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இந்திய வீரர்களுக்கு பரிசுகள் குவிந்தன: மத்திய, மாநில அரசுகள் போட்டி போட்டு அறிவிப்பு Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மத்திய- மாநில அரசுகள் உறவில் சீர்கேட்டால் சோவியத் யூனியன் போல இந்திய மாநிலங்கள் சிதறலாம்; சிவசேனா சொல்கிறது
» குவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா?
» இந்தி கற்க மாநில அரசுகள் ஊக்குவிக்க வேண்டும் - மத்திய அரசு அறிவுரை..!
» ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு
» முத்தரப்பு டி20 தொடர்: கோலி, தோனி இல்லை: இந்திய அணி அறிவிப்பு: 3 தமிழக வீரர்களுக்கு இடம்
» குவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா?
» இந்தி கற்க மாநில அரசுகள் ஊக்குவிக்க வேண்டும் - மத்திய அரசு அறிவுரை..!
» ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு
» முத்தரப்பு டி20 தொடர்: கோலி, தோனி இல்லை: இந்திய அணி அறிவிப்பு: 3 தமிழக வீரர்களுக்கு இடம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|