ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாநிலத்தில் சுயமாக கொள்ளை;மத்தியில் கூட்டுக்கொள்ளை- விஜயகாந்த்

Go down

மாநிலத்தில் சுயமாக கொள்ளை;மத்தியில் கூட்டுக்கொள்ளை- விஜயகாந்த் Empty மாநிலத்தில் சுயமாக கொள்ளை;மத்தியில் கூட்டுக்கொள்ளை- விஜயகாந்த்

Post by தாமு Sun Apr 03, 2011 5:36 am

ஆட்சியைப் பிடிக்கப்போவதாகத்தான் கூறிவந்தீர்கள். ஆனால், தற்போது கூட்டணி சேர்ந்துள்ளீர்கள்.
கடந்த 1962ல் சீனாவுடன் போர் சூழல் இருந்தது. எதிர்ரெதிர் துருவங்களாக இருந்தாலும், மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசை அண்ணா ஆதரித்தார். இதுகுறித்து கேட்டபோது, "வீடு என்று இருந்தால் தான் ஓடு மாற்ற முடியும். நாடு என்று ஒன்று இருந்தால் தான் கட்சியை மாற்ற முடியும். இப்போது நாட்டுக்கே ஆபத்து வந்திருக்கிறது. முதலில் அதைத் தீர்க்க வேண்டும்' என்றார்.அதைத் தான் இப்போது நான் செய்துகொண்டிருக்கிறேன். கலைஞரின் வீடா, தமிழ்நாடா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. கலைஞரின் குடும்பம், இந்த நாட்டைக் கொள்ளையடித்துக்கொண்டிருக்கிறது. எங்கும் கொள்ளை; எதிலும் கொள்ளை என்பதாகத் தான் இன்றைய நிலைமை இருக்கிறது. முதலில் இந்த தீய சக்தியை அழிக்க வேண்டும்.மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று சொல்வர். தெய்வம் எப்போதும் இறங்கி வந்து பேசாது. மக்கள் மூலமாகத் தான் பேசும். இந்த ஆட்சி ஒழிய வேண்டும் என்பது தான் மக்களின் கருத்தாக இருக்கிறது. அதற்கான முயற்சியில் தான் நான் இறங்கியிருக்கிறேன். இதற்கு முன்பு, இந்த ஆட்சியை ராமதாஸ் திட்டிக் கொண்டிருந்தார். இப்போது, ஒவ்வொரு குடும்பமும் பயனடைந்துள்ளது என்கிறார். இதிலிருந்தே தெரியவில்லையா? இது கொள்கைக் கூட்டணியில்லை; கொள்ளைக் கூட்டணி என்று. இந்தக் கூட்டணியை விரட்டுவதற்காகத் தான், நான் கூட்டணி சேர்ந்திருக்கிறேன்.
திராவிடக் கட்சிகளுக்கான மாற்றாக உங்களை மக்கள் கருதிவந்த நிலையில், ஒரு தரப்புக்கு ஆதரவாக நீங்கள் முடிவெடுத்த பிறகும், நடுநிலையாளர்களின் ஓட்டு உங்களுக்கு கிடைக்குமா?
கிடைக்கும். மக்கள் என் மீது அளப்பரிய நம்பிக்கை வைத்துள்ளனர். நான் ஒன்றும் ஆட்சியில் பங்கு வேண்டும், துணை முதல்வர் பதவி வேண்டும் என்று கேட்கவில்லையே. செம்மொழி மாநாடு நடத்தி, தன் குடும்பத்தைத் தான் அமர வைத்தார். தஞ்சைப் பெரிய கோவில் ஆயிரமாவது ஆண்டு விழா நடத்தி, நடனம் தான் பார்த்தார். இவரை அகற்ற கூட்டணி சேர்ந்திருப்பதால், என் நம்பகத்தன்மை அதிகரித்து, ஓட்டு கூடுமே தவிர குறையவே குறையாது.
அ.தி.மு.க., ஆட்சி அமைத்தால், அவர்கள் தவறு செய்யாதபடி கண்காணிப் பீர்களா?
இன்னும் ஆட்சியே அமைந்துவிடாதபோது, கண்காணிப்பது பற்றியெல்லாம் யோசிக்க வேண்டியதில்லை. மக்களின் விருப்பத்திற்கிணங்க, தி.மு.க., ஆட்சியை அகற்றுவோம். இப்போதைக்கு அது ஒன்று தான் எங்கள் குறி.
அ.தி.மு.க.,வுடனான உங்கள் கூட்டணி எப்படி இருக்கும்?
போகப் போகத் தெரியும். ஒரு தயாரிப்பாளர் என்னை வைத்து படம் எடுக்கிறார். இரண்டு பேருக்கும் எப்படி ஒத்துப்போகிறது என்பதைப் பொறுத்து, என்னை வைத்து 10 படம் கூட பண்ணுவார். அதைப் போலத் தான் இதுவும். பழகிய பிறகே தெரியும்.
கூட்டணி சேர்ந்திருக்காவிட்டால், தே.மு.தி.க., என்ற கட்சியைத் தொடர்ந்து நடத்துவது பிரச்னையாகி இருக்குமா?
பிரச்னைக்கு அஞ்சுபவன் நான் இல்லை. வாழ்க்கை என்றாலே பிரச்னைகள் இருக்கத் தான் செய்யும். அதை எதிர்கொண்டு சமாளிக்கும் நெஞ்சுரம் எங்களுக்கு இருக்கிறது. என் திருமண மண்டபத்தை இடித்தனர், நாட்டில் எங்கும் நடக்காத அநியாயமாக, கட்சி அலுவலகத்தில் சோதனை நடத்தினர். அதுக்கெல்லாம் கலங்கினேனா?
கூட்டணி என்றான பிறகு, உங்கள் கட்சியின் வளர்ச்சி சுருங்கிவிடாதா?
சுருங்காது. நாங்கள் பிரிந்து கிடந்தால் மீண்டும் கலைஞர் வந்துவிடுவார். பிரித்தாளும் சூழ்ச்சி தான் அவருடைய, "பாலிசி.' அதனால் தான் நாங்கள் ஒன்று சேர்ந்திருக்கிறோம்.
உங்களுக்கும் அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கும் தனிப்பட்ட தாக்குதல் இருந்தது.
அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை; நிரந்தர எதிரியும் இல்லை என்பது எல்லாருக்கும் தெரிந்தது தானே. மக்கள் சொன்னதால் தான், நான் இந்த கூட்டணி முடிவுக்கே வந்தேன். தன் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக மட்டும் தான் இவர் கட்சி நடத்துகிறார். "காங்கிரசுடனும், பணக்காரர்களுடனும் கூட்டணி வைக்கக் கூடாது' என அண்ணாதுரை சொல்லியிருந்தார். அதை மீறி, 60க்கு 63ஐக் கொடுத்து இவர்கள் கூட்டணி சேரவேண்டிய அவசியமென்ன? இவர் மட்டும் மானத்தை விட்டு சேருவாராம். நாங்கள் சேர்ந்தால் மட்டும் தப்பா?
அ.தி.மு.க., கூட்டணியிலும் பெரிய இணக்கம் இருப்பது போல் தெரியவில்லையே. இடதுசாரிகளுடன் இழுபறி நிலவியது... ம.தி.மு.க., நிலை...
மற்ற கட்சிகளின் விவகாரங்களுக்குள் நான் போக விரும்பவில்லை. எனக்கு முன்னால் இருந்தே அவர்கள் கூட்டணியில் இருக்கின்றனர். அவர்களிடம் கேட்டால் தான் இதுபற்றிய விவரம் தெரியும்.
கூட்டணிக்குள் கடைசியாக நுழைந்த நீங்கள், முதல் ஆளாக ஒதுக்கீடு வாங்கி வந்துவிட்டீர்கள். இந்த நிலையில், கூட்டணிக் கட்சிகள் இணக்கமாக பணிபுரியுமா?
பணிபுரிபவர்; பணிபுரிய வேண்டும். நாங்கள் எதையும் எதிர்பார்த்து செயல்படவில்லை. அதேசமயம், கூட்டணி தர்மத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம். முழுமையாக கடைபிடிப்போம். அதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
நீங்களும், ஜெயலலிதாவும் ஒரே மேடையில் பிரசாரம் செய்வீர்களா?
எல்லா தலைவர்களும் ஒரே மேடையில் தான் பிரசாரம் செய்ய வேண்டும் என்று என்ன இருக்கிறது? மிகக் குறைந்த நாட்களே இருக்கும்போது, ஆளுக்கு ஒரு திசையாக பிரசாரம் செய்தால், நிறைய மக்களைச் சென்றடையே முடியுமே. இந்த ஆட்சியாளர்களை இப்படியே விட்டால், எகிப்து மாதிரி, லிபியா மாதிரி மக்கள் புரட்சி தான் வெடிக்கும்.
குறைந்தபட்ச பொது செயல் திட்டம் ஏதேனும் இருக்குமா?
அதற்கு முன்பு முடிவு செய்ய வேண்டிய விஷயங்களே நிறைய இருக்கின்றன. இப்போதே அதுகுறித்து முடிவு செய்வதற்கில்லை. எங்கள் தரப்பிலிருந்து, கூட்டணி தர்மத்தை மீற மாட்டோம்.
அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்துவிட்டால், உங்களிடமிருந்து ஏதேனும் திட்டத்தை எதிர்பார்க்கலாமா?
நிச்சயமாக. எந்தவொரு அமைப்புமே ஒரு வழிகாட்டுதலோடு, தொலைநோக்கோடு தானே செயல்பட முடியும். அதைப் பற்றி இப்போதே முடிவு செய்வதற்கு ஒன்றும் இல்லை. வெற்றி தான் எங்கள் ஒரே குறிக்கோள். இந்த ஆட்சியை அகற்றுவோம். எங்கள் கூட்டணியை ஜெயிக்க வைப்போம். மற்றதெல்லாம் பிறகு தான். ஊர் கூடி தேர் இழுப்போம். பிரச்னைகளை அதன் பிறகு பேசித் தீர்த்துக் கொள்ளலாம்.
உங்களுடைய பிரசார வியூகம் தான் என்ன?
நிறைய இருக்கிறது. இவர்களின் ஆட்சியில் பிரச்னைக்கா பஞ்சம்? இவர்களது ஊழல் லட்சக்கணக்கான கோடியை எட்டிவிட்டதால், 100, 200 கோடி ஊழல்களை எல்லாம், பத்திரிகைகளே செய்தியாக்குவதில்லை. சென்னையின் புறநகர்ப் பகுதியில் நிலம் வழங்கிய வகையில் 200 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்துள்ளது. அதை யாரும் பெரிதாக்கவில்லை. ஒரு லட்சம் கோடியைக் கேட்ட பிறகு, 200 கோடியெல்லாம் மக்களுக்கே சாதாரணமாகிவிட்டது போல.
மாநிலத்தில் சுயாட்சி; மத்தியில் கூட்டாட்சி என்றனர். ஆனால், இவர்கள் செய்ததெல்லாம், மாநிலத்தில் சுயமா கொள்ளையடிக்கணும்; மத்தியில கூட்டா கொள்ளையடிக்கணும்கிறது தான்.
பல நல்ல திட்டங்களைச் செய்திருப்பதாகத் தானே தி.மு.க., அரசு சொல்கிறது?
அப்படி செய்திருந்தால் ஏன் காங்கிரசையும், ராமதாசையும் கெஞ்சுகிறீர்கள்; 63 சீட்டுக்காக அடித்துக்கொள்கிறீர்கள்; 121 சீட்டாக குறைத்துக்கொள்கிறீர்கள்? அனைத்து தொகுதிகளிலும் அவர்களே போட்டியிட வேண்டியது தானே! அப்புறம் ஏன், எனக்கு சவால் விட்ட அழகிரி என்னை, "நண்பர் நண்பர்' என்று சொல்லிக் கொண்டிருந்தார். நானும் அவரும் ஒன்றாக கோலி விளையாடினோமா? கிட்டிப்புல் விளையாடினோமா?இவ்வளவு இலவசங்களைத் தருகின்றனரே, எங்காவது விலைவாசி குறைந்திருக்கிறதா? அப்புறம், அதைத் தந்து என்ன புண்ணியம்? கொடுக்கின்ற இலவசங்களும், இவர்கள் வீட்டு சொத்தா, என்ன? எங்கள் வரிப்பணத்தைத் தானே கொடுக்கிறார்? இவர்கள் கட்டித் தந்த இலவச வீடுகள், எப்போது இடிந்து விழுமோ எனத் தெரியாத நிலையில் தான் இருக்கின்றன. அரிசி எதற்காக கொடுத்தனர்? கடத்துவதற்காக. "டிவி' கட்சிக்காரங்களுக்கு கொடுத்தார். ஏழைகளுக்கு கொடுத்த 400 ஏக்கர் இலவச நிலத்தை விற்றுவிட்டதாக, "டிவி'யில் வந்த செய்தி, ஒன்றரை மணி நேரத்தில் நிறுத்தப்பட்டது. இவர்களுடைய வேலையே மிரட்டல் தானே.
நீங்கள் சொல்வது எல்லாமே தி.மு.க., எதிர்ப்பாக இருக்கிறது. அப்படியானால், உங்களுக்கும் காங்கிரசுக்கும்...
ஒண்ணுமே இல்லை. என்ன இருக்கிறது? தாமஸ் நியமனம் பற்றி ஒன்றும் தெரியாது எனச் சொல்லும் பிரதமர் தான் இருக்கிறார். அவருக்கு என்ன தண்டனை கொடுப்பது? இலங்கைத் தமிழர்கள் கொல்லப்பட்டதை இவர்கள் கண்டுகொள்ளவே இல்லை. தங்கள் இடத்தைத் தக்கவைக்க வேண்டும் என்பதில் தான் கவனம் செலுத்தினர்.
தேர்தலில் பணபலம் எப்படி இருக்கும் என நினைக்கிறீர்கள்?
அதிகமாகத் தான் இருக்கும். ஆனால், இவர்கள் என்ன தான் செய்தாலும் சரி, மக்கள் புரட்சியைத் தடுக்க முடியாது. எகிப்திலும், லிபியாவிலும் ராணுவத்தைக் கொண்டு வந்து நிறுத்தினார்களே? மக்கள் பின்வாங்கினார்களா? பணபலத்தை மக்கள் பலம் தூக்கி எறிந்துவிடும். கரும்புத் தோட்டத்துக்கு யானையைக் காவல் வைத்தது மாதிரி, தமிழகத்தில் கலைஞரை உட்கார வைத்திருக்கிறோம். அவர் அழிக்கத் தான் செய்வார். அவரிடமிருந்து எங்களால் இந்த நாட்டைக் காப்பாற்ற முடியும்.
நீங்கள் 41க்கு 41ஐயும் வென்றுவிட்டால், என்ன செய்வதாக உத்தேசம்?
பொறுத்திருந்து பாருங்கள்.

விஜயகாந்த்நிறுவனர், தேசிய முற்போக்கு திராவிட கழகம்
இயற்பெயர் :விஜயராஜ்
வயது :59
திரை ஆர்வம் :எம்.ஜி.ஆர்., ரசிகர்
முதல் படம் :இனிக்கும் இளமை
மனைவி :பிரேமலதா
குழந்தைகள் :இரண்டு மகன்கள்திருமணத்தை
நடத்தியோர் :கருணாநிதி, மூப்பனார்
நிறுவனர் :தேசிய முற்போக்கு திராவிட கழகம்
துவக்கியது :2005
தேர்தல் அனுபவம்:2006ல் விருத்தாசலத்தில்போட்டியிட்டு வெற்றி.




தினமலர்.



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum