ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 6:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:19 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Today at 6:16 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 6:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Today at 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:00 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Today at 11:09 am

» மனைவி அமைவதெல்லாம்....
by ayyasamy ram Today at 8:49 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» அழகு தெய்வமாக வந்து...
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:17 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:16 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» கருத்துப்படம் 10/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:29 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:24 pm

» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» "இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:26 pm

» ஆடி மாதத்தில் வரும் முக்கியமான விசேஷ தினங்கள்:
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» எப்பூடி? - மரியாதை ராமன் கதை
by ayyasamy ram Yesterday at 1:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்களாலும் முடியும் தன்னம்பிக்கை பெண்மணி....

Go down

எங்களாலும் முடியும் தன்னம்பிக்கை பெண்மணி.... Empty எங்களாலும் முடியும் தன்னம்பிக்கை பெண்மணி....

Post by மஞ்சுபாஷிணி Sat Apr 02, 2011 11:24 pm

திருநங்கைகள் என்றாலே அறுவெறுப்புடன் பயந்து ஒதுங்கிக்கொண்டிருந்தவர்களை கமகமக்கும பிரியாணியின் சுவையால் தன் பக்கம் ஈர்த்துக் கொண்டிருக்கிறார் திருநங்கை நூரி.
கோவை, ஊட்டி இதன் சுற்று வட்டாரங்களில் மட்டுமல்ல; மும்பை, கொல்கத்தா, ஆஜ்மீர், ஹைதராபாத் பகுதிகளிலும் நூரியின் பிரியாணி ரொம்பவும் பிரபலம். கோவை, ஊட்டிக்கு வெளியூரில் இருந்து வரும் அமைச்சர்கள், வி.வி.ஐ.பி.க்கள் எல்லோரும் நூரியின் பிரியாணி ருசிக்கு ரசிகர்கள்தான். பெரியப் பெரிய பார்ட்டி ஆர்டர்கள், கோயில் திருவிழாக்கள், கிடாவெட்டு விருந்துகள் என வருடம் பூராவும் பிஸியாக இருக்கிறார் நூரி.

கௌரவம் : ""எல்லோரையும் மாதிரிதான் எங்களையும் இறைவன் இரண்டு கைகளுடன் கால்களுடன் படைத்து இருக்கிறான். திறமையும், தன்னம்பிக்கையும் உழைக்கும் உறுதியும் இருந்தால் எந்த உயரத்தையும் எட்ட முடியும். எனது வழிகாட்டுதலில் இன்று கோவையில் பல திரு நங்கைகள் சமையல் கற்று தேர்ந்து கேன்டீன், சின்னச் சின்ன ஹோட்டல்கள் வைத்து கௌரவமாய் வாழ்கிறார்கள் '' என்கிறார் நூரி.

போராட்டம்: ""திரு நங்கைகளுக்கு ஏற்படும் வழக்கமான அவலங்கள், அலைகழிக்கும் சூழல்கள் எங்களையும் துரத்த என்னை மாதிரி சில பேருடன் மும்பை சென்றேன். அங்கு கடற்கரையில் குதிரைகள் வைத்து, வேடிக்கை காட்டிச் சம்பாதிப்பவர்களிடம் மாட்டிக்கொண்டோம். அவர்ள் பல தவறான வழிகளில் எங்களைப் பயன்படுத்தி சம்பாதித்தனர். எனக்க அந்த மாதிரியான வாழ்க்கையே பிடிக்கவில்லை. ஏன் நாமும் மனிதப்பிறவிகள்தானே! என்ன தவற செய்தோம்? பிச்சை எடுப்பதும் பாலியல் தொழிலில் ஈடுபடுவதும்... சே...சே...கூடவே கூடாது'' என்ற உறுதியுடன் அங்கிருந்து மிகவும் கஷ்டப்பட்டு தப்பி, மும்பையில் திரு நங்கைகளின் கோட்டை எனப்படும் பைக்களா சென்று அடைக்கலமானோம். அங்கு நாங்கள் கண்ணியமாக நடத்தப்பட்டோம். எங்களாலும் எதுவும் முடியும் என்று தன்னம்பிக்கை ஊட்டப்பட்டோம்'' என்று பழைய நினைவுகளில் மிதந்தார். நூரி.

பிரியாணி மாஸ்டர் : ""நாங்கள் தேவர்களால் ஆசீர்வதித்து பூமிக்கு அனுப்பப்ட்ட தெய்விகப் பிறவிகள். குழந்தைகளுக்குப் பெயர் சூட்டும் விழாக்கள், கடைத் திறப்பு விழாக்களில் நாங்கள் ஆடும் பதாய், குதாய் நடனங்கள் ராசியானது லட்சுமிகரமானது என்று கருதப்படுகிறது. இறந்தவர் சடங்குகளில் நாங்கள் வந்த பாடி, ஆடி அழுதால் அவர்கள் சொர்க்கத்துக்குப் போவார்கள் என்ற வட இந்தியர்களின் நம்பிக்கை. எங்களை வழிநடத்திய 90 வயதுக்கு மேலான திருநங்கைகள் எங்களுக்குப் பல கலைகளைக் கற்றுக் கொடுத்தார்கள். அங்குதான் நான் பிரியாணி மாஸ்டர் ஆனேன். தரமான பொருள்களைக் கொண்டு சரியான அளவில், மிகவும் கவனத்தோடு சமைப்பேன். உப்பு, காரம், எண்ணெய், மசாலா எதிலும் அளவு கூடவோ, குறையவோ கூடாது. இதை கவனத்தில் கொண்டாலே பிரியாணி கமகமதான்!''

நம்பிக்கை : "இருபது வருடங்கள் கழித்து சொந்த ஊரான கோவைக்கு வந்தோம். திருநங்கைகள் அமைப்புக்கு கோவை மாவட்டத்து தலைவியாக ஆனேன். திரு நங்கைகளைச் சந்தித்து கவுன்சிலிங் கொடுத்து, தெளிவு படுத்த கடுமையாகப் போராடினேன். பிறரிடம் கையேந்தியும், தவறான வழிகளில் சம்பாதித்தும் பழக்கப்பட்ட அவர்களைத் திசை திருப்ப நிறைய அவகாசம் பொறுமை தேவைப்பட்டது. இப்பொழுது நிறையப் பேர் வேகமாக முன்னேறி வருகிறார்கள். என்னால் இயன்றவரை நிறையப்பேருக்கு ரேஷன் கார்டு, குடியிருக்க வீடுகள், மருத்துவஉதவிகள், சலுகைகள் என பெற்றுத் தருகிறேன்.''

வெற்றி நிச்சயம் : ""எந்தக் குழந்தையும், நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே... அது நல்லவனாவதும், தீயவனாவதும் அன்னை வளர்ப்பதிலே.
திரு நங்கைகளும் இந்த மண்ணில் குழந்தைகள்தான். அவர்கள் தாய்மார்கள் அன்பான அரவணைப்பு தந்தால், அவர்களும் பண்பட்ட மனிதர்களாக உருவார்கள். இதைத் தான் நான் ஒரு தாயாக செய்ய ஆரம்பித்திருக்கிறேன். இதில் நிச்சயம் வெற்றி பெறுவேன்'' என்கிறார் தன்னம்பிக்கையுடன்.
- செய்தி. ஆர்.பாலா.


நன்றி மங்கையர் மலர்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

எங்களாலும் முடியும் தன்னம்பிக்கை பெண்மணி.... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics
» எங்களாலும் முடியும்
» தமிழ் இலக்கியத்தில் தன்னம்பிக்கை ! ஔவையின் ஆத்திசூடியில் தன்னம்பிக்கை ! கவிஞர் இரா. இரவி !
» முடியும்..முடியும்..நதிகளை இணைக்க முடியும்!
» உன்னால் முடியும்: ஒரு திரைப்பாடல் கொடுத்த தன்னம்பிக்கை
» தமிழ் இலக்கியத்தில் தன்னம்பிக்கை ! ஔவையின் ஆத்திசூடியில் தன்னம்பிக்கை ! கவிஞர் இரா. இரவி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum