ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரும்பி வருவதெப்போ? (கவிதை)

2 posters

Go down

திரும்பி வருவதெப்போ? (கவிதை) Empty திரும்பி வருவதெப்போ? (கவிதை)

Post by kirikasan Fri Mar 25, 2011 12:06 pm

நண்பர் ஒருவர் துணைவியாரை இழந்து இரு வருடமாகிவிட்டது. அவரின் நினைவு நாள் வந்தபோது நண்பரின் உணர்வு எப்பட்டியிருக்கும் எனவெண்ணி எழுதினேன். அவர் சொல்வதுபோல....


தாயே நீயும் சென்றது எங்கே
தனியே சென்றாய் தகுமோஇன்னும்
மாய உலகில் மனிதர் விலங்கும்
மன்னவ ராட்சி கொடுங்கோ லென்றும்
பொய்யாம் உலகில் பித்தல் ஆட்டம்
பெரிதோர் துன்பம் பேசவு மிழிய
தீய வினையும் தீமை பொலிந்து
தோன்றும் வாழ்வு திகட்டியதாலோ

வானிற் சென்றே வையகம் வேண்டா
வானவர் உலகில் வாழுவனென்று
வேனிற்பருவம் வெய்யில் காய்ந்து
வீழும் மழையும் எழுகுளிர் பனியும்
ஆனைப் பிளிறல் அதுவிட முழங்கி
அசையும் மேகத் தடபுட லிடியும்
தாளம்போடும் மழைநீர்த் துளியும்
தாங்கி விண்ணிடை தூங்கினைதானோ?

மாசறு பொன்னாய் மண்ணில் ஒளிர்ந்தே
மனதில் மலராய் மகிழ்வுற வாழ்ந்தீர்
பேசவுமரிய பேறெனும் வாழ்வில்
பிரிவோமென்று புரியாதிருந்தோம்
ஆசை பாசம் அகத்தே இருந்தும்
அன்பெனும் மக்கள்அருகில் கொள்ளா
ஓசையுமின்றி உருவவுமின்றி
ஒருநாள் எம்மைப் பிரிந்ததுமேனோ?

வாசல் கதவைப் பிள்ளைகள் பார்த்து
வருவா அம்மாவழியே என்று
நேசம் கொண்டு நித்திரை யிழந்து
நிம்மதி தானும் முற்றும் துறந்து
பேச மறந்து பிணியாய் வாடி
பின்னரும் காணப் பேதமை கொண்டு
வாசமிழந்த பூவென்றாகி
வண்ணம் கெட்டு வலிமைதேய்ந்து

தேடியிருந்தும் திரும்பா வண்ணம்
தேவியே உன்னைத் தெய்வம் மறித்து
வாடிக் கதற வைத்ததும் ஏனோ?
வரும்வழி தெரியா கலங்கினைதானோ
கண்கள் காணுது காட்சிகள் இல்லை
காலும் நடக்குது போவதுஇல்லை
எண்ணம் இருக்குது இனிமை யில்லை
ஏதோநடக்குது புரிவதும் இல்லை

நீயேயில்லா வாழ்வும் கசந்து
நெஞ்சம் இறுகி நினைவு திரிந்து
காயும் உணர்வும் வேகும் தணலாய்
விளைவே யற்ற வெற்றுநி லம்போல்
வாழ்வில் பசுமை விட்ட வராக
வாழும் எம்மை வளமென் றாக்க
பெய்யும் மழையாய் பேறுடைதாயே
பூமிதிரும்பிப் புதிதாய் பிறப்பீர்

வானமிருந்து வெளியில் இறங்கி
வாழ்விலெமைச் சேர்வீர் என்றே
தேனென வாழ்வில் தித்திப் பாக
திரும்பியே வாழ்வு தினமும் பொலிய
சேயாய் என்றோ சிரிக்கும்மழலைப்
பூவாய் வந்து புதிதாய் பிறந்து
பொய்யா வாழ்வில் பெரிதோர் மகிழ்வை
செய்வீரென்றே தொழுதே கேட்டோம்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

திரும்பி வருவதெப்போ? (கவிதை) Empty Re: திரும்பி வருவதெப்போ? (கவிதை)

Post by முரளிராஜா Fri Mar 25, 2011 12:09 pm

கவிதை அருமை
பாராட்டுக்கள்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

திரும்பி வருவதெப்போ? (கவிதை) Empty Re: திரும்பி வருவதெப்போ? (கவிதை)

Post by kirikasan Fri Mar 25, 2011 12:14 pm

இதுவும் அப்படியே!!

செந்தமிழ் நாவில்படிக்க எழுந்திட
தீபமணைந்ததுமேன்?
வந்துமலர்களும் தூவி வணங்கிட
தெய்வம் மறைந்ததுமேன்?
கண்கள் கலைநடம் காணவிழைந்திட
காட்சி கலைந்ததுமேன்?
பெண்கள் உலவிடும் பேரரும்பூமியில்
பேழையுள் தூங்கியதேன்?

திங்களுலாவர தெள்ளிடை வானிலே
தேடி மறைத்து யார்
தீபம் ஒளிர்ந்திட மெல்லிய இரவில்
தென்றலணைத்தும் ஏன்
கங்குல் எழுந்துகதிர்வரும் வேளையி
காரிருள் மூடியதேன்
காவலன் வாழ்க்கையை பாத்திருக்க
கனவாகி மறைந்ததும் ஏன்

அன்னை அருகினில் நின்றிருந்தாயின்று
ஆதரவற்றதுமேஎன்
தன்னியிழந்திட நாயகனைவிடத்
தாங்காஅழுவதும் காண்
பின்னைஇருந்திட்ட பாவமும் ஏததை
பேசரும் பாவையே சொல்
கண்ணை யிழந்துமே காட்டினில் நின்றோமே,
காரணம் ஏனது? ஏன்?

சிந்தை உலாவிடும் எந்தநல் லோகமும்
சென்றனை சொல்சொல்சொல்!
முந்திவிழுந்து பயணமெடுத்தும்
ஏனென சொல்சொல்சொல்
தந்தையும் மக்கள் தவித்திடசென்றனை
தாங்குமோநெஞ்சமும்சொல்
விந்தைகள் என்றுமே வீடுதிரும்பிடு
வேதனை கொல் நீகொல்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

திரும்பி வருவதெப்போ? (கவிதை) Empty Re: திரும்பி வருவதெப்போ? (கவிதை)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum