ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாதிக்பாட்சா இறந்தது எப்படி? பிரேத பரிசோதனை டாக்டர் பரபரப்பு பேட்டி

Go down

சாதிக்பாட்சா இறந்தது எப்படி? பிரேத பரிசோதனை டாக்டர் பரபரப்பு பேட்டி Empty சாதிக்பாட்சா இறந்தது எப்படி? பிரேத பரிசோதனை டாக்டர் பரபரப்பு பேட்டி

Post by சிவா Fri Mar 18, 2011 7:27 am

சாதிக்பாட்சா இறந்தது எப்படி? பிரேத பரிசோதனை டாக்டர் பரபரப்பு பேட்டி 4b8a88a1-395c-427b-aa91-fa40b2bf3fd6_S_secvpf

சாதிக்பாட்சா இறந்தது எப்படி? பிரேத பரிசோதனை டாக்டர் பரபரப்பு பேட்டி: கழுத்து இறுக்கப்பட்டு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது


சென்னை, மார்ச்.18- `ஸ்பெக்ட்ரம்' வழக்கில் சிக்கிய ரியல் எஸ்டேட் அதிபர் சாதிக்பாட்சா இறந்தது எப்படி? என்பது குறித்து பிரேத பரிசோதனை செய்த டாக்டர் பரபரப்பான தகவல்களை வெளியிட்டார்.

உடல் பிரேத பரிசோதனை

சென்னை தேனாம்பேட்டை, எல்லையம்மன் காலனி 5-வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் சாதிக்பாட்சா (வயது 37). ரியல் எஸ்டேட் அதிபரான இவர், முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசாவின் நெருக்கமான நண்பர் ஆவார். 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கடந்த டிசம்பர் மாதம் ஆ.ராசாவின் வீட்டில் சோதனை நடந்தபோது, சாதிக்பாட்சாவின் வீட்டிலும் சி.பி.ஐ. போலீசார் சோதனை நடத்தினார்கள். அதன்பிறகு பலமுறை சாதிக்பாட்சாவை அழைத்து சி.பி.ஐ. போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

இந்தநிலையில், சாதிக்பாட்சா நேற்று முன்தினம் தனது வீட்டின் படுக்கை அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெக்ட்ரம் வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ. போலீசாரே, சாதிக்பாட்சாவின் தற்கொலை மரணம் குறித்தும் விசாரணை நடத்துவார்கள் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. முதல்கட்டமாக தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

3 டாக்டர்கள்

சாதிக்பாட்சாவின் உடல் பிரேத பரிசோதனை சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நேற்று நடந்தது. ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் பிரேத பரிசோதனை டாக்டர் டெக்கால், டாக்டர் யோகலட்சுமி, அரசு பொதுமருத்துவமனையின் தடய அறிவியல் நிபுணர் டாக்டர் சாந்தகுமார் ஆகியோர் அடங்கிய டாக்டர் குழுவினர் சாதிக்பாட்சாவின் உடலை பிரேத பரிசோதனை செய்தார்கள்.

மைலாப்பூர் துணை கமிஷனர் ராஜேந்திரன், உதவி போலீஸ் கமிஷனர்கள் ரெங்கராஜன், நந்தகுமார், ராயப்பேட்டை இன்ஸ்பெக்டர் கந்தவேலு மற்றும் ஏராளமான போலீசார் ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் குவிக்கப்பட்டிருந்தனர். பிரேத பரிசோதனை செய்வதை வீடியோ படமும் எடுத்தார்கள். சுமார் 3 மணி நேரம் பிரேத பரிசோதனை நடந்தது. ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் ஏராளமான பத்திரிகையாளர்களும், புகைப்படக்காரர்களும் கூடியிருந்தனர். சாதிக்பாட்சாவின் உறவினர்களும், நண்பர்களும் ஏராளமானோர் திரண்டு வந்திருந்தனர்.

இறந்தது எப்படி?

பிற்பகல் 1.30 மணிக்கு பிரேத பரிசோதனை முடிந்தவுடன் டாக்டர் டெக்கால், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். சாதிக்பாட்சா இறந்தது எப்படி? என்பது குறித்து நிருபர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதில் அளித்து டெக்கால் கூறியதாவது:-

சாதாரணமாக தற்கொலை வழக்கில் ஒரு மணி நேரத்தில் பிரேத பரிசோதனையை முடித்துவிடுவோம். கொலை வழக்கில்தான் பிரேத பரிசோதனை 2 மணி நேரம் நடக்கும். இந்த வழக்கை பொருத்தமட்டில் முக்கியமான வழக்கு என்பதால் 3 மணி நேரம் பிரேத பரிசோதனை நடத்தினோம். 3 டாக்டர்கள் கொண்ட குழுவினர்தான் பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் என்று மருத்துவ துறை இயக்குனர் கூறிவிட்டதால், மற்ற 2 டாக்டர்களும் வருவதற்கு கொஞ்ச காலதாமதம் ஏற்பட்டது.

மூச்சு திணறி இறந்துள்ளார்

சாதிக்பாட்சா கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் மூச்சு திணறி இறந்திருக்கலாம் என்று கருதுகிறோம். கழுத்து இறுக்கப்பட்டது, தூக்கில் தொங்கியதால் நடந்ததா என்பதை கண்டறிய வேண்டியதுள்ளது. அதோடு கழுத்து இறுக்கப்பட்டது இறப்பதற்கு முன்பாக நடந்ததா? அல்லது இறந்த பிறகு நடந்ததா? என்பதையும் துல்லியமாக கண்டுபிடிக்க வேண்டியதுள்ளது.

இதனால் கழுத்து இறுக்கப்பட்ட பகுதியில் உள்ள தோள் பகுதியை ரசாயன பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளோம். சாதிக்பாட்சாவின் மரணம், அவரது உடல் பரிசோதனை கூடத்துக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்பு 12 மணி நேரத்துக்குள் நடந்திருக்கலாம் என்று கருதுகிறோம். அவருடைய உடல் பகுதியில் இருந்து குடல், கல்லீரல், சிறுநீரகம், மூளையின் ஒரு பகுதி மற்றும் ரத்தம் ஆகியவற்றையும் பரிசோதனைக்கு அனுப்பி உள்ளோம்.

காயம் இல்லை

அவர் குடல் பகுதியை ஆய்வு செய்தபோது பாதி செரிமானம் ஆன நிலையில் உணவு இருந்தது. அந்த உணவில் விஷம் எதுவும் கலந்ததாக தெரியவில்லை. இருந்தாலும் அவர் சாப்பிட்ட உணவு பற்றியும் சோதனை நடத்தப்படுகிறது. சாதிக்பாட்சாவின் கழுத்து இறுக்கப்பட்ட இடத்தை தவிர, மற்ற இடங்களில் உள்காயமோ, வெளிக்காயமோ இல்லை. சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள கழுத்து தோள் பகுதியின் ஆய்வு முடிவுகள் இன்னும் 10 நாட்களில் வரலாம். அதன்பிறகு அவருடைய இறப்பிற்கு உண்மையான காரணம் தெரியவரும்.

இவ்வாறு டாக்டர் டெக்கால் கூறினார்.

உறவினர்கள் மோதல்

முன்னதாக சாதிக்பாட்சாவின் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்கு மிகவும் தாமதமாகிறது என்றும், சீக்கிரமாக பிரேத பரிசோதனை செய்து உடலை ஒப்படைக்க வேண்டும் என்றும் சாதிக்பாட்சாவின் உறவினர்களும், நண்பர்களும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். செய்தி சேகரிக்க சென்றிருந்த பத்திரிகையாளர்களோடும் காரசாரமான வாக்குவாதம் செய்தனர். ரோடு மறியல் முயற்சியிலும் ஈடுபட்டனர். அதன்பிறகு சாதிக்பாட்சாவின் உடல் பிரேத பரிசோதனை விரைவாக முடிக்கப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உடலை ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றி சாதிக்பாட்சாவின் சொந்த ஊரான பெரம்பலூருக்கு எடுத்து சென்றனர்.

தினதந்தி


சாதிக்பாட்சா இறந்தது எப்படி? பிரேத பரிசோதனை டாக்டர் பரபரப்பு பேட்டி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» டாக்டர் இல்லாமல் துப்புரவு பணி தொழிலாளர்கள் செய்யும் பிரேத பரிசோதனை
» உயிரோடு இருந்தவரை `பிரேத பரிசோதனை'க்கு அனுப்பிய போலீசார்
» இந்திய சிறுமி ஷெரின் மேத்யூ கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகியே இறந்துள்ளார்: பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்
» ஓசூர் அருகே பரபரப்பு ஆஞ்சநேயர் சிலையின் மீது படமெடுத்து ஆடிய நாகம்: பக்தர் இழுத்ததில் தலை துண்டாகி இறந்தது
» நடிகர் வடிவேல் பாலாஜி திடீரென இறந்தது எப்படி?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum