Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை
2 posters
Page 1 of 1
கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை
இறைவனுக்கு தீபாராதனை காட்டும் போது மணியும் சேர்ந்து ஒலிப்பதால் தெய்வீக உணர்வில் மனம் பரவசப்படுகிறது. வீட்டில் பூஜை அறையில் கூட, பெரியவர் மணி அடித்து பூஜை செய்கிறார். அப்போதுதான் பூஜையில் ஒரு நிறைவை அவர் உள்ளம் உணர்கிறது. இல்லத்தரசி வெள்ளிக்கிழமைகளில் ஒரு கையில் கற்பூரத் தட்டையோ, சாம்பிராணி தூபக் காலையோ எந்திக் கொண்டு மறு கையால் சிறு மணியை அடித்தபடியே வீடெல்லாம் வலம் வந்து, அங்கங்கே தீப தூபம் காட்டுகிறாள். இந்துக்கள் வீடுகளில் மட்டுமே பொலியும் தனி ஒலி, மணி ஒலி!
கோயில்களில் காலை சந்தி, உச்சிக் காலம், சாயரட்சை, அர்த்தஜாமம் என்று ஒவ்வொரு வேளை பூஜையின்போதும் "டாண்... டாண்' என்று மணி ஒலித்து, கோபுரத்தில் எதிரொலித்து, ஊருக்கெல்லாம் ஆராதனையை அறிவிக்கிறது.
சீனாவில் கிடைத்த மணி ஒன்று கி.மு.2600ல் செய்யப்பட்டது என்று கண்டறிந்திருக்கிறார்கள். ஆலய மணி தயாரிக்கும் கலை அவ்வளவு தொன்மைக் காலத்திலேயே இருந்து வந்திருக்கிறது.
இன்றைக்கு பலவிதமான மணிகளைப் பல இடங்களில் பார்க்கிறோம். பள்ளிக்கூட தொடக்கம், முடிவு இரண்டையும் அறிவிக்க மணிச் சத்தம், ரயில் வரப்போவதைத் தெரிவிக்க மணிச்சத்தம், ஆபீஸில் அதிகாரி பியூனை அழைக்கவும், ஓட்டல் முதலாளி சர்வரை அழைக்கவும் மேஜை மேல் மணி வைத்திருக்கிறார். தேவாலயங்களிலும் தெருக்கோயில்களிலும் மணி. காடு வனாந்தரங்களில் மேயும் மாடுகளின் கழுத்தில் மணி. பல காரணங்களை முன்னிட்டு பல இடங்களில் மணியடிக்கிறார்கள்.
ஆராதனை முடிந்ததும் தாங்கள் வழிப்பட்டதை தேவதைகள் உணர்வதற்காக பௌத்தர்கள் மணியடிக்கிறார்கள். இந்துக்கள் தங்கள் ஆலயத்தின் கதவுகளில் மணிகளைப் பொருத்தியிருப்பார்கள்.
முற்காலத்தில் பல உலோகத் துண்டுகளை ஒன்றாக்கித்தான் மணிகளைச் செய்தார்கள். ஆனால், ஒரே வகையான முழு எஃகு இரும்பைக் கொண்டு அமைத்த மணிதான் நல்ல நாதத்தை எழுப்பும் என்பதைப் பின்னர் அவர்கள் அறிய வந்தனர்.
மணியை எப்படித் தயாரிக்கிறார்கள்?
முதலாவதாக மணியைச் செய்ய ஆரம்பிக்குமுன், இரண்டு அச்சுகளைத் தயாரிப்பார்கள். ஓர் அச்சை மணியின் வெறிப்புறத்துக்கும், இன்னோர் அச்சை மணியின் உட்புறத்துக்குமாக தயாரித்துக் கொள்வார்கள். இவற்றைச் செய்வதற்கு பசுவின் ரோமமும் மணலும் பயன்படுத்தினார்கள்.
அச்சுகள் இறுகிய பின், உருக்கிய உலோகக்குழம்பை அவற்றிடையே வார்த்ததும் தயாரிப்பு வேலை முடிந்ததுபோலத்தான். மணியைத் தயாரிக்கும்போது அவசரம் கூடாது. அவசரப்பட்டால் அதன் அழகும் நாதத்தின் இனிமையும் கெடும். மணி பிளந்து போனால் அதைத் துண்டு போட்டு சேர்க்க முடியாது. முழு உலோகத்தையுமேதான் மறுபடியும் உருக்கி அச்சில் வார்க்க வேண்டும்.
பித்தளை, தகரம் இவற்றால் பெரிய மணிகளையும்; துத்தநாகம், ஈயம் இவற்றால் சிறிய மணிகளையும் செய்வதுண்டு.
சுமாரான உருவைக் கொண்ட ஒரு மணியைத் தயாரிக்க ஏறக்குறைய ஒரு மாத காலம் ஆகும்.
சில மணிகள் உலகப்புகழ்பெற்றிருக்கின்றன. 1875ஆம் ஆண்டு அமெரிக்கக் கப்பல்படைத் தலைவர் ஒருவர், ஜப்பானிலுள்ள ஓரிடத்திற்குச் சென்றபோது, பாழடைந்த ஒரு ஜப்பானியக் கோயிலை அடைந்தார். ஜப்பானிய மொழியில் ஏதோ வாசகம் பொறித்திருந்த ஒரு மணி அங்கே இருந்தது. அதை அவர் அமெரிக்காவிற்க எடுத்துச் சென்று ராணுவப் பயிற்சிப் பள்ளியில் உள்ள ஒரு நண்பருக்கு பரிசளித்தார்.
அந்த நண்பர் எப்போதாவது கால்பந்து விளையாடுவதானால், ஒவ்வொரு வெற்றிக்கும் அறிகுறியாக அந்த மணியை அடிப்பாராம்.
ஜப்பானிய மாணவன் ஒருவன், அமெரிக்காவிற்குப் பயிற்சி பெறச் சென்றிருந்தபோது, அதில் பொறித்திருந்த வாசகத்தை மொழி பெயர்த்துச் சொன்னான்:
""கோயில் கோபுரத்தில் இந்த அழகான மணியைத் தொங்கவிட்டிருக்கிறோம். ஒவ்வொருவனும் நேர்மையும் கருணையும் உள்ள வழியில் நடக்க முனைந்தால், ஆட்சியாளர்கள் நீதியையே வழங்கினால், காட்டுமிராண்டிகள் நம் நாட்டைத் தாக்க நெருங்க மாட்டார்கள்.''
ரஷ்யாவில் செய்த ஒரு மணிதான் உலகிலேயே மிகப்பெரியது. உலக அதிசயங்களுள் ஒன்றாக விளங்குவது. அதன் எடை 180 டன். தூக்கி மாட்டவோ, அடிக்கவோ அது பயன்படவில்லை. அதை அச்சில் வார்த்தபோதே பிளந்துவிட்டது. இப்போது அந்த மணியை ஒரு மேடை மீது ஏற்றி வைத்திருக்கிறார்கள். மணியில் ஏற்பட்டிருக்கும் பிளவின் வழியாக இரண்டு பேர் ஓரே சமயத்தில் உள்ளே நுழையலாம்.
1752-ம் வருடம் அமெரிக்காவில் சுதந்திரத்தை நினைவூட்டும் மணியை உருவாக்கினார்கள். முதல்முறை அதை அடித்தபோதே அது பிளந்துவிட்டது. பின்னர் அதை பழுது பார்த்து, அடித்தபோது நாதம் கணீரென்று இல்லை. "டாண்' என்று கம்பீரமாக ஒலிக்காமல், "டாஞ்ங்நுஞிநு...' என்கிற மாதிரி ஏதோ அழுது வடிந்தது. மூன்றாம் முறையாக அதை இனிமையாக ஒலித்தது. ""நாட்டின் பல பாகங்களிலும் உள்ள மக்களுக்கும் சுதந்திரத்தைப் பரப்புவாயாக'' என்ற சொற்களை அதன்மீது பொறித்தார்கள். ஆறரை டன் எடையுள்ள அதை சுதந்திர மண்டபத்தின் மீது வைத்தார்கள்.
போர்க் காலங்களில் வெற்றியின் போதும், ஜனாதிபதிகளின் இறுதி ஊர்வலத்தின் போதும் இந்த மணியை அடிப்பது ஒரு மரபு!
நம் நாட்டில் கிராமப்புற மக்கள் கடவுளுக்கு நேர்ந்து கொள்ளும்போது, "காரியம் நல்லபடி நடந்தேறினால் கோயிலுக்கு மணி கட்டுகிறேன்' என்று வேண்டிக்கொள்வார்கள். அவ்வாறே மணி கட்டுவார்கள். சில உள்ளூர் வணிகர்கள் கோயிலுக்கு பெரிய வெண்கல மணி ஒன்றை உபயமாக வழங்கி விட்டு, மணி மீத பெரிதாக "உபயம் : உத்திராபதி' என்று எழுதிவிடுவார்கள். மணி அடிப்பவர் அந்தப்பெயரைப் பார்த்த கோபத்தில் ஓங்கி ஒங்கி அடிக்க, மணியோசை கன கம்பீரமாக தன் நாதத்தைக் காற்றில் பரப்புகிறது.!
-ஆர்.சி.சம்பத்
கோயில்களில் காலை சந்தி, உச்சிக் காலம், சாயரட்சை, அர்த்தஜாமம் என்று ஒவ்வொரு வேளை பூஜையின்போதும் "டாண்... டாண்' என்று மணி ஒலித்து, கோபுரத்தில் எதிரொலித்து, ஊருக்கெல்லாம் ஆராதனையை அறிவிக்கிறது.
சீனாவில் கிடைத்த மணி ஒன்று கி.மு.2600ல் செய்யப்பட்டது என்று கண்டறிந்திருக்கிறார்கள். ஆலய மணி தயாரிக்கும் கலை அவ்வளவு தொன்மைக் காலத்திலேயே இருந்து வந்திருக்கிறது.
இன்றைக்கு பலவிதமான மணிகளைப் பல இடங்களில் பார்க்கிறோம். பள்ளிக்கூட தொடக்கம், முடிவு இரண்டையும் அறிவிக்க மணிச் சத்தம், ரயில் வரப்போவதைத் தெரிவிக்க மணிச்சத்தம், ஆபீஸில் அதிகாரி பியூனை அழைக்கவும், ஓட்டல் முதலாளி சர்வரை அழைக்கவும் மேஜை மேல் மணி வைத்திருக்கிறார். தேவாலயங்களிலும் தெருக்கோயில்களிலும் மணி. காடு வனாந்தரங்களில் மேயும் மாடுகளின் கழுத்தில் மணி. பல காரணங்களை முன்னிட்டு பல இடங்களில் மணியடிக்கிறார்கள்.
ஆராதனை முடிந்ததும் தாங்கள் வழிப்பட்டதை தேவதைகள் உணர்வதற்காக பௌத்தர்கள் மணியடிக்கிறார்கள். இந்துக்கள் தங்கள் ஆலயத்தின் கதவுகளில் மணிகளைப் பொருத்தியிருப்பார்கள்.
முற்காலத்தில் பல உலோகத் துண்டுகளை ஒன்றாக்கித்தான் மணிகளைச் செய்தார்கள். ஆனால், ஒரே வகையான முழு எஃகு இரும்பைக் கொண்டு அமைத்த மணிதான் நல்ல நாதத்தை எழுப்பும் என்பதைப் பின்னர் அவர்கள் அறிய வந்தனர்.
மணியை எப்படித் தயாரிக்கிறார்கள்?
முதலாவதாக மணியைச் செய்ய ஆரம்பிக்குமுன், இரண்டு அச்சுகளைத் தயாரிப்பார்கள். ஓர் அச்சை மணியின் வெறிப்புறத்துக்கும், இன்னோர் அச்சை மணியின் உட்புறத்துக்குமாக தயாரித்துக் கொள்வார்கள். இவற்றைச் செய்வதற்கு பசுவின் ரோமமும் மணலும் பயன்படுத்தினார்கள்.
அச்சுகள் இறுகிய பின், உருக்கிய உலோகக்குழம்பை அவற்றிடையே வார்த்ததும் தயாரிப்பு வேலை முடிந்ததுபோலத்தான். மணியைத் தயாரிக்கும்போது அவசரம் கூடாது. அவசரப்பட்டால் அதன் அழகும் நாதத்தின் இனிமையும் கெடும். மணி பிளந்து போனால் அதைத் துண்டு போட்டு சேர்க்க முடியாது. முழு உலோகத்தையுமேதான் மறுபடியும் உருக்கி அச்சில் வார்க்க வேண்டும்.
பித்தளை, தகரம் இவற்றால் பெரிய மணிகளையும்; துத்தநாகம், ஈயம் இவற்றால் சிறிய மணிகளையும் செய்வதுண்டு.
சுமாரான உருவைக் கொண்ட ஒரு மணியைத் தயாரிக்க ஏறக்குறைய ஒரு மாத காலம் ஆகும்.
சில மணிகள் உலகப்புகழ்பெற்றிருக்கின்றன. 1875ஆம் ஆண்டு அமெரிக்கக் கப்பல்படைத் தலைவர் ஒருவர், ஜப்பானிலுள்ள ஓரிடத்திற்குச் சென்றபோது, பாழடைந்த ஒரு ஜப்பானியக் கோயிலை அடைந்தார். ஜப்பானிய மொழியில் ஏதோ வாசகம் பொறித்திருந்த ஒரு மணி அங்கே இருந்தது. அதை அவர் அமெரிக்காவிற்க எடுத்துச் சென்று ராணுவப் பயிற்சிப் பள்ளியில் உள்ள ஒரு நண்பருக்கு பரிசளித்தார்.
அந்த நண்பர் எப்போதாவது கால்பந்து விளையாடுவதானால், ஒவ்வொரு வெற்றிக்கும் அறிகுறியாக அந்த மணியை அடிப்பாராம்.
ஜப்பானிய மாணவன் ஒருவன், அமெரிக்காவிற்குப் பயிற்சி பெறச் சென்றிருந்தபோது, அதில் பொறித்திருந்த வாசகத்தை மொழி பெயர்த்துச் சொன்னான்:
""கோயில் கோபுரத்தில் இந்த அழகான மணியைத் தொங்கவிட்டிருக்கிறோம். ஒவ்வொருவனும் நேர்மையும் கருணையும் உள்ள வழியில் நடக்க முனைந்தால், ஆட்சியாளர்கள் நீதியையே வழங்கினால், காட்டுமிராண்டிகள் நம் நாட்டைத் தாக்க நெருங்க மாட்டார்கள்.''
ரஷ்யாவில் செய்த ஒரு மணிதான் உலகிலேயே மிகப்பெரியது. உலக அதிசயங்களுள் ஒன்றாக விளங்குவது. அதன் எடை 180 டன். தூக்கி மாட்டவோ, அடிக்கவோ அது பயன்படவில்லை. அதை அச்சில் வார்த்தபோதே பிளந்துவிட்டது. இப்போது அந்த மணியை ஒரு மேடை மீது ஏற்றி வைத்திருக்கிறார்கள். மணியில் ஏற்பட்டிருக்கும் பிளவின் வழியாக இரண்டு பேர் ஓரே சமயத்தில் உள்ளே நுழையலாம்.
1752-ம் வருடம் அமெரிக்காவில் சுதந்திரத்தை நினைவூட்டும் மணியை உருவாக்கினார்கள். முதல்முறை அதை அடித்தபோதே அது பிளந்துவிட்டது. பின்னர் அதை பழுது பார்த்து, அடித்தபோது நாதம் கணீரென்று இல்லை. "டாண்' என்று கம்பீரமாக ஒலிக்காமல், "டாஞ்ங்நுஞிநு...' என்கிற மாதிரி ஏதோ அழுது வடிந்தது. மூன்றாம் முறையாக அதை இனிமையாக ஒலித்தது. ""நாட்டின் பல பாகங்களிலும் உள்ள மக்களுக்கும் சுதந்திரத்தைப் பரப்புவாயாக'' என்ற சொற்களை அதன்மீது பொறித்தார்கள். ஆறரை டன் எடையுள்ள அதை சுதந்திர மண்டபத்தின் மீது வைத்தார்கள்.
போர்க் காலங்களில் வெற்றியின் போதும், ஜனாதிபதிகளின் இறுதி ஊர்வலத்தின் போதும் இந்த மணியை அடிப்பது ஒரு மரபு!
நம் நாட்டில் கிராமப்புற மக்கள் கடவுளுக்கு நேர்ந்து கொள்ளும்போது, "காரியம் நல்லபடி நடந்தேறினால் கோயிலுக்கு மணி கட்டுகிறேன்' என்று வேண்டிக்கொள்வார்கள். அவ்வாறே மணி கட்டுவார்கள். சில உள்ளூர் வணிகர்கள் கோயிலுக்கு பெரிய வெண்கல மணி ஒன்றை உபயமாக வழங்கி விட்டு, மணி மீத பெரிதாக "உபயம் : உத்திராபதி' என்று எழுதிவிடுவார்கள். மணி அடிப்பவர் அந்தப்பெயரைப் பார்த்த கோபத்தில் ஓங்கி ஒங்கி அடிக்க, மணியோசை கன கம்பீரமாக தன் நாதத்தைக் காற்றில் பரப்புகிறது.!
-ஆர்.சி.சம்பத்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை
கோயில் மணியில இவ்வளவு விசயம் இருக்கா?
பகிர்வுக்கு நன்றி சிவா![கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
பகிர்வுக்கு நன்றி சிவா
![கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தெய்வ அருள் இருந்தால்…
» தெய்வ பக்தி ஏற்பட...
» தெய்வ அருளைப் பெற...
» குல தெய்வ வழிபாடு
» தெய்வ தரிசனத்தின் பலன்!
» தெய்வ பக்தி ஏற்பட...
» தெய்வ அருளைப் பெற...
» குல தெய்வ வழிபாடு
» தெய்வ தரிசனத்தின் பலன்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|