ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பைபிள் மலாய் பதிப்பை விடுவியுங்கள், சரவாக் பாதிரியார் கூட்டமைப்பு கோரிக்கை

3 posters

Go down

பைபிள் மலாய் பதிப்பை விடுவியுங்கள், சரவாக் பாதிரியார் கூட்டமைப்பு கோரிக்கை  Empty பைபிள் மலாய் பதிப்பை விடுவியுங்கள், சரவாக் பாதிரியார் கூட்டமைப்பு கோரிக்கை

Post by சிவா Tue Mar 15, 2011 6:32 pm

கூச்சிங்கில் உள்துறை அமைச்சு தடுத்து வைத்துள்ள 30,000 பைபிள் பாஹாசா மலேசியா பிரதிகளை உடனடியாக விடுவிக்குமாறு சரவாக் பாதிரியார் கூட்டமைப்பு ஒன்று கோரிக்கை விடுத்துள்ளது.

“அந்த நூல்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளது, சரவாக்கில் உள்ள கிறிஸ்துவர்களின் சமயச் சுந்ததிரத்துக்கு ஏற்பட்டுள்ள அரசியலமைப்புக்கு முரணான தடை, அப்பட்டமான அத்துமீறல்,” என அந்த கூட்டமைப்பின் தலைவர் டாரோன் தான் கூறினார்.

அந்தப் பிரதிகள் இப்போது ஜாலான் சாத்தோக் கூச்சிங்கிலுள்ள உள்துறை அமைச்சு அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. அந்த பிரதிகளில் ‘அல்லாஹ்’ என்னும் சொல் இடம் பெற்றிருப்பதால் அவற்றை அதன் பெறுநர் வெளியில் எடுப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

கூச்சிங், மிரி, சிபு, பிந்துலு ஆகியவற்றின் பாதிரியார் அமைப்புக்களும் இபான் தேவாலாயங்களின் ஒருங்கிணைப்பு அமைப்பு ஒன்றும் அந்த கூட்டமைப்பில் அங்கம் பெற்றுள்ளன.

பைபிள் தடுத்து வைக்கப்பட்டிருப்பது மட்டும் தேவாலயங்கள் எதிர்நோக்கும் ஒரே ஒரு பிரச்னை அல்ல என்றும் தான் சொன்னார். அரசியலமைப்பு உத்தரவாதத்திற்கு பல கட்டுப்பாடுகளையும் அவை எதிர்நோக்கி வருகின்றன.

“சட்டத்திற்கு முன்பு எல்லா நபர்களும் சமம் என்றும் சமமான பாதுகாப்பைப் பெறுவதற்கு உரிமை உண்டு என்றும் சமயம், இன, வம்சாவளி, பிறந்த இடம், ஆண்-பெண் அடிப்படையில் எந்தச் சட்டத்திலும் வேறுபாடு காட்டப்படக் கூடாது என்றும் கூட்டரசு அரசியலமைப்பின் 8 வது விதி கூறுகிறது என தான் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு நபரும் தான் தேர்வு செய்யும் சமயத்தை பின்பற்றுவதற்கான உரிமையையும் 11வது விதி வழங்குவதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

“அத்துடன் மலேசியா உதயமானது தொடர்பில் சரவாக் கையெழுத்திட்ட 18 அம்ச ஒப்பந்தத்தில் சரவாக்கில் அதிகாரத்துவ சமயம் ஏதும் இல்லை எனத் தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ளது,” என்றார் அவர்.

“ஆகவே பைபிளைத் தடுத்து வைத்திருப்பது அரசியலமைப்புக்கு முரணானது மட்டுமல்ல. சரவாக்கிற்கான மலேசியா ஒப்பந்தத்தையும் மீறுகிறது.”

தேவாலயங்கள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளன. தங்களது சமயத்தைக் கிறிஸ்துவர்கள் பின்பற்றுவதில் ஏற்படும் பிரச்னைகள் குறித்து அவர்கள் கடும் ஆட்சேபத்தைப் பதிவு செய்கின்றனர் என்றும் தான் கூறினார்.

அரசியலமைப்பில் குறிக்கப்பட்டுள்ளவாறு சரவாக்கில் உள்ள கிறிஸ்துவ சமூகத்தின் உரிமைகளை விவேகத்துடன் நிலை நிறுத்துமாறு அவர் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டார்.

‘சம உரிமை கொண்ட பங்காளி’

பைபிளைத் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருப்பதின் மூலம் இந்த நாட்டில் சமயப் பதற்ற நிலை ஏதும் உருவானால் அதற்கு உள்துறை அமைச்சே பதில் சொல்ல வேண்டும் என தான் நினைவுபடுத்தினார்.

“எவ்வளவு விரைவில் அந்த வேத நூல்கள் விடுவிக்கப்படுகிறதோ அந்த அளவு நாட்டுக்கு நல்லது,” எனக் கூறிய அவர், ‘அல்லாஹ்’ என்னும் சொல்லைப் பயன்படுத்துவதற்கான தடை சரவாக்கிற்கு பொருந்தாது என்ற தமது கருத்தில் அவர் உறுதியாக இருந்தார்.

“சரவாக் என்பது ஒரு வட்டாரமாகும். அது மலேசிய மாநிலங்களில் ஒன்று அல்ல. நாங்கள் மலேசியாவை ஒரு மாநிலம் என்னும் முறையில் தோற்றுவிக்கவில்லை. மலேசியாவில் இணைந்த மலாயா, சிங்கப்பூர், சபா உட்பட நான்கு வட்டாரங்களில் ஒன்று சரவாக் ஆகும் என்பதை அமைச்சு நினைவில் கொள்ள வேண்டும்.”

“ஆகவே சரவாக் மலாயாவுக்கு அடிமை அல்ல. கூட்டரசில் சம உரிமை பெற்ற வட்டாரமாகும்.”

சரவாக் 2.6 மில்லியன் மக்கள் தொகையில் கிறிஸ்துவர்கள் 43 விழுக்காட்டினர் என்பதைச் சுட்டிக் காட்டிய தான், சரவாக்கிற்குள் கொண்டு வரப்படும் பாஹாசா மலேசியா பைபிள்கள் பறிமுதல் செய்யப்படுவதற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்றும் தான் விரும்புகிறார்.

சமயம் சம்பந்தமாக கூட்டரசு அரசாங்கத்துடன் நடத்தப்படும் எந்தக் கலந்துரையாடலிலும் சரவாக் பாதிரியார் கூட்டமைப்புக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இது நாள் வரை அரசாங்கம் நடத்தும் எந்தக் கலந்துரையாடலுக்கும் அந்த கூட்டமைப்பு அழைக்கப்படவில்லை.


பைபிள் மலாய் பதிப்பை விடுவியுங்கள், சரவாக் பாதிரியார் கூட்டமைப்பு கோரிக்கை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பைபிள் மலாய் பதிப்பை விடுவியுங்கள், சரவாக் பாதிரியார் கூட்டமைப்பு கோரிக்கை  Empty Re: பைபிள் மலாய் பதிப்பை விடுவியுங்கள், சரவாக் பாதிரியார் கூட்டமைப்பு கோரிக்கை

Post by சிவா Tue Mar 15, 2011 6:34 pm

மலாய்மொழி பைபிள்: இவ்வார அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்

மலாய் மொழி பைபிள் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை குறித்து அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று துணைப் பிரதமர் முகைதின் யாசின் கூறுகிறார்.

இழுபறியாகவுள்ள இப்பிரச்னைக்குத் தீர்வுகாணும் முயற்சியாக “இவ்வார அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிப்போம்”, என்றாரவர்.

நாடாளுமன்றக் கூட்டம் நடைபெறும்போது அமைச்சரவை வெள்ளிக்கிழமைகளில் கூடுகிறது.

2009-இலிருந்து, கிள்ளான் துறைமுகத்தில் ஐயாயிரம்‘அல்-கித்தாப்’பிரதிகளும் கூச்சிங் துறைமுகத்தில் 30,000 பிரதிகளும் பிடித்து வைக்கப்பட்டுள்ளன.

இந்தோனேசியாவில் அச்சடிக்கப்பட்ட அந்த பைபிள்கள் சாபா, சரவாக்கில் உள்ள கிறிஸ்துவர்கள் பயன்படுத்துவதற்காக தருவிக்கப்பட்டவை.

மலேசியா இன்று!


பைபிள் மலாய் பதிப்பை விடுவியுங்கள், சரவாக் பாதிரியார் கூட்டமைப்பு கோரிக்கை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பைபிள் மலாய் பதிப்பை விடுவியுங்கள், சரவாக் பாதிரியார் கூட்டமைப்பு கோரிக்கை  Empty Re: பைபிள் மலாய் பதிப்பை விடுவியுங்கள், சரவாக் பாதிரியார் கூட்டமைப்பு கோரிக்கை

Post by சிவசங்கர் Tue Mar 15, 2011 8:47 pm

"மலாய் பைபிள்களை விடுவிக்குமாறு அரசாங்கம் ஆணை"

தற்போது கிள்ளான் துறைமுகத்திலும் கூச்சிங் துறைமுகத்திலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாஹாசா மலேசியா பைபிள்களை விடுவிப்பதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

பிரதமர் துறை அமைச்சர் இட்ரிச் ஜாலா அந்தத் தகவலை இன்று வெளியிட்டார்.

“பாஹாசா மலேசியா பைபிள்களை வரம்புக்குட்பட்டு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இறக்குமதி செய்யப்படுவதற்கு அனுமதிக்கும் இசாவின் கீழ் வெளியிடப்பட்ட 1882ம் ஆண்டு அரசாங்கத் தகவல் ஏட்டில் அறிவிக்கப்பட்டுள்ளபடி அந்த நூல்கள் விடுவிக்கப்படுகிறது,” என அவர் இன்றிரவு வெளியிட்ட அறிக்கை கூறியது.

1982ம் ஆண்டு தொடக்கம் அமலில் இருந்து வரும் அந்தச் சட்டத்தின் கீழ் அந்த வேத நூல்கள் “கிறிஸ்துவர்களுக்கு மட்டும்” என்னும் முத்திரையைக் கொண்டிருக்க வேண்டும்.

“அந்தத் தகவல் ஏட்டைத் தொடர்ந்து 1982ம் ஆண்டு முதல் அதன் அமலாக்கத்தில் எந்தப் பிரச்னையும் இருந்தது இல்லை.”

“ஆகவே அரசாங்கம் அந்த அம்சத்தைக் கருத்தில் கொண்டு 1982ம் ஆண்டு அரசாங்கத் தகவல் ஏட்டை பயன்படுத்தி அந்த பைபிள்களை விடுவிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது,” என இட்ரிஸ் சொன்னார்.

“மிகவும் கவனமான முழுமையான ஆய்வுக்குப் பின்னர், பாஹாசா மலேசியா பைபிள்களை விடுவிப்பது தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் கலீமா அல்லாஹ் வழக்குக்கு குந்தகத்தை ஏற்படுத்தாது என சட்டத்துறைத் தலைவர் உறுதி செய்துள்ளார்.”

“அதன் அடிப்படையில் அந்த பைபிள்களை அரசாங்கம் விடுவிக்க முடிந்துள்ளது,” என்றும் இட்ரிஸ் குறிப்பிட்டார்.

இவ்விவகாரத்தில் தாம் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கியதாக தொடர்பு கொண்டபோது சட்டத்துறை தலைவர் அப்துல் கனி பட்டேயில் கூறினார்.

“பைபிள்களுக்கும் நடப்பில் இருக்கும் வழக்கிற்கும் ( ‘அல்லாஹ்’ என்ற சொல்லை ஹெரால்ட் பாவிப்பது பற்றியது) எவ்விதத் தொடர்பும் இல்லை என்று நான் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கினேன்.

“அது தனிப்பட்ட வழக்கு. பைபிள் திருக்கோயில் பிராத்னைக்குப் பயன்படுவதாகும். எனக்கு அது ஒரு விவகாரமல்ல”, என்று அப்துல் கனி மேலும் கூறினார்.

'மலேசியா இன்று'
சிவசங்கர்
சிவசங்கர்
பண்பாளர்


பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010

Back to top Go down

பைபிள் மலாய் பதிப்பை விடுவியுங்கள், சரவாக் பாதிரியார் கூட்டமைப்பு கோரிக்கை  Empty Re: பைபிள் மலாய் பதிப்பை விடுவியுங்கள், சரவாக் பாதிரியார் கூட்டமைப்பு கோரிக்கை

Post by மஞ்சுபாஷிணி Tue Mar 15, 2011 8:51 pm

தகவலுக்கு அன்பு நன்றிகள் சிவசங்கர்.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பைபிள் மலாய் பதிப்பை விடுவியுங்கள், சரவாக் பாதிரியார் கூட்டமைப்பு கோரிக்கை  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

பைபிள் மலாய் பதிப்பை விடுவியுங்கள், சரவாக் பாதிரியார் கூட்டமைப்பு கோரிக்கை  Empty Re: பைபிள் மலாய் பதிப்பை விடுவியுங்கள், சரவாக் பாதிரியார் கூட்டமைப்பு கோரிக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum