ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:43 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 3:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அ.தி.மு.க. ஆட்சி காலத்தை காட்டிலும் தி.மு.க. ஆட்சியில் உயர் கல்வித்துறையில் மகத்தான சாதனைகள்: கருணாநிதி பட்டியல்

3 posters

Go down

அ.தி.மு.க. ஆட்சி காலத்தை காட்டிலும் தி.மு.க. ஆட்சியில் உயர் கல்வித்துறையில் மகத்தான சாதனைகள்: கருணாநிதி பட்டியல் Empty அ.தி.மு.க. ஆட்சி காலத்தை காட்டிலும் தி.மு.க. ஆட்சியில் உயர் கல்வித்துறையில் மகத்தான சாதனைகள்: கருணாநிதி பட்டியல்

Post by சிவா Mon Mar 07, 2011 11:52 am




அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தை காட்டிலும் தி.மு.க. ஆட்சிக்காலத்தில் உயர் கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள மகத்தான சாதனை விவரங்களை கருணாநிதி பட்டியல் இட்டுள்ளார்.


இது குறித்து முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கல்வித்துறையில் சாதனை

கல்வித் துறையில் தி.மு.க. ஆட்சி கடந்த ஐந்தாண்டு காலத்தில் நிறைவேற்றிய சாதனைகள் - திட்டங்களின் தொடர்ச்சியினை எழுதுகிறேன். அரசு சார்பில் புதிய பல்கலைக்கழகங்கள் பொறியியல் கல்லூரிகளின் செயல் திறனை மேம்படுத்திடும் நோக்கில் திருச்சி, கோவை, நெல்லை, மதுரை, சென்னை ஆகிய இடங்களில் ஐந்து அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன. அவற்றுடன் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மத்தியஅரசின் பல்கலைக் கழகங்கள் ஒன்றுகூட இல்லாத நிலையை எடுத்துக்கூறி வலியுறுத்திய இந்த அரசின் சீரிய முயற்சிகளின் பயனாக திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டுள்ளது.

திருச்சியில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனம் தொடங்கப்பட மத்திய அரசு அனுமதி வழங்கி; அதற்குத் தேவையான நிலத்தை தமிழக அரசு வழங்கி; தற்போது இந்திய மேலாண்மை கல்வி நிறுவனம் திருச்சியில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

2001-2006 ஐந்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் ஆண்டிப்பட்டி, சாத்தான்குளம், கூடலூர் ஆகிய மூன்று இடங்களில் மட்டுமே புதிய அரசு கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. ஆனால், 2006-2011 ஐந்தாண்டு கால கழக அரசு மேட்டூர், வால்பாறை, பெரம்பலூர், ஒரத்தநாடு, சுரண்டை, குளித்தலை, லால்குடி, புதுக்கோட்டை, தேனி, திருவண்ணாமலை, விழுப்புரம், பெண்ணாகரம் ஆகிய 12 இடங்களில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைப் புதிதாக தொடங்கி ஏழை எளிய குடும்பங்களை சார்ந்த இளைஞர்கள் உயர்கல்வி பெற வழிவகுத்துள்ளது.

ஒன்று கூட தொடங்கவில்லை

மேலும் 2011-2012-ம் ஆண்டில் வேலூர் மாவட்டம், திருப்பத்தூர்- நாகப் பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் - காஞ்சீபுரம் மாவட்டம், நெம்மேலி - விருதுநகர் மாவட்டம், திருச்சுழி - விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி - திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி - தூத்துக்குடி மாவட்டம், நாகலாபுரம் - தருமபுரி மாவட்டம், அரூர் - ஆகிய எட்டு இடங்களில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளாக தொடங்குவதற்கு, அரசு நிதியுதவியும், நிர்வாக அனுமதியும் வழங்கியுள்ளது.

2001-2006 அ.தி.மு.க ஆட்சி காலத்தில் புதிய அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரி ஒன்றுகூட தொடங்கப்படவில்லை. ஆனால் கழக ஆட்சியில் நடப்பாண்டில் தேனி, திருவாரூர், விழுப்புரம், திருவண்ணாமலை, தருமபுரி, கரூர், பெரம்பலூர், மதுரை மாவட்டம், மேலூர் ஆகிய 8 இடங்களில் புதிய அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளைத் தொடங்கி, 1,731 மாணவர்கள் கூடுதலாகப் பயில வகை செய்து; ஏழை எளிய குடும்பங்களைச் சார்ந்த இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் தொழில்நுட்ப கல்விபெற வழிவகுத்துள்ளது. தமிழ்நாடு மாநில தொழில்நுட்பக் கல்வி மன்றம் உயர்கல்வித் திட்டங்களை மேம்படுத்துவதற்கும், உயர்கல்விக்கான மாநில மற்றும் பல்கலைக்கழக நிதி நல்கைக்குழுவின் திட்டங்களை ஒருங்கிணைப்பதற்கும் தமிழ்நாடு மாநில உயர் கல்வி மன்றம் ஏற்படுத்தப்பட்டுச் செயல்பட்டு வருவதைப்போல; தொழில்நுட்பக் கல்வி மேம்பாட்டிற்கான திட்டங்களை மாநில அளவில் உருவாக்குவதற்காக, உயர்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் தமிழ்நாடு மாநில தொழில்நுட்பக் கல்வி மன்றம் ஒன்று புதிதாக உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இளம் விஞ்ஞானிகளுக்கு...


ஆராய்ச்சிகளுக்குப் புரிந்துணர்வு ஒப்பந்தம் / நிதியுதவி அண்ணா பல்கலை - சிட்னி பல்கலை ஒப்பந்தம் கல்வி மற்றும் ஆராய்ச்சியின் கூட்டு முயற்சியில் அண்ணா பல்கலைக்கழகம் சிட்னி பல்கலைக்கழகத்துடன் தகவல் தொழில்நுட்பம், நானோ டெக்னாலஜி, உயிரி தொழில்நுட்பம், கடல் அறிவியல் தொழில்நுட்பம், நீர் மற்றும் சுற்றுப்புறச் சூழல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் கருத்துப் பரிமாற்றங்களுக்காகவும், ஆராய்ச்சிகளுக்காக மாணவர்கள் பரிமாற்றத்திற்காகவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆஸ்திரேலியாவில் 13.12.2006 அன்று செய்து கொள்ளப்பட்டது.

ஆராய்ச்சிகளுக்கு நிதியுதவி, இளம் அறிவியல் அறிஞர்களுக்கு ஆதரவு ஊதியம் அளித்தல் என்ற திட்டத்தின் கீழ், 2006-2007-ம் ஆண்டில் 4 இளம் விஞ்ஞானிகளுக்கு 33 ஆயிரத்து 778 ரூபாய் நிதியுதவியும், 2007-08-ம் ஆண்டில் 10 இளம் விஞ்ஞானிகளுக்கு 1 லட்சத்து 17 ஆயிரத்து 550 ரூபாய் நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது.

13 அறிவியல் அறிஞர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு, `தமிழக அறிவியல் அறிஞர்கள் விருது' திட்டத்தின்கீழ் 2006-2007-ம் ஆண்டில் 1 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. 2007-2008-ம் ஆண்டில் 10 பேருக்கு இவ்விருது வழங்கப் பட்டுள்ளது.

கட்டமைப்பு வசதிகள்

கல்லூரிகளின் கட்டமைப்பு வசதிகளை பெருக்கிய கழக அரசு 2001-2002 ஆண்டு முதல் 2005-2006 ஆண்டுவரை கல்லூரிகளின் கட்டமைப்புக்காக செலவிடப்பட்ட தொகை ரூ.18.21 கோடி. 2006-2007 ஆண்டு முதல் 2010-2011 ஆண்டு வரை கல்லூரிகளின் கட்டமைப்புக்காக செலவிடப்பட்ட தொகை ரூ.110 கோடி.

சென்னையிலுள்ள ராணிமேரி கல்லூரியில் நிலவி வந்த இடப்பற்றாக் குறையை நீக்கும்வகையில், இக்கல்லூரிக்கு ரூ.3.20 கோடி ரூபாய்ச் செலவில் "கலைஞர் மாளிகை'' என்ற புதிய கட்டடம் கட்டி திறந்து வைக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவிலேயே பழமையான மாநிலக்கல்லூரி 3.23 கோடி ரூபாய்ச் செலவில் புனரமைக்கப்பட்டு புதிய பொலிவு பெற்றுள்ளது.

சென்னை மாநகரில் உள்ள பழமை வாய்ந்த பாரதி மகளிர் கலைக்கல்லூரி, ராணிமேரி கலைக் கல்லூரி, காயிதே மில்லத் கலைக்கல்லூரி ஆகியவற்றில் சிதிலமடைந்த கட்டடங்கள் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் செப்பனிடப்பட்டுள்ளன.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ரூ. 64.58 கோடி செலவில் 1142 கூடுதல் வகுப்பறைகள்; 60 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ரூ.8.64 கோடி செலவில் 188 கழிவறைத் தொகுப்புகள்; 12 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ரூ.1.03 கோடி செலவில் சுற்றுச் சுவர்கள் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.

ஆய்வுக்கூடம்

அறிவியல் கல்வியில் ஆய்வுக் கூடங்களின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, 67 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 11.40 கோடி ரூபாய்ச் செலவில் கூடுதல் அறிவியல் ஆய்வகங்கள் ஆகியவை கட்டப்பட்டுள்ளன. ஆங்கிலத்தில் சரளமாகப் பேச மாணவர் களுக்குப் பயிற்சி அளிக்கப் படுவதற்காக 63 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 4.09 கோடி ரூபாய்ச் செலவில் மொழி ஆய்வகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

2010-2011 கல்வியாண்டில், 18 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் கணினி வசதிகளுடன் கூடிய நூலகங்கள் கட்டுவதற்கு ரூ.10.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, நூலகக் கட்டடப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

அரசு பொறியியற் கல்லூரிகளில் 5 மின்னணு நூலகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. திருநெல்வேலி, அரசினர் பொறியியல் கல்லூரியின் புதிய விடுதியில் கூடுதல் அறைகள் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வேலூர், தந்தை பெரியார் பொறியியற் கல்லூரியில் உள்ள மகளிர் விடுதியில் உணவு அருந்தும் கூடம்; 75 லட்சம் ரூபாய்ச் செலவில் பர்கூர், அரசினர் பொறியியல் கல்லூரியில் மாணவியர் விடுதி; 87.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சேலம், அரசினர் பொறியியற் கல்லூரியின் நூலகத்திற்கு கூடுதல் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

தொழில் நுட்பக்கல்லூரி


அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரிகளில் 21 மொழி ஆய்வகங்கள்; 42 லட்சம் ரூபாய் செலவில் மதுரை, தமிழ்நாடு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் நூலகக் கட்டட விரிவாக்கப் பணிகள்; சென்னை, டாக்டர் தர்மாம்பாள் அரசு மகளிர் பலவகை தொழில்நுட்ப கல்லூரியில் 185 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், திருச்சி, அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரியில் 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், எட்டயபுரம், அரசு மகளிர் பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் 100 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் என மொத்தம் 3 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மகளிர் விடுதிகள் கட்டப்பட்டுள்ளன.

நாகர்கோவில் அரசு மகளிர் பலவகைத் தொழில்நுட்ப கல்லூரியில் 50 லட்சம் ரூபாய்ச் செலவில் புதிய நூலகக் கட்டடம்; மதுரை தமிழ்நாடு பலவகைத் தொழில்நுட்ப கல்லூரி நூலகத்திற்கு 42 லட்சம் ரூபாய்ச் செலவில் விரிவாக்க கட்டடம் ஆகியவை கட்டுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளன.

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், சேர்காடு மற்றும் விண்ணம்பள்ளி ஆகிய கிராமங்களில் 340 ஏக்கர் பரப்பளவில் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்குக் கழக அரசு 16 கோடியே 70 லட்சம் ரூபாய் நிதி வழங்கி, புதிய பல்கலைக்கழக வளாகம் கட்டி முடிக்கப்பட்டு; 27.11.2010 அன்று திறந்து வைக்கப்பட்டது.

அ.தி.மு.க. ஆட்சியில்...

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு வட்டம் மேலக்கோட்டைïர் கிராமத்தில் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கு 8 கோடியே 15 லட்சம் ரூபாய்ச் செலவில் புதிய பல்கலைக் கழக வளாகம் கட்டப்பட்டுள்ளது.

கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் 45 லட்சம் ரூபாய்ச் செலவில் கருத்தரங்கக் கூடம் கட்டப் பட்டுள்ளது.

2001 முதல் 2006 ஆண்டு வரையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் புதிதாக ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. 2006-2007ஆண்டு முதல் 2008-2009 ஆண்டு வரையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2,594 ஆசிரியர்கள் புதிதாக நியமனம் செய்யப்பட்டனர். இதில், ஆதிதிராவிடர் பழங்குடியினர்க்கான 522 பின்னடைவுப் பணியிடங்களும் சிறப்பு நியமன முறையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின்மூலம் நிரப்பப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், 1,024 கல்லூரி ஆசிரியர்களை நியமித்திட ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுத்து, 838 கல்லூரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 2,600 ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிடவும் அரசு அனுமதி வழங்கியுள்ளது.

முந்தைய அ.தி.மு.க.வின் 2001 முதல் 2006 வரை ஐந்தாண்டு கால ஆட்சியில், அரசு பொறியியல் கல்லூரிகளில் 77 ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டனர். கழக அரசு, 2006-2007 ஆண்டு முதல் 2009-2010 ஆண்டுவரையில், அரசு பொறியியல் கல்லூரிகளில் 121 ஆசிரியர்களையும், 115 ஆசிரியரல்லாப் பணியாளர்களையும் நியமித்துள்ளதுடன்; 2010-2011 ஆண்டில் மேலும் 100 ஆசிரியர்களை நியமித்திட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

ஆசிரியர் நியமனம்

அ.தி.மு.க. அரசு 2001 முதல் 2006 ஆண்டு வரையில், அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரிகளில் புதிய ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படவில்லை. கழக அரசு 2006 முதல் 2010 ஆண்டு வரையில், அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரிகளில் 181 ஆசிரியர்களையும், 147 ஆசிரியரல்லா பணியாளர்களையும் நியமனம் செய்துள்ளது.

உயர்ந்தபட்ச ஊதியத்தை அடைந்த கல்லூரி ஆசிரியர்களுக்கு அதிகபட்சம் மூன்று தேக்கநிலை ஊதிய உயர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங் களின் ஆசிரியர்களுக்கு 1-1-2006 முதல் திருத்திய ஊதிய விகிதம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் ஆசிரியர்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழுவின் திருத்திய ஊதிய விகிதம் 1-1-2006 முதல் வழங்கப்பட்டு; தமிழகத்தில் உள்ள தொழில்நுட்ப பல்கலைக் கழகங்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் பலவகை தொழில்நுட்ப கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அகில இந்திய தொழில் நுட்பக் கல்வி குழுமத்தின் திருத்திய ஊதிய விகிதங்கள் 1-1-2006 முதல் வழங்கப்பட்டன.

2006-2007 ஆண்டு முதல் 2010-2011 ஆண்டுவரையில் 46 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு 4 கோடியே 87 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் செலவில் 999 கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.

பருவமுறை தேர்வுகள்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்கின்ற மாணாக்கர்களும் தொழில்நுட்ப கல்வி அறிவு பெற வேண்டும் என்ற நோக்கத்தில், அவர்களுக்குப் பட்டப்படிப்போடு தொழில்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான பயிற்சிகளையும் விடுமுறை நாட்களில், மாலை நேரங்களில் கற்பித்திடும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு; 2009-2010 ஆண்டில் 50 பாடப்பிரிவுகளுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டு 3,313 மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.

அனைத்து பாடப்பிரிவுகளுக்குமான பல்கலைக்கழக ஆண்டுத்தேர்வுகள், 2009-2010 முதல் பருவமுறை தேர்வுகளாக மாற்றப்பட்டுள்ளன. உலகளாவிய நடைமுறைக்கேற்ப பல்கலைக்கழகத் தேர்வு மதிப்பெண் சான்றிதழ்கள் மாற்றி அமைக்கப்படவேண்டிய அவசியத்தினையும், மாணவர்களின் நலனையும் கருதி 2008-2009 ஆண்டு முதல் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் தரமுறையில் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்க வகை செய்யப்பட்டது.

இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில்தான் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் புதிதாக நியமனம் செய்யப்படும் ஆசிரியர்களுக்குக் கற்பித்தல் முறையில் ஒரு மாத கால பயிற்சி வழங்கப்படுகிறது. இதன் மூலம் 2007-2008 ஆண்டு முதல் 2009-2010 ஆண்டுவரையில் 2,512 ஆசிரியர் களுக்குப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

2006-2007 ஆண்டு முதல் 2010-2011 ஆண்டு வரையில் உயர்கல்வித் துறையின் கீழ் செயல்படும் பல்கலைக்கழகங்களில் ஒரு துறையைத் தேர்வு செய்து, அத்துறையை உயராய்வு மையமாக மேம் படுத்திட இந்த அரசு முடிவு செய்து; அதன்படி, கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நானோ தொழில்நுட்பத்துறை; திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் உயிர் அறிவியல் துறை; சென்னை பல்கலைக்கழகத்தில் குற்றவியல் மற்றும் சைபர் கிரைம் துறை; சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நானோ தொழில்நுட்பத் துறை திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஸ்ரீ பரம கல்யாணி சுற்றுச் சூழல் அறிவியல் மையம் ஆகியவற்றுக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கி, அவற்றை உயராய்வு மையங்களாக உருவாக்கியுள்ளது.

பொன்முடி முயற்சி


வேலூரில் புதிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் ரூ.2.98 கோடி செலவிலும்; கோவை மண்டல அறிவியல் மற்றும் தொழில் நுட்பமையம் ரூ.8.5 கோடி செலவிலும் அமைக்கப் பட்டுள்ளன.

சென்னை, பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தில், பிர்லா கோளரங்கத்தில் 70 லட்சம் ரூபாய்ச் செலவில் புதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. திருச்சி, அண்ணா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தில் 15 லட்சம் ரூபாய்ச் செலவில் 3-டி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் 30 லட்சம் ரூபாய்ச் செலவில் அறிவியல் நகரம் சார்பில் அறிவியல் விழா சென்னையில் 5 நாட்கள் நடத்தப்படுகிறது. இந்த விழாவில் ஆராய்ச்சிப் படிப்பு மேற்கொள்ளும் மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்களால் கண்காட்சி அரங்குகள் வைக்கப்படுகின்றன.

பள்ளி மாணவர்களிடையே அறிவியல் மற்றும் சமூகவியலில் ஆராய்ச்சி மனப் பான்மையை ஏற்படுத்துவதற்காக 10,256 மாணவர்களுக்குத் தலா 5,000 ரூபாய் வீதம் மத்திய அரசின் உதவித்தொகை வழங்கப் பட்டுள்ளது. இதன்மூலம் பள்ளி மாணவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

உயர்கல்வித்துறை சார்பில் அந்தத் துறையின் அமைச்சர் பொன் முடியின் முயற்சியினால் கடந்த ஐந்து ஆண்டுகளில் செய்த சாதனைகளை எடுத்தெழுதவே இரண்டு நாட்கள் போதவில்லை. நாளை(இன்று) பள்ளிக் கல்வித் துறை சார்பில் என்னென்ன சாதனைகள் செய்யப்பட்டன என்பதை எழுதுகிறேன்.

இவ்வாறு அறிக்கையில் முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.


அ.தி.மு.க. ஆட்சி காலத்தை காட்டிலும் தி.மு.க. ஆட்சியில் உயர் கல்வித்துறையில் மகத்தான சாதனைகள்: கருணாநிதி பட்டியல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அ.தி.மு.க. ஆட்சி காலத்தை காட்டிலும் தி.மு.க. ஆட்சியில் உயர் கல்வித்துறையில் மகத்தான சாதனைகள்: கருணாநிதி பட்டியல் Empty Re: அ.தி.மு.க. ஆட்சி காலத்தை காட்டிலும் தி.மு.க. ஆட்சியில் உயர் கல்வித்துறையில் மகத்தான சாதனைகள்: கருணாநிதி பட்டியல்

Post by பிரகாசம் Mon Mar 07, 2011 11:56 am

செல்லாது....... செல்லாது .......


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
அ.தி.மு.க. ஆட்சி காலத்தை காட்டிலும் தி.மு.க. ஆட்சியில் உயர் கல்வித்துறையில் மகத்தான சாதனைகள்: கருணாநிதி பட்டியல் 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

அ.தி.மு.க. ஆட்சி காலத்தை காட்டிலும் தி.மு.க. ஆட்சியில் உயர் கல்வித்துறையில் மகத்தான சாதனைகள்: கருணாநிதி பட்டியல் Empty Re: அ.தி.மு.க. ஆட்சி காலத்தை காட்டிலும் தி.மு.க. ஆட்சியில் உயர் கல்வித்துறையில் மகத்தான சாதனைகள்: கருணாநிதி பட்டியல்

Post by ரபீக் Mon Mar 07, 2011 11:59 am

இப்படியே பேசுவது தலைவரின் வழக்கமாய் போச்சு


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அ.தி.மு.க. ஆட்சி காலத்தை காட்டிலும் தி.மு.க. ஆட்சியில் உயர் கல்வித்துறையில் மகத்தான சாதனைகள்: கருணாநிதி பட்டியல் Empty Re: அ.தி.மு.க. ஆட்சி காலத்தை காட்டிலும் தி.மு.க. ஆட்சியில் உயர் கல்வித்துறையில் மகத்தான சாதனைகள்: கருணாநிதி பட்டியல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  தி.மு.க. ஆட்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கு செய்த உதவிகள் என்ன?: கருணாநிதி பட்டியல்
» ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு: மகத்தான தீர்ப்பு - கருணாநிதி
» அதிமுக ஆட்சியில் அதிகாரிகள் மாற்றப்படுவது வாடிக்கையானதுதான் கருணாநிதி அறிக்கை
» கருணாநிதி மீண்டும் ஆட்சியில் அமர்வார் : நடிகை குஷ்பு ஆரூடம்
»  கருணாநிதி ஆட்சியில் தான் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum