ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விதியா மதியா

4 posters

Go down

விதியா மதியா  Empty விதியா மதியா

Post by sshanthi Wed Feb 16, 2011 4:03 pm

மனிதன் இருக்கிறானே, அவன் மகா சாமர்த்தியசாலி; ஆளப்பிறந்தவன். சாதிக்கப் பிறந்தவன். கடவுளின் படைப்பகளிலேயே மிக உன்னதப் படைப்பு.

ஆறு, மலை, கடல், காடு போன்றவற்றைத்தான் கடவுள் இந்தப் பூமியில் படைத்தார். இவனோ ஆயிரமாயிரம் விஷயங்களைப் படைத்துவிட்டான். இன்னமும் தினம் தினம் புதிதாக எதையாவது படைத்துக்கொண்டே இருக்கிறான்.

எப்படி?

அவனுடைய அறிவால். அவனுடைய முயற்சியால்.

சரிதானே?

அறிவு

மனிதனின் அறிவு என்பது ஒரு அற்புதமான ஆயுதம். அதைக் கூர்தீட்டுவதைப் பொறுத்தும், பயன்படுத்துவதைப் பெறுவதும், ஒருவருடைய சிறப்பும் செழிப்பும் அமைகிறது.

முயற்சி

தனது இலக்கை நோக்கி, ஒரு மனிதன் எடுக்கின்ற முயற்சியின் தீவிரமும், தொடர்முயற்சிகளும், விடாமுயற்சிகளும் அவனது வெற்றிக்கும் வளர்ச்சிக்கும் இன்றியமையாத விஷயங்கள்.

வள்ளுவர் சூப்பராக ஒரு போடுபோடுகிறார் பாருங்கள்.

தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய் வருத்தக் கூலி தரும்.


இது முடியாது என்று கடவுளே கைவிட்ட காரியமாக இருந்தால்கூட, நீ கைவிட்டு விடாதே. முயன்றுபார். நீ எடுக்கிற முயற்சியின் அளவுக்குத்தகுந்தபடி உனது வெற்றியின் அளவும் அமையும் – என்பதுதானே இதன் பொருள்.

அதாவது உழைப்புக்குத் தகுந்த ஊதியம் (Payment According to performance).

தெய்வத்தை ஒதுக்கி வைக்கிற அளவுக்கு, முயற்சிக்கு முக்கியத்துவம் தருகிறார் வள்ளுவர்.

ஆனால்

இந்தக் கருத்து நூற்றுக்கு நூறு ஒததுக்கொள்ளக கூடியதுதான் என்று நம் உள்ளம் சொன்னாலும்…

உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருக்கும் ஒரு உள்மனம் இலேசாக புருவத்தை உயர்த்துகிறது. என்னவென்று?

அதே திருவள்ளுவர் இன்னொரிடதில் இதற்கு நேர்மாறாக இன்னொரு கருத்தை சொல்லியிருக்கிறாரே, அது கொஞ்சம் இடிக்கிறதே? என்று. அந்தக்குறள் -

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்.


இது என்ன சொல்கிறது?

விதியைவிட வலிமயுடையது எது?

எதுவுமில்லை.

அந்த விதியை வெல்வதற்காக என்னதான் வேறு வழிகளில் முயன்று உழைத்தாலும், விதியானது அங்கேயும் வந்து நின்று வென்று காட்டிவிடும்.

இது எப்படி இருக்கிறது?

அந்தக் குறள்படி, முயற்சி, தெய்வத்தால் ஆகாததையும் முடித்துக்கொடுத்து விடும்.

இந்தக் குறள்படி, முயற்சியை முறியடித்துவிட்டு விதி வென்றுவிடும்.

அப்படியென்றால்….

திருவள்ளுவர் நம்மை குழப்புகிறாரா? என்ற சந்தேகம் எழுகிறது.

திருவள்ளுவரா குழப்புகிறவர்? மிக மித் தெளிவாக தனது கருத்துக்களை வைப்பவர் அல்லவா அவர். ஆக, நாம்தான் உரிய விதத்திலே புரிந்து கொள்ள வேண்டும்.

எப்படி?


மனிதன் முன்னேற விரும்புகின்றவன். முன்னேறப் பிறந்தவன். முன்னேறியே ஆக வேண்டும். அதற்கு அவன் முதலில் தன் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.

அது தன்னம்பிக்கை.

அதோடு மட்டுமல்லாமல், அவன் சோம்பி இருக்கக் கூடாது.

உள்ளம் முழுவதம் தன்னம்பிக்கை இருந்தாலும், உடலிலே சோம்பல் இருந்துவிட்டால ஒன்றையும் சாதிக்க முடியாது. கடுமையாக உழைக்க வேண்டும். எந்த வெற்றியும் வியர்வை சிந்தாமல், விலை கொடுக்காமல் எளிதாக வந்து விடாது.

இந்தக்கருத்தை, மனிதனின் மனதிலே மிக மிக ஆழமாகப் பதிப்பதற்காகத்தான், “தெய்வத்தால் ஆகாது எனினும்” என்ற வார்த்தைகளைப் போட்டு, அந்தக் கருத்துக்கு அதிகபட்ச வலிமையை ஊட்டியிருக்கிறார்.

இதுசரி, பிறகு எதற்கு விதியை விட வலிமையுடையது வேறெதுவும் இல்லை என்ற கருத்தையும் சொல்ல வேண்டும்?

ஏனென்றால்…

மனிதன் மற்ற உயிரினங்களைவிட உயர்ந்தவன். “அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது” என்கிறார் அவ்வையார்.

அப்படிப்பட்ட பிறவியை எடுத்தவன், ஐந்தறிவு படைத்த விலங்குகளைப் போல, மிருக குணம் காட்டியா வயிறு வளர்ப்பது? வாழ்ந்து காட்டுவது? வளர்ந்து காட்டுவது? கூடாதல்லவா?

ஆனால், அதை உணராமல், குறுக்கு வழிகளிலே, தீய வழிகளிலே, மனித நேயத்தை மறந்து, இழி குணத்தை மட்டுமே காட்டி,

“ஜெயித்துக் காட்டுகிறேன் பார்”

“வளர்ந்து காட்டுகிறேன் பார்”

“உயரத்தை அடையாமல் ஓயமாட்டேன் தெரியுமா?”


என்று முயற்சிகளை எடுக்கும்போது கூட அவனது முயற்சிகளுக்கு மதிப்புக்கொடுத்து வெற்றிகள் அவனிடம் வருகின்றன.

ஆனாலும், அவன் செல்லுகின்ற பாதை, நீதி நெறியால், தர்மத்தால், நியாயத்தால் ஏற்றுக் கொள்ள முடியாத பாதை என்கிறபோது, அந்த நீதிநெறி, தர்மநெறி நியாயம் எல்லாம் விதி என்ற பெயரில் அவனது வாழ்வில் விளையாடி விடுகிறது.

எப்போதோ அவன், அடுத்தவரின் வாழ்வோடும் வளர்ச்சியோடும் தீய நோக்கத்தோடு விளையாடி, வென்றிருக்கலாம்.

ஆனால், பிறகு எப்போதோ, நல்ல நோக்கத்துக்காக அவன் எடுக்கும் நல்ல முயற்சிகளைக்கூட, விதி முறியடித்து முந்திச் சென்று முதலிடம் பிடித்துவிடுகிறது. கணக்கை நேர் செய்து விடுகிறது.

அதாவது, செய்த வினைகளுக்கு ஏற்பவே, விளைவுகள் நிகழ்கின்றன. வினையை விதைத்தால் வினையை அறுத்துத்தான் ஆகவேண்டும்.

இந்தக் கருத்து காலத்தால் அழியாத கருத்து, வாழ்க்கைத் தத்துவங்களிலேயே வளம் செறிந்த கருத்து. புல்முனை கூட புறக்கணிக்க முடியாத கருத்து.

இப்போது புரியுமே, விதியைவிட வலியது எதுவுமில்லை என்று ஏன் சொன்னார் வள்ளுவர் என்று.

இப்போதும் புரியவில்லையா? இன்னொரு குறளையும் எடுத்து விடுகிறார் பாருங்கள்.

அழக்கொண்ட எல்லாம் அழப்போம், இழப்பினும்
பிற்பயக்கும் நாற்பா லவை.


என்ன பொருள்?

பிறரை வருத்தப்பட வைத்து ஒருவன் பெற்ற பொருளெல்லாம் அவனை வருத்தப்பட வைத்து, அவனை விட்டுப் போய்விடும். நல்லவழியில் வந்தவைகளோ, கைவிட்டுப் போனாலும், வேறு எந்த விதத்திலாவது நன்மையே தரும்.

சுருக்கமாக

முதலிடத்தைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக, வழியில் குறுக்கிடும் மனிதர்களையும், வாகனங்ளையும் இடித்துத்தள்ளிவிட்டு, மூர்க்க்தனமாக வண்டியை ஒட்டுபவனை, வெற்றி பெற்றவனாக எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? பாராட்டமுடியும்?

நீ முன்னேறு. யார் வேண்டாம் என்றார்கள். ஆனால் அடுத்தவன் வயிற்றில் ஏன் அடிக்கிறாய்? அடுத்தவனை ஏன் மோசம் செய்கிறாய்? நம்பியவனுக்கு ஏன் துரோகம் செய்கிறாய்?

யோசிக்கலாமே?

நன்றி: தன்னம்பிக்கை
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

விதியா மதியா  Empty Re: விதியா மதியா

Post by சிவா Wed Feb 16, 2011 6:00 pm

சிறந்த கட்டுரைப் பகிர்வுக்கு நன்றி சாந்தி!


விதியா மதியா  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விதியா மதியா  Empty Re: விதியா மதியா

Post by Aathira Wed Feb 16, 2011 6:15 pm

பயனுள்ள கட்டுரை.. பதிவிட்டமைக்கு நன்றி.


விதியா மதியா  Aவிதியா மதியா  Aவிதியா மதியா  Tவிதியா மதியா  Hவிதியா மதியா  Iவிதியா மதியா  Rவிதியா மதியா  Aவிதியா மதியா  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

விதியா மதியா  Empty Re: விதியா மதியா

Post by sshanthi Sat Mar 12, 2011 2:56 pm

நன்றி சிவா அண்ணா அண்ட் ஆதிர அக்கா


ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

விதியா மதியா  Empty Re: விதியா மதியா

Post by உதயசுதா Sat Mar 12, 2011 3:34 pm

.

சுருக்கமாக

முதலிடத்தைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக, வழியில் குறுக்கிடும் மனிதர்களையும், வாகனங்ளையும் இடித்துத்தள்ளிவிட்டு, மூர்க்க்தனமாக வண்டியை ஒட்டுபவனை, வெற்றி பெற்றவனாக எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? பாராட்டமுடியும்?

நீ முன்னேறு. யார் வேண்டாம் என்றார்கள். ஆனால் அடுத்தவன் வயிற்றில் ஏன் அடிக்கிறாய்? அடுத்தவனை ஏன் மோசம் செய்கிறாய்? நம்பியவனுக்கு ஏன் துரோகம் செய்கிறாய்?

யோசிக்கலாமே?

நன்றி: தன்னம்பிக்கை[/quote]
நீங்க கொடுத்து இருக்கற மொத்த பதிவுமே பயனுள்ளதுதான். ஆனா எனக்கு ரொம்பவும் பிடித்த வரிகள் மேலே உள்ளவைதான்.இது போல யாருமே நினைக்கிறதில்லை என்பது நான் என் அனுபவத்தில் பார்த்த உண்மை.


விதியா மதியா  Uவிதியா மதியா  Dவிதியா மதியா  Aவிதியா மதியா  Yவிதியா மதியா  Aவிதியா மதியா  Sவிதியா மதியா  Uவிதியா மதியா  Dவிதியா மதியா  Hவிதியா மதியா  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

விதியா மதியா  Empty Re: விதியா மதியா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum