ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Today at 11:01 am

» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

களத்தில் இன்னும் உத்வேகம் தேவை, கேப்டன் டோனி

Go down

களத்தில் இன்னும் உத்வேகம் தேவை, கேப்டன் டோனி Empty களத்தில் இன்னும் உத்வேகம் தேவை, கேப்டன் டோனி

Post by சிவா Wed Feb 16, 2011 2:01 pm

பயிற்சி ஆட்டத்தில் இந்தியா-நியூசிலாந்து இன்று மோதல்: களத்தில் இன்னும் உத்வேகம் தேவை, கேப்டன் டோனி சென்னையில் பேட்டி


சென்னை, பிப்.16- இந்தியா-நியூசிலாந்து இடையிலான உலக கோப்பை பயிற்சி ஆட்டம் சென்னையில் இன்று நடக்கிறது. இந்திய வீரர்கள் களத்தில் இன்னும் அதிக உத்வேகத்துடன் செயல்பட வேண்டும் என்று கேப்டன் டோனி கேட்டுக் கொண்டுள்ளார்.

பயிற்சி ஆட்டம்

10-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய நாடுகளில் வருகிற 19-ந்தேதி முதல் ஏப்ரல் 2-ந்தேதி வரை நடைபெறுகிறது. பங்கேற்கும் 14 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் `பி' பிரிவில் இந்தியாவுடன், இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம், நெதர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

தொடக்க நாளான 19-ந்தேதி இந்தியா-வங்காளதேச அணிகள் (பிற்பகல் 2 மணி) டாக்காவில் மோதுகின்றன.

உலக கோப்பையையொட்டி ஒவ்வொரு அணிக்கும் தலா 2 பயிற்சி ஆட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்று(புதன்கிழமை), சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடக்கும் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

இந்தியா தனது முதலாவது பயிற்சி ஆட்டத்தில் உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை 38 ரன்கள் வித்தியாசத்திலும், நியூசிலாந்து அணி அயர்லாந்தையும் 32 ரன்கள் வித்தியாசத்திலும் தோற்கடித்து இருந்தன.

இந்த நிலையில் உலக கோப்பைக்குள் வெற்றியுடன் செல்ல வேண்டும் என்பதில் இரு அணிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. இதை யொட்டி இரு அணி வீரர்களும் நேற்று வலைபயிற்சியில் ஈடுபட்டனர். இந்திய அணியில் கேப்டன் டோனி, யுவராஜ்சிங், சுரேஷ் ரெய்னா ஆகியோரின் பேட்டிங் பார்ம் சமீப காலமாக மோசமாக இருந்து வருகிறது. பழைய நிலைமைக்கு திரும்ப இந்த பயிற்சி ஆட்டத்தை அவர்கள் பயன்படுத்தி கொள்ள முயற்சிப்பார்கள். முதல் ஆட்டத்தில் ஆடாத தெண்டுல்கர், இதில் ஷேவாக்குடன் தொடக்க ஆட்டக்காரராக களம் காணுகிறார்.

கடந்த 17 ஒரு நாள் போட்டிகளில் 14-ல் தோல்வி கண்ட நிïசிலாந்து அணி, புதிய பயிற்சியாளர் ஜான்ரைட் பயிற்சியின் கீழ் களம் இறங்குகிறது. அவரது தாக்கத்தில் நிïசிலாந்து அணி எத்தகைய சவால் அளிக்கும் என்பதை பார்க்கலாம்.

டோனி பேட்டி

முன்னதாக இந்திய அணியின் கேப்டன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் வெற்றி பெற்றாலும், அது எங்களுக்கு சிறந்த ஆட்டமாக அமையவில்லை. மிடில் வரிசையில் நல்லதொரு வலுவான பார்ட்னர்ஷிப் தேவைப்பட்டது. ஆனால் நாங்கள் நினைத்தபடி அந்த ஆட்டத்தில் அப்படி நடக்கவில்லை. இதனால் பெரிய ஸ்கோரை குவிக்க முடியாமல் போய் விட்டது. அதன் பிறகு கடைசி கட்ட ஜோடிகள் தந்த 49 ரன்கள் பங்களிப்பு தான் எங்களுக்கு உதவிகரமாக இருந்தது. என்றாலும் 214 ரன்கள் என்பது போதுமான ஸ்கோர் கிடையாது. இருப்பினும் இங்கு நிலவிய சூழலை சரியாக பயன்படுத்தி, சுழற்பந்து வீச்சாளர்கள் அபாரமாக பந்துவீசி, வெற்றி தேடித்தந்தனர்.

பயிற்சி ஆட்டத்தில் நாங்கள் நிறைய ரன்கள் குவிக்க விரும்புகிறோம். இதில், அதிகமான பந்து வீச்சாளர்களை உபயோகப்படுத்த முயற்சிப்போம்.

உத்வேகம் தேவை

முதலாவது பயிற்சி ஆட்டத்திற்கு பிறகு, உலக கோப்பை பயிற்சி போட்டிகளுக்கு இந்திய அணி மனரீதியாக தயாராகவில்லை என்று கூறியது, களைப்படைந்து விட்டோம் என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. அந்த அர்த்தத்தில் நான் கூறவில்லை.

ஒரு சர்வதேச போட்டிக்கு 100 சதவீதம் தயாராவோம். அப்படி தான் பெரும்பாலும் நாம் தயாராகி இருக்கிறோம். அப்படியொரு நிலையில், திடீரென பயிற்சி ஆட்டங்களுக்கு தயாராக வேண்டி இருந்தது. எனது கிரிக்கெட் வாழ்க்கை தொடங்கியதில் இருந்து நான் பயிற்சி ஆட்டங்களில் அதிகமாக விளையாடியது கிடையாது. சர்வதேச போட்டிக்குக்கு தயாராவதற்கும், பயிற்சி ஆட்டத்திற்கு தயாராவதற்கும் வித்தியாசம் உள்ளது. இதைத் தவிர இதில் சோர்வடைவதற்கு எதுவும் இல்லை.

நாளைய (இன்று) பயிற்சி ஆட்டம் உலக கோப்பைக்கு முன்பாக நாம் விளையாடும் கடைசி போட்டியாகும். எனவே உலக கோப்பைக்கு செல்வதற்கு முன்பாக வீரர்கள் களத்தில் இன்னும் அதிக உத்வேகத்துடன் செயல்பட வேண்டியது அவசியம்.

கேப்டன்ஷிப் சவால் பற்றி...

இந்திய அணிக்காக விளையாடும் போது சவால் என்பது எப்போதும் இருந்து கொண்டு தான் இருக்கும். ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு வகையில் புதுப்புது சவால்கள் வருகின்றன. அதில் உலக கோப்பையும் ஒன்று. எங்களை பொறுத்தவரை மிகக்சிறந்த அணி கிடைத்துள்ளது. அது தான் முக்கியம். யாரையும் ஒப்பிட்டு பேசுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. எல்லாம் சரியான கலவையில் கலந்த ஒரு அணியை நாங்கள் பெற்றிருக்கிறோம். வீரர்கள் பற்றி பேப்பரில் என்ன வருகிறது என்பது முக்கியமல்ல. களத்தில் என்ன செய்கிறோம் என்பது தான் முக்கியம். ஒவ்வொரு ஆட்டத்தின் போதும், ஆடுகளத்தன்மை மற்றும் அங்குள்ள சீதோஷ்ணநிலைக்கு தக்கபடி களம் இறங்கும் 11 பேர் கொண்ட அணியை தேர்வு செய்வோம்.

வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கானுக்கு தொடைப்பகுதியில் லேசான வலி இருக்கிறது. ஆனால் காயம் பயப்படும்படி இல்லை. நாளைய (இன்று) பயிற்சி ஆட்டத்திலும் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் உலக கோப்பை போட்டிக்குள் அவர் உடல்தகுதி பெற்று விடுவார். அதே சமயம் முதலாவது பயிற்சி ஆட்டத்தில் விளையாடாத சச்சின் தெண்டுல்கர், இந்த பயிற்சி மோதலில் பங்கேற்பார்.

பனிப்பொழிவு இருக்குமா?

உலக கோப்பை கிரிக்கெட்டில் முதலாவது ஆட்டத்தில் வங்காளதேசத்தை எதிர்கொள்கிறோம். இந்த போட்டிக்கு நாங்கள் எப்படி தயாராக வேண்டும் என்பது, அங்குள்ள சீதோஷ்ண நிலை மற்றும் பிட்ச்சின் தன்மையை பொறுத்தே அமையும். அத்துடன் ஆட்டத்தின் போது பனியின் தாக்கம் இருக்குமா? இல்லையா? என்பதையும் பார்க்க வேண்டும். கடந்த முறை ஜனவரி மாதம் வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்த போது, பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. ஆனால் இப்போது பிப்ரவரி முடிய போகிறது. என்றாலும் அங்கு பனி பெய்யுமா? என்பதை பார்ப்பது அவசியம். அதன் அடிப்படையில் அணியை தேர்வு செய்தாக வேண்டும்.

இந்திய ஆடுகளங்களை பற்றி ஆஸ்திரேலியா மற்றும் தென்ஆப்பிரிக்க அணிகள் செய்த புகார்கள் பற்றி கேட்கிறீர்கள். பிட்ச் பற்றி குறை சொல்வதற்கு எதுவும் இல்லை. நீங்கள் வெளிநாட்டில் விளையாடும் போது அங்குள்ள ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக எகிறிச் செல்லும். இதே போல் இந்தியாவில் உள்ள ஆடுகளங்களில் சுழற்பந்து வீச்சுக்கு ஏற்ற வகையில் நன்கு திரும்பிச் செல்லும். இந்தியா வரும் அணிகளுக்கு இது தான் மிகப்பெரிய சவாலான விஷயம்.

சென்னை ஆடுகளத்தை பார்த்த போது, அந்த சமயத்தில் ஈரப்பதமாக இருந்தது. எனவே ஆடுகளம் எந்த மாதிரி இருக்கும் என்பதை என்னால் கணிக்க முடியாது. போட்டி தொடங்குவதற்கு முன்பாக ஆடுகளத்தை பார்ப்போம். பயிற்சி போட்டியில் வீரர்களை பயன்படுத்துவதில் கொஞ்சம் எச்சரிக்கையுடன் செயல்படுவோம். யாரையும் அதிகமாக பயன்படுத்த மாட்டோம்.

நிïசிலாந்து அணி பற்றி...

நிïசிலாந்து அணி எப்போதும் ஒட்டுமொத்த பங்களிப்பை அளிக்கக்கூடிய அணி. அவர்கள் அணியின் வெற்றிக்கு ஒரு குறிப்பிட்ட பேட்ஸ்மேனையோ அல்லது ஒரு குறிப்பிட்ட பந்து வீச்சாளரையோ சார்ந்து இருப்பது இல்லை. அணியில் ஒவ்வொருவரின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அது, திறமையான வீரர்களை கொண்ட கடும் போட்டி அளிக்கக்கூடிய கொண்ட அணி.

இவ்வாறு டோனி கூறினார்.

வீரர்கள் விவரம்

போட்டிக்கான இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:-

இந்தியா: டோனி (கேப்டன்), சச்சின் தெண்டுல்கர், ஷேவாக், கவுதம் கம்பீர், யுவராஜ்சிங், சுரேஷ் ரெய்னா, விராட் கோக்லி, யூசுப் பதான், ஹர்பஜன்சிங், ஸ்ரீசாந்த், ஆஷிஸ் நெஹரா, முனாப் பட்டேல், பியுஷ் சாவ்லா, அஷ்வின்.

நியூசிலாந்து: வெட்டோரி (கேப்டன்), ஹாமிஸ் பென்னட், ஜேம்ஸ் பிராங்ளின், மார்ட்டின் கப்தில், ஜேமி ஹாவ், பிரன்டன் மெக்கல்லம், நாதன் மெக்கல்லம், மில்ஸ், ஜேக்கப் ஓரம், ஜெஸ்ஸி ரைடர், டிம் சவுதி, ஸ்டைரிஸ், ராஸ் டெய்லர், கனே வில்லியம்சன், லுக் வுட்காக்.

பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் இந்த பயிற்சி ஆட்டத்தை இ.எஸ்.பி.என்., ஸ்டார்ஸ்போர்ட்ஸ், ஸ்டார் கிரிக்கெட் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.


களத்தில் இன்னும் உத்வேகம் தேவை, கேப்டன் டோனி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» டெஸ்ட் போட்டி: டோனி கேப்டன் பதவி பறிப்பு- ஷேவாக் புதிய கேப்டன்
» கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு ராணுவத்தில் சேவை செய்வேன்: காஷ்மீரில் கேப்டன் டோனி பேட்டி
» டோனி நீக்கம்;சேவாக் கேப்டன்?
» எனது கேப்டன் பதவியை துறக்கமாட்டேன்: எம்.எஸ்.டோனி அறிவிப்பு
» ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான தோல்விக்கு பிறகு சென்னை அணியின் கேப்டன் டோனி கூறியது..

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum