ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Today at 4:33 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:42 pm

» கருத்துப்படம் 21/06/2024
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூலிகைகளின் மருத்துவப் பயன்

2 posters

Go down

மூலிகைகளின் மருத்துவப் பயன் Empty மூலிகைகளின் மருத்துவப் பயன்

Post by சிவா Thu Aug 27, 2009 11:33 pm

அனைத்து மூலிகைகளும் உயிரினங்களுக்கு ஏதாவது ஒரு விதத்தில் மருந்தாகிறது. ஆனால் அதனை நாம் பயன்படுத்தும் விதமும், பயன்பாட்டை யும் அறிந்திருக்க வேண்டும்.

துளசி:

கிருஷண துளசி, கருந்துளசி, வெந்துளசி, செந்துளசி, நாய் துளசி, காட்டுத் துளசி, கல் துளசி, முள் துளசி என பல வகையுண்டு. எனினும் கிருஷண துளசி என்னும் நீலத்துளசியும், செந்துளசியும் மிகவும் சிறந்த வகையாகும். பொதுவாக கப நோய்கள், கிருமி தொல்லைகள், விஷக்கடி, அஸ்திகரம், பித்த கரம், சூலை நோய்கள் போன்ற அநேக நோய்களுக்கும், மூலிகை காபிக்கு சிறந்த மூலப் பொருளாகவும் பயன்படுகிறது.

கீழா நெல்லி:

இது ஒரு சிறந்த அபூர்வ மூலிகை. பித்தம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய் களுக்கும், மிகவும் உத்தம மருந்தாகும். மஞ்சள் காமாலை, விஷக்கடி, சுரம், மேகம், மேகவாத சூலையினால் ஏற்படும் புண்களுக்கும், மதுமேகம் எனும் நீரிழிவு நோய்க்கும் இது சிறந்த மூலிகையாகும்.

வெள்ளருகு:

மேகம் எனும் வெட்டை நோய்க்கும், குடல் வாதம், வாத வாயு, சூலை, கிரந்தி, சொறி சிரங்கு போன்ற நோய்களுக்கு மிக சிறந்த மூலிகையாகும்.

செம்பருத்தி:

செம்பருத்தி இலையை இடித்துச் சாறு எடுத்து எண்ணெயில் கலந்து காய்ச்சி தேய்த்து வர உஷணம் குறையும். முடி வளரும். பித்தம் சார்ந்த தலை வேதனையும் குறையும். செம்பருத்தி பூ ஒரு ரத்த சுத்திகரிப்பான் ஆகும். மேக வெட்டை பெண்களுக்கு உண்டாகும் பெரும்பாடு எனும் ரத்தப் போக்கு, வயிற்று கடுப்பு, கல்லீரல், இருதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சர்பத்தாக தயாரித்து தாகத்திற்கும் பயன்படுத்தலாம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மூலிகைகளின் மருத்துவப் பயன் Empty Re: மூலிகைகளின் மருத்துவப் பயன்

Post by சிவா Thu Aug 27, 2009 11:37 pm

ரோஜாப்பூ:

சிவப்பு ரோஜா மற்றும் வெள்ளை ரோஜாவிற்கு மருத்துவ குணம் அதிகம். இது இதயத்திற்கு இதமான ஒரு அபூர்வ மருந்தாகும். ரத்தத்தை சுத்திகரிப்பதிலும், ரத்த ஓட்டத்தை வேகப்படுத்துவதிலும் வேகமாக செயல்புரிகிறது. சர்பத்தாக அருந்தினால் உடல் உஷணத்தை தணிக்கும். மேக வெட்டையை குணப்படுத்தும்.

கறிவேப்பிலை

நாவிற்கு ருசியை அதிகரிக்கவும், வயிற்றுளைச்சல், குடல் புண், குடல் கிருமி, மூலம் மேலும் பித்த சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் சிறந்த மருந்தாக செயல்படுகின்றது.

ஆடாதோடை:

வாதம், சிலேத்தும ரோகங்களுக்கு ஆடாதோடை மிக சிறந்த மூலிகையாகும். சன்னிவாத சுரம், உடலில் வாதத்தினால் ஏற்படும் வீக்கங்கள், மேக வாத சூலையினால் ஏற்படும் புண்களுக்கும் உடலின் வலி நீக்கியாகவும் பயன்படுகிறது.

நொச்சி:

கரு நொச்சி, நீல நொச்சி மற்றும் வெண் நொச்சி ஆகியவை மருத்துவ குணம் உடையவை. சுவாச பிணிகள், பீனிசம், அலர்ஜி, தலைவலி போன் றவைக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மூலிகைகளின் மருத்துவப் பயன் Empty Re: மூலிகைகளின் மருத்துவப் பயன்

Post by சிவா Thu Aug 27, 2009 11:38 pm

வேலி பருத்தி:

இதனை ஊத்தாமணி இலை எனவும் கூறுவதுண்டு. இதனை சர்வ ரோக நிவா ரணி எனலாம். வாதம், வலிப்பு, அடி, இடி காயங்கள் போன்ற அனைத்து நோய்களுக்கும் ஏற்ற மூலிகையாகும்.

கோவையிலை:

வாயு சம்பந்தப்பட்ட நோய்கள் மேகவாத சூலையினால் உண்டாகும் புண்களுக்கும், வாதத்தினால் ஏற்படும் வீக்கங்களுக்கும், உடல் உஷணத்தை கட்டுப்படுத்தும்.

குப்பைமேனி:

அனைத்து மூலநோய்களுக்கும், விஷம், மேகவாத சூலை, தீப்பட்ட புண், சுவாச காசம், பீனிசம், கபம், வாதம், கிருமி தொல்லை போன்ற நோய்களுக்கு சிறந்த மூலிகையாகும்.

தும்பையிலை:

கருந்தும்பை, வெண் தும்பை, ஈகதிக்கு தும்பை, சுண்ணாம்பு தும்பை, கல்லும்பை என பலதரப்பட்ட இனத்தில் தும்பை மூலிகையுண்டு. இதில் கருந்தும்பை, ஈகதிக்கு தும்பை மிக சிறந்த வகையாகும். விஷம், வாதம், தலைவலி, கபம், காது நோய்கள், அசதி, தாக தணிவு, உடல் வலி, மேகவெட்டை போக்கும்.

முருங்கை:

இலை, காய், பூ, பிஞ்சு, பட்டை, வேர் என அனைத்து பாகங்களும், மருத்துவ குணமுடையது. முருங்கையின் வடக்கு நோக்கி போகும் வேர், கிளை போன்ற வைக்கு மருத்துவ குணம் அதிகம் இருப்பதாக, சாஸ்திர விதிமுறைகள் கூறுகின்றன. வாதம், பித்தம், சிலேத்தும சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் மருந்தாகத் திகழ்ந்தாலும் முருங்கை விதை, முருங்கை பூ, முருங்கை இலை போன்றவை மேக வெட்டை, தாது நஷடம், தலைவலி, கப சுரம் போன்ற நோய்களுக்கு சிறந்த மருந்தாகும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மூலிகைகளின் மருத்துவப் பயன் Empty Re: மூலிகைகளின் மருத்துவப் பயன்

Post by சிவா Thu Aug 27, 2009 11:41 pm

அருகம்புல்:

இது மிகச்சிறந்த மருந்தாகும். வாதம், பித்தம், கண் சம்பந்தப்பட்ட நோய்கள், தலைவலி, ரத்த பித்தம், உடலின் உஷ்ணத்தை குறைக்கும், முக அழகு உண்டாகும்.

வல்லாரை:

இதனை கொடுப்பை என்பர். வாதம், சிலேத்தும ரோகங்களுக்கு சிறந்தது. ஆனால் அளவுக்கு அதிகம் பயன்படுத்தினால் பித்தத்தை அதிகப் படுத்தும். அறிவு கூர்மையுண்டாகவும், தாது விருத்திக்கும் அனைத்து மூலிகைகளிலும் சிறந்தது ஆகும்.

கற்றாழை:

குமரி எனும் சோற்று கற்றாழை உடல் உஷ்ணத்தை குறைக்கவும், கண் நோய்களை நீக்கவும், முக அழகு உண்டாக்கவும், தலைவலி எனும் நோய்களுக்கும் சிறந்ததாகும்.

முடக்கற்றான்:

இது உஷணமான மூலிகையாகும். மேகவாத சூலையினால் ஏற்படும் புண், கரப்பான், சொறி சிரங்கு, வாயு ரோகம், மலச்சிக்கல் தீரும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மூலிகைகளின் மருத்துவப் பயன் Empty Re: மூலிகைகளின் மருத்துவப் பயன்

Post by சரண்.தி.வீ Fri Aug 28, 2009 7:33 am

மூலிகையும் அற்புதம், தகவலும் அற்புதம்.. மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
சரண்.தி.வீ
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 261
இணைந்தது : 07/08/2009

Back to top Go down

மூலிகைகளின் மருத்துவப் பயன் Empty Re: மூலிகைகளின் மருத்துவப் பயன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum